1. வாழ்க்கையை நான் வெறுக்கிறேன்; என் முறையீட்டைத் தாராளமாய்ச் சொல்வேன், என் மனக் கசப்பை வெளிப்படுத்துவேன்.
|
2. கடவுளை நோக்கி நான் சொல்வது இதுவே: 'என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பிடாதீர், எனக்கெதிராய் நீர் வழக்காடுவது ஏனென்று எனக்குத் தெரியப்படுத்தும்.
|
3. உம் கைகளால் உருவாக்கிய என்னை ஒடுக்கி அவமதிப்பது உமக்குச் சரி எனப்படுகிறதா? கொடியவரின் திட்டங்களுக்கு நீர் உடந்தையாகலாமா?
|
14. நான் பாவஞ் செய்தால் அதைக் கவனித்துக்கொள்ளுகிறீர், நான் குற்றம் செய்தால் என்னைக் குற்றம் சாட்டாமல் விடமாட்டீர்.
|
15. நான் தீயவனாயிருந்தால் எனக்கு ஐயோ கேடு! நான் நேர்மையுள்ளவனே என்றாலும், தலை தூக்க இயலாதே! ஏனெனில் அவமானத்தால் நான் நிறைந்திருக்கிறேன், என் வேதனைகளையே கண்ணோக்குகிறேன்.
|
16. நான் தலைநிமிர்ந்து நின்றால், சிங்கம் போல் என்மேல் பாய்கிறீர், எனக்கெதிராய் மீண்டும் விந்தைகள் புரிகிறீர்.
|
17. எனக்கெதிரான உம் சாட்சிகளைப் புதுப்பிக்கிறீர், என்மேல் உமது எரிச்சலை மிகுதிப்படுத்துகிறீர், எனக்கெதிராய்ப் புதிய பகைவரைக் கொண்டு வருகிறீர்.
|
19. கருப்பையிலிருந்து நேரே சவக்குழிக்கு நான் போயிருந்தால் தாவிளை. அப்போது நான் இல்லாதவன் போலவே ஆயிருக்கும்!
|
20. எஞ்சியுள்ள என் வாழ்நாட்கள் விரைவில் முடியுமன்றோ? எனக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்படி என்னைத் தனிமையில் விட்டுவிடும்.
|
21. அதன்பின் திரும்பி வர இயலாத நாட்டுக்கு நான் போய்விடுவேன், அங்கு இருளும் அடர்ந்த காரிருளும் நிறைந்துள்ளது;
|