2. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றி மனந்தளராத நிலை. இந்த விசுவாசத்தின் பொருட்டே நம் முன்னோர் நற்பெயர் பெற்றனர்.
|
3. உலகங்களெல்லாம் கடவுளின் திருச்சொல்லால் உருவாயின என்றும், ஆகவே காணாதவற்றினின்று காண்பவை உண்டாயின என்றும் விசுவாசத்தினாலேயே உணர்கிறோம்.
|
4. விசுவாசத்தினால் தான் ஆபேல் காயினை விட மேலான பலியைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தான்; விசுவாசத்தினாலேயே, அவன் நல்லவன் எனக் கடவுளிடமிருந்து சான்று பெற்றான்; ஏனெனில், அவனுடைய காணிக்கைகள் ஏற்றவையெனக் கடவுளே சான்று பகர்ந்தார். இறந்தும் அவ்விசுவாசத்தினால் இன்னும் பேசுகிறான்.
|
5. விசுவாசத்தினாலேயே ஏனோக் சாவைக் காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டார். கடவுள் அவரை மேலே எடுத்துக் கொண்டதால் மறைந்து போய்விட்டார். மேலே எடுத்துக்கொள்ளப்படுமுன்பே கடவுளுக்கு உகந்தவர் என்று நற்சான்று பெற்றவரானார்.
|
6. விசுவாசத்தினாலன்றி ஒருவனும் கடவுளுக்கு உகந்தவனாயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்கிறவன் அவர் இருக்கிறார் என்றும், தம்மைத் தேடுபவர்களுக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறாரென்றும் விசுவசிக்க வேண்டும்.
|
7. விசுவாசத்தினாலே, தம் கண்ணுக்கு மறைவாயிருந்ததைக் குறித்து நோவா இறைவனால் எச்சரிக்கப்பெற்ற போது, தம் குடும்பத்தைக் காப்பாற்றப் பயபக்தியோடு பேழையை அமைத்தார். அதே விசுவாசத்தினால் உலகைக் கண்டனம் செய்து, விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவராகும் பேற்றுக்கு உரிமையாளர் ஆனார்.
|
8. இறைவனின் அழைப்பை ஏற்ற ஆபிரகாமை கீழ்ப்படிந்து தம் உரிமைச் சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போனது விசுவாசத்தினாலேயே.
|
9. போகவேண்டிய இடத்தை அறியாதிருந்தும் புறப்பட்டுப் போனார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறி, அதே வாக்குறுதியின் உடன் உரிமையாளர்களான ஈசாக், யாக்கோபுடன் கூடாரங்களில் குடியிருந்து, வேற்று நாட்டினர் போல் வாழ்ந்தது, விசுவாசத்தினாலேயே.
|
10. ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ளதொரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதன் சிற்பியும் ஆக்குநரும் கடவுளே.
|
12. ஏனென்றால், வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என்று அவன் கருதினான். இவ்வாறு உயிரிழந்தவர் போலிருந்த ஒரே ஆள், விண்மீன்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் கணக்கற்ற மக்களுக்குத் தந்தையானார்.
|
13. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே இறந்தனர்: வாக்களிக்கப்பட்டவற்றைக் கைக்கொள்ளவில்லையெனினும், அவற்றைத் தொலைவில் கண்டனர்; கண்டு வாழ்த்தினர். இவ்வுலகில் தாங்கள் வேற்று நாட்டினர் எனவும், அந்நியர்களெனவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
|
15. தாங்கள் விட்டுவந்த நாட்டையே நினைவில் வைத்திருந்தால் திரும்பிச் செல்ல வாய்ப்பு இல்லாமலா இருந்திருக்கும்!
|
16. ஆனால், அவர்கள் உண்மையில் நாடியது ஒரு மேலான நாட்டை, அதாவது விண்ணக நாட்டையே. அதனால்தான் கடவுளும் தம்மை 'அவர்களுடைய கடவுள்' என அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. தாமே அவர்களுக்காக ஒரு நகரை அமைத்துள்ளார் அல்லரோ?
|
18. "உன் பெயர் நீடிக்க, ஈசாக்கின் வழியாய் உனக்கு மக்கள் பிறப்பார்கள்" என்று இறைவன் கூறியிருந்தார். வாக்குறுதிகளைப் பெற்றிருந்தும் ஆபிரகாம் தம் ஒரே மகனைப் பலியிடத் தயங்கவில்லை.
|
19. ஏனெனில், கடவுள் இறந்தோரையும் எழுப்ப வல்லவர் என்பதை மனதில் கொண்டிருந்தார். எனவே, தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். இது ஒரு முன்னடையாளமாயிற்று.
|
20. விசுவாசத்தினால் தான் ஈசாக்கு பிற்காலத்தில் நிகழ வேண்டியவற்றைக் குறிப்பிட்டு யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் ஆசி அளித்தார்.
