3. நீர் நேர்மையாயிருந்தால், கடவுளுக்கு அதனால் இன்பமுண்டோ? உம் நெறிகள் குற்றமற்றவையாயின், அது அவருக்கு ஆதாயமோ?
|
6. ஏனெனில் காரணமின்றி உம் சகோதரரிடம் நீர் அடகு வாங்கினீர், ஆடைகளைப் பறித்து விட்டுப் பலரை நிர்வாணிகளாய் விட்டீர்.
|
11. உமது ஒளி இருளாக மாறிவிட்டது, உம்மால் இனிப் பார்க்க முடியாது, வெள்ளப் பெருக்கு உம்மை மூழ்கடிக்கிறது.
|
12. வான்வெளிக்கும் மேலே அல்லவா கடவுள் தங்கியிருக்கிறார்? வானத்து விண்மீன்களைப் பாரும், அவை எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன!
|
17. கடவுளை நோக்கி, அவர்கள், 'எங்களை விட்டகலும்' என்றும், 'எல்லாம் வல்லவர் எங்களுக்கு என்ன செய்ய முடியும்' என்றும் சொன்னார்கள்.
|
18. ஆயினும், அவர்கள் வீடுகளை அவர் நன்மைகளால் நிரப்பினார்- தீயவர்களின் ஆலோசனை எனக்குத் தொலைவாயுள்ளது.
|
23. எல்லாம் வல்லவரிடம் நீர் தாழ்மையோடு திரும்பி வந்தால், உம் கூடாரங்களிலிருந்து அநீதியை அப்புறப்படுத்தினால்,
|
27. நீர் அவரைப் பார்த்து மன்றாடுவீர், அவர் உமது மன்றாட்டைக் கேட்டருள்வார், உம் நேர்ச்சிக் கடன்களை நீர் செலுத்துவீர்.
|