1. அந்நாளில், நீ இவ்வாறு சொல்லுவாய்: "ஆண்டவரே, நான் உமக்கு நன்றி கூறுகிறேன், ஏனெனில் நீர் என் மீது சினங்கொண்டாலும், இப்பொழுது உமது சினம் தணிந்து விட்டது, நீரும் எனக்கு ஆறுதல் தந்தீர்.
|
2. இதோ கடவுள் தான் என் மீட்பு, அவர் மேல் நம்பிக்கை வைக்கிறேன், அஞ்சேன்; ஏனெனில் ஆண்டவரே என் வலிமை, அவரையே பாடுவேன், என் மீட்பு அவரே."
|
4. அந்நாளில் நீங்கள் இவ்வாறு சொல்லுவீர்கள்: "ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள், அவரது பெயரைப் போற்றிப் புகழுங்கள்; புறவினத்தார்க்கு அவர் செயல்களை அறிக்கையிடுங்கள், அவர் பெயர் உயர்ந்ததெனப் பறைசாற்றுங்கள்.
|
5. ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள், ஏனெனில் மகிமைக்குரிய செயல்களைச் செய்தார்; உலகெங்கும் இதனைத் தெரியப்படுத்துங்கள்.
|
6. சீயோனின் குடிகளே ஆர்ப்பரியுங்கள், மகிழ்ச்சியினால் பாடுங்கள்; ஏனெனில் இஸ்ராயேலின் பரிசுத்தர் உன் நடுவில் மேன்மையோடு விளங்குகிறார்."
|