தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எசேக்கியேல்
1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
3. இவர்கள் தங்கள் வாலிய வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னிக் கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர்.
4. அவர்களுள் தமக்கையின் பெயர் ஒல்லா, தங்கையின் பெயர் ஒலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஒல்லா சமாரியாவையும், ஒலியா யெருசலேமையும் குறிக்கின்றன.
5. ஒல்லா என்னுடையவளாய் இருந்தும், விபசாரியானாள்; அசீரியர்கள் மீது காமம் கொண்டாள்;
6. நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள்.
7. அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமங்கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள்.
8. தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டு விடவில்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள்.
9. ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே- அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம்.
10. அவர்கள் அவள் ஆடைகளை உரிந்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரை பிடித்துக் கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழமொழிக்காளானாள்.
11. அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும்; தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவள் ஆனாள்.
12. பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசைமூட்டும் அழகு வாலிபர்களுமாய்க் குதிரை மீது ஏறி வந்த வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள்.
13. இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம்.
14. ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயாரின் ஒவியங்களையும் கண்டாள்;
15. அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பபிலோன் நகரத்தாரைப் போல் இடையில் கச்சை கட்டிக் கொண்டும், தலையில் தலைப்பாகை அணிந்தும், படைத்தலைவர்கள் போல் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள்.
16. கண்டதும் அவர்கள் மேல் காமங்கொண்டு, அவர்களிடம் ஜகல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள்.
17. பபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப்படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கெண்டாள்.
18. இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம் மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது.
19. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.
20. காமவெறியர் மேல் அவள் மோகங்கொண்டாள்; அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன.
21. இவ்வாறு எகிப்தியர் உன் இளமார்புளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்."
22. ஆகையால், ஒலிபா, ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீ யார்மேல் காமவெறியால் மோகங் கொண்டாயோ, யாருடன் தெவிட்டும் வரை காமச் செயல் புரிந்தாயோ, இதோ அவர்களை உனக்கு எதிராக எல்லாப் பக்கத்திலும் எழும்பச் செய்வோம்.
23. பபிலோனியரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, ஷோவா, கோவா என்னும் இடங்களில் உள்ளோரையும், அசீரியர்களையும், ஆசை மூட்டும் அழகுள்ள வாலிபர்களாகிய தலைவர்கள், ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோரையும், குதிரை வீரர்களையும் நாம் கூப்பிடுவோம்.
24. அவர்கள் பெரிய கூட்டமாய் வண்டிகளோடும், தேர்ப்படை, காலாட்படைகளோடும் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவார்கள்; மார்க்கவசம், கேடயம், தலைச்சீரா முதலியவற்றை அணிந்து நாற்புறமும் வந்து உன்னைச் சூழ்ந்து கொள்வார்கள்; அவர்களுக்கு முன்பாக நாம் உன்னைத் தீர்ப்பிடுவோம்; அவர்கள் தங்கள் சட்டப்படி உன் மேல் தீர்ப்புக் கூறுவார்கள்.
25. நமது ஆத்திரம் உனக்கு எதிராய் இருக்கும்; அவர்கள் உன்னைக் கொடூரமாய் நடத்தி, உன் மூக்கையும் காதுகளையும் அறுத்துப் போடுவார்கள்; உன்னில் மீதியாய் இருப்பவர்களை வாளால் வெட்டுவார்கள்: உன் புதல்வர் புதல்வியரைப் பிடித்துக் கொண்டு, உன்னில் எஞ்சியிருப்பவர்களை அக்கினிக்கு இரையாக்குவார்கள்.
26. உன் ஆடைகளை உரிந்து, உன் மகிமையின் அணிகலன்களைப் பறித்துக்கொள்வார்கள்;
27. இவ்வாறு, நீ எகிப்திலிருந்து கொண்டு வந்த வேசித்தனத்தையும் காமவெறியையும் ஒழியச் செய்வோம்; இனி நீ எகிப்தியரை ஏறிட்டும் பாராய்; அவர்களை நினைக்கவும் மாட்டாய்.
