தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உபாகமம்
1. இதன்பிறகு மோயீசன் மோவாபின் வெளிகளிலிருந்து எரிக்கோவுக்கு எதிராயுள்ள நேபோ மலையிலிருக்கும் பஸ்காக் கொடுமுடியில் ஏறினார். அப்போழுது ஆண்டவர் தான் வரையிலுமுள்ள கலாத் நாடு அனைத்தையும், நெப்தலி நாடு முழுவதையும்,
2. எபிராயீம் மனாஸே என்பவர்களின் நாட்டையும், கடைக்கோடிக் கடல் வரையுள்ள யூதா நாடு அனைத்தையும்,
3. தென்னாடுகளையும், சேகோர் வரையிலுள்ள பனைமர நகரமாகிய எரிக்கோவின் வெளிகளையும் காண்பித்தார்.
4. பின்பு ஆண்டவர் மோயீசனை நோக்கி: உங்கள் சந்ததிக்குக் கொடுப்போம் என்று நாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுச் சொல்லிய நாடு இதுவே. நீ அதைக் கண்ணாலே கண்டாய். அனால், நீ அதனுள் புகுவதில்லை என்றார்.
5. ஆண்டவரின் ஊழியனாகிய மோயீசன் மோவாப் நாடான அவ்விடத்தில்தானே ஆண்டவருடைய கட்டளைப்படி இறந்ததார்.
6. ஆண்டவர்தாமே அவரைப் பொகோருக்கு எதிராக மோவாபின் பள்ளத்தாக்கில் அடக்கம் செய்தமையால், இந்நாள் வரையிலும் ஒருவனும் அவருடைய கல்லறையை அறியான்.
7. மோயீசன் இறந்தபோது அவருக்கு வயது நூற்றிருபது. ஆயினும், அவருடைய கண் மங்கினதுமில்லை; பற்கள் உதிர்ந்ததுமில்லை.
8. இஸ்ராயேல் மக்கள் மோயீசனுக்காக முப்பது நாட்கள் மோவாப் வெளிகளில் அழுத பின்பு, மோயீசனுக்காக இழவு கொண்டாடினவர்களுடைய துக்கம் முடிவுபெற்றது.
9. மோயீசன் நூனின் புதல்வனான யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்திருந்தமையால், இவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். இஸ்ராயேல் மக்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து, ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்து வந்தார்கள்.
10. ஆண்டவரை முகமுகமாய்க் கண்டறிந்த மோயீசனுக்கு நிகரான வேறொரு இறைவாக்கினர் இஸ்ராயேலரிடையே அவருக்குப்பின் உதித்ததேயில்லை.
11. ஆண்டவர் அவர் வழியாய் எகிப்து நாட்டிலே பரவோனுக்கும் பரவோனின் ஊழியர்களுக்கும் பரவோனின் நாடு அனைத்திற்கும் விரோதமாய்ச் செய்து காண்பித்த எல்லா அடையாளம் முதலிய அற்புத அதிசயங்களிலிருந்தும்,
12. மோயீசனே இஸ்ராயேல் சபையார் எல்லாருக்கும் முன்பாகச் செய்து வந்த வல்லமை பொருந்திய நிகழ்ச்சிகள், ஆச்சரியமான செயல்களிலிருந்தும் மோயீசன் நிகரில்லாதவர் என்பது உறுதி.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 34 Chapters, Current Chapter 34 of Total Chapters 34
உபாகமம் 34:41
1. இதன்பிறகு மோயீசன் மோவாபின் வெளிகளிலிருந்து எரிக்கோவுக்கு எதிராயுள்ள நேபோ மலையிலிருக்கும் பஸ்காக் கொடுமுடியில் ஏறினார். அப்போழுது ஆண்டவர் தான் வரையிலுமுள்ள கலாத் நாடு அனைத்தையும், நெப்தலி நாடு முழுவதையும்,
2. எபிராயீம் மனாஸே என்பவர்களின் நாட்டையும், கடைக்கோடிக் கடல் வரையுள்ள யூதா நாடு அனைத்தையும்,
3. தென்னாடுகளையும், சேகோர் வரையிலுள்ள பனைமர நகரமாகிய எரிக்கோவின் வெளிகளையும் காண்பித்தார்.
4. பின்பு ஆண்டவர் மோயீசனை நோக்கி: உங்கள் சந்ததிக்குக் கொடுப்போம் என்று நாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுச் சொல்லிய நாடு இதுவே. நீ அதைக் கண்ணாலே கண்டாய். அனால், நீ அதனுள் புகுவதில்லை என்றார்.
5. ஆண்டவரின் ஊழியனாகிய மோயீசன் மோவாப் நாடான அவ்விடத்தில்தானே ஆண்டவருடைய கட்டளைப்படி இறந்ததார்.
6. ஆண்டவர்தாமே அவரைப் பொகோருக்கு எதிராக மோவாபின் பள்ளத்தாக்கில் அடக்கம் செய்தமையால், இந்நாள் வரையிலும் ஒருவனும் அவருடைய கல்லறையை அறியான்.
7. மோயீசன் இறந்தபோது அவருக்கு வயது நூற்றிருபது. ஆயினும், அவருடைய கண் மங்கினதுமில்லை; பற்கள் உதிர்ந்ததுமில்லை.
8. இஸ்ராயேல் மக்கள் மோயீசனுக்காக முப்பது நாட்கள் மோவாப் வெளிகளில் அழுத பின்பு, மோயீசனுக்காக இழவு கொண்டாடினவர்களுடைய துக்கம் முடிவுபெற்றது.
9. மோயீசன் நூனின் புதல்வனான யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்திருந்தமையால், இவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். இஸ்ராயேல் மக்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து, ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்து வந்தார்கள்.
10. ஆண்டவரை முகமுகமாய்க் கண்டறிந்த மோயீசனுக்கு நிகரான வேறொரு இறைவாக்கினர் இஸ்ராயேலரிடையே அவருக்குப்பின் உதித்ததேயில்லை.
11. ஆண்டவர் அவர் வழியாய் எகிப்து நாட்டிலே பரவோனுக்கும் பரவோனின் ஊழியர்களுக்கும் பரவோனின் நாடு அனைத்திற்கும் விரோதமாய்ச் செய்து காண்பித்த எல்லா அடையாளம் முதலிய அற்புத அதிசயங்களிலிருந்தும்,
12. மோயீசனே இஸ்ராயேல் சபையார் எல்லாருக்கும் முன்பாகச் செய்து வந்த வல்லமை பொருந்திய நிகழ்ச்சிகள், ஆச்சரியமான செயல்களிலிருந்தும் மோயீசன் நிகரில்லாதவர் என்பது உறுதி.
Total 34 Chapters, Current Chapter 34 of Total Chapters 34
×

Alert

×

tamil Letters Keypad References