தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எசேக்கியேல்
1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, யெருசலேமுக்கு எதிராக உன் முகத்தை வைத்து, பரிசுத்த இடங்களுக்கும் இஸ்ராயேல் நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரை:
3. இஸ்ராயேல் நாட்டுக்குச் சொல்: ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் உனக்கு எதிராக எழும்பி, நமது வாளை உறையினின்று உருவி, உன்னிலுள்ள நீதிமானையும் அக்கிரமியையும் கொல்லுவோம்;
4. உன்னிலுள்ள நீதிமானையும் அக்கிரமியையும் நாம் கொல்லப் போவதால், தெற்கு முதல் வடக்கு வரை உள்ள எல்லா மனிதர்களுக்கும் எதிராக நமது வாள் உறையினின்று புறப்படும்.
5. ஆண்டவராகிய நாமே நமது வாளை உறையினின்று உருவினோம், இனி அது உறைக்குள் இடப்படாது என்பதை எல்லோரும் அறிவீர்கள்.
6. நீயோ, மனிதா, பெருமூச்சு விட்டழு; உடைந்த உள்ளத்தோடும் மிகுந்த துயரத்தோடும் பெருமுச்சு விட்டழு.
7. ஏன் பெருமூச்சு விட்டு அழுகின்றாய்?' என அவர்கள் உன்னைக் கேட்டால், நீ சொல்: 'தீய செய்திகளை நான் கேட்டதால் அழுகிறேன்; ஏனெனில், வாள் புறப்படும் போது உள்ளமெல்லாம் உருகும், கைகள் தளரும், புத்தி மயங்கும், நீர் அலம்புவதைப்போலத் தொடைகள் நடுங்கும்; இதோ அது வந்து நிறைவேறியே தீரும்" என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
8. ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
9. மனிதா, நீ இறைவாக்குரை: ஆண்டவர் கூறுகிறார்: ஒரு வாள்! கூர்மையாக்கப்பட்ட வாள்! துலக்கப்பட்டுள்ள வாள்!
10. படுகொலைக்காக அது கூர்மையாக்கப்பட்டது, மின்னுவதற்கெனத் துலக்கப்பட்டுள்ளது! அது நமக்கு மகிழ்ச்சி தருவதா?அது என் மகனைத் திருத்தும் கோல், அதற்குமுன் நிற்கும் மரம் எதுவுமில்லை.
11. கையாளுவதற்காகவே அதைத் துலக்கக் கொடுத்தோம்; கொலைஞர் கையில் தருவதற்காகவே கூர்மையாக்கப்பட்டது, துலக்கப்பட்டது.
12. மனிதா, நீ அலறிக் கதறு; அந்த வாள் நம் மக்களுக்கு எதிராகவும்,இஸ்ராயேலின் தலைவர்கள் அனைவர்க்கும் எதிராகவும் எழுந்துள்ளது. நம் மக்களுடன் அவர்கள் அனைவரும் வாளுக்கு இரையாவார்கள்; ஆகையால் மாரடித்துக்கொள்.
13. தீர்ப்புச் சொல்லியாயிற்று, அந்த வாள் செங்கோலை முறித்து இனி அதை இல்லாமற்செய்யும், என்கிறார் ஆண்டவர்.
14. நீயோ, மனிதா, கையோடு கைதட்டு, வாள் கொடுமை இரட்டிக்கட்டும்; ஆம் கொல்லப்பட வேண்டியவர்களுக்காக அது மும்முறையாகட்டும். அனைவரையும் கொலை செய்யும் வாள் அதுவே; யாவரையும் நடுங்கச் செய்யும் வாள் அதுவே;
15. அது உள்ளங்களைக் கலங்கச் செய்யும், ஒவ்வொரு வாயிலிலும் பலரை அழித்துப் போடும், அது வெட்டுவதற்காகத் தீட்டப்பட்டது, மின்னும்படி துலக்கப்பட்டது, கொல்லும்படி கூராக்கப்பட்டது.
16. வாளே, கூர்மையான முனையால் வலப்புறமும், இடப்புறமும், உனக்கு மனமுள்ள இடமெல்லாம் வெட்டு.
17. நாமும் கைகொட்டிக் கோபந் தணிவோம், ஆண்டவராகிய நமது வாக்கு இதுவே"
18. ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
19. மனிதா, பபிலோன் அரசனின் வாள் வருவதற்காக இரண்டு வழிகள் உண்டாக்கு; அவ்விரண்டு வழிகளும் ஒரே நாட்டிலிருந்து புறப்படும்; ஒரு கைகாட்டியைச் செய்து வை; நகரத்திற்குப் பிரியும் வழியின் துவக்கத்தில் அதைச் செய்து வை.
