தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
1. (அப்பொழுது) சூசை தம் அருகே நின்ற அத்தனை பேருக்கு முன்பாகத் தம்மை அடக்கிக் கொள்ளக் கூடாமல், தாமும் தம் சகோதரரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்கையில் பிறர் ஒருவரும் இல்லாதிருக்கும் வண்ணம், மற்றவர்கள் எல்லாரும் வெளியே போகும்படி கட்டளையிட்டார்.
2. பின், எகிப்தியரும் பாரவோன் வீட்டாரும் கேட்கும் அளவுக்குத் தேம்பி அழுது,
3. தம் சகோதரர்களை நோக்கி: நானே சூசை! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா என்று அலறிக் கேட்டார். ஆனால், தம் சகோதரர்கள் திகிலடைந்து பதில் சொல்ல இயலாமலிருப்பது கண்டு,
4. அவர் அவர்களை அன்போடு நோக்கி: என் அண்டை வாருங்கள் என்றார். அவர்கள் பக்கத்தில் வந்த போது, அவர்: நீங்கள் எகிப்துக்குச் செல்வோரிடத்தில் விற்ற உங்கள் சகோதரனாகிய சூசை நான் தான்! அஞ்சாதீர்கள்.
5. நான் இந்நாட்டிற்கு வந்து சேருமாறு நீங்கள் என்னை விற்று விட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். ஏனென்றால், உங்கள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, கடவுளே உங்களுக்கு முன்னே என்னை எகிப்துக்கு அனுப்பியருளினார்.
6. பூமியிலே பஞ்சம் தொடங்கி இரண்டாண்டு ஆயிற்று. இன்னும் ஐந்தாண்டுகள் வரையிலும் உழவும் அறுவடையும் நடந்தேறா.
7. ஆதலால், பூமியிலே உங்கள் இனம் ஒழியாமல் இருக்கும் படியாகவும் நீங்கள் வேண்டிய உணவுகளைப் பெற்றுப் பிழைக்கும்படியாகவும் அல்லவா கடவுள் உங்களுக்கு முன் என்னை இவ்விடத்திற்கு வரச் செய்தார்?
8. உங்கள் திட்டத்தால் அல்ல, கடவுள் திருவுளத்தாலே இவ்விடத்திற்கு நான் அனுப்பப்பட்டேன். அவரே என்னைப் பாரவோனுக்குத் தந்தையைப் போலவும், அவர் வீடு முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து நாடு முழுவதற்கும் ஆட்சியாளராகவும், இருக்கச் செய்துள்ளார்.
9. நீங்கள் விரைவில் என் தந்தையிடம் சென்று சொல்ல வேண்டியதாவது: உம் புதல்வனாகிய சூசை உமக்குத் தெரிவிப்பது ஏதென்றால்: கடவுள் என்னை எகிப்து நாடு முழுவதற்கும் ஆட்சியாளராகச் செய்தார். நீர் சாகா வண்ணம் என்னிடம் வாரும்.
10. யெசேன் நாட்டில் குடியிருப்பீர். நீரும், உமது புதல்வர்களும், உம் புதல்வர்களின் புதல்வர்களும், உமது ஆடுமாடுகளோடும், உமக்குச் சொந்தமான (மற்ற) யாவற்றோடும் என் அண்மையிலே இருக்கலாம்.
11. (இன்னும் ஐந்தாண்டுகள் பஞ்சம் இருக்கும்.) உமக்கும், உம் குடும்பத்தாருக்கும், உமக்குள்ள யாவற்றிற்கும் சாவும் அழிவும் வராமல் உங்களை நான் பாதுகாத்து உணவளித்து வருவேன் என்று சொல்லச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
12. இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய் தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பெஞ்சமின் கண்களும் காண்கின்றன.
13. நான் எகிப்திலே அடைந்துள்ள மாட்சி அனைத்தையும் என் தந்தைக்குச் சொல்லுங்கள். விரைந்து போய், அவர் என்னிடம் வருமாறு செய்யுங்கள் என்று கூறினார்.
14. பிறகு, தம் தம்பியாகிய பெஞ்சமினை அரவணைத்துக் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். இவனும் அப்படியே அவர் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்.
15. பின், சூசை தம் சகோதரர் யாவரையும் முத்தமிட்டு, ஒவ்வொருவனையும் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார். இதன் பின்னரே அவர்கள் அவரோடு உரையாடத் துணிந்தனர்.
