3. ஆனால் உங்களைப் போல் எனக்கும் அறிவுண்டு; உங்களினும் நான் தாழ்ந்தவனல்ல; உங்களுக்குத் தெரிந்தது யாருக்குத் தான் தெரியாது?
|
4. கடவுளைக் கூவியழைத்து அவரிடமிருந்து மறுமொழி பெற்ற நான்- மாசற்ற நீதிமானாகிய நான்- என் நண்பர்களின் ஏளனத்திற்கு ஆளானேன்!
|
5. இன்ப வாழ்க்கையில் திளைப்பவன் துன்பத்தை வெறுக்கிறான்; ஆனால் இடறி விழுவோருக்கு அது துணையாகக் காத்திருக்கிறது.
|
6. கள்ளர்களின் கூடாரங்கள் அமைதியாய் இருக்கின்றன, கடவுளுக்கு எரிச்சலூட்டுவோரும், தங்கள் கைவன்மையைக் கடவுளாய்க் கொள்வோரும் அச்சமின்றி வாழ்கின்றனர்.
|
7. ஆனால் மிருகங்களைக் கேளும், அவை உமக்குக் கற்பிக்கும்; வானத்துப் பறவைகளை வினவும், அவை உமக்குச் சொல்லும்.
|
14. அவர் இடித்தால், மீண்டும் கட்டியெழுப்ப எவனாலும் முடியாது; அவர் மனிதனைச் சிறையில் வைத்தால், விடுவிக்க யாராலும் ஆகாது.
|
15. அவர் தண்ணீரைத் தடைசெய்தால், யாவும் வறண்டு போம்; அவர் மடையைத் திறந்து விட்டாலோ, நிலமே மூழ்கிப் போகும்.
|
24. உலக மக்களின் தலைவர்களிடமிருந்து அறிவை அகற்றுகிறார், திக்கற்ற பாலை வெளியில் அவர்களை அலையச் செய்கிறார்.
|
25. ஒளியின்றி இருளிலே அவர்கள் தடவிக்கொண்டு நடக்கின்றனர், குடி போதையில் உள்ளவனைப்போல் அவர்களைத் தள்ளாடச் செய்கிறார்.
|