தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யாத்திராகமம்
1. பின் ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளி: நீயும், எகிப்து நாட்டினின்று நீ அழைத்துக் கொண்டு வந்த உன் மக்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்போம் என்று ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு ஆகியோருக்கு நாம் ஆணையிட்டு வாக்குறுதி அருளிய நாட்டிற்குப் போங்கள்.
2. நாம் ஒரு தூதரை உனக்கு முன் அனுப்பி, கானானையனையும் ஆமோறையனையும் ஏத்தையனையும் பாரேசையனையும் ஏவையனையும் யெபுசேயனையும் நீக்கி,
3. பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டிலே நீ புகும்படி செய்வோம். ஆயினும், வழியிலே நாம் உங்களை அழித்தொழிக்காதபடிக்கு நாம் உங்கள் நடுவே போக மாட்டோம். உண்மையிலே உன் மக்கள் வணங்காக் கழுத்துள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்றார்.
4. மக்கள் மிகத் துக்கமான இவ்வார்த்தைகளைக் கேட்ட போது கண்ணீர் விட்டழுது, அவர்களில் ஒருவரும் தம் வழக்கமான ஆடையாபரணங்களை அணிந்து கொள்ளவில்லை.
5. ஆண்டவர் மோயீசனை நோக்கி: இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்: நீங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள். உங்கள் நடுவில் நாம் ஒருவேளை வருவோமாயின், உங்களை அழித்தொழிக்க வேண்டியதாயிருக்கும். (ஆகையால்) நீங்கள் அணிந்திருக்கிற ஆபரணங்களைக் கழற்றிப் போட்டால், நாம் உங்களுக்குச் செய்ய வேண்டியதை அறிவோம் என்றருளினார்.
6. ஆகையால், இஸ்ராயேல் மக்கள் ஒரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப் போட்டார்கள்.
7. பின்னர் மோயீசன் ஆசாரக் கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளையத்துக்கு வெளியே தூரத்தில் நிறுவினார்; அதன் பெயரை உடன்படிக்கைக் கூடாரம் என்று அழைத்தார். அது முதல் யாதொரு வழக்கு உண்டானால், மக்களெல்லாம் பாளையத்துக்கு வெளியே உடன்படிக்கைக் கூடாரத்துக்குப் போவார்கள்.
8. மோயீசன் வெளிப்பட்டுக் கூடாரத்துக்குப் போகும் போது, மக்களெல்லாரும் எழுந்திருந்து தத்தம் கூடார வாயிலிலே நின்று, மோயீசன் உடன்படிக்கைக் கூடாரத்தில் நுழையுமட்டும் அவர் முதுகைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
9. அவர் உடன்படிக்கைக் கூடாரத்தில் நுழைந்த பின்னரோ மேகத்தூண் வாயிலில் இறங்கி நிற்கும். அப்பொழுது ஆண்டவர் மோயீசனோடு பேசுவார்.
10. மேகத்தூண் கூடார வாயிலே நின்று கொண்டிருப்பதை யாவரும் காண்பார்கள். மக்களும் எழுந்து தத்தம் கூடார வாயிலிலே பணிந்து வணக்கம் புரிவர்.
11. ஒருவன் தன் நண்பனோடு பேசுவதுபோல ஆண்டவர் மோயீசனோடு நேரிலே உரையாடிக் கொண்டிருப்பார். பிறகு அவர் பாளையத்துக்குத் திரும்பிப் போகும் போது, நூனின் புதல்வனும் இளைஞனுமான யோசுவா என்னும் அவனுடைய சீடன் திருக் கூடாரத்தை விட்டு விலகாதிருந்தான்.
12. மோயீசன் ஆண்டவரை நோக்கி: நீர் இந்த மக்களை அழைத்துக் கொண்டு போ என்று கட்டளையிடுகிறீர். ஆயினும், என்னோடு கூட இன்னாரை அனுப்புவீர் என்பதை எனக்கு அறிவிக்கவில்லை. சிறப்பாக, நீர் என்னை நோக்கி: உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்து அறிந்திருக்கிறோம் என்றும், நமக்கு நீ விருப்பமுள்ளவன் ஆனாய் என்றும் திருவுளம்பற்றியிருந்தீரே.
13. உமது திருமுன் அடியேன் அருள் அடைந்தேனாயின், நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் இரக்கம் பெறுவதற்கும் உமது திருமுகத்தை எனக்குக் காண்பித்தருள்வீர். உம் குடிகளாகிய இம்மக்களையும் நோக்கியருள்வீர் என்றார்.
14. அதற்கு ஆண்டவர்: நாமே உனக்கு முன்பாகச் செல்வோம். உனக்கு இளைப்பாற்றியைத் தருவோம் என்று சொன்னார்.
15. மீண்டும் மோயீசன்: நீரே எங்களுக்கு முன் செல்லாதிருப்பீராயின், எங்களை இவ்விடத்திலிருந்து புறப்படச் செய்யவேண்டாம்.