28. ஏனெனில், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ யாரோடு இன்பம் துய்த்து வெறுப்புற்றாயோ, இதோ அவர்கள் கையிலேயே உன்னை ஒப்படைப்போம்;
29. அவர்கள் உன்னை வெறுப்போடு நடத்தி, உன் உடைமைகள் யாவற்றையும் பறித்துக்கொண்டு, உன்னை ஆடையின்றி நிருவாணமாய் விட்டுவிடுவார்கள்; உன் வேசித்தனத்தின் நிந்தையும் வெட்கக்கேடும் வெளிப்படும்.
30. நீ புறவினத்தாருடைய சிலைகளுக்கு வழிபாடு செலுத்தித் தீட்டுப்பட்டு வேசித்தனம் செய்ததால் அவர்கள் உனக்கு இவற்றைச் செய்வார்கள்,
31. நீ உன் சகோதரியின் வழியைப் பின்பற்றினாய்; ஆகையால் அவள் குடித்த பாத்திரத்தையே உன் கையிலும் வைப்போம்.
32. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உன் சகோதரி குடித்த பாத்திரத்தையே நீயும் குடிப்பாய், அது அகன்றது, ஆழமானது; நீ பரிகாசத்துக்கும் நகைப்புக்கும் உள்ளாவாய், ஏனெனில் அதில் அதிகம் இருக்கிறது.
33. நீ போதையாலும் துயரத்தாலும் நிறைந்திருப்பாய்; துயரமும் அழிவும் கொண்ட பாத்திரமே உன் சகோதரி சமாரியாவின் பாத்திரம்.
34. ஆம், நீ அதைக் குடிப்பாய், முற்றும் குடித்து முடிப்பாய், உன் கூந்தலைப் பிய்த்துக் கொள்வாய், உன் கொங்கைகளைப் பீறிக்கொள்வாய், ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
35. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ நம்மை மறந்து, நம்மைப் புறக்கணித்துத் தள்ளிப் போட்டதால், உன் வேசித்தனத்தையும் காமவெறியையும் நீயே சுமந்துகொள்."
36. ஆண்டவர் மீண்டும் எனக்குச் சொன்னார்: "மனிதா, ஒல்லா, ஒலிபா இவர்களைத் தீர்ப்பிடுவாயா? அப்படியானால் அவர்கள் செய்த அருவருப்பானவற்றை அவர்களுக்கு எடுத்துக்காட்டு.
37. ஏனெனில் அவர்கள் விபசாரம் செய்தனர்; அவர்கள் கைகள் இரத்தக் கறை படிந்துள்ளன; சிலைகளோடு வேசித்தனம் செய்ததுமல்லாமல், நமக்குப் பெற்ற பிள்ளைகளை அவற்றுக்குப் பலியிட்டார்கள்.
38. அவர்கள் இதற்கு மேலும் செய்தார்கள். அந்நாளில் நமது பரிசுத்த இடத்தைப் பங்கப்படுத்தி, ஒய்வு நாட்களையும் அவசங்கைப் படுத்தினார்கள்.
39. தங்கள் பிள்ளைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டு விட்டு, அப்படியே நமது பரிசுத்த இடத்தினுள் நுழைந்து, அதைப் பங்கப்படுத்தினார்கள்; ஆம் அதனுள் நுழைந்து இத் தீய செயல்களையெல்லாம் நமது வீட்டின் நடுவில் செய்தார்கள்.
40. தூதர்களை அனுப்பித் தொலை நாட்டிலிருந்து ஆண்களை அழைத்துவரச் சொன்னார்கள்; அவர்களும் வந்தார்கள். அவர்களுக்காக நீ குளித்து, கண்களுக்கு மைதீட்டி, அணிகலன்களால் உன்னை அழகு படுத்தினாய்.
41. அழகான கட்டிலில் உட்கார்ந்தாய்; உன் முன் மேசை ஒன்று வைக்கப்பட்டிருந்தது; அதன் மேல் நமது நறுமணப் பொருட்களையும் எண்ணெய்யையும் வைத்தாய்.
42. அவளோடு சிற்றின்பப் பிரியரான மக்கட் கூட்டம் களியாட்டம் புரிந்தது; பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும் அதனோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் அந்தப் பெண்களின் கைகளில் வளைகளையும், தலையில் சிறந்து மின்னும் முடியையும் வைத்தார்கள்.
