தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
1. அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தெலுக்குப் போய் அங்கே குடியிரு. உன் அண்ணன் எசாயூவுக்கு அஞ்சி ஓடிய போது உனக்குத் தோன்றின கடவுளுக்கு (அவ்விடத்தில்) ஒரு பீடத்தைக் கட்டு என்றார்.
2. அதைக் கேட்டு யாக்கோபு தன் வீட்டார் அனைவரையும் அழைத்து: உங்களுக்குள் இருக்கிற அன்னிய தேவர்களை அகற்றி விட்டு உங்களைத் தூய்மைப்படுத்தி உங்கள் உடைகளை மாற்றக்கடவீர்கள்.
3. எழுந்து வாருங்கள்; பெத்தெலுக்குப்போய், என் துயர நாளிலே என் மன்றாட்டைக் கேட்டருளி எனக்கு வழித்துணையாய் இருந்த கடவுளுக்கு அவ்விடத்திலே ஒரு பலிப் பீடத்தை அமைப்போம் என்றான்.
4. அப்படியே அவர்கள் தங்களிடமிருந்த எல்லா அன்னிய விக்கிரகங்களையும் அவற்றின் காதணிகளையும் அவன் கையில் கொடுத்தனர். அவன் அவற்றைச் சிக்கேம் நகருக்கு வெளியே இருந்த ஒரு தரபிரண்ட் மரத்தின் கீழே புதைத்தான்.
5. பின் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களைச் சுற்றிலுமிருந்த எல்லா நகர மக்களுக்கும் தெய்வீகமான ஒரு பயங்கரம் உண்டானதனாலே, அவர்களைப் பின் தொடர எவரும் துணியவில்லை.
6. இவ்வாறு யாக்கோபும், அவனோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள பெத்தெல் எனப்படும் லூசானுக்கு வந்து சேர்ந்தனர்.
7. யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிப் பீடத்தைக் கட்டி, தன் சகோதரனிடமிருந்து தப்பியோடின நாளில் அங்கே கடவுள் தனக்குக் காட்சி கொடுத்த காரணத்தால், அந்த இடத்திற்குக் கடவுளின் வீடு என்று பெயரிட்டான்.
8. அப்பொழுது இரெபேக்காளின் பணிப்பெண்ணாகிய தெபொறாள் இறந்தாள்; பெத்தெலுக்கு அண்மையிலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அடக்கம் பண்ணப் பட்டாள். எனவே, அவ்விடத்திற்கு அழுகைக் கருவாலி என்னும் பெயர் வழங்கிற்று.
9. யாக்கோபு சீரிய மெசொப்பொத்தாமியவிலிருந்து திரும்பி வந்த பின் கடவுள் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனை ஆசீர்வதித்து:
10. இன்று முதல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படாமல், இஸ்ராயேல் எனப்படுவாய் என்று, அவனுக்கு இஸ்ராயேல் என்று பெயரிட்டருளினார்.
11. மேலும், அவர் அவனை நோக்கி: நாம் எல்லாம் வல்ல கடவுள். நீ பலுகிப் பெருகக் கடவாய். இனங்களும் மக்களும் கூட்டங்களும் உன்னிடமிருந்து உற்பத்தியாகும். அரசர்களும் உன் சந்ததியில் உதிப்பார்கள்.
12. ஆபிரகாம் ஈசாக்குக்கு நாம் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் சந்ததிக்கும் கொடுப்போம் என்று சொல்லி,
13. அவனை விட்டு மறைந்துபோனார். அப்போது யாக்கோபு
14. தனக்கு ஆண்டவர் திருவாக்கருளிய அந்த இடத்தில் ஒரு கற்றூணை நினைவுச் சின்னமாக நாட்டி அதன் மேல் பானப்பலியை ஊற்றி, எண்ணையையும் வார்த்தான்.
15. அந்த இடத்திற்குப் பெத்தெல் என்று பெயரிட்டான்.
16. பின் அவன் அவ்விடத்தினின்று புறப்பட்டு, வசந்த காலத்திலே எபிறாத்தாவுக்குப் போகும் வழியை வந்தடைந்தான். அங்கே இராக்கேலுக்குப் பேறுகால வேதனை உண்டானது.
17. அப்பேறுகால வருத்தத்தால் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையில், மருத்துவச்சி அவளை நோக்கி: நீர் பயப்பட வேண்டாம். ஏனென்றால், இப்புதல்வனையும் பெற்றடைவீர் என்றாள்.
18. ஆனால், வேதனை மிகுதியினாலே உயிர் பிரியப் போகும் வேளையில் அவள் தன் பிள்ளைக்குப் பெனோனி- அதாவது, என் வேதனைப் புதல்வன்- என்று பெயரிட்டாள். தந்தையோ, அவனைப் பெஞ்சமின்- அதாவது, வலக்கை மகன்- என்று அழைத்தான்.
