தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யாத்திராகமம்
1. மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீயும் ஆரோனும் நதாபும் அபியூவும் இஸ்ராயேல் பெரியார்களில் எழுபது பேரும் ஆண்டவரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து ஆராதனை செய்யுங்கள்.
2. மோயீசன் மட்டும் ஆண்டவருக்கு அண்மையில் வருவார். மற்றவர்கள் கிட்ட வரவும், மக்கள் அவரோடு ஏறி வரவும் வேண்டாம் என்றார்.
3. மோயீசன் வந்து ஆண்டவருடைய எல்லா வாக்கியங்களையும் நீதிச் சட்டங்களையும் விவரித்துச் சொன்னார். அதைக் கேட்ட மக்கள் எல்லாரும்: ஆண்டவர் திருவுளம் பற்றின எல்லா வாக்கியங்களின் படியும் நடப்போம் என்று ஒரே குரலாய் மறுமொழி சொன்னார்கள்.
4. மோயீசனோ, ஆண்டவர் சொன்ன வாக்கியங்களையெல்லாம் எழுதி வைத்து, பின், காலையில் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிப்பீடத்தைக் கட்டி, இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் நினைவாக பன்னிரண்டு தூண்களை நிறுத்தினார்.
5. இஸ்ராயேல் மக்களில் இளைஞர்களை அனுப்பினார். அவர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலிகளையும், சமாதானப் பலிகளாகக் கன்றுக்குட்டிகளையும் பலியிட்டார்கள்.
6. அப்போது மோயீசன் இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துப் பாத்திரங்களில் வார்த்து, மற்றப் பாதியைப் பலிப்பீடத்தின் மேல் ஊற்றினார்.
7. பின் உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து மக்கள் கேட்க வாசித்தார், அவர்கள்: ஆண்டவர் சொன்னபடியெல்லாம் செய்வோம் என்றார்கள்.
8. அப்பொழுது மோயீசன் பாத்திரத்தில் வார்த்து வைத்திருந்த இரத்தத்தை மக்களின் மேல் தெளித்து: இந்த எல்லா வார்த்தைகளின் படியும் ஆண்டவர் உங்களுடன் செய்தருளிய உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று கூறினார்.
9. பின் மோயீசனும் ஆரோனும் நதாபும் அபியூவும் இஸ்ராயேல் பெரியோரில் எழுபது பேரும் (மேலே) ஏறினார்கள்;
10. இஸ்ராயேலின் கடவுளையும் கண்டார்கள். அவருடைய கால்களின் கீழ் நீலக் கல் இழைத்த வேலைப் போலவும், தெளிந்த வானத்தின் சுடரொளி போலவும் இருந்தது.
11. இஸ்ராயேல் மக்களில் எவரெவர் அகன்று தூரத்திலிருந்தார்களோ அவர்கள் மேல் ஆண்டவர் தம்முடைய கையை நீட்டினாரில்லை. அவர்கள் கடவுளைக் கண்டபின் உண்ணவும் குடிக்கவும் தொடங்கினார்கள்.
12. அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ மலையின் மேல் நம்மிடத்திற்கு ஏறி வந்து இங்கே இரு. நாம் உனக்குக் கற்பலகைளையும், நீ அவர்களுக்குக் கற்பிப்பதற்கு நாம் எழுதிய கட்டளை முதலிய சட்ட திட்டங்களையும் தருவோம் என்றருளினார்.
13. மோயீசனும் அவருக்குத் துணைவனாய் இருந்த யோசுவாவும் எழுந்திருந்து கடவுளுடைய மலையில் ஏறுகையில்,
14. மோயீசன், பெரியோர்களை நோக்கி: நாங்கள் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இங்கே காத்துக் கொண்டிருங்கள். ஆரோனும் ஊரும் உங்களோடு இருக்கிறார்கள். யாதொரு வழக்கு உண்டானால் அவர்களுக்குத் தெரியப் படுத்துவீர்கள் என்று சொல்லிப் போனார்.
15. மோயீசன் ஏறிப்போனபின் ஒரு மேகம் வந்து மலையை மூடிற்று.
16. ஆண்டவருடைய மாட்சி சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. அந்த மேகம், ஆறுநாளும் மலையை மூடியிருந்தது. ஏழாம் நாளிலோ இருளின் நடுவினின்று ஆண்டவர் மோயீசனைக் கூப்பிட்டார்.
17. மலையின் சிகரத்திலே ஆண்டவருடைய மாட்சியின் காட்சி இஸ்ராயேல் மக்கள் கண்களுக்கு கொடுமையான தீயைப் போலத் தோன்றும்.
18. மோயீசன் அந்த மேகத்தின் நடுவே புகுந்து மலையின் மேல் ஏறி, அங்கே நாற்பது இரவும் நாற்பது பகலும் தங்கியிருந்தார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 40 Chapters, Current Chapter 24 of Total Chapters 40
