தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
1. பாரவோன் காஜா நகரத்தைப் பிடிப்பதற்கு முன்னர், பிலிஸ்தியரைக் குறித்து ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளிய வாக்கு.
2. ஆண்டவர் கூறுகிறார்: இதோ, வடதிசையினின்று பெருவெள்ளம் புறப்படுகிறது, கரை புரண்டோடும் காட்டாறு போல வருகிறது; நாட்டையும் நாட்டிலுள்ள யாவற்றையும் மூழ்கடிக்கும், நகரத்தையும் குடிகளையும் வளைத்துக் கொள்ளும்; மனிதர்கள் கூக்குரலிடுவார்கள், நாட்டின் குடிகளனைவரும் அலறியழுவார்கள்;
3. அவர்களுடைய போர்க் குதிரைகளின் குளம்பொலியையும், தேர்ப்படையின் கடகடப்பையும், உருளைகளின் இரைச்சலையும் கேட்டு அஞ்சுவார்கள்; தந்தையர் தங்கள் கைகள் சோர்ந்தமையால், தங்கள் குழந்தைகளையும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்;
4. ஏனெனில் அது பிலிஸ்தியர் அனைவரும் அழியும் நாள், தீரும் சீதோனும் அதன் துணைவர்களும் அழியும் நாள்; ஏனெனில் ஆண்டவர் பிலிஸ்தியரை அழிக்கிறார், காத்தோர் தீவில் எஞ்சியிருந்தோரையும் அழிக்கிறார்.
5. காஜா நகரம் மொட்டையடிக்கப்படும்; அஸ்காலோன் மௌனங் காக்கும் அனாக்கியரில் எஞ்சியிருப்பவர்களே, நீங்கள் எம்மட்டும் உங்களையே சீறிக் கொள்வீர்கள்?
6. ஆண்டவரின் வாளே, எது வரையில் நீ ஓயாதிருப்பாய்? உன் அறைக்குள் நுழைந்து ஓய்ந்திரு, பேசாதிரு;
7. அது எப்படி ஓய்ந்திருக்க முடியும்? அஸ்காலோனுக்கும், அதன் கடல்துறை நாடுகளுக்கும் விரோதமாக ஆண்டவர் அதற்குக் கட்டளை கொடுத்து, அது செய்ய வேண்டியதைச் சொல்லியனுப்பினாரே!"

குறிப்பேடுகள்

No Verse Added

Total 52 Chapters, Current Chapter 47 of Total Chapters 52
எரேமியா 47:29
1. பாரவோன் காஜா நகரத்தைப் பிடிப்பதற்கு முன்னர், பிலிஸ்தியரைக் குறித்து ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளிய வாக்கு.
2. ஆண்டவர் கூறுகிறார்: இதோ, வடதிசையினின்று பெருவெள்ளம் புறப்படுகிறது, கரை புரண்டோடும் காட்டாறு போல வருகிறது; நாட்டையும் நாட்டிலுள்ள யாவற்றையும் மூழ்கடிக்கும், நகரத்தையும் குடிகளையும் வளைத்துக் கொள்ளும்; மனிதர்கள் கூக்குரலிடுவார்கள், நாட்டின் குடிகளனைவரும் அலறியழுவார்கள்;
3. அவர்களுடைய போர்க் குதிரைகளின் குளம்பொலியையும், தேர்ப்படையின் கடகடப்பையும், உருளைகளின் இரைச்சலையும் கேட்டு அஞ்சுவார்கள்; தந்தையர் தங்கள் கைகள் சோர்ந்தமையால், தங்கள் குழந்தைகளையும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்;
4. ஏனெனில் அது பிலிஸ்தியர் அனைவரும் அழியும் நாள், தீரும் சீதோனும் அதன் துணைவர்களும் அழியும் நாள்; ஏனெனில் ஆண்டவர் பிலிஸ்தியரை அழிக்கிறார், காத்தோர் தீவில் எஞ்சியிருந்தோரையும் அழிக்கிறார்.
5. காஜா நகரம் மொட்டையடிக்கப்படும்; அஸ்காலோன் மௌனங் காக்கும் அனாக்கியரில் எஞ்சியிருப்பவர்களே, நீங்கள் எம்மட்டும் உங்களையே சீறிக் கொள்வீர்கள்?
6. ஆண்டவரின் வாளே, எது வரையில் நீ ஓயாதிருப்பாய்? உன் அறைக்குள் நுழைந்து ஓய்ந்திரு, பேசாதிரு;
7. அது எப்படி ஓய்ந்திருக்க முடியும்? அஸ்காலோனுக்கும், அதன் கடல்துறை நாடுகளுக்கும் விரோதமாக ஆண்டவர் அதற்குக் கட்டளை கொடுத்து, அது செய்ய வேண்டியதைச் சொல்லியனுப்பினாரே!"
Total 52 Chapters, Current Chapter 47 of Total Chapters 52
×

Alert

×

tamil Letters Keypad References