6. நியாயம் என் பக்கம் இருந்தும், நான் பொய்யனானேன்; குற்றமில்லாதிருந்தும், ஆறாக்காயத்துக்கு ஆளானேன்' என்றாரே.
|
10. ஆதலால், உணரும் உள்ளம் படைத்தவர்களே, செவிசாயுங்கள்; கொடுமை செய்தல் என்பதே கடவுளிடம் கிடையாது. தீமை என்பதே எல்லாம் வல்லவரிடம் இருக்க முடியாது.
|
11. ஏனெனில் ஒருவன் செயலுக்கேற்பவே அவர் பலனளிக்கிறார், அவன் நெறிகளுக்குத் தக்கபடியே அவனுக்கு எதுவும் நேருகிறது.
|
14. அவர் தமது ஆவியைத் தம்மிடமே திரும்ப எடுத்துக்கொண்டால், தமது மூச்சைத் தம்மிடம் மீண்டும் கூட்டிக் கொண்டால்,
|
18. அவர் அரசனைப் பார்த்து, 'ஒன்றுக்கும் உதவாதவனே' என்றும், பெருங்குடி மக்களிடம், 'கொடியவர்களே' என்றும் சொல்லுகிறார்;
|
19. தலைவர்களை அவர் ஓரவஞ்சனையால் நடத்துகிறதில்லை, ஏழைகளை விடச் செல்வர்களை அவர் மிகுதியாய் மதிக்கிறதில்லை; ஏனெனில் அவர்களனைவரும் அவருடைய கை வேலைகளே.
|
20. ஒரு நொடியில் அவர்கள் செத்துப் போகிறார்கள், செல்வச் சீமான்களும் நள்ளிரவில் அதிர்ச்சியுற்று இறக்கிறார்கள், கண் காணாக் கையால் கொடியவர்களும் அகற்றப்படுகின்றனர்.
|
25. இவ்வாறு, அவர்கள் செய்கைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு, இரவில் அவர்களை விழத்தாட்டுகிறார், அவர்களோ நொறுக்கப்படுகின்றனர்.
|
28. ஏழைகள் அவர்களுக்கு எதிராய் அவரிடம் கூக்குரலிட்டனர், தாழ்ந்தோரின் அழுகுரல் அவர் செவிகளுக்கு எட்டிற்று,
|
29. ஆயினும் அவர் கவலைப்படவில்லை, எதுவும் அவரை அசைக்காது; தம் முகத்தை மறைத்துக் கொள்ளுகிறார், யாரும் அவரைக் காண்பதில்லை' என்று சொல்லக்கூடும். ஆயினும் மக்கள் மேலும் மக்களினங்கள் மேலும் அவர் இரங்குகிறார்.
|
31. அப்படிப்பட்டவன் கடவுளைப் பார்த்து, 'நான் தவறான நெறியில் நடத்தப்பட்டேன், இனி நான் பாவஞ் செய்யேன்;
|
32. நான் தவறு செய்திருந்தால் அதை எனக்குச் சொல்லும், நான் அக்கிரமம் செய்திருந்தால், இனி நான் செய்யேன்' என்று சொல்வானாகில், -
|
33. அப்பொழுதும் அவனை அவர் தண்டிக்க வேண்டுமென நீர்- அவருடைய தீர்மானங்களைப் புறக்கணிக்கும் நீர்- நினைக்கிறீரோ? இவ்வாறு முடிவு கூறுவது நானல்லேன், நீரேயாதலால், எங்கள் அனைவருக்கும் உம் அறிவை வழங்கும்.
|
37. தம் முன்னைய பாவத்துடன் இறைவனை எதிர்த்து இன்னொரு பாவத்தையும் சேர்த்துவிட்டார்; நம் நடுவில் அவர் நீதியையே எதிர்த்துக் கேள்வி விடுக்கிறார், கடவுள் மேல் பழிச்சொற்களைக் கொட்டுகிறார்."
|