5. (39:31) ஒரு முறை நான் பேசிவிட்டேன், இனி வாய் திறவேன்; இன்னொரு முறையும் பேசினேன், இனிப்பேசவே மாட்டேன்!" என்றார்.
|
7. (2) அவர் சொன்னது: "வீரனைப் போல் உன் இடையை வரிந்து கட்டிக்கொள், நாம் உன்னை வினவுவோம், நீ விடை கூறு.
|
8. (3) நாம் செய்தது சரியன்று என நீ காட்டுவாயோ? நீ குற்றமற்றவன் என்றெண்பிக்க நம்மைக் குற்றவாளியாக்குவாயோ?
|
9. (4) கடவுளுக்கு இருப்பது போல் உனக்குக் கைவன்மையுண்டோ? அவரைப் போல் நீயும் இடி முழக்கமாய்ப் பேசக்கூடுமோ?
|
12. (7) செருக்குற்றோர் அனைவரையும் உன் பார்வையால் வீழ்த்து; பொல்லாதவர்களை அவர்கள் இடத்திலேயே மிதித்துப்போடு.
|
13. (8) அவர்களையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துப் புழுதியில் புதை; அவர்கள் முகங்களைக் கட்டி ஆழ்குழியில் தள்ளு.
|
15. (10) நீர்யானையைக் கவனித்துப் பார்; உன்னை உண்டாக்கினது போலவே அதையும் உன்டாக்கினோம்; எருதைப் போல் அது புல் தின்கிறது.
|
18. (13) அதன் எலும்புகள் வெண்கலக் குழாய்கள் போலும், அதன் உறுப்புகள் இருப்புக் கம்பிகள் போலும் உள்ளன.
|
19. (14) கடவுளின் கைவேலைகளில் தலை சிறந்தது அதுவே; ஆனால் அதை உண்டாக்கியவர் வாளால் அதை அச்சுறுத்தினார்.
|
22. (17) தாமரை இலைகள் அதற்கு நிழல் தருகின்றன, நீரோடையின் ஓரத்திலுள்ள அலரிகள் அதைச் சூழ்ந்திருக்கும்.
|
23. (18) இதோ, வெள்ளம் பெருக்கெடுத்தாலும் அது அஞ்சாமலிருக்கிறது; யோர்தான் அதன் முகத்தில் மோதினாலும் அது கவலைப்படுகிறதில்லை.
|
24. (19) தூண்டிலால் யாரேனும் அதைப்பிடிக்கக் கூடுமா? அல்லது மண்டா பாய்ச்சி அதன் மூக்கைத் துளைக்க முடியுமா?
|