20. அம்மோனித்தார் நாட்டுப் பட்டணமாகிய ராப்பாத்துக்கும் யூதாவுக்கும் யெருசலேம் கோட்டைக்கும் போகும் வழியைக் குறிப்பிடு.
21. ஏனெனில், பபிலோன் அரசன், இரண்டு வழிகளும் பிரியும் இடத்தில் சகுனம் பார்ப்பதற்காக நிற்கிறான்; அம்புகளைக் கலந்து குலுக்குகிறான், சிலைகளின் ஆலோசனையைக் கேட்கிறான், ஈரலிலே சகுனம் பார்க்கிறான்.
22. அவனுடைய வலக்கையில் யெருசலேமுக்காகத் திருவுளச்சீட்டு விழுகிறது; அவனோ, எவ்விடத்தில் மதில்களையிடிக்கும் கடாக்களை வைக்கலாம், தான் எப்பக்கத்தில் நின்று போருக்கு ஆணை தரலாம், எங்கிருந்து ஆர்ப்பரிக்கலாம், எந்த வாயில்களைத் தாக்கலாம், எவ்விடத்தில் கொத்தளங்களையும் அரண்களையும் கட்டலாம் என்று குறி கேட்டு யோசனை செய்கிறான்.
23. எவ்வளவு தான் ஆணைகள் இடப்பட்டாலும் இது அவர்களுக்கு வீண் சகுனமாகத் தோன்றுகிறது; ஆனால், அரசன் அவர்களைப் பிடிப்பதற்காக ஆலோசனை செய்கிறான்; அவர்களுடைய அக்கிரமங்களை நினைவு படுத்துவான்.
24. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் உங்கள் குற்றத்தை நினைக்கச் செய்வதாலும், உங்கள் செயல்களிலெல்லாம் பாவங்களே காணப்பட்டு உங்கள் அக்கிரமங்கள் வெளியாவதாலும், அவற்றை நமக்கு நினைவுபடுத்துவதாலும், நீங்கள் பிடிபடுவீர்கள்.
25. இஸ்ராயேலின் தலைவனே, விசுவாசமும் பக்தியுமற்றவனே, உன் அக்கிரமத்தைத் தண்டிப்பதற்கெனக் குறிப்பிட்ட நாள் இதோ வந்து விட்டது!
26. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உன் தலைப்பாகையை எடு, மணிமுடியைக் கழற்று; இப்பொழுது இருப்பது போலவே யாவும் இருக்க மாட்டா; தாழ்ந்ததை உயர்த்து, உயர்ந்திருப்பதைத் தாழ்த்து.
27. நாம் யூதாவை அழிப்போம், அழிப்போம், அழிப்போம்; ஆயினும் தீர்ப்பிடுவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறதோ, அவர் வரும் வரையில் அதன் அடையாளமே இராது. அவர் வந்த பின் அவருக்கே அதைக் கொடுப்போம்.
28. "மனிதா, நீ இறைவாக்குரைத்துக் கூறு: அம்மோன் மக்கள் சொல்லிய நிந்தையான வார்த்தைகளைப் பற்றி ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ வாள்! வாள் உருவப்பட்டுள்ளது. கொலை செய்யக் கூராக்கப்பட்டுள்ளது. வெட்டி வீழ்த்த துலக்கப்பட்டுள்ளது.
29. உனக்காக வீணான காட்சிகளைக் கண்டு, நல்ல காலம் வருகிறதென்று பொய் சொல்லுகிறார்களே, அதற்குள் இதோ, அக்கிரமிகளின் பிணங்களுடன் நீயும் கொலையுண்டு வீழ்வாய். ஏனெனில் அவர்களின் அக்கிரமங்கள் தண்டிக்கப்படும் நாள் வந்து விட்டது.
30. வாளே, உன் உறைக்குள் திரும்பிப்போ; நீ உண்டாக்கப்பட்ட ஊருக்கே போ; உன் பிறந்த நாட்டில் உன்னைத் தீர்ப்பிடுவோம்.
