3. பத்து முறைகள் என் மேல் வசைமாரி பொழிந்தீர்கள்; என் மனத்தைப் புண்படுத்த உங்களுக்கு வெட்கமாயில்லையா?
|
5. எனக்கெதிராய் நீங்கள் உங்களையே பெரியவர்களாக்கி, என் தாழ்மை நிலையைக் காட்டி என் குற்றத்தை எண்பிக்கிறீர்களே;
|
6. கடவுள் தான் என்னை அந்த நெருக்கடிக்குள் செலுத்தினாரென்றும், வலை விரித்து என்னை மடக்கினாரென்றும் அறிந்து கொள்ளுங்கள்.
|
7. இதோ, நான் 'கொடுமை கொடுமை' எனக் கதறியும் கேட்பாரில்லை; நான் கூவியழைக்கிறேன்; நீதி வழங்கப் படவில்லை.
|
10. நாற்புறமும் என்னை அழிக்கிறார், நான் தொலைந்தேன்; மரத்தைப் பிடுங்குவது போல் என் நம்பிக்கையைப் பிடுங்கி விட்டார்.
|
12. அவருடைய படைகள் திரண்டு வருகின்றன, என்னைத் தாக்க வழியமைத்தன. என் கூடாரத்தைச் சுற்றி முற்றுகையிட்டன.
|
14. என் உறவினரும் நெருங்கிய நண்பரும் என்னைக் கைவிட்டனர், என் வீட்டுக்கு வந்த விருந்தினர் என்னை மறந்துவிட்டனர்.
|
16. என் ஊழியனைக் கூப்பிட்டால், அவன் பதில் சொல்வதில்லை, என் வாய்திறந்து நான் அவனைக் கெஞ்ச வேண்டியுள்ளது.
|
19. என் உயிர் நண்பர்கள் அனைவரும் என்னை அருவருக்கின்றனர், என் அன்பைப் பெற்றவர்கள் கூட எனகெதிராய் மாறினர்.
|
25. என்னை மீட்பவர் உயிரோடிருக்கிறார் என்றும், இறுதியில் அவர் புவி மீது எழுந்தருள்வார் என்றும் அறிவேன்.
|
27. அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன், என் கண்களால் நானே பார்ப்பேன், வேறு யாரும் பாரார். என் உள்ளம் என்னுள் மயங்கிச் சோர்கிறது.
|
28. அவனை நாம் எவ்வகையில் பின்தொடர்ந்து விரட்டலாம், அதற்கு என்ன காரணம் கற்பிக்கலாம்?' என்பீர்களாகில்,
|
29. நீங்கள் முதற்கண் வாள் தரும் தண்டனையைக் கொணரும்; தீர்வை என்று ஒன்றுண்டு என நீங்கள் அறியவேண்டும்."
|