1. இப்பொழுதோ என்னிலும் இளையவர்கள் என்னைப் பழித்துக் காட்டி ஏளனம் செய்கிறார்களே, அவர்களுடைய பெற்றோரை என் கிடை நாய்களோடு ஒப்பிடவும் தகுதியற்றவர்கள் என்று முன்பு நான் எண்ணியிருந்தேன்.
|
2. அப்படிப்பட்டவர்களின் வலிமையால் எனக்கு என்ன நன்மை கிடைத்திருக்கக் கூடும்? அவர்கள் தான் வலிமையிழந்தவர்களாயிற்றே!
|
3. அவர்களோ உணவு பற்றாக்குறையாலும் பட்டினியாலும் நெருக்கப்பட்டு, வறண்ட பாலைநிலத்தில் அலைந்து, பாழாய்க்கிடக்கும் நிலத்தைச் சுரண்டி,
|
5. மக்கள் நடுவிலிருந்து அவர்கள் விரட்டப்படுகிறார்கள், கள்ளரைக் கண்டு கூச்சலிடுவது போல் அவர்களைக் கண்டு மக்கள் கூச்சலிடுகிறார்கள்.
|
6. அவர்கள் காட்டாறுகளின் உடைப்புகளிலும், நிலத்தின் பள்ளங்களிலும், பாறையின் வெடிப்புகளிலும் வாழ்கிறார்கள்.
|
10. அவர்கள் என்னை அருவருந்து அப்பால் விலகிப் போகிறார்கள், என்னைக் கண்டதும் என் முன் காறித் துப்பவும் தயங்குவதில்லை.
|
11. கடவுள் என் கட்டுகளை அவிழ்த்து, என்னைத் தாழ்த்தினதால், என் முன்னிலையில் அவர்கள் கடிவாளமற்ற குதிரைகளாயினர்.
|
12. கலகக்காரர்கள் என் வலப்பக்கத்தில் எழும்புகின்றனர், என்னை அவர்கள் நெட்டித் தள்ளுகின்றனர், என்னை அழிக்கும்படி வழிகளை வகுக்கின்றனர்.
|
13. என் வழிகளைக் கெடுக்கின்றனர், எனக்கு வரும் அழிவை விரைவு படுத்துகின்றனர், அவர்களைத் தடுப்பவன் எவனுமில்லை.
|
15. திகில்கள் என்மேல் திருப்பப்படுகின்றன, காற்றில் அகப்பட்டது போல் என் உறுதி விரட்டப்படுகிறது, கார்மேகம் போல் என் வாழ்க்கை வளம் கடந்து போனது.
|
16. இப்பொழுது என் உயிர் என்னுள் சொட்டுச் சொட்டாய்ச் சிதறுகிறது, துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.
|
20. உம்மை நோக்கிக் கூவுகிறேன், நீர் பதில் கொடுக்கிறதில்லை; நான் கெஞ்சி நிற்கிறேன், நீர் ஏறெடுத்தும் பார்க்கிறதில்லை.
|
23. ஆம், என்னை நீர் சாவுக்கே இட்டுச் செல்கிறீர் என்று அறிவேன், வாழ்வோர் அனைவர்க்கும் குறிக்கப்பட்ட இடம் அதுவே.
|