31. நமது ஆத்திரத்தை உன் மேல் காட்டுவோம்; நமது கோபத்தீயை உன் மேல் கொட்டுவோம்; அழிப்பதில் வல்லவர்களான கொடிய மனிதர் கையில் உன்னை ஒப்படைப்போம்;
32. நீ அக்கினிக்கு இரையாவாய்; உன் இரத்தம் நாடெல்லாம் சிந்தப்படும்; நீ மறக்கப்படுவாய்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம், என்கிறார் ஆண்டவர்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 48 Chapters, Current Chapter 21 of Total Chapters 48
எசேக்கியேல் 21:16
1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, யெருசலேமுக்கு எதிராக உன் முகத்தை வைத்து, பரிசுத்த இடங்களுக்கும் இஸ்ராயேல் நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரை:
3. இஸ்ராயேல் நாட்டுக்குச் சொல்: ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் உனக்கு எதிராக எழும்பி, நமது வாளை உறையினின்று உருவி, உன்னிலுள்ள நீதிமானையும் அக்கிரமியையும் கொல்லுவோம்;
4. உன்னிலுள்ள நீதிமானையும் அக்கிரமியையும் நாம் கொல்லப் போவதால், தெற்கு முதல் வடக்கு வரை உள்ள எல்லா மனிதர்களுக்கும் எதிராக நமது வாள் உறையினின்று புறப்படும்.
5. ஆண்டவராகிய நாமே நமது வாளை உறையினின்று உருவினோம், இனி அது உறைக்குள் இடப்படாது என்பதை எல்லோரும் அறிவீர்கள்.
6. நீயோ, மனிதா, பெருமூச்சு விட்டழு; உடைந்த உள்ளத்தோடும் மிகுந்த துயரத்தோடும் பெருமுச்சு விட்டழு.
7. ஏன் பெருமூச்சு விட்டு அழுகின்றாய்?' என அவர்கள் உன்னைக் கேட்டால், நீ சொல்: 'தீய செய்திகளை நான் கேட்டதால் அழுகிறேன்; ஏனெனில், வாள் புறப்படும் போது உள்ளமெல்லாம் உருகும், கைகள் தளரும், புத்தி மயங்கும், நீர் அலம்புவதைப்போலத் தொடைகள் நடுங்கும்; இதோ அது வந்து நிறைவேறியே தீரும்" என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
8. ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
9. மனிதா, நீ இறைவாக்குரை: ஆண்டவர் கூறுகிறார்: ஒரு வாள்! கூர்மையாக்கப்பட்ட வாள்! துலக்கப்பட்டுள்ள வாள்!
10. படுகொலைக்காக அது கூர்மையாக்கப்பட்டது, மின்னுவதற்கெனத் துலக்கப்பட்டுள்ளது! அது நமக்கு மகிழ்ச்சி தருவதா?அது என் மகனைத் திருத்தும் கோல், அதற்குமுன் நிற்கும் மரம் எதுவுமில்லை.
11. கையாளுவதற்காகவே அதைத் துலக்கக் கொடுத்தோம்; கொலைஞர் கையில் தருவதற்காகவே கூர்மையாக்கப்பட்டது, துலக்கப்பட்டது.
12. மனிதா, நீ அலறிக் கதறு; அந்த வாள் நம் மக்களுக்கு எதிராகவும்,இஸ்ராயேலின் தலைவர்கள் அனைவர்க்கும் எதிராகவும் எழுந்துள்ளது. நம் மக்களுடன் அவர்கள் அனைவரும் வாளுக்கு இரையாவார்கள்; ஆகையால் மாரடித்துக்கொள்.
13. தீர்ப்புச் சொல்லியாயிற்று, அந்த வாள் செங்கோலை முறித்து இனி அதை இல்லாமற்செய்யும், என்கிறார் ஆண்டவர்.
14. நீயோ, மனிதா, கையோடு கைதட்டு, வாள் கொடுமை இரட்டிக்கட்டும்; ஆம் கொல்லப்பட வேண்டியவர்களுக்காக அது மும்முறையாகட்டும். அனைவரையும் கொலை செய்யும் வாள் அதுவே; யாவரையும் நடுங்கச் செய்யும் வாள் அதுவே;
15. அது உள்ளங்களைக் கலங்கச் செய்யும், ஒவ்வொரு வாயிலிலும் பலரை அழித்துப் போடும், அது வெட்டுவதற்காகத் தீட்டப்பட்டது, மின்னும்படி துலக்கப்பட்டது, கொல்லும்படி கூராக்கப்பட்டது.
16. வாளே, கூர்மையான முனையால் வலப்புறமும், இடப்புறமும், உனக்கு மனமுள்ள இடமெல்லாம் வெட்டு.
17. நாமும் கைகொட்டிக் கோபந் தணிவோம், ஆண்டவராகிய நமது வாக்கு இதுவே"
18. ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
19. மனிதா, பபிலோன் அரசனின் வாள் வருவதற்காக இரண்டு வழிகள் உண்டாக்கு; அவ்விரண்டு வழிகளும் ஒரே நாட்டிலிருந்து புறப்படும்; ஒரு கைகாட்டியைச் செய்து வை; நகரத்திற்குப் பிரியும் வழியின் துவக்கத்தில் அதைச் செய்து வை.
