தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எசேக்கியேல்
1. அந்தக் குரல் என்னிடம், "மனிதா, எழுந்து நில்; உன்னோடு பேசுவோம்" என்றது.
2. இவ்வாறு அவர் என்னிடம் சொன்னவுடனே, ஆவி என்னுள் புகுந்து என்னை என் கால்களின் மேல் நிலைநிறுத்திற்று; என்னிடம் பேசியவரின் குரல் கேட்டது.
3. அவர் என்னிடம் கூறியது: "மனிதா, எம்மை விட்டு அகன்று போன கலகக்காரராகிய இஸ்ராயேல் மக்களிடம் உன்னை நாம் அனுப்புகிறோம். அவர்களும் அவர்களின் தந்தையரும் இந்நாள் வரை எம் உடன்படிக்கையை மீறினார்கள்.
4. நாம் யாரிடத்தில் உன்னை அனுப்புகிறோமோ அவர்கள் விவேகமற்றவர்கள்; முரட்டுத்தனம் உள்ளவர்கள். நீ போய் அவர்களிடத்தில், 'இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு' என்று சொல்.
5. நீ சொல்வதை அவர்கள் கேட்பார்களோ, கேட்டுப் பாவஞ் செய்யாமல் இருப்பார்களோ, தெரியாது; ஆயினும், தங்கள் நடுவில் இறைவாக்கினர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை அந்தக் கலகக்காரர்கள் அறிந்து கொள்ளட்டும்.
6. மனிதா, நீ அவர்களுக்கு அஞ்சாதே. தேள்களைப் போன்ற கொடியவர்கள் நடுவில் வாழ்ந்தாலும், அவர்கள் விசுவாசமற்றவர்களாயும் கலகக்காரராயும் இருந்தாலும், அவர்கள் வார்த்தைக்கு அஞ்சாதே; அவர்கள் சொல்லுக்கோ, அவர்களின் கடுகடுப்பான முகத்துக்கோ அஞ்சி விடாதே; அவர்களோ கலகக்காரர்கள்.
7. அவர்கள் நீ சொல்வதைக் கேட்டாலும் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எம் வார்த்தைகளை அவர்களுக்கு நீ கூறு; ஏனெனில் அவர்கள் கலகக்காரர்கள்.
8. மனிதா, அந்தக் கலகக்காரரைப் போல் நீயும் கலகக்காரனாய் இராதே; நாம் உனக்குச் சொல்வதைக் கேள்: உன் வாயைத் திறந்து உனக்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைப் புசி."
9. அப்போது ஒலைச்சுருள் பிடித்திருந்த கையொன்று கண்டேன். அந்தக் கை ஒலைச்சுருளை என் முன் நீட்டிற்று;
10. (9b) அந்தச் சுருளின் உள்ளும் புறமும் எழுதியிருக்கக் கண்டேன்; அதில் முறைப்பாடுகளும் புலம்பல்களும் சாபங்களும் எழுதியிருந்தன.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 48 Chapters, Current Chapter 2 of Total Chapters 48
எசேக்கியேல் 2:3
1. அந்தக் குரல் என்னிடம், "மனிதா, எழுந்து நில்; உன்னோடு பேசுவோம்" என்றது.
2. இவ்வாறு அவர் என்னிடம் சொன்னவுடனே, ஆவி என்னுள் புகுந்து என்னை என் கால்களின் மேல் நிலைநிறுத்திற்று; என்னிடம் பேசியவரின் குரல் கேட்டது.
3. அவர் என்னிடம் கூறியது: "மனிதா, எம்மை விட்டு அகன்று போன கலகக்காரராகிய இஸ்ராயேல் மக்களிடம் உன்னை நாம் அனுப்புகிறோம். அவர்களும் அவர்களின் தந்தையரும் இந்நாள் வரை எம் உடன்படிக்கையை மீறினார்கள்.
4. நாம் யாரிடத்தில் உன்னை அனுப்புகிறோமோ அவர்கள் விவேகமற்றவர்கள்; முரட்டுத்தனம் உள்ளவர்கள். நீ போய் அவர்களிடத்தில், 'இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு' என்று சொல்.
5. நீ சொல்வதை அவர்கள் கேட்பார்களோ, கேட்டுப் பாவஞ் செய்யாமல் இருப்பார்களோ, தெரியாது; ஆயினும், தங்கள் நடுவில் இறைவாக்கினர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை அந்தக் கலகக்காரர்கள் அறிந்து கொள்ளட்டும்.
6. மனிதா, நீ அவர்களுக்கு அஞ்சாதே. தேள்களைப் போன்ற கொடியவர்கள் நடுவில் வாழ்ந்தாலும், அவர்கள் விசுவாசமற்றவர்களாயும் கலகக்காரராயும் இருந்தாலும், அவர்கள் வார்த்தைக்கு அஞ்சாதே; அவர்கள் சொல்லுக்கோ, அவர்களின் கடுகடுப்பான முகத்துக்கோ அஞ்சி விடாதே; அவர்களோ கலகக்காரர்கள்.
7. அவர்கள் நீ சொல்வதைக் கேட்டாலும் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எம் வார்த்தைகளை அவர்களுக்கு நீ கூறு; ஏனெனில் அவர்கள் கலகக்காரர்கள்.
8. மனிதா, அந்தக் கலகக்காரரைப் போல் நீயும் கலகக்காரனாய் இராதே; நாம் உனக்குச் சொல்வதைக் கேள்: உன் வாயைத் திறந்து உனக்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைப் புசி."
9. அப்போது ஒலைச்சுருள் பிடித்திருந்த கையொன்று கண்டேன். அந்தக் கை ஒலைச்சுருளை என் முன் நீட்டிற்று;
10. (9b) அந்தச் சுருளின் உள்ளும் புறமும் எழுதியிருக்கக் கண்டேன்; அதில் முறைப்பாடுகளும் புலம்பல்களும் சாபங்களும் எழுதியிருந்தன.
Total 48 Chapters, Current Chapter 2 of Total Chapters 48
×

Alert

×

tamil Letters Keypad References