3. வானத்தின் கீழ் எங்கணும் அது முழங்கும்படி விடுகிறார், உலகின் மூலைகளுக்கெல்லாம் அவரது மின்னல் செல்கிறது.
|
4. அதை தொடர்ந்து அவர் குரல் முழங்குகிறது; ஆற்றல் வாய்ந்த தம் குரலால் இடியோசை குமுறச் செய்கிறார். அவர் குரல் முழங்கும் போது, மின்னல்களைக் கட்டுப்படுத்துகிறதில்லை.
|
5. கடவுள் தம் குரலால் வியத்தகு வகையில் முழங்குகிறார், நாம் கண்டுபிடிக்க முடியாத பெரிய காரியங்களையும் செய்கிறார்.
|
6. அவர் உறைபனிக்கு, 'மண்மீது விழு' என்றும், தூறலுக்கும் மழைக்கும், 'கடுமையாய்ப் பெய்யுங்கள்' என்றும் கட்டளையிடும் போது,
|
12. மாநிலமேங்கும் அவர் கட்டளையிடுவதை எல்லாம் நிறைவேற்றும்படிக்கு அவர் காட்டும் பக்கமெல்லாம் அவை சுற்றிச் சுற்றித் திரும்புகின்றன.
|
16. மேகங்கள் சமநிலையில் மிதப்பது எப்படி என்பது உமக்குத் தெரியுமா? அறிவு நிறைந்தவரின் வியத்தகு செயல்களை நீர் அறிவீரோ?
|
17. உம் ஆடைகள் உம் உடலில் வெப்பமாயிருக்கும் போது, மண்ணுலகம் வெப்பக் காற்றால் அசைவோ சந்தடியோ இல்லாதிருக்கும் போது,
|
21. காற்று வான்வெளியைத் தூய்மைப்படுத்தி விட்டபின், வானத்தில் ஒளியானது மிகுதியாய்ச் சுடரும் போது, மனிதர்களால் ஒளியை உற்று நோக்க முடியாது.
|
23. அவர் எல்லாம் வல்லவர், அவரை நாம் கண்டுபிடிக்க முடியாது; வல்லமையிலும் நேர்மையிலும் அவர் பெரியவர், நீதி நிறைந்த அவர் யாரையும் ஒடுக்க மாட்டார்.
|
24. ஆதலால் தான் மனிதர் அவருக்கு அஞ்சுகின்றனர், தாங்கள் ஞானிகள் என்று நினைக்கின்ற எவரையும் அவர் பொருட்படுத்துகிறதில்லை" என்று எலியூ கூறி முடித்தான்.
|