தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
1. ஆபிரகாம் செத்துராள் என்னும் வேறொரு மனைவியை மணந்து கொண்டார்.
2. இவள் அவனுக்கு ஜாமிரான், ஜெக்சான், மதான், மதீயான், ஜெஸ்போக், சூயே என்பவர்களைப் பெற்றாள்.
3. ஜெக்சான் சாபாவையும் தாதானையும் பெற்றாள். அசுரீம், லாத்துசீம், லோமீம் என்பவர்கள் தாதானுக்குப் பிறந்த புதல்வர்கள்.
4. மதீயானுக்கும் எப்பா, ஒப்பேர், ஏனோக், அபிதா, எல்தா என்பவர்கள் பிறந்தார்கள். இவர்கள் அனைவரும் செத்துராளின் புதல்வர்.
5. ஆபிரகாம் தம் மகன் ஈசாக்குக்குத் தம் செல்வங்கள் எல்லாவற்றையும் கொடுத்தார்.
6. ஆனால், அவருக்கிருந்த வேறு மனைவியரின் பிள்ளைகளுக்கு (வேண்டிய) சொத்துக்களைக் கொடுத்து, இவர்களைத் தம் புதல்வனான ஈசாக்கிடத்தினின்று பிரித்து, தாம் உயிரோடிருக்கும் போதே கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பி விட்டார்.
7. ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்த பின்,
8. முதியவனாகி நிறைந்த வாழ்நாட்களைக் கடந்து உடல் வலிமை இழந்து, நல்ல கிழப் பருவத்தில் இறந்து, தம் முன்னோரோடு சேர்க்கப்பட்டார்.
9. அவர் புதல்வர்களாகிய ஈசாக், இஸ்மாயேல் என்பவர்கள் மம்பிறே என்ற நகரத்துக்கெதிரே ஏத்தையனாகிய சேயாரின் மகன் எபிரோனுடைய நிலத்தில் இருந்த இரட்டைக் குகையிலேயே அவரை அடக்கம் செய்தார்கள்.
10. அவர் அந்த நிலத்தைத்தான் எத்தின் புதல்வரிடமிருந்து வாங்கியிருந்தார். அதிலே அவரும் அவர் மனைவி சாறாளும் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
11. அவர் இறந்த பின், வாழ்கிறவரும் காண்கிறவரும் என்று சொல்லப்படும் கிணற்றுக்குப் பக்கமாய்க் குடியிருந்த அவர் புதல்வனான ஈசாக்கைக் கடவுள் ஆசீர்வதித்து வந்தார்.
12. சாறாளின் ஊழியக்காரியும் எகிப்து நாட்டினளுமான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனான இஸ்மாயேலின் தலைமுறை அட்டவணையும்,
13. அவன் புதல்வர்களுடைய பெயரும், சந்ததியுமாவன: இஸ்மாயேலின் மூத்த புதல்வன் நபயோத்; அவனது ஏனைய புதல்வர்கள் கேதார், அப்தேல், மாப்சாம்,
14. மஸ்மா, துமா, மாசா, ஆதார், தேமா,
15. ஜெத்தூர், நாப்பீஸ், கெத்மா ஆகியோர்.
16. அவர்கள் பன்னிருவரும் தத்தம் கோத்திரத் தலைவர்களாய் விளங்கினர். தத்தம் கோட்டைகளுக்கும் நகரங்களுக்கும் தத்தம் பெயரையே இட்டனர்.
17. இஸ்மாயேல் உயிர் வாழ்ந்த காலம் மொத்தம் நூற்று முப்பத்தேழு ஆண்டுகள். அவன் அப்பொழுது உடல் வலுவிழந்து இறந்து தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான்.
18. அவன் ஏவிலா முதல் ஆசிரியாவுக்குப் போகிற வழியில் எகிப்து நாட்டிற்கு எதிராகக் காணப்படும் சூர் வரையிலும் வாழ்ந்து வந்தவன். அவன் இறந்த போது அவன் சகோதரர் எல்லாரும் அவனைச் சூழ்ந்திருந்தனர்.
19. ஆபிரகாமின் புதல்வனான ஈசாக்கின் வம்சங்கள் ஆவன: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
20. ஈசாக் நாற்பது வயதான போது, மெசொபொத்தாமியாவில் வாழ்ந்து வந்த சீரிய நாட்டானாகிய பத்துவேலின் புதல்வியும் லாபானின் தங்கையுமான இரெபேக்காளை மணம் புரிந்தான்.