20. அம்மோனித்தார் நாட்டுப் பட்டணமாகிய ராப்பாத்துக்கும் யூதாவுக்கும் யெருசலேம் கோட்டைக்கும் போகும் வழியைக் குறிப்பிடு.
21. ஏனெனில், பபிலோன் அரசன், இரண்டு வழிகளும் பிரியும் இடத்தில் சகுனம் பார்ப்பதற்காக நிற்கிறான்; அம்புகளைக் கலந்து குலுக்குகிறான், சிலைகளின் ஆலோசனையைக் கேட்கிறான், ஈரலிலே சகுனம் பார்க்கிறான்.
22. அவனுடைய வலக்கையில் யெருசலேமுக்காகத் திருவுளச்சீட்டு விழுகிறது; அவனோ, எவ்விடத்தில் மதில்களையிடிக்கும் கடாக்களை வைக்கலாம், தான் எப்பக்கத்தில் நின்று போருக்கு ஆணை தரலாம், எங்கிருந்து ஆர்ப்பரிக்கலாம், எந்த வாயில்களைத் தாக்கலாம், எவ்விடத்தில் கொத்தளங்களையும் அரண்களையும் கட்டலாம் என்று குறி கேட்டு யோசனை செய்கிறான்.
23. எவ்வளவு தான் ஆணைகள் இடப்பட்டாலும் இது அவர்களுக்கு வீண் சகுனமாகத் தோன்றுகிறது; ஆனால், அரசன் அவர்களைப் பிடிப்பதற்காக ஆலோசனை செய்கிறான்; அவர்களுடைய அக்கிரமங்களை நினைவு படுத்துவான்.
24. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் உங்கள் குற்றத்தை நினைக்கச் செய்வதாலும், உங்கள் செயல்களிலெல்லாம் பாவங்களே காணப்பட்டு உங்கள் அக்கிரமங்கள் வெளியாவதாலும், அவற்றை நமக்கு நினைவுபடுத்துவதாலும், நீங்கள் பிடிபடுவீர்கள்.
25. இஸ்ராயேலின் தலைவனே, விசுவாசமும் பக்தியுமற்றவனே, உன் அக்கிரமத்தைத் தண்டிப்பதற்கெனக் குறிப்பிட்ட நாள் இதோ வந்து விட்டது!
26. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உன் தலைப்பாகையை எடு, மணிமுடியைக் கழற்று; இப்பொழுது இருப்பது போலவே யாவும் இருக்க மாட்டா; தாழ்ந்ததை உயர்த்து, உயர்ந்திருப்பதைத் தாழ்த்து.
27. நாம் யூதாவை அழிப்போம், அழிப்போம், அழிப்போம்; ஆயினும் தீர்ப்பிடுவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறதோ, அவர் வரும் வரையில் அதன் அடையாளமே இராது. அவர் வந்த பின் அவருக்கே அதைக் கொடுப்போம்.
28. "மனிதா, நீ இறைவாக்குரைத்துக் கூறு: அம்மோன் மக்கள் சொல்லிய நிந்தையான வார்த்தைகளைப் பற்றி ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ வாள்! வாள் உருவப்பட்டுள்ளது. கொலை செய்யக் கூராக்கப்பட்டுள்ளது. வெட்டி வீழ்த்த துலக்கப்பட்டுள்ளது.
29. உனக்காக வீணான காட்சிகளைக் கண்டு, நல்ல காலம் வருகிறதென்று பொய் சொல்லுகிறார்களே, அதற்குள் இதோ, அக்கிரமிகளின் பிணங்களுடன் நீயும் கொலையுண்டு வீழ்வாய். ஏனெனில் அவர்களின் அக்கிரமங்கள் தண்டிக்கப்படும் நாள் வந்து விட்டது.
30. வாளே, உன் உறைக்குள் திரும்பிப்போ; நீ உண்டாக்கப்பட்ட ஊருக்கே போ; உன் பிறந்த நாட்டில் உன்னைத் தீர்ப்பிடுவோம்.
31. நமது ஆத்திரத்தை உன் மேல் காட்டுவோம்; நமது கோபத்தீயை உன் மேல் கொட்டுவோம்; அழிப்பதில் வல்லவர்களான கொடிய மனிதர் கையில் உன்னை ஒப்படைப்போம்;
32. நீ அக்கினிக்கு இரையாவாய்; உன் இரத்தம் நாடெல்லாம் சிந்தப்படும்; நீ மறக்கப்படுவாய்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம், என்கிறார் ஆண்டவர்."
Total 48 Chapters, Current Chapter 21 of Total Chapters 48
×

Alert

×

tamil Letters Keypad References