6. நீர் பாவம் செய்தால் அவருக்கெதிராய் நீர் செய்வது என்ன? உம் அக்கிரமங்கள் பெருகுவதால், அவருக்கு நேரும் தீங்கு யாது?
|
9. கொடுமைகளின் மிகுதியால் தான் மக்கள் கூக்குரலிடுகின்றனர், வல்லவனின் கைக்குத் தப்பவே உதவி கேட்டுக் கூப்பிடுகின்றனர்.
|
11. காட்டு மிருகங்களுக்குக் கற்பிப்பதை விட எங்களுக்கு மிகுதியாய்க் கற்பிப்பவரும், வானத்துப் பறவைகளை விட எங்களை ஞானிகளாக்குபவருமான கடவுள் எங்கே?' என்று எவனும் கேட்பதில்லை.
|
12. அப்போது அவர்கள் கூக்குரலிடுகின்றனர், ஆயினும் பொல்லாதவர்களின் செருக்கை முன்னிட்டு அவர் அதற்குச் செவிசாய்க்கிறதில்லை.
|
13. உண்மையில் வீண் சொற்களுக்குக் கடவுள் செவிமடுப்பதில்லை, எல்லாம் வல்லவர் அவற்றைப் பொருட்படுத்துகிறதில்லை.
|
14. அப்படியிருக்க, 'நான் அவரைக் காண்கிறதில்லை, என் வழக்கு அவர்முன் இருக்கிறது, அவருக்காக நான் காத்திருக்கிறேன்' என்று நீர் சொல்லும் போது, அதற்கு எப்படி அவர் செவிமடுப்பார்?
|
15. இப்பொழுது நீர், 'அவரது சினம் தண்டிப்பதில்லை, மனிதனின் மீறுதலை அவர் அறிவதில்லை போலும்' என்கிறீர்.
|