|
21. யாக்கோபு சாகும் பொழுது சூசையின் மக்கள் ஒவ்வொருவர்க்கும் ஆசி அளித்ததும், தமது ஊன்றுகோலின் மீது சாய்ந்து கொண்டு இறைவனைத் தொழுததும் விசுவாசத்தினாலேயே.
|
22. இறக்கும் தருவாயிலிருந்த சூசை இஸ்ராயேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைக் குறிப்பிட்டதும், தம் எலும்புகளை என்ன செய்யவேண்டுமென்று கற்பித்ததும் விசுவாசத்தினாலேயே.
|
23. மோயீசன் பிறந்த பொழுது குழந்தை அழகாயிருப்பதைக் கண்டு, அதன் பெற்றோர் அரசன் ஆணைக்கு அஞ்சாமல், மூன்று மாதம் அதை மறைத்து வைத்தது விசுவாசத்தினாலேயே.
|
26. இறைவனால் அபிஷுகம் பெற்றவர்கள் படவேண்டிய நிந்தையை, எகிப்தின் கருவூலங்களினும் மேலான செல்வமாகக் கருதினார். ஏனெனில் தமக்குக் கிடைக்கப்போகும் கைம்மாற்றைக் கண் முன் வைத்திருந்தார்.
|
27. அரசனின் கடுஞ்சினத்திற்கு அஞ்சாமல் அவர் எகிப்து நாட்டை விட்டுச் சென்றதும் விசுவாசத்தினாலேயே. கண்ணுக்குப் புலப்படாத இறைவனைக் கண்ணால் பார்ப்பவர் போல், தளராமல் நிலைத்து நின்றார்.
|
28. அவர் பாஸ்காவைக் கொண்டாடியதும், முதற்பேறானவர்களை அழிக்க வந்த தூதன் இஸ்ராயேலரைத் தொடாதபடி இரத்தத்தைக் கதவு நிலைகள் மேல் தெளித்ததும் விசுவாசத்தினாலேயே.
|
29. இஸ்ராயேல் மக்கள் கட்டாந்தரையைக் கடப்பது போலச் செங்கடலைக் கடந்தனர். எகிப்தியரோ, அவ்வழியே கடக்க முயன்ற போது மூழ்கி விட்டனர்.
|
31. விலைமகளான ராகாப் ஒற்றர்களை உபசரித்து ஏற்று, அவிசுவாசிகளுடன் அழியாமல் தப்பித்துக் கொண்டது விசுவாசத்தினாலேயே.
|
32. இன்னும் சொல்ல வேண்டுமா? கிதியோன், பாராக், சாம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் ஆகியோரைப் பற்றியும் இறைவாக்கினர்களைப் பற்றியும் கூற எனக்கு நேரமில்லை.
|
33. விசுவாசத்தினால் தான் அவர்கள் அரசுகளை எதிர்த்து வென்றனர்; நீதி வழங்கினர்; வாக்களித்தவற்றைப் பெற்றுக்கொண்டனர்;
|
34. சிங்கத்தின் வாயை அடைத்தனர்; தீயின் கொடுமையைத் தணித்தனர்; வாள்முனைக்குத் தப்பினர்; வலிமையற்றவராயிருந்தும் வலிமை பெற்றனர்; போரில் வீரம் காட்டினர்; மாற்றார் படைகளை முறியடித்தனர்.
|
35. இறந்த தம்மவர் உயிருடன் எழுந்து வரப் பெண்கள் கண்டார்கள். மேலான உயிர்த்தெழுதலை அடைந்து கொள்ளும் பொருட்டு, சிலர் விடுதலை பெற விரும்பாமல் வதைக்கப்பட்டு மடிந்தனர்.
|
37. கல்லால் எறியப்பட்டனர்; வாளால் அறுக்கப்பட்டனர்; பட்டயத்துக்கு இரையாயினர்; ஆட்டுத் தோலையும் செம்மறியின் தோலையும் போர்த்தி அலைந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்காளாயினர்.
|
38. உலகமோ அவர்களைக் கொண்டிருக்க அருகதையற்றுப் போயிற்று. குகைகளிலும் நிலப் பொந்துகளிலும் பாலை வெளிகளிலும் மலைகளிலும் அலைந்தனர்.
|
39. இவர்களனைவரும் விசுவாசம் கொண்டிருந்ததினாலே நற்பெயர் பெற்றனர். ஆயினும் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை.
|
40. ஏனெனில், நம்மோடு சேர்ந்தாலொழிய அவர்கள் நிறைவு பெறலாகாது என்று கடவுள் நம்மை மனத்திற்கொண்டு மேலானதொரு திட்டம் வகுத்திருந்தார்.
|