19. இராக்கேல் அப்போது உயிர் நீத்தாள்; எப்பிறாத்தா ஊருக்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டாள்.
20. யாக்கோபு அவளுடைய கல்லறையின் மேல் ஒரு தூணை நாட்டி வைத்தான். இந்நாள் வரையிலும் அது இராக்கேலுடைய கல்லறையின் நினைவுத் தூண் (என்று அழைக்கப்படுகிறது).
21. அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, மந்தைக் கோபுரத்திற்கு அப்பால் தன் கூடாரத்தை அடித்தான்.
22. அவன் அந் நாட்டில் குடியிருந்த காலத்தில், ஒரு நாள் ரூபன் தன் தந்தையின் மறு மனைவியாகிய பாலாளோடு படுத்தான். அது யாக்கோபுக்குத் தெரியாமற் போகவில்லை. அவனுடைய புதல்வர் பன்னிரண்டு பேர்.
23. (அதாவது,) லீயாளின் மக்கள்: மூத்த மகன் ரூபன்; பிறகு சிமையோன், லேவி, யூதா, இசக்கார், ஜபுலோன் என்பவர்கள்.
24. இராக்கேலின் மக்கள்: சூசையும் பெஞ்சமினும்.
25. இராக்கேலின் வேலைக்காரியாகிய பாலாளின் மக்கள்: தானும் நெப்தலியும்.
26. லீயாளுடைய வேலைக்காரி ஜெல்பாளின் புதல்வர்கள்: காத்தும் ஆசேரும். இவர்கள் சீரிய மெசோப்பொத்தாமியா நாட்டில் யாக்கோபுக்குப் பிறந்தனர்.
27. யாக்கோபு ஆர்பேயின் நகராகிய மம்பிறேய்க்கு, தந்தையாகிய ஈசாக்கிடம் வந்தான். அது அபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிறோன் என்னும் ஊர்.
28. ஈசாக்கின் வாழ்நாள் மொத்தம் நூற்றெண்பது ஆண்டுகள்.
29. அவன் முதிர் வயதினால் வலுவிழந்து மரணம் அடைந்தான். தன் முன்னோரோடு சேர்க்கப்பட்டபோது அவன் முதுமையும் ஆயுள் நிறைவும் உள்ளவனாய் இருந்தான். அவன் புதல்வராகிய எசாயூவும் யாக்கோபும் அவனை அடக்கம் செய்தனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 50 Chapters, Current Chapter 35 of Total Chapters 50
ஆதியாகமம் 35:25
1. அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தெலுக்குப் போய் அங்கே குடியிரு. உன் அண்ணன் எசாயூவுக்கு அஞ்சி ஓடிய போது உனக்குத் தோன்றின கடவுளுக்கு (அவ்விடத்தில்) ஒரு பீடத்தைக் கட்டு என்றார்.
2. அதைக் கேட்டு யாக்கோபு தன் வீட்டார் அனைவரையும் அழைத்து: உங்களுக்குள் இருக்கிற அன்னிய தேவர்களை அகற்றி விட்டு உங்களைத் தூய்மைப்படுத்தி உங்கள் உடைகளை மாற்றக்கடவீர்கள்.
3. எழுந்து வாருங்கள்; பெத்தெலுக்குப்போய், என் துயர நாளிலே என் மன்றாட்டைக் கேட்டருளி எனக்கு வழித்துணையாய் இருந்த கடவுளுக்கு அவ்விடத்திலே ஒரு பலிப் பீடத்தை அமைப்போம் என்றான்.
4. அப்படியே அவர்கள் தங்களிடமிருந்த எல்லா அன்னிய விக்கிரகங்களையும் அவற்றின் காதணிகளையும் அவன் கையில் கொடுத்தனர். அவன் அவற்றைச் சிக்கேம் நகருக்கு வெளியே இருந்த ஒரு தரபிரண்ட் மரத்தின் கீழே புதைத்தான்.
5. பின் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களைச் சுற்றிலுமிருந்த எல்லா நகர மக்களுக்கும் தெய்வீகமான ஒரு பயங்கரம் உண்டானதனாலே, அவர்களைப் பின் தொடர எவரும் துணியவில்லை.
6. இவ்வாறு யாக்கோபும், அவனோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள பெத்தெல் எனப்படும் லூசானுக்கு வந்து சேர்ந்தனர்.
7. யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிப் பீடத்தைக் கட்டி, தன் சகோதரனிடமிருந்து தப்பியோடின நாளில் அங்கே கடவுள் தனக்குக் காட்சி கொடுத்த காரணத்தால், அந்த இடத்திற்குக் கடவுளின் வீடு என்று பெயரிட்டான்.
8. அப்பொழுது இரெபேக்காளின் பணிப்பெண்ணாகிய தெபொறாள் இறந்தாள்; பெத்தெலுக்கு அண்மையிலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அடக்கம் பண்ணப் பட்டாள். எனவே, அவ்விடத்திற்கு அழுகைக் கருவாலி என்னும் பெயர் வழங்கிற்று.
