தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யாத்திராகமம்
1. ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமான ஒரு சதுரப் பீடத்தைச் சேத்தீம் மரத்தினால் செய்வாய். அது மூன்று முழ உயரமாய் இருக்க வேண்டும்.
2. நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகள் பீடத்தினின்று புறப்படும். அவற்றை வெண்கலத் தகட்டால் மூடுவாய்.
3. பீடத்தில் உபயோகித்துக் கொள்ளும்படி (பின் வரும்) பாத்திரங்களைத் தயார் செய்ய வேண்டும். (அதாவது சாம்பலை எடுக்கத் தக்க சட்டிகளையும், நெருப்பைத் தூண்டும் குறடுகளையும் முள்ளுகளையும் தீச்சட்டிகளையும் தயார் செய்வாய். அவை வெண்கலத்தால் செய்யப்படும்.
4. வலைப் பின்னலைப் போன்ற ஒரு வெண்கலச் சல்லடை செய்து, அதன் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை அமைத்து,
5. அதைத் தீக் கரையின் கீழே வைப்பாய். அந்தச் சல்லடையோ பலிப் பீடத்தின் பாதி உயர மட்டும் எட்டும்.
6. பலிப் பீடத்திற்குச் சேத்தீம் மரத்தால் இரண்டு தண்டுகளையும் செய்து, அவற்றை வெண்கலத் தகடுகளால் மூடுவாய்.
7. பலிப்பீடத்தைத் தூக்குவதற்காக அந்தத் தண்டுகள் அதன் இரண்டு பக்கங்களிலுமுள்ள வளையங்களிலே மாட்டப்பட்டிருக்க வேண்டும்.
8. பலிப்பீடத்தைக் கனமானதாகச் செய்யாமல், உள்ளே கூடாய், மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதனைச் செய்யக்கடவாய்.
9. ஆசாரக் கூடாரத்திற்கு ஒரு பிராகாரத்தையும் அமைப்பாய். தென் திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட தொங்கு திரைகள் இருக்க வேண்டும். பிராகாரத்தின் ஒவ்வொரு பக்கமும் நூறுமுழ நீளமுள்ளதாகும்.
10. மேலும், வெண்கலத் தூண்கள் இருபது செய்வாய். அவைகளுக்கு இருபது வெண்கலப் பாதங்களும் இருக்கும். தூண்களின் போதிகைகளும், போதிகைகளின் பூண்களும் வெள்ளியினாலே செய்ய வேண்டும்.
11. இவ்வண்ணமே (பிராகாரத்தின்) வடப் பக்கத்திலும் நூறு முழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும். அவைகளுக்கு இருபது தூண்களும் இருபது பாதங்களும் வெண்கலத்தினாலேயும், இருபது போதிகைகளும் அவற்றிலுள்ள பூண்களும் வெள்ளியினாலேயும் செய்வாய்.
12. மேற்றிசையை நோக்கிய பிராகாரத்தின் பக்கத்திலோ ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகளின் அந்தரத்திலே பத்துத் தூண்களும் பத்துப் பாதங்களும் இருக்க வேண்டும்.
13. கீழ்த்திசையை நோக்கிய பிராகாரத்தின் அந்தரம் ஐம்பது முழ நீளமிருக்கும்.
14. இவைகளுக்குள் ஒரு பக்கத்திலே பதினைந்து முழமுள்ள தொங்கு திரையும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் அமைக்கப்படும்.
15. மறு பக்கத்திலே பதினைந்து முழமுள்ள தொங்கு திரையும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் இருக்கும்.
16. பிராகாரத்து வாயிலுக்கு இருபது முழமுள்ள தொங்கு திரை ஒன்று செய்யப்படும். அது இள நீல நிறம், கருஞ் சிவப்பு நிறம், இருமுறை (சாயம்) தோய்த்த இரத்த நிறம், திரித்த மெல்லிய சணல்--இவற்றாலாகிய நூல்களால் நெய்து சித்திரப் பின்னல் வேலையால் அலங்கரிக்கப் பட்டிருப்பதுமன்றி, அதற்கு நான்கு தூண்களும் நான்கு பாதங்களும் அமைக்கப்படும்.