16. சூசையின் சகோதரர்கள் வந்துள்ளனர் என்ற செய்தி அரசனின் அரண்மனையில் வெளிப்படையாய்க் கூறப்பட்டவுடனே, பாரவோனும் அவன் வீட்டிலுள்ளோரும் அகமகிழ்ந்தனர்.
17. பாரவோன் சூசையை நோக்கி: நீர் உம் சகோதரர்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: நீங்கள் மிருகங்களின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குப் போய்,
18. அவ்விடமிருந்து உங்கள் தந்தையையும் இனத்தாரையும் கூட்டிக் கொண்டு என்னிடத்திற்கு வாருங்கள்; நான் உங்களுக்கு எகிப்தின் நன்மையெல்லாம் தருவேன்; நீங்கள் பூமியின் வளத்தைச் சாப்பிடுவீர்கள் என்பதாம் என்றான்.
19. மீண்டும் பாரவோன் சூசையை நோக்கி: உம் சகோதரர் தங்கள் பிள்ளைகளையும் மனைவிகளையும் அழைத்து வருவதற்காக எகிப்து நாட்டினின்று வண்டிகளைக் கொண்டுபோகும்படி அவர்களுக்குச் சொல்வதுமன்றி: நீங்கள் போய்த் தந்தையை அழைத்துக் கொண்டு கூடிய விரைவில் வந்து சேருங்கள்;
20. உங்கள் தட்டு முட்டுக்களில் ஒன்றையும் விட்டுவிடாதீர்கள்; ஏனென்றால், எகிப்தின் செல்வமெல்லாம் உங்களுடையதாகும் என்றும் சொல்ல வேண்டும் என்றான்.
21. இஸ்ராயேலின் புதல்வர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தனர். சூசை பாரவோன் கட்டளைப்படி அவர்களுக்கு வண்டிகளையும் வழிக்கு உணவுகளையும் கொடுத்தார்.
22. அன்றியும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் இரண்டு ஆடைகளும் கொடுத்தார். பெஞ்சமினுக்கோ, முந்நூறு வெள்ளிக் காசுகளையும், விலையேறப் பெற்ற ஐந்து ஆடைகளையும் கொடுத்தார்.
23. அப்படியே தம் தந்தைக்கு ஐந்து ஆடைகளையும் முந்நூறு வெள்ளிக் காசுகளையும் அனுப்பினதுமல்லாமல், எகிப்திலுள்ள சிறந்த சரக்குகளைக் கொண்டு, போவதற்குப் பத்துக் கழுதைகளையும், பயணத்திற்குக் கோதுமையையும், உணவு வகைகளையும் சுமப்பதற்குப் பத்துப் பெண் கழுதைகளையும் அவர்களோடு அனுப்பி வைத்தார்.
24. பின் அவர் தம் சகோதரர்களுக்குப் போக விடையளித்து, அவர்களை விட்டுப் பிரியும் போது: நீங்கள் போகும் வழியிலே சச்சரவு பண்ணாதீர்கள் என்று சொல்லி அனுப்பினார்.
25. அவர்கள் எகிப்திலிருந்து போய்க் கானான் நாட்டில் தங்கள் தந்தை யாக்கோபிடம் சேர்ந்து:
26. உம் மகன் சூசை உயிரோடிருக்கிறார்; அவரே எகிப்து நாட்டிற்கெல்லாம் தலைவர் என்று சொல்லி, சூசை சொல்லச் சொன்னவற்றையெல்லாம் அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு ஆழ்ந்த தூக்கத்தினின்று கண் விழித்தவன் போல் ஆனான். ஆயினும், அவற்றை அவன் நம்பாதிருந்தான்.
27. இறுதியிலே, அவர்கள் செய்திகளையெல்லாம் ஒழுங்காக விவரித்துச் சொன்னதும் சூசை அனுப்பின வண்டிகளையும் சரக்குகள் யாவற்றையும் கண்டதும் அவன் புத்துயிர் பெற்றவன் ஆனான்:
28. ஆ! என் மகன் சூசை இன்னும் உயிரோடிருந்தால் எனக்குப் போதும், நான் இறக்குமுன் போய் அவனைக் காண்பேன் என்றான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 50 Chapters, Current Chapter 45 of Total Chapters 50
ஆதியாகமம் 45:35
1. (அப்பொழுது) சூசை தம் அருகே நின்ற அத்தனை பேருக்கு முன்பாகத் தம்மை அடக்கிக் கொள்ளக் கூடாமல், தாமும் தம் சகோதரரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்கையில் பிறர் ஒருவரும் இல்லாதிருக்கும் வண்ணம், மற்றவர்கள் எல்லாரும் வெளியே போகும்படி கட்டளையிட்டார்.