9. யாக்கோபு சீரிய மெசொப்பொத்தாமியவிலிருந்து திரும்பி வந்த பின் கடவுள் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனை ஆசீர்வதித்து:
10. இன்று முதல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படாமல், இஸ்ராயேல் எனப்படுவாய் என்று, அவனுக்கு இஸ்ராயேல் என்று பெயரிட்டருளினார்.
11. மேலும், அவர் அவனை நோக்கி: நாம் எல்லாம் வல்ல கடவுள். நீ பலுகிப் பெருகக் கடவாய். இனங்களும் மக்களும் கூட்டங்களும் உன்னிடமிருந்து உற்பத்தியாகும். அரசர்களும் உன் சந்ததியில் உதிப்பார்கள்.
12. ஆபிரகாம் ஈசாக்குக்கு நாம் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் சந்ததிக்கும் கொடுப்போம் என்று சொல்லி,
13. அவனை விட்டு மறைந்துபோனார். அப்போது யாக்கோபு
14. தனக்கு ஆண்டவர் திருவாக்கருளிய அந்த இடத்தில் ஒரு கற்றூணை நினைவுச் சின்னமாக நாட்டி அதன் மேல் பானப்பலியை ஊற்றி, எண்ணையையும் வார்த்தான்.
15. அந்த இடத்திற்குப் பெத்தெல் என்று பெயரிட்டான்.
16. பின் அவன் அவ்விடத்தினின்று புறப்பட்டு, வசந்த காலத்திலே எபிறாத்தாவுக்குப் போகும் வழியை வந்தடைந்தான். அங்கே இராக்கேலுக்குப் பேறுகால வேதனை உண்டானது.
17. அப்பேறுகால வருத்தத்தால் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையில், மருத்துவச்சி அவளை நோக்கி: நீர் பயப்பட வேண்டாம். ஏனென்றால், இப்புதல்வனையும் பெற்றடைவீர் என்றாள்.
18. ஆனால், வேதனை மிகுதியினாலே உயிர் பிரியப் போகும் வேளையில் அவள் தன் பிள்ளைக்குப் பெனோனி- அதாவது, என் வேதனைப் புதல்வன்- என்று பெயரிட்டாள். தந்தையோ, அவனைப் பெஞ்சமின்- அதாவது, வலக்கை மகன்- என்று அழைத்தான்.
19. இராக்கேல் அப்போது உயிர் நீத்தாள்; எப்பிறாத்தா ஊருக்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டாள்.
20. யாக்கோபு அவளுடைய கல்லறையின் மேல் ஒரு தூணை நாட்டி வைத்தான். இந்நாள் வரையிலும் அது இராக்கேலுடைய கல்லறையின் நினைவுத் தூண் (என்று அழைக்கப்படுகிறது).
21. அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, மந்தைக் கோபுரத்திற்கு அப்பால் தன் கூடாரத்தை அடித்தான்.
22. அவன் அந் நாட்டில் குடியிருந்த காலத்தில், ஒரு நாள் ரூபன் தன் தந்தையின் மறு மனைவியாகிய பாலாளோடு படுத்தான். அது யாக்கோபுக்குத் தெரியாமற் போகவில்லை. அவனுடைய புதல்வர் பன்னிரண்டு பேர்.
23. (அதாவது,) லீயாளின் மக்கள்: மூத்த மகன் ரூபன்; பிறகு சிமையோன், லேவி, யூதா, இசக்கார், ஜபுலோன் என்பவர்கள்.
24. இராக்கேலின் மக்கள்: சூசையும் பெஞ்சமினும்.
25. இராக்கேலின் வேலைக்காரியாகிய பாலாளின் மக்கள்: தானும் நெப்தலியும்.
26. லீயாளுடைய வேலைக்காரி ஜெல்பாளின் புதல்வர்கள்: காத்தும் ஆசேரும். இவர்கள் சீரிய மெசோப்பொத்தாமியா நாட்டில் யாக்கோபுக்குப் பிறந்தனர்.
27. யாக்கோபு ஆர்பேயின் நகராகிய மம்பிறேய்க்கு, தந்தையாகிய ஈசாக்கிடம் வந்தான். அது அபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிறோன் என்னும் ஊர்.
28. ஈசாக்கின் வாழ்நாள் மொத்தம் நூற்றெண்பது ஆண்டுகள்.
29. அவன் முதிர் வயதினால் வலுவிழந்து மரணம் அடைந்தான். தன் முன்னோரோடு சேர்க்கப்பட்டபோது அவன் முதுமையும் ஆயுள் நிறைவும் உள்ளவனாய் இருந்தான். அவன் புதல்வராகிய எசாயூவும் யாக்கோபும் அவனை அடக்கம் செய்தனர்.
Total 50 Chapters, Current Chapter 35 of Total Chapters 50
×

Alert

×

tamil Letters Keypad References