தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. எழுந்திரு, சீயோனே எழுந்திரு, எழுந்து உன்னுடைய ஆற்றலை அணிந்து கொள்; பரிசுத்தரின் பட்டணமாகிய யெருசலேமே, உனது மகிமையின் ஆடைகளை உடுத்திக் கொள்; ஏனெனில் விருத்தசேதனம் செய்யாதவனும், தீட்டுப்பட்டவனும் உன் நடுவே போகும்படி இனி நேரிடாது.
2. அடிமையாய் அமர்ந்திருக்கும் யெருசலேமே, தூசியைத் தட்டி விட்டுத் துள்ளியெழு; கைதியாய்க் கிடக்கும் சீயோன் மகளே, உன் கழுத்துச் சங்கிலியை அறுத்து விடு.
3. ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றியே மீட்கப்படுவீர்கள்.
4. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: முன்னாளில் நம் மக்கள் அந்நியராய்க் குடியேறி வாழ்வதற்காக எகிப்துக்கு இறங்கிப் போனார்கள்; அசீரியன் காரணம் ஏதுமில்லாமலே அவர்களை வதைத்தான்;
5. இப்பொழுதோ காரணமின்றி நம் மக்கள் கொண்டு போகப்பட்ட பின், நமக்கு இங்கே என்ன வேலை, என்கிறார் ஆண்டவர். அவர்களை ஆளுகிறவர்கள் அநியாயமாய் நடக்கிறார்கள், நாள் முழுதும் இடைவிடாமல் நம் திருப்பெயரைப் பழித்துரைக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
6. ஆகையால் நம் மக்கள் ஒரு நாள் நம் திருப்பெயரை அறிந்து கொள்வார்கள்; அப்போது அவர்கள், இதோ இருக்கிறோம் என்று சொன்னவர் நாமே என்பதைக் கண்டுபிடிப்பார்கள்."
7. நற்செய்தியை அறிவிக்கவும், சமாதானத்தைத் தெரிவிக்கவும், மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கவும், மீட்பைத் தெரிவிக்கவும், சீயோனைப் பார்த்து, "உன் கடவுள் அரசாளுகிறார்" என்று பறைசாற்றவும் வருகிறவருடைய மலரடிகள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!
8. இதோ, உன் சாமக்காவலர் குரல் கேட்கிறது, அவர்கள் தம் குரலை உயர்த்தி மகிழ்ச்சியோடு ஆர்பரிக்கிறார்கள்; ஏனெனில் ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை நேருக்கு நேராய்க் காண்கிறார்கள்.
9. யெருசலேமின் பாழடைந்த இடங்களே, நீங்கள் அனைவரும் அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஏனெனில், ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் தந்தார், யெருசலேமை அவர் மீட்டருளினார்.
10. மக்களினங்கள் அனைத்தின் கண்களுக்கும், ஆண்டவர் தம் பரிசுத்த கைவன்மையைக் காட்டினார். உலகின் கடைக் கோடி நாடுகள் எல்லாம், நம் கடவுள் தரும் மீட்பைக் காணப்போகின்றன.
11. வெளியேறுங்கள், வெளியேறுங்கள், பபிலோனிலிருந்து புறப்படுங்கள், தீட்டானதொன்றையும் தொடாதீர்கள்; அந்நாட்டினின்று புறப்பட்டு வெளியேறுங்கள், ஆண்டவருடைய பாத்திரங்களைத் தாங்கி நிற்பவர்களே, உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
12. நீங்கள் விழுந்தடித்து அவசரமாய்ப் புறப்பட மாட்டீர்கள், ஓட்டம் ஓட்டமாய் ஓடவும் மாட்டீர்கள்; ஏனெனில் ஆண்டவர் உங்களுக்கு முன்னால் நடப்பார், இஸ்ராயேலின் கடவுள் காவற்படை போல் உங்களைப் பின்தொடர்வார்.
13. இதோ, நம் ஊழியன் சிறப்படைவார், உயர்த்தப்படுவார், மேலோங்குவார், மிக உன்னதராவார்;
14. பலபேர் அவரைக் கண்டு திடுக்கிட்டார்கள்- அவரது தோற்றம் அவ்வளவு சீர்குலைந்திருந்தது, மனித சாயலே அவரிடம் இல்லை- மனிதர்களின் வடிவே அவரிடம் காணப்படவில்லை.
15. அதே அளவுக்கு மக்களினங்கள் பல திடுக்கிடும், அரசர்களும் அவரைப் பார்த்து, வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் சொல்லப்படாத ஒன்றைக் காண்பார்கள், இதுவரை கேட்டிராத ஒன்றைப் பார்ப்பார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 52 of Total Chapters 66
