தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
1. நிற்க, அந்நாள் வரை ஆபிராமின் மனைவி சாறாயிக்குப் பிள்ளைகள் இல்லை. ஆனால், அவளுக்கு எகிப்து நாட்டினளான ஆகார் என்னும் பெயர் கொண்ட வேலைக்காரி ஒருத்தி இருந்தாள்.
2. சாறாயி தன் கணவனை நோக்கி: இதோ, நான் பிள்ளை பெறாவண்ணம் ஆண்டவர் என் கருப்பத்தை அடைத்திருக்கிறார். நீர் என் வேலைக்காரியோடு சேரும். அவள் மூலமாவது நான் பிள்ளைகளை அடைவேனாக என்றாள். அவன் அவள் வேண்டுகோளுக்கு இணங்கினான்.
3. கானான் நாட்டில் அவர்கள் பத்தாண்டுகள் குடியிருந்த பின் (சாறாயி) எகிப்து நாட்டினளான ஆகார் என்னும் தன் வேலைக்காரியை அழைத்து, அவளைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
4. அவன் அவளோடு கூடி வாழ்ந்தான். பின்னர் அவள் தான் கருவுற்றிருக்கக் கண்டு, தன் தலைவியை அலட்சியம் பண்ணினாள்.
5. அது கண்டு சாறாயி ஆபிராமை நோக்கி: எனக்கு நீர் அநீதி செய்து வருகிறீரே! நான் என் அடிமைப் பெண்ணை உமது மடியிலே கொடுத்திருக்க. அவள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தவுடன் என்னைப் பழிக்கத் தொடங்கி விட்டாளே! ஆண்டவர் உமக்கும் எனக்கும் நடுவராயிருந்து நீதி வழங்கக் கடவார் என்றாள்.
6. அதற்கு ஆபிராம்: இதோ, உன் அடிமைப் பெண் உன் கைக்குள் இருக்கிறாள். உன் மனப்படி அவளை நடத்துவாய் என்றான். பின்பு, சாறாயி தன்னைக் கண்டிப்பாய் நடத்தியது கண்டு அவள் ஓடிப் போனாள்.
7. அப்பொழுது ஆண்டவருடைய தூதர் அவளைப் பாலைவனத்திலே சூருக்குப் போகும் வழியருகே உள்ள நீரூற்றண்டையில் கண்டு: சாறாயியின் அடிமைப் பெண்ணாகிய ஆகாரே, நீ எங்கிருந்து வந்தாய்?
8. எங்கே போகிறாய் என்று கேட்க, அவள்: நான் என் தலைவி சாறாயியை விட்டு ஓடிப் போகிறேன் என்று பதில் கூறினாள்.
9. ஆண்டவருடைய தூதர் அவளைப் பார்த்து: உன் தலைவியிடம் நீ திரும்பிப் போய் அவளுக்கு அடங்கியிரு என்றார்.
10. மேலும் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் விருத்தியடையச் செய்வோம். அது எண்ண முடியாததாய் இருக்கும் என்று சொன்னார்.
11. மீண்டும்: இதோ, கருவுற்றிருக்கிற நீ ஒரு புதல்வனைப் பெறுவாய். உன் இன்னலைக் கண்டு ஆண்டவர் இரங்கினதனாலே, அவனுக்கு இஸ்மாயில் என்று பெயரிடுவாயாக.நி414
12. அவன் கொடும் குணமுள்ள மனிதனாய் வளர்வான். அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் ஓங்கியிருக்கும். தன் சகோதரர் அனைவரும் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களுக்கெதிராக அவன் குடியிருப்பான் என்றார்.
13. அப்போது அவள்: என்னைக் கண்ட அந்த ஆண்டவருடைய பின் புறத்தை நான் கண்டேனல்லவா என்று சொல்லித் தன்னோடு பேசிய ஆண்டவருக்கு: நீர் என்னைக் கண்ட கடவுள் என்று பெயரிட்டாள்.
14. அதனால் அந்தக் கிணற்றை, வாழ்கிறவரும் என்னைக் காண்கிறவருமாய் இருக்கிறவருடைய கிணறு என்று அழைத்தாள். அது காசேதுக்கும் பாரதுக்கும் நடுவே இருக்கிறது.
15. பின் ஆகார் ஆபிராமுக்கு ஒரு புதல்வனைப் பெற்றாள். இவனுக்கு அவன் இஸ்மாயில் என்று பெயரிட்டான்:
16. ஆகார் இஸ்மாயிலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எண்பத்தாறு.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 50 Chapters, Current Chapter 16 of Total Chapters 50