16. ஏனென்றால், பூமியின் மீது வாழ்கின்ற எல்லா மக்களாலும் நாங்கள் மாட்சிபெறும் பொருட்டு நீர் எங்களுடன் எழுந்தருளாவிடின், அடியேனுக்கும் உம் குடிகளுக்கும் உம்முடைய கண்களில் இரக்கம் கிடைத்ததென்று நாங்கள் எதனால் அறிவோம் என்றார்.
17. ஆண்டவர்: இதோ நீ சொன்ன இவ்வார்த்தைப்படி செய்வோம். ஏனென்றால், நம்முடைய கண்களில் உனக்கு இரக்கம் கிடைத்தது. உன்னைப் பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறோம் என்று மறுமொழி சொன்னார். அதற்கு,
18. அவர்: உம்முடைய மாட்சியை எனக்குக் காண்பித்தருளும் என்றார்.
19. அப்பொழுது அவர்: நாம் உனக்கு முழு நன்மையைக் காண்பிப்போம். அன்றியும், நாம் உனக்கு முன் ஆண்டவருடைய (திருப்) பெயரைக் கூறுவோம். எவனிடம் பிரசன்னமாயிருப்போமோ அவன் மட்டில் இரங்குவோம். எவன் மீது இரக்கமாய் இருக்கத் திருவுளம் கொள்வோமோ அவன் மேல் இரக்கம் வைப்போம் என்றருளினார்.
20. மீளவும்: ஆனால், ஒரு மனிதனும் நம்மைக் கண்டபின் உயிரோடிருக்க இயலாதாகையால், நீ நம்முடைய முகத்தைப் பார்க்க மாட்டாய் என்றார்.
21. திரும்பவும் ஆண்டவர்: இதோ நமதண்டையில் ஓர் இடமுண்டு. நீ பாறையின் மேல் நிற்பாய். பிறகு நமது மாட்சிகடந்து போகும் பொழுது,
22. நாம் உன்னைப் பாறைக் குகையில் இருத்தி நாம் அப்பாற் போகுமட்டும் நம்முடைய வலக்கையால் உன்னை மூடுவோம்.
23. பிறகு, நாம் கையை எடுத்து விடும் போது நீ நமது பின்புறத்தைக் காண்பாய். நம் முகத்தையோ நீ காணமாட்டாய் என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 40 Chapters, Current Chapter 33 of Total Chapters 40
யாத்திராகமம் 33:12
1. பின் ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளி: நீயும், எகிப்து நாட்டினின்று நீ அழைத்துக் கொண்டு வந்த உன் மக்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்போம் என்று ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு ஆகியோருக்கு நாம் ஆணையிட்டு வாக்குறுதி அருளிய நாட்டிற்குப் போங்கள்.
2. நாம் ஒரு தூதரை உனக்கு முன் அனுப்பி, கானானையனையும் ஆமோறையனையும் ஏத்தையனையும் பாரேசையனையும் ஏவையனையும் யெபுசேயனையும் நீக்கி,
3. பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டிலே நீ புகும்படி செய்வோம். ஆயினும், வழியிலே நாம் உங்களை அழித்தொழிக்காதபடிக்கு நாம் உங்கள் நடுவே போக மாட்டோம். உண்மையிலே உன் மக்கள் வணங்காக் கழுத்துள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்றார்.
4. மக்கள் மிகத் துக்கமான இவ்வார்த்தைகளைக் கேட்ட போது கண்ணீர் விட்டழுது, அவர்களில் ஒருவரும் தம் வழக்கமான ஆடையாபரணங்களை அணிந்து கொள்ளவில்லை.
5. ஆண்டவர் மோயீசனை நோக்கி: இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்: நீங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள். உங்கள் நடுவில் நாம் ஒருவேளை வருவோமாயின், உங்களை அழித்தொழிக்க வேண்டியதாயிருக்கும். (ஆகையால்) நீங்கள் அணிந்திருக்கிற ஆபரணங்களைக் கழற்றிப் போட்டால், நாம் உங்களுக்குச் செய்ய வேண்டியதை அறிவோம் என்றருளினார்.
6. ஆகையால், இஸ்ராயேல் மக்கள் ஒரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப் போட்டார்கள்.
7. பின்னர் மோயீசன் ஆசாரக் கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளையத்துக்கு வெளியே தூரத்தில் நிறுவினார்; அதன் பெயரை உடன்படிக்கைக் கூடாரம் என்று அழைத்தார். அது முதல் யாதொரு வழக்கு உண்டானால், மக்களெல்லாம் பாளையத்துக்கு வெளியே உடன்படிக்கைக் கூடாரத்துக்குப் போவார்கள்.
