தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உபாகமம்
1. நான் பேசபோகிறேன்; வானங்களே, செவி கொடுங்கள். பூவுலகே, என் வாய்மொழியை உற்றுக்கேட்பாயாக.
2. (வானத்து) மழை ஏராளமாய்ப் பொழிவதுபோல் என் அறிவுரை மேன்மேலும் பொழிவதாக. பனித்துளிகள் புல்லின் மேலும், மழைத்துளிகள் சமவெளிகளின் மேலும் இறங்குவதுபோல என் வாக்கியங்கள் இறங்குவனவாக.
3. நான் ஆண்டவருடைய திருப்பெயரைப் போற்றிப் புகழ்ந்து வருவதனால் நம்முடைய கடவுளை மேன்மைப்படுத்திப் பாராட்டக்கடவீர்கள்.
4. அவர் செய்யும் செயல்கள் உத்தமமானவை. அவருடைய வழிகளெல்லாம் நேர்மையானவை. கடவுள் பிரமாணிக்கமுள்ளவர். அவர்பால் யாதொரு பழுதுமில்லை. அவர் நீதி நிதானமுள்ள கடவுள்.
5. அவர்களோ அவருக்கு விரோதமாய்ப் பாவத்தைக் கட்டிக்கொண்டார்கள். அவர்கள் தீட்டுள்ளவர்களாயிருக்கையிலே அவருடைய பிள்ளைகளாயிராமல் கொடிய தீய மக்களாய் இருந்ததார்கள். மதிகெட்ட மூடமக்களே,
6. ஆண்டவருக்கு இப்படியா நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் ? உன்னை ஆட்கொண்ட தந்தை அவர் அல்லரோ ? உன்னைப் படைத்து, உருவாக்கித் தமதாக்கினவர் அவர் அல்லரோ ?
7. ஆரம்ப நாட்களை நினைத்துப்பார்; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற ஆண்டுகளைக் கவனித்துப்பார். உன் தந்தையைக் கேள்; அவன் உனக்கு அறிவிப்பான். உன் பெரியோர்களைக் கேள்; அவர்கள் உனக்கு மறுமொழி சொல்வார்கள்.
8. மிகவும் உன்னதமானவர் வெவ்வேறு இனத்தவருக்கு வெவ்வேறு உரிமைகளைப் பங்கிட்டு ஆதாமின் புதல்வரை வெவ்வேறாகப் பிரித்தபொழுது, இஸ்ராயேலின் புதல்வருடைய கோத்திரத் தொகைக்குத் தக்கதாகவே எல்லா இனத்தாரின் எல்லைகளையும் திட்டம் செய்தார்.
9. ஆண்டவருடைய மக்களோ அவருடைய உரிமை; யாக்கோபோ அவருடைய உடைமையின் சங்கிலியாம்.
10. அவர் பாழான நாட்டிலும் பயங்கரத்துக்குரிய ஆளற்ற பரந்த இடத்திலும் அவர்களைக் கண்டுபிடித்தார். அவர் சுற்று வழியாய் அவர்களை நடத்தி, உணர்த்தி, தமது கண்மணியைப்போல் காத்தருளினார்.
11. கழுகு தன் குஞ்சுகளின்மேல் பறந்து அவைகளைப் பறக்கும்படி தூண்டுவது போலவும், தன் இறக்கைகளை விரித்துக் குஞ்சுகளை அவற்றின்மேல் வைத்துச் சுமப்பது போலவும்,
12. ஆண்டவர் ஒருவரே அவர்களை நடத்தினார். அந்நிய கடவுள் அவர்களோடு இருந்ததேயில்லை.
13. அவர் உயர்ந்த இடத்தன்மேல் அவர்களை வைத்து, வயலில் விளையும் பலன்களை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார். கல்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவர்கள் உண்ணும்படி செய்தார்.
14. பசுவின் வெண்ணெயையும் ஆடுகளின் பாலையும், பாசானின் புதல்வர்களுடைய ஆட்டுக்குட்டி, ஆட்டுக்கிடாய்களுடைய கொழுப்பையும், கொழுத்த வெள்ளாடுகளையும், சிறந்த கோதுமையையும் உண்ணவும், இரத்தம் போன்ற தன்னியல்பான கொடிமுந்திரிப் பழச்சாற்றைக் குடிக்கவும் அவர்களுக்குத் தந்தருளினார்.
15. அன்பு செய்யப்பட்ட ( மகன் ) கொழுத்துப் போய் உதைக்கத் தொடங்கினான். அவன் கொழுத்துப் பருத்தபோது, தன்னைக் காக்கும் கடவுளுக்கு முதுகைக் காட்டி விலகினான்.
