தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
கலாத்தியர்
1. சகோதரர்களே, ஒருவன் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டால், ஆவியானவரைப் பெற்றிருக்கும் நீங்கள் சாந்தமான உள்ளத்தோடு அப்படிப்பட்டவனைத் திருத்துங்கள். நீயும் அவனைப்போலச் சோதனைக்குள்ளாகாதபடி பார்த்துக்கொள்.
2. ஒருவரொருவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.
3. எம்மதிப்புக்கும் உரியவனாய் இல்லாதிருந்தும், தன்னைப் பெரியவன் என்று எண்ணிக்கொள்கிற எவனும் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.
4. ஒவ்வொருவனும் தன்னுடைய நடத்தையை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது அவன் தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தானே செய்த செயல்களை முன்னிட்டுப் பெருமை பாராட்டுவான்.
5. அவனவன் தன் சுமையைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.
6. தேவ வார்த்தையைக் கற்றுக்கொள்பவன் கற்பித்தவனுக்குத் தனக்குள்ளதில் பங்கு கொடுப்பானாக.
7. ஏமாந்து போக வேண்டாம். கடவுளை ஏமாற்ற முடியும் என நினைக்காதீர்கள். ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
8. தன் ஊனியல்பில் விதைப்பவன், அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுப்பான். ஆவியானவரைப் பெற்ற இயல்பில் விதைப்பவன், ஆவியானவர் தரும் முடிவில்லா வாழ்வை அறுப்பான்.
9. நன்மை செய்வதில் மனந்தளராதிருப்போமாக! நாம் சோர்வுறாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை கிடைக்கும்.
10. ஆகையால், இன்னும் காலம் இருக்கும்போதே, எல்லார்க்கும் சிறப்பாக விசுவாசத்தால் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்வோமாக!
11. இப்பொழுது என் கைப்பட நானே உங்களுக்கு எழுதுகிறேன். எவ்வளவு பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன். பாருங்கள்!
12. நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்கள் தான் நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளும் படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் சிலுவையை முன்னிட்டுத் தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.
13. விருத்தசேதனம் செய்து கொண்டவர்களே திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் உங்கள் உடலில் பெற்றுக்கொண்ட விருத்தசேதனத்தை முன்னிட்டு, அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வதற்காக நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
14. நானோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலன்றி வேறெதிலும் ஒருகாலும் பெருமை பாராட்ட மாட்டேன்; அந்தச் சிலுவையின் வழியாகவே உலகம் எனக்கு அறையுண்டதாய் இருக்கிறது, நானும் உலகத்திற்கு அறையுண்டவனாய் இருக்கிறேன்.
15. விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமின்மையும் ஒன்றுமில்லை. புதிய படைப்பாவதே முக்கியம்.
16. யார் யார் இந்த ஒழுங்கு முறையைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் மேலும், உண்மையான இஸ்ராயேலராகிய இறை மக்கள் மேலும் சமாதானமும் இரக்கமும் இருப்பதாக!
17. இனிமேல் எவனும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம்: ஏனெனில், என் உடலில் நான் தங்கும் தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.
18. சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 6 Chapters, Current Chapter 6 of Total Chapters 6
1 2 3 4 5 6
கலாத்தியர் 6:1
1. சகோதரர்களே, ஒருவன் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டால், ஆவியானவரைப் பெற்றிருக்கும் நீங்கள் சாந்தமான உள்ளத்தோடு அப்படிப்பட்டவனைத் திருத்துங்கள். நீயும் அவனைப்போலச் சோதனைக்குள்ளாகாதபடி பார்த்துக்கொள்.
2. ஒருவரொருவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.
3. எம்மதிப்புக்கும் உரியவனாய் இல்லாதிருந்தும், தன்னைப் பெரியவன் என்று எண்ணிக்கொள்கிற எவனும் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.
4. ஒவ்வொருவனும் தன்னுடைய நடத்தையை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது அவன் தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தானே செய்த செயல்களை முன்னிட்டுப் பெருமை பாராட்டுவான்.
5. அவனவன் தன் சுமையைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.
6. தேவ வார்த்தையைக் கற்றுக்கொள்பவன் கற்பித்தவனுக்குத் தனக்குள்ளதில் பங்கு கொடுப்பானாக.
7. ஏமாந்து போக வேண்டாம். கடவுளை ஏமாற்ற முடியும் என நினைக்காதீர்கள். ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
8. தன் ஊனியல்பில் விதைப்பவன், அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுப்பான். ஆவியானவரைப் பெற்ற இயல்பில் விதைப்பவன், ஆவியானவர் தரும் முடிவில்லா வாழ்வை அறுப்பான்.
9. நன்மை செய்வதில் மனந்தளராதிருப்போமாக! நாம் சோர்வுறாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை கிடைக்கும்.
10. ஆகையால், இன்னும் காலம் இருக்கும்போதே, எல்லார்க்கும் சிறப்பாக விசுவாசத்தால் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்வோமாக!
11. இப்பொழுது என் கைப்பட நானே உங்களுக்கு எழுதுகிறேன். எவ்வளவு பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன். பாருங்கள்!
12. நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்கள் தான் நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளும் படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் சிலுவையை முன்னிட்டுத் தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.
13. விருத்தசேதனம் செய்து கொண்டவர்களே திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் உங்கள் உடலில் பெற்றுக்கொண்ட விருத்தசேதனத்தை முன்னிட்டு, அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வதற்காக நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
14. நானோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலன்றி வேறெதிலும் ஒருகாலும் பெருமை பாராட்ட மாட்டேன்; அந்தச் சிலுவையின் வழியாகவே உலகம் எனக்கு அறையுண்டதாய் இருக்கிறது, நானும் உலகத்திற்கு அறையுண்டவனாய் இருக்கிறேன்.
15. விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமின்மையும் ஒன்றுமில்லை. புதிய படைப்பாவதே முக்கியம்.
16. யார் யார் இந்த ஒழுங்கு முறையைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் மேலும், உண்மையான இஸ்ராயேலராகிய இறை மக்கள் மேலும் சமாதானமும் இரக்கமும் இருப்பதாக!
17. இனிமேல் எவனும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம்: ஏனெனில், என் உடலில் நான் தங்கும் தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.
18. சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.
Total 6 Chapters, Current Chapter 6 of Total Chapters 6
1 2 3 4 5 6
×

Alert

×

tamil Letters Keypad References