2. உம்மிடம் எவனாவது பேசத் துணிந்தால், அது உம் மனத்தைப் புண்படுத்துமோ? ஆயினும் யார்தான் பேசாமல் இருக்கமுடியும்?
|
5. ஆனால் துன்பம் இப்பொழுது உமக்கு வந்துற்றது, நீரோ தைரியமற்றுப்போனீர்; உம்மைத் தொடவே நீர் மனங்கலங்குகிறீர்.
|
6. உமது இறைப்பற்று உமக்கு நம்பிக்கை தரவில்லையா? உம் நெறிகளின் நேர்மை உமக்கு நம்பிக்கை அளிக்கவில்லையா?
|
7. மாசற்றவன் எவனாவது அழிந்து போனதுண்டா? நேர்மையானவர்கள் எங்கேனும் வதைக்கப் பட்டதுண்டா? சிந்தித்துப் பாரும்.
|
10. சிங்கத்தின் கர்ச்சனையும், வெகுண்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்குகிறது; சிங்கக் குட்டிகளின் பற்களும் தகர்க்கப்படுகின்றன.
|
16. அந்த ஆவி அப்படியே நின்றது, ஆனால் அதன் தோற்றம் எனக்கு அடையாளம் தெரியவில்லை; என் கண்களுக்கு முன்னால் ஓர் உருவம் தென்பட்டது; அமைதி நிலவிற்று; அப்போது ஒரு குரல் கேட்டது:
|
17. கடவுள் முன்னிலையில் மனிதன் நீதிமானாய் இருக்கக் கூடுமோ? தன்னைப் படைத்தவர் முன் எவனாவது பரிசுத்தனாய் இருக்கக் கூடுமோ?
|
18. தம் சொந்த ஊழியர்கள் மேலும் அவர் நம்பிக்கை வைப்பதில்லை, அவருடைய தூதர்களிடமும் அவர் குறை காண்கிறார்.
|
19. அப்படியானால், புழுதியில் அடிப்படை நாட்டி, களிமண் குடிசைகளில் குடியிருக்கும் மனிதன் எம்மாத்திரம்? அந்துப் பூச்சி போல் அவன் நசுக்கப்படுவான்.
|
20. காலையில் இருக்கும் அவர்கள் மாலைக்குள் அழிக்கப்படுவர், பொருட்படுத்துவாரின்றி என்றென்றைக்கும் அழிந்து போவர்.
|