1. மீண்டும் பெசெலேயல் சேத்தீம் மரத்தால் பெட்டகத்தையும் செய்தான். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாம்.
|
3. அதன் நான்கு மூலைகளுக்கும் நான்கு பொன் வளையங்களை வார்த்து, பக்கத்திற்கு இரண்டாக அவற்றை இருபக்கங்களிலும் பொருத்தி,
|
6. மூலத்தானம் எனப்படும் இரக்கத்தின் அரியணையையும் பசும் பொன்னால் செய்தான். அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருந்தது.
|
7. தங்கத் தகட்டினால் இரண்டு கொரூபிம்களையும் செய்து, இரக்கத்தின் அரியணைக்கு இரு புறத்திலும் வைத்தான்.
|
9. அக்கெரூபிம்கள் தங்கள் இறக்கைகளை உயர விரித்து இரக்கத்தின் அரியணையை நிழலிட்டவைகளாய், ஒன்றுக் கொன்று எதிர்முகமுள்ளவைகளாய், அதை நோக்கிக்கொண்டிருந்தன.
|
10. அவன் மேசையையும் சேத்தீம் மரத்தால் செய்தான். அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருந்தது.
|
16. மேசையில் பற்பல விதமாய் உபயோகப்படும் பணிமுட்டுக்களையும் தட்டுக்களையும் குப்பிகளையும் தூபக் கலசங்களையும், பான பலிப் பாத்திரங்களையும் பசும்பொன்னால் செய்தான்.
|
17. அவன் பசும் பொன்னைத் தகடாக்கிக் குத்துவிளக்கையும் செய்தான். அதன் தண்டினின்று கிளைகளும், மொக்குகளும், குமிழ்களும், லீலிமலர்களும், புறப்பட்டிருந்தன.
|
19. ஒரு கிளையில் வாதுமைக் கொட்டைபோன்ற மூன்று மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தன. மறுகிளையிலும் வாதுமைக் கொட்டைபோன்ற மூன்று மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தமையால், குத்துவிளக்குத் தண்டினின்று புறப்பட்ட ஆறு கிளைகளிலும் ஒரேவித வேலைப்பாடு அமைந்திருந்தது.
|
21. இரண்டு கிளைகளின் கீழே மூன்று இடங்களில் குமிழ்கள் இருந்தன. ஆகையால், ஒரே தண்டினின்று ஆறு கிளைகளும் புறப்பட்டன.
|
23. மேலும், பசும் பொன்னால் ஏழு அகல்களையும், கரிந்ததிரியை வெட்டக் கத்திரிகளையும், எரிந்த திரியை வைக்கத் தட்டுக்களையும் செய்தான்.
|
24. குத்துவிளக்கும், அதன் எல்லாக் கருவிகளும், தட்டுமுட்டுக்களும் ஒரு தாலந்து நிறையுள்ள பொன்னால் ஆனவை.
|
25. பரிமள வகைகளின் பீடத்தையும் சேத்தீம் மரத்தால் செய்தான். அது நீளத்திலும் அகலத்திலும் ஒரு முழச் சதுரமாகவும், இரண்டு முழ உயரமுள்ளதாகவும் இருந்தது. அதன் மூலைகளிலே நான்கு கொம்புகள் புறப்பட்டன. அவன் அதையும், அதன் சல்லடையையும், அதன் சுற்றுப் புறங்களையும்,
|
27. அதைச் சுற்றிலும் பொன்னாலான திரணையை அமைத்து, திரணைக்குக் கீழுள்ள பக்கங்களிலே பீடத்தைத் தூக்கிச்செல்லப் பயன்படும் தண்டுகளை நுழைக்கும்படியான இரண்டு பொன் வளையங்களையும் அமைத்தான்.
|
29. அபிசேகத் தைலத்துக்கு எண்ணெயையும், மிகப் பரிசுத்த நறுமணப்பொருள்களைக் கூட்டிப் பரிமளத்தையும் தைலக்காரர் செய்முறைப்படி செய்து அமைத்தான்.
|