தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எசேக்கியேல்
1. பின்னர் நான் ஒரு காட்சி கண்டேன்: கெருபீம்களின் தலை மீதிருந்த மண்டலத்தில் நீலமணியாலிழைத்த அரியணையின் உருவம் போல் ஒன்று தென்பட்டது.
2. அப்போது ஆண்டவர் சணல் நூலாடை அணிந்திருந்தவனிடம், "கெருபீம்களுக்குக் கீழே இருக்கும் சக்கரங்களின் நடுவில் நுழைந்து, கெருபீம்களின் நடுவிலுள்ள நெருப்புத் தணலைக் கைநிறைய வாரிப் பட்டணத்தின் மீது வீசு" என்றார். அவ்வாறே அவன் செய்தான்; நான் கண்டேன்.
3. அவன் உள்ளே நுழையும் போது, கெருபீம்கள் கோயிலின் வலப்புறத்தில் நின்று கொண்டிருந்தன; அப்போது மேகம் ஒன்று உள் முற்றத்தை மூடிக்கொண்டது.
4. ஆண்டவரின் மகிமை கெருபீம்கள் மேலிருந்து எழும்பி கோயிலின் வாயிற்படிக்கு வந்தது; ஆலயம் முழுதும் மேகம் நிறைந்திருந்தது. கோயிலோ ஆண்டவரது மகிமையின் பேரொளியால் நிரம்பிற்று.
5. கெருபீம்களுடைய இறக்கைகளின் இரைச்சல் வெளி முற்றம் வரையில் கேட்டது; அது எல்லாம் வல்லவர் பேசுங் குரல் போல் இருந்தது.
6. சணல் நூலாடை அணிந்தவனுக்கு, "நீ கெருபீம்களின் நடுவிலுள்ள சக்கரங்களிடையிலிருக்கும் அக்கினியை எடு" என்று கட்டளையிட்டவுடனே, அவன் போய்ச் சக்கரங்களின் அருகில் நின்றான்.
7. அந்நேரத்தில் ஒரு கெருபீம் தன் கையை நீட்டிக் கெருபீம்களின் நடுவில் உள்ள நெருப்பை எடுத்து, சணல் நூலாடை அணிந்திருந்தவன் கையில் கொடுக்க, அவன் அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
8. அப்போது கெருபீம்களுடைய இறக்கைகளின் கீழ் மனிதனின் கைச் சாயல் காணப்பட்டது.
9. இதோ, கெருபீம்களின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன்; ஒவ்வொரு கெருபீம் அருகில் ஒரு சக்கரம் இருந்தது; ஒவ்வொன்றுக்கும் (கெருபீம்) அருகில் தனித்தனிச் சக்கரம் இருந்தது; சக்கரங்கள் பளிங்கு போல மின்னின;
10. அவை நான்கும் ஒரே வடிவாய் இருந்தன; சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பது போலத் தோன்றிற்று.
11. அவை ஒடும்போது நாற்றிசையிலும் ஒடும்; ஒடும் போது அங்குமிங்கும் திரும்ப மாட்டா; ஒரு சக்கரம் ஒடும் இடத்திற்கே மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் ஒடின.
12. அவை முழுவதும், கழுத்து, கை, இறக்கைகள், சக்கரங்களின் வட்டங்கள் யாவும் கண்களால் நிறைந்து இருந்தன; சக்கரத்தைச் சுற்றிலும் அவ்வாறே நிறைந்திருந்தது.
13. சூழல் சக்கரங்கள்" என்பது அவற்றின் பெயர் எனக் கேட்டறிந்தேன்.
14. ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன: முதலாவது கெருபீம் முகமும், இரண்டாவது மனிதா முகமும், மூன்றாவது சிங்க முகமும், நான்காவது கழுகு முகமும் இருந்தன.
15. கெருபீம்கள் மேலே உயர்ந்தன; கேபார் நதியருகில் நான் கண்ட மிருகங்கள் இவைகளே.
