1. சகோதரர்களே, ஒருவன் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டால், ஆவியானவரைப் பெற்றிருக்கும் நீங்கள் சாந்தமான உள்ளத்தோடு அப்படிப்பட்டவனைத் திருத்துங்கள். நீயும் அவனைப்போலச் சோதனைக்குள்ளாகாதபடி பார்த்துக்கொள்.
|
3. எம்மதிப்புக்கும் உரியவனாய் இல்லாதிருந்தும், தன்னைப் பெரியவன் என்று எண்ணிக்கொள்கிற எவனும் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.
|
4. ஒவ்வொருவனும் தன்னுடைய நடத்தையை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது அவன் தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தானே செய்த செயல்களை முன்னிட்டுப் பெருமை பாராட்டுவான்.
|
7. ஏமாந்து போக வேண்டாம். கடவுளை ஏமாற்ற முடியும் என நினைக்காதீர்கள். ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
|
8. தன் ஊனியல்பில் விதைப்பவன், அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுப்பான். ஆவியானவரைப் பெற்ற இயல்பில் விதைப்பவன், ஆவியானவர் தரும் முடிவில்லா வாழ்வை அறுப்பான்.
|
10. ஆகையால், இன்னும் காலம் இருக்கும்போதே, எல்லார்க்கும் சிறப்பாக விசுவாசத்தால் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்வோமாக!
|
11. இப்பொழுது என் கைப்பட நானே உங்களுக்கு எழுதுகிறேன். எவ்வளவு பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன். பாருங்கள்!
|
12. நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்கள் தான் நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளும் படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் சிலுவையை முன்னிட்டுத் தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.
|
13. விருத்தசேதனம் செய்து கொண்டவர்களே திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் உங்கள் உடலில் பெற்றுக்கொண்ட விருத்தசேதனத்தை முன்னிட்டு, அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வதற்காக நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
|
14. நானோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலன்றி வேறெதிலும் ஒருகாலும் பெருமை பாராட்ட மாட்டேன்; அந்தச் சிலுவையின் வழியாகவே உலகம் எனக்கு அறையுண்டதாய் இருக்கிறது, நானும் உலகத்திற்கு அறையுண்டவனாய் இருக்கிறேன்.
|
16. யார் யார் இந்த ஒழுங்கு முறையைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் மேலும், உண்மையான இஸ்ராயேலராகிய இறை மக்கள் மேலும் சமாதானமும் இரக்கமும் இருப்பதாக!
|
17. இனிமேல் எவனும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம்: ஏனெனில், என் உடலில் நான் தங்கும் தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.
|