2. பின், எகிப்தியரும் பாரவோன் வீட்டாரும் கேட்கும் அளவுக்குத் தேம்பி அழுது,
3. தம் சகோதரர்களை நோக்கி: நானே சூசை! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா என்று அலறிக் கேட்டார். ஆனால், தம் சகோதரர்கள் திகிலடைந்து பதில் சொல்ல இயலாமலிருப்பது கண்டு,
4. அவர் அவர்களை அன்போடு நோக்கி: என் அண்டை வாருங்கள் என்றார். அவர்கள் பக்கத்தில் வந்த போது, அவர்: நீங்கள் எகிப்துக்குச் செல்வோரிடத்தில் விற்ற உங்கள் சகோதரனாகிய சூசை நான் தான்! அஞ்சாதீர்கள்.
5. நான் இந்நாட்டிற்கு வந்து சேருமாறு நீங்கள் என்னை விற்று விட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். ஏனென்றால், உங்கள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, கடவுளே உங்களுக்கு முன்னே என்னை எகிப்துக்கு அனுப்பியருளினார்.
6. பூமியிலே பஞ்சம் தொடங்கி இரண்டாண்டு ஆயிற்று. இன்னும் ஐந்தாண்டுகள் வரையிலும் உழவும் அறுவடையும் நடந்தேறா.
7. ஆதலால், பூமியிலே உங்கள் இனம் ஒழியாமல் இருக்கும் படியாகவும் நீங்கள் வேண்டிய உணவுகளைப் பெற்றுப் பிழைக்கும்படியாகவும் அல்லவா கடவுள் உங்களுக்கு முன் என்னை இவ்விடத்திற்கு வரச் செய்தார்?
8. உங்கள் திட்டத்தால் அல்ல, கடவுள் திருவுளத்தாலே இவ்விடத்திற்கு நான் அனுப்பப்பட்டேன். அவரே என்னைப் பாரவோனுக்குத் தந்தையைப் போலவும், அவர் வீடு முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து நாடு முழுவதற்கும் ஆட்சியாளராகவும், இருக்கச் செய்துள்ளார்.
9. நீங்கள் விரைவில் என் தந்தையிடம் சென்று சொல்ல வேண்டியதாவது: உம் புதல்வனாகிய சூசை உமக்குத் தெரிவிப்பது ஏதென்றால்: கடவுள் என்னை எகிப்து நாடு முழுவதற்கும் ஆட்சியாளராகச் செய்தார். நீர் சாகா வண்ணம் என்னிடம் வாரும்.
10. யெசேன் நாட்டில் குடியிருப்பீர். நீரும், உமது புதல்வர்களும், உம் புதல்வர்களின் புதல்வர்களும், உமது ஆடுமாடுகளோடும், உமக்குச் சொந்தமான (மற்ற) யாவற்றோடும் என் அண்மையிலே இருக்கலாம்.
11. (இன்னும் ஐந்தாண்டுகள் பஞ்சம் இருக்கும்.) உமக்கும், உம் குடும்பத்தாருக்கும், உமக்குள்ள யாவற்றிற்கும் சாவும் அழிவும் வராமல் உங்களை நான் பாதுகாத்து உணவளித்து வருவேன் என்று சொல்லச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
12. இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய் தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பெஞ்சமின் கண்களும் காண்கின்றன.
13. நான் எகிப்திலே அடைந்துள்ள மாட்சி அனைத்தையும் என் தந்தைக்குச் சொல்லுங்கள். விரைந்து போய், அவர் என்னிடம் வருமாறு செய்யுங்கள் என்று கூறினார்.
14. பிறகு, தம் தம்பியாகிய பெஞ்சமினை அரவணைத்துக் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். இவனும் அப்படியே அவர் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்.
15. பின், சூசை தம் சகோதரர் யாவரையும் முத்தமிட்டு, ஒவ்வொருவனையும் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார். இதன் பின்னரே அவர்கள் அவரோடு உரையாடத் துணிந்தனர்.