8. மோயீசன் வெளிப்பட்டுக் கூடாரத்துக்குப் போகும் போது, மக்களெல்லாரும் எழுந்திருந்து தத்தம் கூடார வாயிலிலே நின்று, மோயீசன் உடன்படிக்கைக் கூடாரத்தில் நுழையுமட்டும் அவர் முதுகைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
9. அவர் உடன்படிக்கைக் கூடாரத்தில் நுழைந்த பின்னரோ மேகத்தூண் வாயிலில் இறங்கி நிற்கும். அப்பொழுது ஆண்டவர் மோயீசனோடு பேசுவார்.
10. மேகத்தூண் கூடார வாயிலே நின்று கொண்டிருப்பதை யாவரும் காண்பார்கள். மக்களும் எழுந்து தத்தம் கூடார வாயிலிலே பணிந்து வணக்கம் புரிவர்.
11. ஒருவன் தன் நண்பனோடு பேசுவதுபோல ஆண்டவர் மோயீசனோடு நேரிலே உரையாடிக் கொண்டிருப்பார். பிறகு அவர் பாளையத்துக்குத் திரும்பிப் போகும் போது, நூனின் புதல்வனும் இளைஞனுமான யோசுவா என்னும் அவனுடைய சீடன் திருக் கூடாரத்தை விட்டு விலகாதிருந்தான்.
12. மோயீசன் ஆண்டவரை நோக்கி: நீர் இந்த மக்களை அழைத்துக் கொண்டு போ என்று கட்டளையிடுகிறீர். ஆயினும், என்னோடு கூட இன்னாரை அனுப்புவீர் என்பதை எனக்கு அறிவிக்கவில்லை. சிறப்பாக, நீர் என்னை நோக்கி: உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்து அறிந்திருக்கிறோம் என்றும், நமக்கு நீ விருப்பமுள்ளவன் ஆனாய் என்றும் திருவுளம்பற்றியிருந்தீரே.
13. உமது திருமுன் அடியேன் அருள் அடைந்தேனாயின், நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் இரக்கம் பெறுவதற்கும் உமது திருமுகத்தை எனக்குக் காண்பித்தருள்வீர். உம் குடிகளாகிய இம்மக்களையும் நோக்கியருள்வீர் என்றார்.
14. அதற்கு ஆண்டவர்: நாமே உனக்கு முன்பாகச் செல்வோம். உனக்கு இளைப்பாற்றியைத் தருவோம் என்று சொன்னார்.
15. மீண்டும் மோயீசன்: நீரே எங்களுக்கு முன் செல்லாதிருப்பீராயின், எங்களை இவ்விடத்திலிருந்து புறப்படச் செய்யவேண்டாம்.
16. ஏனென்றால், பூமியின் மீது வாழ்கின்ற எல்லா மக்களாலும் நாங்கள் மாட்சிபெறும் பொருட்டு நீர் எங்களுடன் எழுந்தருளாவிடின், அடியேனுக்கும் உம் குடிகளுக்கும் உம்முடைய கண்களில் இரக்கம் கிடைத்ததென்று நாங்கள் எதனால் அறிவோம் என்றார்.
17. ஆண்டவர்: இதோ நீ சொன்ன இவ்வார்த்தைப்படி செய்வோம். ஏனென்றால், நம்முடைய கண்களில் உனக்கு இரக்கம் கிடைத்தது. உன்னைப் பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறோம் என்று மறுமொழி சொன்னார். அதற்கு,
18. அவர்: உம்முடைய மாட்சியை எனக்குக் காண்பித்தருளும் என்றார்.
19. அப்பொழுது அவர்: நாம் உனக்கு முழு நன்மையைக் காண்பிப்போம். அன்றியும், நாம் உனக்கு முன் ஆண்டவருடைய (திருப்) பெயரைக் கூறுவோம். எவனிடம் பிரசன்னமாயிருப்போமோ அவன் மட்டில் இரங்குவோம். எவன் மீது இரக்கமாய் இருக்கத் திருவுளம் கொள்வோமோ அவன் மேல் இரக்கம் வைப்போம் என்றருளினார்.
20. மீளவும்: ஆனால், ஒரு மனிதனும் நம்மைக் கண்டபின் உயிரோடிருக்க இயலாதாகையால், நீ நம்முடைய முகத்தைப் பார்க்க மாட்டாய் என்றார்.
21. திரும்பவும் ஆண்டவர்: இதோ நமதண்டையில் ஓர் இடமுண்டு. நீ பாறையின் மேல் நிற்பாய். பிறகு நமது மாட்சிகடந்து போகும் பொழுது,
22. நாம் உன்னைப் பாறைக் குகையில் இருத்தி நாம் அப்பாற் போகுமட்டும் நம்முடைய வலக்கையால் உன்னை மூடுவோம்.
23. பிறகு, நாம் கையை எடுத்து விடும் போது நீ நமது பின்புறத்தைக் காண்பாய். நம் முகத்தையோ நீ காணமாட்டாய் என்றார்.
Total 40 Chapters, Current Chapter 33 of Total Chapters 40
×

Alert

×

tamil Letters Keypad References