16. கெருபீம்கள் நடக்கும் போது சக்கரங்களும் அவற்றின் அருகில் ஒடும்; பூமியில் மேலெழும்பக் கெருபீம்கள் தங்கள் இறக்கைகளை விரிக்கும் போதோ, சக்கரங்கள் அவற்றின் அருகிலேயே இருந்தன.
17. அவை நிற்கும் போது இவையும் நிற்கும்; அவை மேலே எழும்பும் போது இவையும் மேலே எழும்பும்; ஏனெனில் மிருகங்களின் ஆவி இவற்றில் இருந்தது.
18. ஆண்டவரின் மகிமை கோயிலின் வாயிற்படியை விட்டுக் கெருபீம்கள் மேல் வந்து நின்றது.
19. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கெருபீம்கள் தங்கள் இறைக்கைகளை விரித்துப் பூமியை விட்டு மேலெழும்பின; அவை புறப்படுகையில் சக்கரங்களும் அவற்றுடன் புறப்பட்டன; ஆண்டவருடைய கோயிலின் கீழ்த்திசை வாயிற்படியில் வந்து நின்றன; இஸ்ராயேலின் கடவுளுடைய மகிமை அவற்றின் மேல் இருந்தது.
20. கேபார் நதியருகில் இஸ்ராயேலின் கடவுளுக்குக் கீழே அன்று நான் கண்ட மிருகங்கள் இவையே; அவற்றுக்குக் கெருபீம்கள் என்பது பெயர் என அறிந்து கொண்டேன்.
21. அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன; இறக்கைகளின் கீழ் மனித கையின் சாயல் தென்பட்டது.
22. இவற்றின் முகச்சாயல், நான் கேபார் நதியருகில் கண்டதைப் போலவே இருந்தது. அவை ஒவ்வொன்றும் நேராகச் சென்றன.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 48 Chapters, Current Chapter 10 of Total Chapters 48
எசேக்கியேல் 10:18
1. பின்னர் நான் ஒரு காட்சி கண்டேன்: கெருபீம்களின் தலை மீதிருந்த மண்டலத்தில் நீலமணியாலிழைத்த அரியணையின் உருவம் போல் ஒன்று தென்பட்டது.
2. அப்போது ஆண்டவர் சணல் நூலாடை அணிந்திருந்தவனிடம், "கெருபீம்களுக்குக் கீழே இருக்கும் சக்கரங்களின் நடுவில் நுழைந்து, கெருபீம்களின் நடுவிலுள்ள நெருப்புத் தணலைக் கைநிறைய வாரிப் பட்டணத்தின் மீது வீசு" என்றார். அவ்வாறே அவன் செய்தான்; நான் கண்டேன்.
3. அவன் உள்ளே நுழையும் போது, கெருபீம்கள் கோயிலின் வலப்புறத்தில் நின்று கொண்டிருந்தன; அப்போது மேகம் ஒன்று உள் முற்றத்தை மூடிக்கொண்டது.
4. ஆண்டவரின் மகிமை கெருபீம்கள் மேலிருந்து எழும்பி கோயிலின் வாயிற்படிக்கு வந்தது; ஆலயம் முழுதும் மேகம் நிறைந்திருந்தது. கோயிலோ ஆண்டவரது மகிமையின் பேரொளியால் நிரம்பிற்று.
5. கெருபீம்களுடைய இறக்கைகளின் இரைச்சல் வெளி முற்றம் வரையில் கேட்டது; அது எல்லாம் வல்லவர் பேசுங் குரல் போல் இருந்தது.
6. சணல் நூலாடை அணிந்தவனுக்கு, "நீ கெருபீம்களின் நடுவிலுள்ள சக்கரங்களிடையிலிருக்கும் அக்கினியை எடு" என்று கட்டளையிட்டவுடனே, அவன் போய்ச் சக்கரங்களின் அருகில் நின்றான்.