16. அந்நிய தேவர்களை வணங்கியதனாலே அவர்கள் அவருக்கு எரிச்சலை மூட்டி, அருவருப்பானவைகளால் அவரது கோபத்தைத் தூண்டி விட்டார்கள்.
17. அவர்கள் கடவுளுக்குப் பலியிடுவதை விட்டு, தாங்கள் அறியாத தேவார்களாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். புதிதாய்த் தோன்றிய, தங்கள் மூதாதையர் கும்பிடாத, புதுத் தெய்வங்களுக்கே (வழிபாடு செய்தார்கள்).
18. உன்னைப் பெற்ற கடவுளை விட்டு, உன்னை உருவாக்கிய ஆண்டவரை மறந்து விட்டாயே!
19. ஆண்டவர் அதனைக் கண்டார். தம்முடைய புதல்வரும் புதல்வியரும் தமது கோபத்தை மூட்டியதினால் அவர் குரோதமுள்ளவராகிக் கூறினார்:
20. ஆ! இவர்கள் கெட்டார்கள்; வஞ்சனையுள்ள புதல்வரானார்கள்; ஆதலால், நம் முகத்தை அவர்களுக்கு மறைத்து, அவர்களுடைய முடிவு எப்படிப்பட்டதாய் இருக்குமோவென்று பார்போம்.
21. அவர்கள் தெய்வமல்லாதவைகளாலும் நமக்கு எரிச்சல் வருவித்து, தங்கள் வீணான தீச் செயல்களாலும் நமக்கு முடிவு உண்டாகச் செய்தார்களே; இதோ நம் மக்களென்று மதிக்கப்படாதவர்கள் மூலமாய் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட இனத்தவர்களாலேயே அவர்களுக்குக் கோபம் உண்டாகச் செய்வோம்.
22. நம்முடைய கோபத்தின் நெருப்பு மூண்டது. அது நாகத்தின் அடிவரையிலும் எரியும். அது நிலத்தையும் அதன் விளைச்சலையும் எரித்து விடுவதுமன்றி, மலைகளின் அடித்தளங்களையும் வேகச் செய்யும்.
23. நாம் பற்பல தீங்குகளை அவர்கள்மீது குவியச் செய்து, நம்முடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் எய்து தீர்போம்.
24. அவர்கள் பசி மிகுதியால் வாடி மடிந்து போவார்கள். பறவைகள் தங்கள் கொடிய அலகினால் அவர்களைக் கொத்தித் தின்னும். அவர்களை வதைக்கக் கூரிய பற்களையுடைய கொடிய உயிரினங்களையும், பாம்புகளையும் அவர்கள்பால் ஏவுவோம்.
25. வெளியே வாளும் உள்ளே மிக்க அச்சமும், இளைஞளையும் கன்னியையும் பாலுண்ணும் குழந்தையையும் கிழவனையும் அழிக்கும்.
26. நாம்: அவர்கள் எங்கே என்றோம். மனிதருக்குள் அவர்கள் பெயர் முதலாய் மறைந்து போகும்படி செய்வோம்.
27. ஆனால், அவர்களுடைய பகைவர்களின் குரோதத்தைப் பற்றி நாம் பொறுத்துக் கொண்டோம். ஒரு வேளை அவர்கள் அகங்காரம் கொண்டு: நாங்கள் இந்தக் காரியங்களை எல்லாம் எங்கள் வலுவுள்ள சொந்தக் கையினால் செய்தோமேயன்றி ஆண்டவர் அவற்றைச் செய்தாரல்லர் என்று வீம்பு பேசக்கூடும்.
28. அவர்கள் மதிகெட்ட விவேகமற்ற மக்களல்லரோ ?
29. ஆ! அவர்கள் ஞானத்தை அடைவது எப்போது ? அவர்களுக்கு எப்போதுதான் அறிவு உண்டாகும் ? தங்களுக்கு என்னகதி வரப் போகிறதென்று அவர்கள் யோசிக்காதிருக்கிற தென்ன ?
30. ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவது இயலுமோ ? இரண்டுபேர் பதினாயிரம் வீரரைத் தோற்கடிப்பது கூடுமானதோ ? தங்கள் கடவுள் அவர்களை ஒப்புக்கொடுப்பதினாலும் ஆண்டவர் அவர்களை அடைப்பதினாலும் தானே அது நிகழக்கூடும் ?
31. அவர்களுடைய கடவுளைப் போலன்று நம்முடைய கடவுள், இது உண்மையென நம் பகைவர்களே சாட்சியாயிருக்கின்றனர்.