43. விபசாரத்தில் முதிர்ந்தவளைக் குறித்து, அவள் இன்னும் தன் வேசித்தனத்தைத் தொடர்ந்து செய்வாளோ என்று அப்பொழுது கேட்டோம்.
44. ஏனெனில் விலைமாதர்களிடத்தில் போவது போல் அவர்கள் அவளிடம் போனார்கள்; அவ்வாறே வேசிகளான ஒல்லா, ஒலிபா இவர்களிடமும் போனார்கள்.
45. ஆனால் நீதிமான்கள் அவர்களைக் குறித்து விபசாரிகள் என்றும், இரத்தம் சிந்திய பெண்கள் என்றும் தீர்ப்புக் கூறுவார்கள்; ஏனெனில் அவர்கள் விபசாரிகள்தான்; இரத்தக்கறை அவர்கள் கையிலிருக்கிறது."
46. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "அவர்களுக்கு விரோதமாய்ப் பெரும் கும்பலை வரச்செய்து அவர்களை அச்சத்துக்கு உட்படுத்திக் கொள்ளையிட விட்டுவிடு.
47. அந்தக் கும்பல் அவர்களைக் கல்லால் எறிந்து, வாளால் வெட்டுவார்கள்; அவர்களுடைய புதல்வர் புதல்வியரைக் கொன்று, வீடுகளைச் சுட்டெரிப்பார்கள்.
48. இவ்வாறு, அவர்களின் வேசித்தனம் நாட்டினின்றே ஒழியச் செய்வோம்; வேசித்தனம் செய்யாமலிருக்க இவர்கள் மற்றப் பெண்களுக்கு ஒர் எச்சரிக்கையாய் இருப்பார்கள்.
49. ஆனால் உங்கள் முறைகேடான பாவம் உங்கள் மேல் தான் சுமத்தப்படும்; சிலைவழிபாட்டுக்குரிய தண்டனை உங்கள் மேலேயே விழும்; அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவீர்கள்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 48 Chapters, Current Chapter 23 of Total Chapters 48
எசேக்கியேல் 23
1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
3. இவர்கள் தங்கள் வாலிய வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னிக் கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர்.
4. அவர்களுள் தமக்கையின் பெயர் ஒல்லா, தங்கையின் பெயர் ஒலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஒல்லா சமாரியாவையும், ஒலியா யெருசலேமையும் குறிக்கின்றன.
5. ஒல்லா என்னுடையவளாய் இருந்தும், விபசாரியானாள்; அசீரியர்கள் மீது காமம் கொண்டாள்;
6. நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள்.
7. அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமங்கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள்.
8. தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டு விடவில்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள்.
9. ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே- அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம்.
10. அவர்கள் அவள் ஆடைகளை உரிந்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரை பிடித்துக் கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழமொழிக்காளானாள்.
11. அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும்; தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவள் ஆனாள்.
12. பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசைமூட்டும் அழகு வாலிபர்களுமாய்க் குதிரை மீது ஏறி வந்த வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள்.
13. இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம்.
14. ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயாரின் ஒவியங்களையும் கண்டாள்;
15. அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பபிலோன் நகரத்தாரைப் போல் இடையில் கச்சை கட்டிக் கொண்டும், தலையில் தலைப்பாகை அணிந்தும், படைத்தலைவர்கள் போல் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள்.
16. கண்டதும் அவர்கள் மேல் காமங்கொண்டு, அவர்களிடம் ஜகல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள்.
17. பபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப்படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கெண்டாள்.
18. இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம் மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது.
19. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.
20. காமவெறியர் மேல் அவள் மோகங்கொண்டாள்; அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன.
21. இவ்வாறு எகிப்தியர் உன் இளமார்புளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்."
22. ஆகையால், ஒலிபா, ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீ யார்மேல் காமவெறியால் மோகங் கொண்டாயோ, யாருடன் தெவிட்டும் வரை காமச் செயல் புரிந்தாயோ, இதோ அவர்களை உனக்கு எதிராக எல்லாப் பக்கத்திலும் எழும்பச் செய்வோம்.
23. பபிலோனியரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, ஷோவா, கோவா என்னும் இடங்களில் உள்ளோரையும், அசீரியர்களையும், ஆசை மூட்டும் அழகுள்ள வாலிபர்களாகிய தலைவர்கள், ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோரையும், குதிரை வீரர்களையும் நாம் கூப்பிடுவோம்.
24. அவர்கள் பெரிய கூட்டமாய் வண்டிகளோடும், தேர்ப்படை, காலாட்படைகளோடும் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவார்கள்; மார்க்கவசம், கேடயம், தலைச்சீரா முதலியவற்றை அணிந்து நாற்புறமும் வந்து உன்னைச் சூழ்ந்து கொள்வார்கள்; அவர்களுக்கு முன்பாக நாம் உன்னைத் தீர்ப்பிடுவோம்; அவர்கள் தங்கள் சட்டப்படி உன் மேல் தீர்ப்புக் கூறுவார்கள்.
25. நமது ஆத்திரம் உனக்கு எதிராய் இருக்கும்; அவர்கள் உன்னைக் கொடூரமாய் நடத்தி, உன் மூக்கையும் காதுகளையும் அறுத்துப் போடுவார்கள்; உன்னில் மீதியாய் இருப்பவர்களை வாளால் வெட்டுவார்கள்: உன் புதல்வர் புதல்வியரைப் பிடித்துக் கொண்டு, உன்னில் எஞ்சியிருப்பவர்களை அக்கினிக்கு இரையாக்குவார்கள்.
26. உன் ஆடைகளை உரிந்து, உன் மகிமையின் அணிகலன்களைப் பறித்துக்கொள்வார்கள்;
27. இவ்வாறு, நீ எகிப்திலிருந்து கொண்டு வந்த வேசித்தனத்தையும் காமவெறியையும் ஒழியச் செய்வோம்; இனி நீ எகிப்தியரை ஏறிட்டும் பாராய்; அவர்களை நினைக்கவும் மாட்டாய்.
28. ஏனெனில், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ யாரோடு இன்பம் துய்த்து வெறுப்புற்றாயோ, இதோ அவர்கள் கையிலேயே உன்னை ஒப்படைப்போம்;
29. அவர்கள் உன்னை வெறுப்போடு நடத்தி, உன் உடைமைகள் யாவற்றையும் பறித்துக்கொண்டு, உன்னை ஆடையின்றி நிருவாணமாய் விட்டுவிடுவார்கள்; உன் வேசித்தனத்தின் நிந்தையும் வெட்கக்கேடும் வெளிப்படும்.
30. நீ புறவினத்தாருடைய சிலைகளுக்கு வழிபாடு செலுத்தித் தீட்டுப்பட்டு வேசித்தனம் செய்ததால் அவர்கள் உனக்கு இவற்றைச் செய்வார்கள்,
31. நீ உன் சகோதரியின் வழியைப் பின்பற்றினாய்; ஆகையால் அவள் குடித்த பாத்திரத்தையே உன் கையிலும் வைப்போம்.
32. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உன் சகோதரி குடித்த பாத்திரத்தையே நீயும் குடிப்பாய், அது அகன்றது, ஆழமானது; நீ பரிகாசத்துக்கும் நகைப்புக்கும் உள்ளாவாய், ஏனெனில் அதில் அதிகம் இருக்கிறது.
33. நீ போதையாலும் துயரத்தாலும் நிறைந்திருப்பாய்; துயரமும் அழிவும் கொண்ட பாத்திரமே உன் சகோதரி சமாரியாவின் பாத்திரம்.
34. ஆம், நீ அதைக் குடிப்பாய், முற்றும் குடித்து முடிப்பாய், உன் கூந்தலைப் பிய்த்துக் கொள்வாய், உன் கொங்கைகளைப் பீறிக்கொள்வாய், ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
35. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ நம்மை மறந்து, நம்மைப் புறக்கணித்துத் தள்ளிப் போட்டதால், உன் வேசித்தனத்தையும் காமவெறியையும் நீயே சுமந்துகொள்."
36. ஆண்டவர் மீண்டும் எனக்குச் சொன்னார்: "மனிதா, ஒல்லா, ஒலிபா இவர்களைத் தீர்ப்பிடுவாயா? அப்படியானால் அவர்கள் செய்த அருவருப்பானவற்றை அவர்களுக்கு எடுத்துக்காட்டு.