17. பிராகாரத்தைச் சுற்றிலும் உள்ள தூண்களெல்லாம் வெள்ளித்தகட்டினால் மூடப்படும். ஆனால், அவற்றின் போதிகைகள் வெள்ளியும், பாதங்கள் வெண்கலமுமாய் இருக்கும்.
18. பிராகாரம் நீளத்திலே நூறு முழமும், அகலத்திலே ஐம்பது முழமும், உயரத்திலே ஐந்து முழமுமாய் இருப்பது மன்றி, அதன் தொங்கு திரைகள், திரித்த மெல்லிய சணல் நூலினாலே செய்யப்படும்.
19. ஆசாரக் கூடாரத்தின் எல்லாப் பணிவிடைகளுக்கும் சடங்குகளுக்கும் உபயோகமான எல்லாப் பணி முட்டுக்களையும், அதிலும் பிராகாரத்திலும் இருக்க வேண்டிய முளைகளையும் வெண்கலத்தால் செய்வாய்.
20. விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்படி, உலக்கையால் இடித்துப் பிழிந்த மிகத் தூய்மையான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வருமாறு இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிடுவாய்.
21. சாட்சியத்தின் ஆசாரக் கூடாரத்திலே சாட்சிச் சந்நிதிக்கு முன் இடப்பட்ட திரைக்கு வெளியே ஆரோனும் அவன் புதல்வர்களும் மாலைமுதல் விடியற்காலை வரை ஆண்டவர் திருமுன் அவ்விளக்கை எரிய வைக்கக்கடவார்கள். மேற்சொன்ன முறைமை இஸ்ராயேல் மக்களுக்குள்ளே தலைமுறை தலைமுறையாக நித்திய அருச்சனையாய் அனுசரிக்கப்படும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 40 Chapters, Current Chapter 27 of Total Chapters 40
யாத்திராகமம் 27:3
1. ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமான ஒரு சதுரப் பீடத்தைச் சேத்தீம் மரத்தினால் செய்வாய். அது மூன்று முழ உயரமாய் இருக்க வேண்டும்.
2. நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகள் பீடத்தினின்று புறப்படும். அவற்றை வெண்கலத் தகட்டால் மூடுவாய்.
3. பீடத்தில் உபயோகித்துக் கொள்ளும்படி (பின் வரும்) பாத்திரங்களைத் தயார் செய்ய வேண்டும். (அதாவது சாம்பலை எடுக்கத் தக்க சட்டிகளையும், நெருப்பைத் தூண்டும் குறடுகளையும் முள்ளுகளையும் தீச்சட்டிகளையும் தயார் செய்வாய். அவை வெண்கலத்தால் செய்யப்படும்.
4. வலைப் பின்னலைப் போன்ற ஒரு வெண்கலச் சல்லடை செய்து, அதன் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை அமைத்து,
5. அதைத் தீக் கரையின் கீழே வைப்பாய். அந்தச் சல்லடையோ பலிப் பீடத்தின் பாதி உயர மட்டும் எட்டும்.
6. பலிப் பீடத்திற்குச் சேத்தீம் மரத்தால் இரண்டு தண்டுகளையும் செய்து, அவற்றை வெண்கலத் தகடுகளால் மூடுவாய்.
7. பலிப்பீடத்தைத் தூக்குவதற்காக அந்தத் தண்டுகள் அதன் இரண்டு பக்கங்களிலுமுள்ள வளையங்களிலே மாட்டப்பட்டிருக்க வேண்டும்.
8. பலிப்பீடத்தைக் கனமானதாகச் செய்யாமல், உள்ளே கூடாய், மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதனைச் செய்யக்கடவாய்.
9. ஆசாரக் கூடாரத்திற்கு ஒரு பிராகாரத்தையும் அமைப்பாய். தென் திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட தொங்கு திரைகள் இருக்க வேண்டும். பிராகாரத்தின் ஒவ்வொரு பக்கமும் நூறுமுழ நீளமுள்ளதாகும்.
