1. பபிலோனிய அரசன் நபுக்கோதனசார் பபிலோனுக்குச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றவர்களுள் அடிமைத்தனத்திலிருந்து யெருசலேமுக்கும் யூதேயாவிலுள்ள தத்தம் ஊருக்கும் திரும்பிவந்த யூதர்களின் எண்ணிக்கையாவது:
|
2. எரோபாபெலோடு வந்தவர்கள்: யோசுவா, நெகேமியா, சராயியா, ரகேலகியா, மர்தோக்கே, பெல்சான், மெஸ்பார், பெகெயி, ரேகும், பானா ஆகியோர்.
|
3. இஸ்ராயேல் மக்களுள் ஆடவரின் கணக்காவது: பாரோசின் சந்ததியார் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டு பேர்;
|
40. லேவியர்களிலே: ஒதோவியாவின் புதல்வரான யோசுவா, கெத்மிகேல் என்பவர்களின் மக்களிலே எழுபத்து நான்கு பேர்;
|
42. வாயிற்காவலரின் மக்களான செல்லும், ஆதேர், தேல்மோன், ஆக்கூப், ஹத்திதா, சோபாயி முதலியோரின் மக்களிலே மொத்தம் நூற்று முப்பத்துதொன்பது பேர்.
|
57. சப்பாத்தியாவின் மக்கள், ஹாதீலின் மக்கள், அசேபெயீம் வழிவந்த பொகெரேத்தின் மக்கள், அமீயின் மக்கள் ஆகியோர்.
|
58. இவ்வாறு எல்லா ஆலய ஊழியர்களும் சாலமோனின் ஊழியர்களுடைய மக்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொன்ணுற்றிரண்டு பேர்.
|
59. மேலும் தெல்மலா, தேலார்சா, கெரூப், அதோன், எமேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களில் தாங்கள் இஸ்ராயேலின் வழிவந்தவர் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தவர்களுள்:
|
60. தலாயியாவின் மக்களும், தொபியாசின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.
|
61. இதுவுமன்றி, குருக்களின் மக்களான ஹோபியாவின் மக்களும், அக்கோசின் மக்களும், கலாத் ஊரானான பேர்செலாயின் புதல்வியருள் ஒருத்தியை மணந்து கொண்டதனால் அவர்கள் பெயரால் அழைக்கப்பட்ட பேர் செலாயின் மக்களும்,
|
62. ஆகிய இவர்கள் தங்கள் தலைமுறை அட்டவணையைத் தேடியும் அடையாததால் அவர்கள் குருத்துவப் பணியினின்று நீக்கப்பட்டனர்.
|
63. அதேர்சதா அவர்களைப் பார்த்து, "அறிஞனும் உத்தமனுமான ஒரு குரு தோன்றும்வரை, நீங்கள் உள்தூயகப் பொருட்களில் எதையும் உண்ணக்கூடாது" என்று சொன்னான்.
|
65. அவர்களைத் தவிர, அவர்களின் ஊழியர்களில் ஆணும் பெண்ணுமாய் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தெழு பேர் இருந்தனர். இவர்களிடையே பாடகரும் பாடகிகளும் இருநூறு பேர்.
|
68. குலத்தலைவர்களுள் சிலர் யெருசலேமில் உள்ள ஆண்டவரின் ஆலயத்தை அடைந்த போது, ஆலயத்தை அதன் பழைய இடத்திலேயே கட்டி எழுப்பும்படி மனமுவந்து காணிக்கைகளைக் கொடுத்தனர்.
|
69. அவர்கள் தத்தம் வசதிக்கேற்ப வேலைச் செலவுக்கு அறுபத்தோராயிரம் பொற்கட்டிகளையும், ஐயாயிரம் ராத்தல் வெள்ளியையும், குருக்களுக்கு நூறு உடைகளையும் கொடுத்தனர்.
|
70. குருக்களும் லேவியர்களும், மக்களில் பலரும் பாடகரும் வாயிற்காவலரும் ஆலய ஊழியரும் தத்தம் நகர்களிலும், இஸ்ராயேலர்கள் யாவரும் தத்தம் நகர்களிலும் குடியேறினார்கள்.
|