37. ஏனெனில் அவர்கள் விபசாரம் செய்தனர்; அவர்கள் கைகள் இரத்தக் கறை படிந்துள்ளன; சிலைகளோடு வேசித்தனம் செய்ததுமல்லாமல், நமக்குப் பெற்ற பிள்ளைகளை அவற்றுக்குப் பலியிட்டார்கள்.
38. அவர்கள் இதற்கு மேலும் செய்தார்கள். அந்நாளில் நமது பரிசுத்த இடத்தைப் பங்கப்படுத்தி, ஒய்வு நாட்களையும் அவசங்கைப் படுத்தினார்கள்.
39. தங்கள் பிள்ளைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டு விட்டு, அப்படியே நமது பரிசுத்த இடத்தினுள் நுழைந்து, அதைப் பங்கப்படுத்தினார்கள்; ஆம் அதனுள் நுழைந்து இத் தீய செயல்களையெல்லாம் நமது வீட்டின் நடுவில் செய்தார்கள்.
40. தூதர்களை அனுப்பித் தொலை நாட்டிலிருந்து ஆண்களை அழைத்துவரச் சொன்னார்கள்; அவர்களும் வந்தார்கள். அவர்களுக்காக நீ குளித்து, கண்களுக்கு மைதீட்டி, அணிகலன்களால் உன்னை அழகு படுத்தினாய்.
41. அழகான கட்டிலில் உட்கார்ந்தாய்; உன் முன் மேசை ஒன்று வைக்கப்பட்டிருந்தது; அதன் மேல் நமது நறுமணப் பொருட்களையும் எண்ணெய்யையும் வைத்தாய்.
42. அவளோடு சிற்றின்பப் பிரியரான மக்கட் கூட்டம் களியாட்டம் புரிந்தது; பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும் அதனோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் அந்தப் பெண்களின் கைகளில் வளைகளையும், தலையில் சிறந்து மின்னும் முடியையும் வைத்தார்கள்.
43. விபசாரத்தில் முதிர்ந்தவளைக் குறித்து, அவள் இன்னும் தன் வேசித்தனத்தைத் தொடர்ந்து செய்வாளோ என்று அப்பொழுது கேட்டோம்.
44. ஏனெனில் விலைமாதர்களிடத்தில் போவது போல் அவர்கள் அவளிடம் போனார்கள்; அவ்வாறே வேசிகளான ஒல்லா, ஒலிபா இவர்களிடமும் போனார்கள்.
45. ஆனால் நீதிமான்கள் அவர்களைக் குறித்து விபசாரிகள் என்றும், இரத்தம் சிந்திய பெண்கள் என்றும் தீர்ப்புக் கூறுவார்கள்; ஏனெனில் அவர்கள் விபசாரிகள்தான்; இரத்தக்கறை அவர்கள் கையிலிருக்கிறது."
46. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "அவர்களுக்கு விரோதமாய்ப் பெரும் கும்பலை வரச்செய்து அவர்களை அச்சத்துக்கு உட்படுத்திக் கொள்ளையிட விட்டுவிடு.
47. அந்தக் கும்பல் அவர்களைக் கல்லால் எறிந்து, வாளால் வெட்டுவார்கள்; அவர்களுடைய புதல்வர் புதல்வியரைக் கொன்று, வீடுகளைச் சுட்டெரிப்பார்கள்.
48. இவ்வாறு, அவர்களின் வேசித்தனம் நாட்டினின்றே ஒழியச் செய்வோம்; வேசித்தனம் செய்யாமலிருக்க இவர்கள் மற்றப் பெண்களுக்கு ஒர் எச்சரிக்கையாய் இருப்பார்கள்.
49. ஆனால் உங்கள் முறைகேடான பாவம் உங்கள் மேல் தான் சுமத்தப்படும்; சிலைவழிபாட்டுக்குரிய தண்டனை உங்கள் மேலேயே விழும்; அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவீர்கள்."
Total 48 Chapters, Current Chapter 23 of Total Chapters 48
×

Alert

×

tamil Letters Keypad References