2. ஏனெனில், வானதூதர் வாயிலாகத் தெரிவிக்கப்பட்ட திருச்சட்டமே கட்டுப்படுத்த வல்லதாய் இருந்ததென்றால். அதற்கு எதிரான எத்தகைய குற்றமும் கீழ்ப்படியாமையும் தக்க தண்டனையைப் பெற்றுக்கொண்டதென்றால், இத்துணைப் பெரிய மீட்பைப்பற்றிக் கவலையற்று இருப்போமானால் நாம் எப்படித் தப்பமுடியும்?
|
3. முதன்முதல் ஆண்டவராலே அறிவிக்கப்பட்ட இந்த மீட்பைப்பற்றி, அவருடைய வார்த்தையைக் கேட்டவர்களும் நமக்கு உறுதியாகச் சான்று கூறியுள்ளனர்.
|
4. கடவுளும், அருங்குறிகளாலும் அற்புதங்களாலும் பல்வேறு புதுமைகளாலும், தம் விருப்பத்தின்படி அளித்த பரிசுத்த ஆவியின் கொடைகளாலும் அவர்களுடைய சாட்சியத்தை உறுதிப்படுத்தினார்.
|
6. அதற்குச் சான்றாக ஓரிடத்தில் எழுதியுள்ளதாவது: "மனிதன் யார், நீர் அவனை நினைவுகூர! மனுமகன் யார், நீர் அவனைத் தேடிவர!
|
7. நீர் அவனைச் சிறிது காலத்திற்கு வானதூதர்களைவிடத் தாழ்ந்தவனாக்கினீர். மகிமையும் மாட்சியும் அவனுக்கு முடியெனச் சூட்டினீர். அனைத்தும் அவனுக்கு அடிபணியச் செய்தீர். "
|
8. அனைத்தையும் அவனுக்குப் பணியச் செய்ததால் பணியாமலிருக்க எதையும் விடவில்லை. ஆயினும் அனைத்தும் மனிதனுக்கு இன்னும் பணிந்திருக்கக் காணோம்.
|
9. நாம் காண்பது, சிறிது காலத்திற்கு வான தூதர்களைவிடத் தாழ்ந்தவராக்கப்பட்ட ஒருவரைத்தான். இவர் இயேசுவே. இவர் பாடுபட்டு இறந்ததால், 'மகிமையும் மாட்சியும்' இவருக்கு முடியெனச் சூடப்பட்டதையும் காண்கிறோம். இங்ஙனம் கடவுளின் அருளால் அனைவருடைய நன்மைக்காகவும் இவர் சாவுக்குட்பட வேண்டியிருந்தது.
|
10. யாருக்காக எல்லாம் உள்ளனவோ, யாரால் எல்லாம் உண்டாயினவோ அவர், புதல்வர் பலரை மகிமைக்கு அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களுடைய மீட்பைத் தொடங்கி வைத்த இயேசுவைப் பாடுகளால் நிறைவுள்ளவராக்கியது தகுதியே.
|
11. பரிசுத்தமாக்குபவர், பரிசுத்தமாக்கப்படுபவர்கள் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனாலே இறைமகன் அவர்களைச் 'சகோதரர்கள் ' என்றழைக்க வெட்கப்படவில்லை.
|
13. 'நான் அவர்மேல் நம்பிக்கை வைப்பேன்' என்றும், ' இதோ நானும் கடவுள் எனக்களித்த பிள்ளைகளும்' என்றும் கூறினாரன்றோ?
|
14. பிள்ளைகளுக்கு ஒரே ஊனும் இரத்தமும் இருப்பதால், அவரும் அதே ஊனும் இரத்தமும் பெற்றுக்கொண்டார். இவ்வாறு சாவைத்தன் கையில் கொண்டிருந்தவனை, அதாவது அலகையை, சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.
|
16. வான தூதர்களுக்கு அவர் துணை நிற்கவில்லை என்பதை கண்கூடு. ஆபிரகாமின் வழி வந்தவர்களுக்கே அவர் துணை நின்றார்.
|
17. ஆகையால் மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு, கடவுளைச் சார்ந்தவற்றில் அவர் இரக்கமுள்ளவரும் நம்பிக்கைக்குரியவருமான தலைமைக் குருவாகும்படி, எல்லாவற்றிலும் சகோதரர்களைப்போல் ஆக வேண்டியதாயிற்று.
|
18. அவ்வாறு தாமே சோதனைக்குள்ளாகித் துன்பப்பட்டதனாலேயே சோதிக்கப்படுகிறவர்களுக்கு அவரால் உதவிசெய்ய முடிகிறது.
|