யாத்திராகமம் 24:19
1. மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீயும் ஆரோனும் நதாபும் அபியூவும் இஸ்ராயேல் பெரியார்களில் எழுபது பேரும் ஆண்டவரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து ஆராதனை செய்யுங்கள்.
2. மோயீசன் மட்டும் ஆண்டவருக்கு அண்மையில் வருவார். மற்றவர்கள் கிட்ட வரவும், மக்கள் அவரோடு ஏறி வரவும் வேண்டாம் என்றார்.
3. மோயீசன் வந்து ஆண்டவருடைய எல்லா வாக்கியங்களையும் நீதிச் சட்டங்களையும் விவரித்துச் சொன்னார். அதைக் கேட்ட மக்கள் எல்லாரும்: ஆண்டவர் திருவுளம் பற்றின எல்லா வாக்கியங்களின் படியும் நடப்போம் என்று ஒரே குரலாய் மறுமொழி சொன்னார்கள்.
4. மோயீசனோ, ஆண்டவர் சொன்ன வாக்கியங்களையெல்லாம் எழுதி வைத்து, பின், காலையில் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிப்பீடத்தைக் கட்டி, இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் நினைவாக பன்னிரண்டு தூண்களை நிறுத்தினார்.
5. இஸ்ராயேல் மக்களில் இளைஞர்களை அனுப்பினார். அவர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலிகளையும், சமாதானப் பலிகளாகக் கன்றுக்குட்டிகளையும் பலியிட்டார்கள்.
6. அப்போது மோயீசன் இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துப் பாத்திரங்களில் வார்த்து, மற்றப் பாதியைப் பலிப்பீடத்தின் மேல் ஊற்றினார்.
7. பின் உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து மக்கள் கேட்க வாசித்தார், அவர்கள்: ஆண்டவர் சொன்னபடியெல்லாம் செய்வோம் என்றார்கள்.
8. அப்பொழுது மோயீசன் பாத்திரத்தில் வார்த்து வைத்திருந்த இரத்தத்தை மக்களின் மேல் தெளித்து: இந்த எல்லா வார்த்தைகளின் படியும் ஆண்டவர் உங்களுடன் செய்தருளிய உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று கூறினார்.
9. பின் மோயீசனும் ஆரோனும் நதாபும் அபியூவும் இஸ்ராயேல் பெரியோரில் எழுபது பேரும் (மேலே) ஏறினார்கள்;
10. இஸ்ராயேலின் கடவுளையும் கண்டார்கள். அவருடைய கால்களின் கீழ் நீலக் கல் இழைத்த வேலைப் போலவும், தெளிந்த வானத்தின் சுடரொளி போலவும் இருந்தது.
11. இஸ்ராயேல் மக்களில் எவரெவர் அகன்று தூரத்திலிருந்தார்களோ அவர்கள் மேல் ஆண்டவர் தம்முடைய கையை நீட்டினாரில்லை. அவர்கள் கடவுளைக் கண்டபின் உண்ணவும் குடிக்கவும் தொடங்கினார்கள்.
12. அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ மலையின் மேல் நம்மிடத்திற்கு ஏறி வந்து இங்கே இரு. நாம் உனக்குக் கற்பலகைளையும், நீ அவர்களுக்குக் கற்பிப்பதற்கு நாம் எழுதிய கட்டளை முதலிய சட்ட திட்டங்களையும் தருவோம் என்றருளினார்.
13. மோயீசனும் அவருக்குத் துணைவனாய் இருந்த யோசுவாவும் எழுந்திருந்து கடவுளுடைய மலையில் ஏறுகையில்,
14. மோயீசன், பெரியோர்களை நோக்கி: நாங்கள் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இங்கே காத்துக் கொண்டிருங்கள். ஆரோனும் ஊரும் உங்களோடு இருக்கிறார்கள். யாதொரு வழக்கு உண்டானால் அவர்களுக்குத் தெரியப் படுத்துவீர்கள் என்று சொல்லிப் போனார்.
15. மோயீசன் ஏறிப்போனபின் ஒரு மேகம் வந்து மலையை மூடிற்று.
16. ஆண்டவருடைய மாட்சி சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. அந்த மேகம், ஆறுநாளும் மலையை மூடியிருந்தது. ஏழாம் நாளிலோ இருளின் நடுவினின்று ஆண்டவர் மோயீசனைக் கூப்பிட்டார்.
17. மலையின் சிகரத்திலே ஆண்டவருடைய மாட்சியின் காட்சி இஸ்ராயேல் மக்கள் கண்களுக்கு கொடுமையான தீயைப் போலத் தோன்றும்.
18. மோயீசன் அந்த மேகத்தின் நடுவே புகுந்து மலையின் மேல் ஏறி, அங்கே நாற்பது இரவும் நாற்பது பகலும் தங்கியிருந்தார்.
Total 40 Chapters, Current Chapter 24 of Total Chapters 40
×

Alert

×

tamil Letters Keypad References