21. ஈசாக், மலடியாய் இருந்த தன் மனைவிக்காக ஆண்டவரை வேண்டிக்கொண்டதினால் அவர் அம்மன்றாட்டைக் கேட்டு, இரெபேககாளுக்கு மகப்பேறு அளித்தருளினார்.
22. ஆனால், அவளுடைய கருப்பத்தில் உருவாகியிருந்த இரண்டு குழந்தைகள் தாயின் வயிற்றில் தானே ஒன்றோடொன்று போர்புரியக் கண்டு, அவள்: அது நடக்குமென்றிருந்தால், நான் கருத்தாங்கியதனால் பயன் என்ன என்று கூறி, ஆண்டவருடைய திருவுள்ளம் இன்னதென்று அறியும்படி போனாள்.
23. அவர் அவளை நோக்கி: உன் வயிற்றிலே இரண்டு குடிகள் உண்டு. அவ்விரண்டும் உன் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட நாள் முதல் வெவ்வேறாய்ப் பிரிந்து போகும். ஒரு குடியை மற்றொரு குடி மேற்கொள்ளும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்தேயிருப்பான் என்றருளினார்.
24. பேறுகாலமான போது, இரட்டைப் பிள்ளைகள் வயிற்றில் இருந்தன என்பது மெய்யாயிற்று.
25. முதன் முதல் வெளிப்பட்ட பிள்ளை பிங்கல நிறமும் மயிர் செறிந்த தோலும் உடையவன். ஆதலால் அவனுக்கு எசாயூ என்று பெயர் சூட்டப்பட்டது.
26. இரண்டாவது பிள்ளை தன் சகோதரனின் காலைக் கையாலே பிடித்துக் கொண்டு உடனுக்குடன் வெளிப்பட்டதனால், அவனுக்கு யாக்கோபு என்னும் பெயரை இட்டனர். அவ்விரு பிள்ளைகளும் பிறந்த போது ஈசாக் அறுபது வயதுள்ளவனாய் இருந்தான்.
27. இருவரும் வளர்ந்து இளைஞரான போது, அவர்களில் எசாயூ வேட்டையாடுவதிலும் பயிர்த் தொழிலிலும் வல்லவனானான். யாக்கோபோ, கபடமற்ற மனிதனாய்க் கூடாரங்களில் வாழ்ந்து வந்தான்.
28. ஈசாக் எசாயூக்கு மிகவும் அன்பு செய்தான்; ஏனென்றால், அவனுடைய வேட்டை மிருகங்களை விரும்பிச் சாப்பிட்டு வந்தான். இரெபேக்காளோ, யாக்கோபின் மீது அன்பு பாராட்டி வந்தாள்.
29. ஒருநாள் யாக்கோபு ஒருவிதத் தின்பண்டம் செய்துகொண்டிருக்கும் பொழுது எசாயூ காட்டிலிருந்து மிகவும் களைப்புற்றவனாய் அவனிடம் வந்து:
30. இந்தச் செந்நிறத் தின்பண்டத்திலே எனக்குக் கொஞ்சம் கொடு. நான் மிகவும் சோர்வுற்று இருக்கிறேன் என்றான். (அவனுக்கு எதோம் என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.)
31. யாக்கோபு அவனை நோக்கி: தலைச்சனுக்குரிய உனது உரிமையை எனக்கு விற்று விடுவாயா என, அவன்:
32. இதோ, சாகிறேனே! தலைச்சனுக்குரிய உரிமைகளால் எனக்கு என்ன பயன் வரப்போகிறது என்று மறுமொழி சொல்லக் கேட்டு, யாக்கோபு:
33. அப்படியானால் முதலில் எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடு என்றான். எசாயூ ஆணையிட்டு, தலைச்சனுக்குரிய தன் உரிமையை விற்று விட்டான்.
34. இதன் பின் அவன் அப்பத்தையும் மேற்படித் தின்பண்டத்தையும் எடுத்து உண்டு குடித்தான். தலைச்சனுக்குரிய உரிமையை விற்று விட்டதை ஒரு பொருட்டாய் எண்ணாமல் அப்பாலே சென்றான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 50 Chapters, Current Chapter 25 of Total Chapters 50
ஆதியாகமம் 25:4
1. ஆபிரகாம் செத்துராள் என்னும் வேறொரு மனைவியை மணந்து கொண்டார்.