ஏசாயா 52:6
1. எழுந்திரு, சீயோனே எழுந்திரு, எழுந்து உன்னுடைய ஆற்றலை அணிந்து கொள்; பரிசுத்தரின் பட்டணமாகிய யெருசலேமே, உனது மகிமையின் ஆடைகளை உடுத்திக் கொள்; ஏனெனில் விருத்தசேதனம் செய்யாதவனும், தீட்டுப்பட்டவனும் உன் நடுவே போகும்படி இனி நேரிடாது.
2. அடிமையாய் அமர்ந்திருக்கும் யெருசலேமே, தூசியைத் தட்டி விட்டுத் துள்ளியெழு; கைதியாய்க் கிடக்கும் சீயோன் மகளே, உன் கழுத்துச் சங்கிலியை அறுத்து விடு.
3. ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றியே மீட்கப்படுவீர்கள்.
4. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: முன்னாளில் நம் மக்கள் அந்நியராய்க் குடியேறி வாழ்வதற்காக எகிப்துக்கு இறங்கிப் போனார்கள்; அசீரியன் காரணம் ஏதுமில்லாமலே அவர்களை வதைத்தான்;
5. இப்பொழுதோ காரணமின்றி நம் மக்கள் கொண்டு போகப்பட்ட பின், நமக்கு இங்கே என்ன வேலை, என்கிறார் ஆண்டவர். அவர்களை ஆளுகிறவர்கள் அநியாயமாய் நடக்கிறார்கள், நாள் முழுதும் இடைவிடாமல் நம் திருப்பெயரைப் பழித்துரைக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
6. ஆகையால் நம் மக்கள் ஒரு நாள் நம் திருப்பெயரை அறிந்து கொள்வார்கள்; அப்போது அவர்கள், இதோ இருக்கிறோம் என்று சொன்னவர் நாமே என்பதைக் கண்டுபிடிப்பார்கள்."
7. நற்செய்தியை அறிவிக்கவும், சமாதானத்தைத் தெரிவிக்கவும், மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கவும், மீட்பைத் தெரிவிக்கவும், சீயோனைப் பார்த்து, "உன் கடவுள் அரசாளுகிறார்" என்று பறைசாற்றவும் வருகிறவருடைய மலரடிகள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!
8. இதோ, உன் சாமக்காவலர் குரல் கேட்கிறது, அவர்கள் தம் குரலை உயர்த்தி மகிழ்ச்சியோடு ஆர்பரிக்கிறார்கள்; ஏனெனில் ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை நேருக்கு நேராய்க் காண்கிறார்கள்.
9. யெருசலேமின் பாழடைந்த இடங்களே, நீங்கள் அனைவரும் அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஏனெனில், ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் தந்தார், யெருசலேமை அவர் மீட்டருளினார்.
10. மக்களினங்கள் அனைத்தின் கண்களுக்கும், ஆண்டவர் தம் பரிசுத்த கைவன்மையைக் காட்டினார். உலகின் கடைக் கோடி நாடுகள் எல்லாம், நம் கடவுள் தரும் மீட்பைக் காணப்போகின்றன.
11. வெளியேறுங்கள், வெளியேறுங்கள், பபிலோனிலிருந்து புறப்படுங்கள், தீட்டானதொன்றையும் தொடாதீர்கள்; அந்நாட்டினின்று புறப்பட்டு வெளியேறுங்கள், ஆண்டவருடைய பாத்திரங்களைத் தாங்கி நிற்பவர்களே, உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
12. நீங்கள் விழுந்தடித்து அவசரமாய்ப் புறப்பட மாட்டீர்கள், ஓட்டம் ஓட்டமாய் ஓடவும் மாட்டீர்கள்; ஏனெனில் ஆண்டவர் உங்களுக்கு முன்னால் நடப்பார், இஸ்ராயேலின் கடவுள் காவற்படை போல் உங்களைப் பின்தொடர்வார்.
13. இதோ, நம் ஊழியன் சிறப்படைவார், உயர்த்தப்படுவார், மேலோங்குவார், மிக உன்னதராவார்;
14. பலபேர் அவரைக் கண்டு திடுக்கிட்டார்கள்- அவரது தோற்றம் அவ்வளவு சீர்குலைந்திருந்தது, மனித சாயலே அவரிடம் இல்லை- மனிதர்களின் வடிவே அவரிடம் காணப்படவில்லை.
15. அதே அளவுக்கு மக்களினங்கள் பல திடுக்கிடும், அரசர்களும் அவரைப் பார்த்து, வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் சொல்லப்படாத ஒன்றைக் காண்பார்கள், இதுவரை கேட்டிராத ஒன்றைப் பார்ப்பார்கள்.
Total 66 Chapters, Current Chapter 52 of Total Chapters 66
×

Alert

×

tamil Letters Keypad References