2. அவர் சொன்னதாவது: "எனக்கு நீதிவழங்க மறுத்த உயிருள்ள கடவுள் மேல் ஆணை! என் உள்ளத்தைக் கசப்பாக்கிய எல்லாம் வல்லவர் மேல் ஆணை!
|
6. என் நேர்மையைப் பற்றிக் கொள்வேன், விடவே மாட்டேன்; என் வாழ்நாளில் நான் தவறியதாக என் மனம் உறுத்தவே இல்லை.
|
8. ஏனெனில் இறைப்பற்றில்லாதவனைக் கடவுள் அழித்து, அவனுடைய உயிரை வாங்கும் போது, அவனுக்கு இருக்கும் நம்பிக்கை தான் என்ன?
|
13. பொல்லாதவனுக்குக் கடவுள் விதிக்கும் பங்கு இதுவே, கொடியவர்களுக்கு எல்லாம் வல்லவர் தரப்போகும் உரிமைச் சொத்து இதுவே:
|
14. அவன் மக்கள் பெருகிப் பலுகுவது வாளுக்கு இரையாகும்படியே; அவனுடைய சந்ததிக்குப் போதிய உணவு கிடைக்காது.
|
16. தூசியைப் போல் வெள்ளியை அவன் சேர்த்து வைத்தாலும், களிமண்ணைக் குவிப்பது போல், உடைகளை அடுக்கி வைத்தாலும்,
|
17. அவன் அடுக்கி வைத்தவை அவனல்ல, நீதிமான் ஒருவன் உடுத்திக் கொள்வான், வெள்ளியையோ மாசற்றவர்கள் பிரித்துக்கொள்வர்.
|
19. பணக்காரனாக அவன் உறங்கப் போகிறான்; ஆனால் இனி முடியாது; அவன் கண்ணைத் திறக்கும் போது, செல்வம் போயிற்றெனக் காண்பான்.
|
21. கீழைக்காற்று அவனைத் தூக்கிச் செல்கிறது, அவனைக் காணோம்; அவனிடத்திலிருந்தே அவனை அடித்துச் செல்லுகிறது.
|
22. இரக்கமின்றிக் கடவுள் அவன் மேல் அம்பு எய்கிறார், தலைதெறிக்க அவன் அவர் கையினின்று தப்பியோடுகிறான்.
|