2. இவள் அவனுக்கு ஜாமிரான், ஜெக்சான், மதான், மதீயான், ஜெஸ்போக், சூயே என்பவர்களைப் பெற்றாள்.
3. ஜெக்சான் சாபாவையும் தாதானையும் பெற்றாள். அசுரீம், லாத்துசீம், லோமீம் என்பவர்கள் தாதானுக்குப் பிறந்த புதல்வர்கள்.
4. மதீயானுக்கும் எப்பா, ஒப்பேர், ஏனோக், அபிதா, எல்தா என்பவர்கள் பிறந்தார்கள். இவர்கள் அனைவரும் செத்துராளின் புதல்வர்.
5. ஆபிரகாம் தம் மகன் ஈசாக்குக்குத் தம் செல்வங்கள் எல்லாவற்றையும் கொடுத்தார்.
6. ஆனால், அவருக்கிருந்த வேறு மனைவியரின் பிள்ளைகளுக்கு (வேண்டிய) சொத்துக்களைக் கொடுத்து, இவர்களைத் தம் புதல்வனான ஈசாக்கிடத்தினின்று பிரித்து, தாம் உயிரோடிருக்கும் போதே கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பி விட்டார்.
7. ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்த பின்,
8. முதியவனாகி நிறைந்த வாழ்நாட்களைக் கடந்து உடல் வலிமை இழந்து, நல்ல கிழப் பருவத்தில் இறந்து, தம் முன்னோரோடு சேர்க்கப்பட்டார்.
9. அவர் புதல்வர்களாகிய ஈசாக், இஸ்மாயேல் என்பவர்கள் மம்பிறே என்ற நகரத்துக்கெதிரே ஏத்தையனாகிய சேயாரின் மகன் எபிரோனுடைய நிலத்தில் இருந்த இரட்டைக் குகையிலேயே அவரை அடக்கம் செய்தார்கள்.
10. அவர் அந்த நிலத்தைத்தான் எத்தின் புதல்வரிடமிருந்து வாங்கியிருந்தார். அதிலே அவரும் அவர் மனைவி சாறாளும் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
11. அவர் இறந்த பின், வாழ்கிறவரும் காண்கிறவரும் என்று சொல்லப்படும் கிணற்றுக்குப் பக்கமாய்க் குடியிருந்த அவர் புதல்வனான ஈசாக்கைக் கடவுள் ஆசீர்வதித்து வந்தார்.
12. சாறாளின் ஊழியக்காரியும் எகிப்து நாட்டினளுமான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனான இஸ்மாயேலின் தலைமுறை அட்டவணையும்,
13. அவன் புதல்வர்களுடைய பெயரும், சந்ததியுமாவன: இஸ்மாயேலின் மூத்த புதல்வன் நபயோத்; அவனது ஏனைய புதல்வர்கள் கேதார், அப்தேல், மாப்சாம்,
14. மஸ்மா, துமா, மாசா, ஆதார், தேமா,
15. ஜெத்தூர், நாப்பீஸ், கெத்மா ஆகியோர்.
16. அவர்கள் பன்னிருவரும் தத்தம் கோத்திரத் தலைவர்களாய் விளங்கினர். தத்தம் கோட்டைகளுக்கும் நகரங்களுக்கும் தத்தம் பெயரையே இட்டனர்.
17. இஸ்மாயேல் உயிர் வாழ்ந்த காலம் மொத்தம் நூற்று முப்பத்தேழு ஆண்டுகள். அவன் அப்பொழுது உடல் வலுவிழந்து இறந்து தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான்.
18. அவன் ஏவிலா முதல் ஆசிரியாவுக்குப் போகிற வழியில் எகிப்து நாட்டிற்கு எதிராகக் காணப்படும் சூர் வரையிலும் வாழ்ந்து வந்தவன். அவன் இறந்த போது அவன் சகோதரர் எல்லாரும் அவனைச் சூழ்ந்திருந்தனர்.
19. ஆபிரகாமின் புதல்வனான ஈசாக்கின் வம்சங்கள் ஆவன: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
20. ஈசாக் நாற்பது வயதான போது, மெசொபொத்தாமியாவில் வாழ்ந்து வந்த சீரிய நாட்டானாகிய பத்துவேலின் புதல்வியும் லாபானின் தங்கையுமான இரெபேக்காளை மணம் புரிந்தான்.