7. அந்நேரத்தில் ஒரு கெருபீம் தன் கையை நீட்டிக் கெருபீம்களின் நடுவில் உள்ள நெருப்பை எடுத்து, சணல் நூலாடை அணிந்திருந்தவன் கையில் கொடுக்க, அவன் அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
8. அப்போது கெருபீம்களுடைய இறக்கைகளின் கீழ் மனிதனின் கைச் சாயல் காணப்பட்டது.
9. இதோ, கெருபீம்களின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன்; ஒவ்வொரு கெருபீம் அருகில் ஒரு சக்கரம் இருந்தது; ஒவ்வொன்றுக்கும் (கெருபீம்) அருகில் தனித்தனிச் சக்கரம் இருந்தது; சக்கரங்கள் பளிங்கு போல மின்னின;
10. அவை நான்கும் ஒரே வடிவாய் இருந்தன; சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பது போலத் தோன்றிற்று.
11. அவை ஒடும்போது நாற்றிசையிலும் ஒடும்; ஒடும் போது அங்குமிங்கும் திரும்ப மாட்டா; ஒரு சக்கரம் ஒடும் இடத்திற்கே மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் ஒடின.
12. அவை முழுவதும், கழுத்து, கை, இறக்கைகள், சக்கரங்களின் வட்டங்கள் யாவும் கண்களால் நிறைந்து இருந்தன; சக்கரத்தைச் சுற்றிலும் அவ்வாறே நிறைந்திருந்தது.
13. சூழல் சக்கரங்கள்" என்பது அவற்றின் பெயர் எனக் கேட்டறிந்தேன்.
14. ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன: முதலாவது கெருபீம் முகமும், இரண்டாவது மனிதா முகமும், மூன்றாவது சிங்க முகமும், நான்காவது கழுகு முகமும் இருந்தன.
15. கெருபீம்கள் மேலே உயர்ந்தன; கேபார் நதியருகில் நான் கண்ட மிருகங்கள் இவைகளே.
16. கெருபீம்கள் நடக்கும் போது சக்கரங்களும் அவற்றின் அருகில் ஒடும்; பூமியில் மேலெழும்பக் கெருபீம்கள் தங்கள் இறக்கைகளை விரிக்கும் போதோ, சக்கரங்கள் அவற்றின் அருகிலேயே இருந்தன.
17. அவை நிற்கும் போது இவையும் நிற்கும்; அவை மேலே எழும்பும் போது இவையும் மேலே எழும்பும்; ஏனெனில் மிருகங்களின் ஆவி இவற்றில் இருந்தது.
18. ஆண்டவரின் மகிமை கோயிலின் வாயிற்படியை விட்டுக் கெருபீம்கள் மேல் வந்து நின்றது.
19. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கெருபீம்கள் தங்கள் இறைக்கைகளை விரித்துப் பூமியை விட்டு மேலெழும்பின; அவை புறப்படுகையில் சக்கரங்களும் அவற்றுடன் புறப்பட்டன; ஆண்டவருடைய கோயிலின் கீழ்த்திசை வாயிற்படியில் வந்து நின்றன; இஸ்ராயேலின் கடவுளுடைய மகிமை அவற்றின் மேல் இருந்தது.
20. கேபார் நதியருகில் இஸ்ராயேலின் கடவுளுக்குக் கீழே அன்று நான் கண்ட மிருகங்கள் இவையே; அவற்றுக்குக் கெருபீம்கள் என்பது பெயர் என அறிந்து கொண்டேன்.
21. அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன; இறக்கைகளின் கீழ் மனித கையின் சாயல் தென்பட்டது.
22. இவற்றின் முகச்சாயல், நான் கேபார் நதியருகில் கண்டதைப் போலவே இருந்தது. அவை ஒவ்வொன்றும் நேராகச் சென்றன.
Total 48 Chapters, Current Chapter 10 of Total Chapters 48
×

Alert

×

tamil Letters Keypad References