5. தீயவரின் வெற்றிப் பெருமிதம் நீடிப்பதில்லை, இறைப்பற்றில்லாதவரின் மகிழ்ச்சி இமைப் பொழுதில் மறையும்.
|
7. தன் சொந்த மலத்தைப் போல் அவனும் அழிந்துபோவான்; ஏற்கெனவே அவனைக் கண்டவர்கள், 'எங்கே அவன்?' என்பார்கள்.
|
18. தனது உழைப்பின் பலனை இழந்து விடுவான், அதை அவன் உண்டு பார்க்கமாட்டான்; வணிகம் செய்து சேர்த்த வருமானத்தால், கொஞ்சமும் அவனுக்கு மகிழ்ச்சி இராது.
|
19. ஏனெனில் ஏழைகளை ஒடுக்கினான், அவர்களைக் கைவிட்டான், தான் கட்டாத வீட்டைப் பிறனிடமிருந்து பறித்தான்.
|
23. அவன் தன் வயிற்றை நிரப்பும் போது, கடவுள் தம் கோபத்தின் ஆத்திரத்தை அவன் மேல் கொட்டுவார், அவனுக்கு உணவாக அதைப் பொழிவார்.
|
25. அதை வெளியே இழுத்தால் அவனுடலைக் கிழித்துக் கொண்டு வரும், மின்னும் அம்பு முனை அவன் பிச்சிலிருந்து வெளிப்படும், அச்சமும் நடுக்கமும் அவனை ஆட்கொள்ளும்.
|
26. அடர்ந்த காரிருள் அவனுக்காகக் காத்திருக்கிறது, மனிதன் மூட்டாத நெருப்பு அவனை விழுங்கும், அவன் கூடாரத்தில் எஞ்சியிருப்பதும் அழிக்கப்படும்.
|
29. கொடியவனுக்குக் கடவுள் விதிக்கும் பங்கு இதுவே; கடவுள் அவனுக்குக் குறிக்கும் உரிமைச் சொத்து இதுவே."
|