21. ஈசாக், மலடியாய் இருந்த தன் மனைவிக்காக ஆண்டவரை வேண்டிக்கொண்டதினால் அவர் அம்மன்றாட்டைக் கேட்டு, இரெபேககாளுக்கு மகப்பேறு அளித்தருளினார்.
22. ஆனால், அவளுடைய கருப்பத்தில் உருவாகியிருந்த இரண்டு குழந்தைகள் தாயின் வயிற்றில் தானே ஒன்றோடொன்று போர்புரியக் கண்டு, அவள்: அது நடக்குமென்றிருந்தால், நான் கருத்தாங்கியதனால் பயன் என்ன என்று கூறி, ஆண்டவருடைய திருவுள்ளம் இன்னதென்று அறியும்படி போனாள்.
23. அவர் அவளை நோக்கி: உன் வயிற்றிலே இரண்டு குடிகள் உண்டு. அவ்விரண்டும் உன் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட நாள் முதல் வெவ்வேறாய்ப் பிரிந்து போகும். ஒரு குடியை மற்றொரு குடி மேற்கொள்ளும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்தேயிருப்பான் என்றருளினார்.
24. பேறுகாலமான போது, இரட்டைப் பிள்ளைகள் வயிற்றில் இருந்தன என்பது மெய்யாயிற்று.
25. முதன் முதல் வெளிப்பட்ட பிள்ளை பிங்கல நிறமும் மயிர் செறிந்த தோலும் உடையவன். ஆதலால் அவனுக்கு எசாயூ என்று பெயர் சூட்டப்பட்டது.
26. இரண்டாவது பிள்ளை தன் சகோதரனின் காலைக் கையாலே பிடித்துக் கொண்டு உடனுக்குடன் வெளிப்பட்டதனால், அவனுக்கு யாக்கோபு என்னும் பெயரை இட்டனர். அவ்விரு பிள்ளைகளும் பிறந்த போது ஈசாக் அறுபது வயதுள்ளவனாய் இருந்தான்.
27. இருவரும் வளர்ந்து இளைஞரான போது, அவர்களில் எசாயூ வேட்டையாடுவதிலும் பயிர்த் தொழிலிலும் வல்லவனானான். யாக்கோபோ, கபடமற்ற மனிதனாய்க் கூடாரங்களில் வாழ்ந்து வந்தான்.
28. ஈசாக் எசாயூக்கு மிகவும் அன்பு செய்தான்; ஏனென்றால், அவனுடைய வேட்டை மிருகங்களை விரும்பிச் சாப்பிட்டு வந்தான். இரெபேக்காளோ, யாக்கோபின் மீது அன்பு பாராட்டி வந்தாள்.
29. ஒருநாள் யாக்கோபு ஒருவிதத் தின்பண்டம் செய்துகொண்டிருக்கும் பொழுது எசாயூ காட்டிலிருந்து மிகவும் களைப்புற்றவனாய் அவனிடம் வந்து:
30. இந்தச் செந்நிறத் தின்பண்டத்திலே எனக்குக் கொஞ்சம் கொடு. நான் மிகவும் சோர்வுற்று இருக்கிறேன் என்றான். (அவனுக்கு எதோம் என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.)
31. யாக்கோபு அவனை நோக்கி: தலைச்சனுக்குரிய உனது உரிமையை எனக்கு விற்று விடுவாயா என, அவன்:
32. இதோ, சாகிறேனே! தலைச்சனுக்குரிய உரிமைகளால் எனக்கு என்ன பயன் வரப்போகிறது என்று மறுமொழி சொல்லக் கேட்டு, யாக்கோபு:
33. அப்படியானால் முதலில் எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடு என்றான். எசாயூ ஆணையிட்டு, தலைச்சனுக்குரிய தன் உரிமையை விற்று விட்டான்.
34. இதன் பின் அவன் அப்பத்தையும் மேற்படித் தின்பண்டத்தையும் எடுத்து உண்டு குடித்தான். தலைச்சனுக்குரிய உரிமையை விற்று விட்டதை ஒரு பொருட்டாய் எண்ணாமல் அப்பாலே சென்றான்.
Total 50 Chapters, Current Chapter 25 of Total Chapters 50
×

Alert

×

tamil Letters Keypad References