ஆதியாகமம் 16:35
1. நிற்க, அந்நாள் வரை ஆபிராமின் மனைவி சாறாயிக்குப் பிள்ளைகள் இல்லை. ஆனால், அவளுக்கு எகிப்து நாட்டினளான ஆகார் என்னும் பெயர் கொண்ட வேலைக்காரி ஒருத்தி இருந்தாள்.
2. சாறாயி தன் கணவனை நோக்கி: இதோ, நான் பிள்ளை பெறாவண்ணம் ஆண்டவர் என் கருப்பத்தை அடைத்திருக்கிறார். நீர் என் வேலைக்காரியோடு சேரும். அவள் மூலமாவது நான் பிள்ளைகளை அடைவேனாக என்றாள். அவன் அவள் வேண்டுகோளுக்கு இணங்கினான்.
3. கானான் நாட்டில் அவர்கள் பத்தாண்டுகள் குடியிருந்த பின் (சாறாயி) எகிப்து நாட்டினளான ஆகார் என்னும் தன் வேலைக்காரியை அழைத்து, அவளைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
4. அவன் அவளோடு கூடி வாழ்ந்தான். பின்னர் அவள் தான் கருவுற்றிருக்கக் கண்டு, தன் தலைவியை அலட்சியம் பண்ணினாள்.
5. அது கண்டு சாறாயி ஆபிராமை நோக்கி: எனக்கு நீர் அநீதி செய்து வருகிறீரே! நான் என் அடிமைப் பெண்ணை உமது மடியிலே கொடுத்திருக்க. அவள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தவுடன் என்னைப் பழிக்கத் தொடங்கி விட்டாளே! ஆண்டவர் உமக்கும் எனக்கும் நடுவராயிருந்து நீதி வழங்கக் கடவார் என்றாள்.
6. அதற்கு ஆபிராம்: இதோ, உன் அடிமைப் பெண் உன் கைக்குள் இருக்கிறாள். உன் மனப்படி அவளை நடத்துவாய் என்றான். பின்பு, சாறாயி தன்னைக் கண்டிப்பாய் நடத்தியது கண்டு அவள் ஓடிப் போனாள்.
7. அப்பொழுது ஆண்டவருடைய தூதர் அவளைப் பாலைவனத்திலே சூருக்குப் போகும் வழியருகே உள்ள நீரூற்றண்டையில் கண்டு: சாறாயியின் அடிமைப் பெண்ணாகிய ஆகாரே, நீ எங்கிருந்து வந்தாய்?
8. எங்கே போகிறாய் என்று கேட்க, அவள்: நான் என் தலைவி சாறாயியை விட்டு ஓடிப் போகிறேன் என்று பதில் கூறினாள்.
9. ஆண்டவருடைய தூதர் அவளைப் பார்த்து: உன் தலைவியிடம் நீ திரும்பிப் போய் அவளுக்கு அடங்கியிரு என்றார்.
10. மேலும் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் விருத்தியடையச் செய்வோம். அது எண்ண முடியாததாய் இருக்கும் என்று சொன்னார்.
11. மீண்டும்: இதோ, கருவுற்றிருக்கிற நீ ஒரு புதல்வனைப் பெறுவாய். உன் இன்னலைக் கண்டு ஆண்டவர் இரங்கினதனாலே, அவனுக்கு இஸ்மாயில் என்று பெயரிடுவாயாக.நி414
12. அவன் கொடும் குணமுள்ள மனிதனாய் வளர்வான். அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் ஓங்கியிருக்கும். தன் சகோதரர் அனைவரும் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களுக்கெதிராக அவன் குடியிருப்பான் என்றார்.
13. அப்போது அவள்: என்னைக் கண்ட அந்த ஆண்டவருடைய பின் புறத்தை நான் கண்டேனல்லவா என்று சொல்லித் தன்னோடு பேசிய ஆண்டவருக்கு: நீர் என்னைக் கண்ட கடவுள் என்று பெயரிட்டாள்.
14. அதனால் அந்தக் கிணற்றை, வாழ்கிறவரும் என்னைக் காண்கிறவருமாய் இருக்கிறவருடைய கிணறு என்று அழைத்தாள். அது காசேதுக்கும் பாரதுக்கும் நடுவே இருக்கிறது.
15. பின் ஆகார் ஆபிராமுக்கு ஒரு புதல்வனைப் பெற்றாள். இவனுக்கு அவன் இஸ்மாயில் என்று பெயரிட்டான்:
16. ஆகார் இஸ்மாயிலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எண்பத்தாறு.
Total 50 Chapters, Current Chapter 16 of Total Chapters 50
×

Alert

×

tamil Letters Keypad References