1. இவை நிகழ்ந்த பின், எகிப்து மன்னனுக்குப் பானம் அமைப்போர் தலைவனும் அப்பம் படைப்போர் தலைவனும் ஆகிய அண்ணகர் இருவர் தங்கள் மன்னனுக்கு எதிராகக் குற்றஞ் செய்தனர்.
|
3. அவர்களை சூசை அடைபட்டிருந்த படைத் தலைவனின் சிறையிலே காவலில் வைத்தான். சிறைத் தலைவனோ, அவர்களை சூசைப் பொறுப்பில் ஒப்புவித்தான்.
|
8. நாங்கள் கனவு கண்டோம்; அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வாரில்லை என்று பதில் கூறினர். சூசை அவர்களை நோக்கி: கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்குரியதல்லவா? நீங்கள் கண்டவற்றை என்னிடம் விவரித்துச் சொல்லுங்கள் என்றான்.
|
9. அப்பொழுது முதலில் பானத் தலைவன் தான் கண்டதைச் சொல்லத் தொடங்கினான்: ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் இருக்கக் கண்டேன்.
|
11. என் கையிலே பாரவோனுடைய பானப்பாத்திரம் இருந்தது, நான் பழங்களைப் பறித்து என் கையிலிருந்த பாத்திரத்தில் பிழிந்து, (அப்) பானத்தைப் பாரவோனுக்குக் கொடுத்தேன் என்றான்.
|
13. அவை கழிந்த பின் பாரவோன் உன் சேவையை மனத்தில் கொண்டு, மீண்டும் முந்தின பதவியிலே உன்னை வைப்பார். நீ முன் செய்து வந்தது போல், உன் பதவியின் முறைப்படி அவருக்குப் பானப் பாத்திரத்தைக் கையில் கொடுப்பாய்.
|
14. உன் காரியம் இப்படி நன்மைக்கு வந்த பின்போ, நீ என்னை மறவாமல் தயவு காட்டிப் பாரவோன் என்னை இச் சிறையிலிருந்து விடுதலையாக்கும்படி பரிந்து பேச வேண்டும்.
|
15. ஏனென்றால், நான் எபிரேயருடைய நாட்டிலிருந்து வஞ்சகமாய்க் கொண்டு வரப்பட்டு, யாதொரு குற்றமுமில்லாமல் இக் காவற் கிடங்கிலே அடைக்கப் பட்டிருக்கிறேன் என்றான்.
|
16. அப்பத் தலைவனும், அந்தக் கனவின் பொருளை (சூசை) அறிவுக்குப் பொருத்தச் சொல்லியதைக் கண்டு, அவனை நோக்கி: நானும் கனவிலே மூன்று மாவுக் கூடைகளை என் தலையில் வைத்திருந்தேன்.
|
19. அம்மூன்று நாட்களுக்குப் பின், பாரவோன் உனது தலையை வெட்டி உன்னை ஒரு தூக்கு மரத்திலே தொங்க வைப்பார். அப்பொழுது பறவைகள் வந்து உனது உடலைக் கிழித்துத் தின்னும் என்றான்.
|
20. அம்மூன்று நாட்களுக்குப் பின், பாரவோன் உனது தலையை வெட்டி உன்னை ஒரு தூக்கு மரத்திலே தொங்க வைப்பார். அப்பொழுது பறவைகள் வந்து உனது உடலைக் கிழித்துத் தின்னும் என்றான்.
|
21. பானத் தலைவனாயிருந்தவனைத் தனக்குப் பானப் பாத்திரம் கையில் கொடுக்கும்படி (வரச் சொல்லி), அவன் பதவியிலே அவனை மீண்டும் அமர்த்தினான்.
|
23. தனக்கு நல்ல காலம் வந்திருப்பினும், பானத் தலைவன் கனவின் பொருளை விவரித்துக் காட்டிய சூசையை நினையாமல் மறந்து விட்டான்.
|