10. மேலும், வெண்கலத் தூண்கள் இருபது செய்வாய். அவைகளுக்கு இருபது வெண்கலப் பாதங்களும் இருக்கும். தூண்களின் போதிகைகளும், போதிகைகளின் பூண்களும் வெள்ளியினாலே செய்ய வேண்டும்.
11. இவ்வண்ணமே (பிராகாரத்தின்) வடப் பக்கத்திலும் நூறு முழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும். அவைகளுக்கு இருபது தூண்களும் இருபது பாதங்களும் வெண்கலத்தினாலேயும், இருபது போதிகைகளும் அவற்றிலுள்ள பூண்களும் வெள்ளியினாலேயும் செய்வாய்.
12. மேற்றிசையை நோக்கிய பிராகாரத்தின் பக்கத்திலோ ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகளின் அந்தரத்திலே பத்துத் தூண்களும் பத்துப் பாதங்களும் இருக்க வேண்டும்.
13. கீழ்த்திசையை நோக்கிய பிராகாரத்தின் அந்தரம் ஐம்பது முழ நீளமிருக்கும்.
14. இவைகளுக்குள் ஒரு பக்கத்திலே பதினைந்து முழமுள்ள தொங்கு திரையும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் அமைக்கப்படும்.
15. மறு பக்கத்திலே பதினைந்து முழமுள்ள தொங்கு திரையும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் இருக்கும்.
16. பிராகாரத்து வாயிலுக்கு இருபது முழமுள்ள தொங்கு திரை ஒன்று செய்யப்படும். அது இள நீல நிறம், கருஞ் சிவப்பு நிறம், இருமுறை (சாயம்) தோய்த்த இரத்த நிறம், திரித்த மெல்லிய சணல்--இவற்றாலாகிய நூல்களால் நெய்து சித்திரப் பின்னல் வேலையால் அலங்கரிக்கப் பட்டிருப்பதுமன்றி, அதற்கு நான்கு தூண்களும் நான்கு பாதங்களும் அமைக்கப்படும்.
17. பிராகாரத்தைச் சுற்றிலும் உள்ள தூண்களெல்லாம் வெள்ளித்தகட்டினால் மூடப்படும். ஆனால், அவற்றின் போதிகைகள் வெள்ளியும், பாதங்கள் வெண்கலமுமாய் இருக்கும்.
18. பிராகாரம் நீளத்திலே நூறு முழமும், அகலத்திலே ஐம்பது முழமும், உயரத்திலே ஐந்து முழமுமாய் இருப்பது மன்றி, அதன் தொங்கு திரைகள், திரித்த மெல்லிய சணல் நூலினாலே செய்யப்படும்.
19. ஆசாரக் கூடாரத்தின் எல்லாப் பணிவிடைகளுக்கும் சடங்குகளுக்கும் உபயோகமான எல்லாப் பணி முட்டுக்களையும், அதிலும் பிராகாரத்திலும் இருக்க வேண்டிய முளைகளையும் வெண்கலத்தால் செய்வாய்.
20. விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்படி, உலக்கையால் இடித்துப் பிழிந்த மிகத் தூய்மையான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வருமாறு இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிடுவாய்.
21. சாட்சியத்தின் ஆசாரக் கூடாரத்திலே சாட்சிச் சந்நிதிக்கு முன் இடப்பட்ட திரைக்கு வெளியே ஆரோனும் அவன் புதல்வர்களும் மாலைமுதல் விடியற்காலை வரை ஆண்டவர் திருமுன் அவ்விளக்கை எரிய வைக்கக்கடவார்கள். மேற்சொன்ன முறைமை இஸ்ராயேல் மக்களுக்குள்ளே தலைமுறை தலைமுறையாக நித்திய அருச்சனையாய் அனுசரிக்கப்படும்.
Total 40 Chapters, Current Chapter 27 of Total Chapters 40
×

Alert

×

tamil Letters Keypad References