16. சூசையின் சகோதரர்கள் வந்துள்ளனர் என்ற செய்தி அரசனின் அரண்மனையில் வெளிப்படையாய்க் கூறப்பட்டவுடனே, பாரவோனும் அவன் வீட்டிலுள்ளோரும் அகமகிழ்ந்தனர்.
17. பாரவோன் சூசையை நோக்கி: நீர் உம் சகோதரர்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: நீங்கள் மிருகங்களின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குப் போய்,
18. அவ்விடமிருந்து உங்கள் தந்தையையும் இனத்தாரையும் கூட்டிக் கொண்டு என்னிடத்திற்கு வாருங்கள்; நான் உங்களுக்கு எகிப்தின் நன்மையெல்லாம் தருவேன்; நீங்கள் பூமியின் வளத்தைச் சாப்பிடுவீர்கள் என்பதாம் என்றான்.
19. மீண்டும் பாரவோன் சூசையை நோக்கி: உம் சகோதரர் தங்கள் பிள்ளைகளையும் மனைவிகளையும் அழைத்து வருவதற்காக எகிப்து நாட்டினின்று வண்டிகளைக் கொண்டுபோகும்படி அவர்களுக்குச் சொல்வதுமன்றி: நீங்கள் போய்த் தந்தையை அழைத்துக் கொண்டு கூடிய விரைவில் வந்து சேருங்கள்;
20. உங்கள் தட்டு முட்டுக்களில் ஒன்றையும் விட்டுவிடாதீர்கள்; ஏனென்றால், எகிப்தின் செல்வமெல்லாம் உங்களுடையதாகும் என்றும் சொல்ல வேண்டும் என்றான்.
21. இஸ்ராயேலின் புதல்வர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தனர். சூசை பாரவோன் கட்டளைப்படி அவர்களுக்கு வண்டிகளையும் வழிக்கு உணவுகளையும் கொடுத்தார்.
22. அன்றியும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் இரண்டு ஆடைகளும் கொடுத்தார். பெஞ்சமினுக்கோ, முந்நூறு வெள்ளிக் காசுகளையும், விலையேறப் பெற்ற ஐந்து ஆடைகளையும் கொடுத்தார்.
23. அப்படியே தம் தந்தைக்கு ஐந்து ஆடைகளையும் முந்நூறு வெள்ளிக் காசுகளையும் அனுப்பினதுமல்லாமல், எகிப்திலுள்ள சிறந்த சரக்குகளைக் கொண்டு, போவதற்குப் பத்துக் கழுதைகளையும், பயணத்திற்குக் கோதுமையையும், உணவு வகைகளையும் சுமப்பதற்குப் பத்துப் பெண் கழுதைகளையும் அவர்களோடு அனுப்பி வைத்தார்.
24. பின் அவர் தம் சகோதரர்களுக்குப் போக விடையளித்து, அவர்களை விட்டுப் பிரியும் போது: நீங்கள் போகும் வழியிலே சச்சரவு பண்ணாதீர்கள் என்று சொல்லி அனுப்பினார்.
25. அவர்கள் எகிப்திலிருந்து போய்க் கானான் நாட்டில் தங்கள் தந்தை யாக்கோபிடம் சேர்ந்து:
26. உம் மகன் சூசை உயிரோடிருக்கிறார்; அவரே எகிப்து நாட்டிற்கெல்லாம் தலைவர் என்று சொல்லி, சூசை சொல்லச் சொன்னவற்றையெல்லாம் அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு ஆழ்ந்த தூக்கத்தினின்று கண் விழித்தவன் போல் ஆனான். ஆயினும், அவற்றை அவன் நம்பாதிருந்தான்.
27. இறுதியிலே, அவர்கள் செய்திகளையெல்லாம் ஒழுங்காக விவரித்துச் சொன்னதும் சூசை அனுப்பின வண்டிகளையும் சரக்குகள் யாவற்றையும் கண்டதும் அவன் புத்துயிர் பெற்றவன் ஆனான்:
28. ஆ! என் மகன் சூசை இன்னும் உயிரோடிருந்தால் எனக்குப் போதும், நான் இறக்குமுன் போய் அவனைக் காண்பேன் என்றான்.
Total 50 Chapters, Current Chapter 45 of Total Chapters 50
×

Alert

×

tamil Letters Keypad References