1. இந்த மெல்கிசேதேக் சாலேம் ஊர் அரசர்; உன்னத கடவுளின் குரு; அரசர்களை வெட்டி வீழ்த்தித் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தவர்.
|
2. ஆபிரகாமிடமிருந்து எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைப் பெற்றுக் கொண்டவர். முதலாவது, நீதியின் அரசர் என்பது அவருடைய பெயரின் பொருள்; பின்னர் அவர் சாலேம் அரசர்; அதற்கு அமைதியின் அரசர் என்பது பொருள்.
|
3. இவருக்குத் தந்தையில்லை, தாயில்லை, தலைமுறை வரலாறில்லை, வாழ்நாளுக்குத் தொடக்கமுமில்லை, முடிவுமில்லை; இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்: அவரைப்போல் என்றென்றும் குருவாக நிலைத்திருக்கிறார்.
|
4. குலத்தந்தையாகிய ஆபிரகாமே போரில் கைப்பற்றிய பொருட்களுள் சிறந்தவற்றில் பத்தில் ஒரு பங்கை அவருக்கு அளித்தாரெனில், அவர் எத்துணை உயர்ந்தவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
|
5. பொதுமக்களிடமிருந்து திருச்சட்டப்படி பத்திலொரு பங்குபெற, லேவியின் குலத்தவருள் குருப்பணி ஏற்பவர்களுக்குக் கட்டளையுண்டு. ஆபிரகாமின் மரபில் தோன்றிய தம் சகோதரர்களிடமிருந்தும் லேவியர் இவ்வாறு பெறுகின்றனர்.
|
6. ஆனால் அவர்களுடைய மரபைச் சாராத மெல்கிசேதேக் ஆபிரகாமிடமிருந்து பத்திலொரு பங்கு பெற்றார்; இறைவனின் வாக்குறுதிகளைப் பெற்றிருந்த ஆபிரகாமுக்கே ஆசி அளித்தார்.
|
8. மேலும் பத்திலொரு பங்கு வாங்கும் லேவியர்கள் மாண்டுபோகும் மனிதர்கள்; ஆனால் மெல்கிசேதேக் உயிருள்ளவர் எனச் சாட்சியம் பெற்றவர்.
|
9. அன்றியும், பத்திலொரு பங்கு வாங்கும் லேவியும் ஆபிரகாமின் வழியாகப் பத்திலொரு பங்கு கொடுத்தார் என்று சொல்லலாம்.
|
11. லேவியக் குருத்துவத்தின் வழியாக நிறைவு உண்டானதெனில் ஆரோனின் முறைமைப்படி யென்றில்லாமல், 'மெல்கிசேதேக்கின் முறைமைப்படி' மற்றொரு குருவை ஏற்படுத்தவேண்டிய தேவையென்ன? -- மக்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டம் இந்த லேவியக் குருத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தது.
|
13. உள்ளபடி, இவையெல்லாம் யாரைக் குறித்துச் சொல்லப்பட்டனவோ, அவர் வேறொரு மரபைச் சேர்ந்தவர். அம்மரபில் எவருமே பீடத்தில் திருப்பணி செய்ததில்லை.
|
14. நம்முடைய ஆண்டவர் யூதாவின் மரபில் தோன்றினார் என்பது தெரிந்ததுதானே? மோயீசன் குருக்களைப் பற்றிப் பேசியபோது, அந்த மரபைக் குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை.
|
15. இப்படித் தோன்றிய அவ்வேறொரு குரு மெல்கிசேதேக்குக்கு ஒப்பானவராய்த் திருச் சட்டத்திலுள்ள கட்டளைப்படி இயல்பான பிறப்பினாலன்று,
|
16. அழியாத உயிரின் வல்லமையால் குருவாய்த் தோன்றினார் என்பதை நினைக்கும்போது, மேற்கூறியது இன்னும் தெளிவாகிறது.
|
19. ஏனெனில், திருச்சட்டம் எதையும் நிறைவுள்ளதாக்கவில்லை. அதைவிடச் சிறந்ததொரு நம்பிக்கை இப்போது தோன்றுகிறது. இந்த நம்பிக்கையால் நாம் கடவுளை அணுகுகிறோம்.
|
21. லேவியர்கள் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை. இவரோ, "ஆண்டவர் ஆணையிட்டார்; மனம் வருந்தார்; நீர் என்றென்றும் குருவாயிருக்கிறீர்" என்று தமக்குக் கூறியவரின் ஆணையால் குருவானார்.
|
25. ஆகையால் தம் வழியாகக் கடவுளை அணுகிச் செல்வோரை முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார். அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே வாழ்கிறார்.
|
26. நமக்கேற்ற தலைமைக் குரு எத்தகையவரெனில்: புனிதர், குற்றமில்லாதவர், மாசற்றவர், பாவிகளினின்று பிரிக்கப்பட்டு வானகங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.
|
27. ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல், இவர் முதன்முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் நாள்தோறும் பலி ஒப்புக்கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில், தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தபோது ஒரே முறையில் எக்காலத்திற்குமே பலியை நிறைவேற்றிவிட்டார்.
|
28. திருச்சட்டம் குறைபாடுள்ள மனிதர்களையே தலைமைக் குருக்களாக ஏற்படுத்துகிறது. அச் சட்டத்துக்குப்பின் வந்த ஆணையோடு கூடிய திருவாக்கு என்றென்றும் நிறைவு பெற்ற மகனையே குருவாக ஏற்படுத்துகிறது.
|