தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. அந்நாளில், நீ இவ்வாறு சொல்லுவாய்: "ஆண்டவரே, நான் உமக்கு நன்றி கூறுகிறேன், ஏனெனில் நீர் என் மீது சினங்கொண்டாலும், இப்பொழுது உமது சினம் தணிந்து விட்டது, நீரும் எனக்கு ஆறுதல் தந்தீர்.
2. இதோ கடவுள் தான் என் மீட்பு, அவர் மேல் நம்பிக்கை வைக்கிறேன், அஞ்சேன்; ஏனெனில் ஆண்டவரே என் வலிமை, அவரையே பாடுவேன், என் மீட்பு அவரே."
3. மீட்பின் ஊற்றுகளினின்று தண்ணீரை அகமகிழ்வோடு நீங்கள் முகந்து கொள்வீர்கள்,
4. அந்நாளில் நீங்கள் இவ்வாறு சொல்லுவீர்கள்: "ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள், அவரது பெயரைப் போற்றிப் புகழுங்கள்; புறவினத்தார்க்கு அவர் செயல்களை அறிக்கையிடுங்கள், அவர் பெயர் உயர்ந்ததெனப் பறைசாற்றுங்கள்.
5. ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள், ஏனெனில் மகிமைக்குரிய செயல்களைச் செய்தார்; உலகெங்கும் இதனைத் தெரியப்படுத்துங்கள்.
6. சீயோனின் குடிகளே ஆர்ப்பரியுங்கள், மகிழ்ச்சியினால் பாடுங்கள்; ஏனெனில் இஸ்ராயேலின் பரிசுத்தர் உன் நடுவில் மேன்மையோடு விளங்குகிறார்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 12 of Total Chapters 66
ஏசாயா 12:34
1. அந்நாளில், நீ இவ்வாறு சொல்லுவாய்: "ஆண்டவரே, நான் உமக்கு நன்றி கூறுகிறேன், ஏனெனில் நீர் என் மீது சினங்கொண்டாலும், இப்பொழுது உமது சினம் தணிந்து விட்டது, நீரும் எனக்கு ஆறுதல் தந்தீர்.
2. இதோ கடவுள் தான் என் மீட்பு, அவர் மேல் நம்பிக்கை வைக்கிறேன், அஞ்சேன்; ஏனெனில் ஆண்டவரே என் வலிமை, அவரையே பாடுவேன், என் மீட்பு அவரே."
3. மீட்பின் ஊற்றுகளினின்று தண்ணீரை அகமகிழ்வோடு நீங்கள் முகந்து கொள்வீர்கள்,
4. அந்நாளில் நீங்கள் இவ்வாறு சொல்லுவீர்கள்: "ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள், அவரது பெயரைப் போற்றிப் புகழுங்கள்; புறவினத்தார்க்கு அவர் செயல்களை அறிக்கையிடுங்கள், அவர் பெயர் உயர்ந்ததெனப் பறைசாற்றுங்கள்.
5. ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள், ஏனெனில் மகிமைக்குரிய செயல்களைச் செய்தார்; உலகெங்கும் இதனைத் தெரியப்படுத்துங்கள்.
6. சீயோனின் குடிகளே ஆர்ப்பரியுங்கள், மகிழ்ச்சியினால் பாடுங்கள்; ஏனெனில் இஸ்ராயேலின் பரிசுத்தர் உன் நடுவில் மேன்மையோடு விளங்குகிறார்."
Total 66 Chapters, Current Chapter 12 of Total Chapters 66
×

Alert

×

tamil Letters Keypad References