32. அவர்களுடைய கொடிமுந்திரி சோதோமிலும் கொமோரா வயல்வெளிகளிலும் பயிராகிவிட்டது. அவர்களுடைய கொடிமுந்திரிப் பழம் பிஞ்சுப்பழமே; அவர்களுடைய கொடிமுந்திரிக் குலைகள் கைப்பும் கசப்பும் உள்ளவைகளே.
33. அவர்களுடைய கொடிமுந்திரிப் பழச்சாறு வேதாளங்களின் பித்தமும் நச்சுப் பாம்புகளின் கொடிய நஞ்சும் போன்றது.
34. இது நம்மிடத்தில் சேமிக்கப்பட்டு நம் கருவூலங்களில் வைத்து முத்திரை போடப்பட்டிருக்கிறதன்றோ ?
35. பழிக்குப் பழி வாங்குவதும், ஏற்ற காலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடச் செய்து, பதிலுக்குப் பதில் அளிப்பதும் நம்முடைய தொழிலே. அவர்களுடைய அழிவு நாள் இதோ நெருங்கியிருக்கிறது, குறிக்கப்பட்ட காலங்கள் ஓடி வருகின்றன.
36. ஆண்டவர் தம் மக்களை நியாயந் தீர்த்து, தமக்கு அன்பு செய்து பணி புரிவோர்மேல் மனம் இறங்குவார்; அவர்களுக்குக் கை தளர்ந்ததென்றும், அடைக்கப்பட்டவர்கள் முதலாய்ச் சோர்ந்து போனார்களென்றும், மீதியானவர்கள் சோகமுற்றுச் சிதைந்தார்களென்றும் காண்பார்.
37. அப்பொழுது அவர்: அவர்கள் நம்பியிருந்த தேவர்கள் எங்கே ?
38. இவர்களுக்கு தாங்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பை அவர்கள் தின்றார்களே; பானப் பலிகளின் கொடிமுந்திரிப்பழச் சாற்றைக் குடித்தார்களே. இப்போது (அந்தத் தேவர்கள்) வந்து துன்பத்தில் அகப்பட்ட அவர்களுக்கு உதவி செய்யட்டும் (பார்ப்போம்) சிந்தித்துப் பாருங்கள். நாம் மட்டுமே இருக்கிறவர்.
39. நம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. நாம் மட்டுமே கொல்லுகிறோம். உயிர்ப்பிக்கிறோம். நாம் மட்டுமே காயப்படுத்தி, காயப்பட்டவனைக் குணமாக்குகிறோம். நம் கையில் அகப்பட்டோரைத் தப்புவிப்பார் இல்லை.
40. நம் கையை மேலே உயர்த்தி: இதோ நாம் நித்திய காலமாய் வாழ்கிறவர் என்போம்.
41. நாம் மின்னலைப்போல் நமது வாளைக் கூராக்கி நம் கையில் நியாயத்தைப் பிடித்துக்கொண்டு வருவோமாயின், நம் பகைவரிடம் பழிவாங்கி, நம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்போமன்றோ ?
42. கொலையுண்டவர்களின் இரத்தத்திற்காகவும் சிறைப்பட்ட தலையில் கவசமில்லாப் பகைவரின் இரத்தத்திற்காகவும் நம் அம்புகளை இரத்தவெறி கொள்ளச் செய்து, நம் வாள் இறைச்சியை உண்ணச் செய்வோம் என்பார்.
43. மக்களே, அவருடைய குடிகளைப் போற்றிப் புகழுங்கள். எனென்றால், அவர் தம் ஊழியர்களின் இரத்தத்திற்குப் பழி வாங்கி, அவர்களுடைய பகைவர்களுக்குப் பதிலளித்து, தம் குடிகளுடைய நாட்டின்மேல் இரக்கம் உள்ளவராவார் என்றார்.
44. மோயீசனும் நூனின் புதல்வன் யோசுவாவும் வந்து, இந்தச் சங்கீதத்தின் வாக்கியங்களையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொல்லத்தொடங்கினார்கள்.
45. பேசி முடித்த பின் மோயீசன் இஸ்ராயேல் சபையார் எல்லாரையும் நோக்கி:
46. இந்தத் திருச்சட்டத்தின் வார்த்தைகளையெல்லாம் கவனமாய்க் கற்றுக்கொள்ளக்கடவீர்கள். உங்கள் பிள்ளைகளும் அவைகளைக் கைக்கொண்டு அனுசரிக்கும்படி கவனமாயிருக்கச் சொல்லுங்கள். இந்தத் திருச்சட்டத்தின் எழுதப்பட்ட எல்லா வார்த்தைகளின்படியும் நடந்துகொள்ள வேண்டுமென்று அவர்களுக்குக் கற்பிக்கக்கடவீர்கள். அவை உண்மையானவை என்று நானே உறுதியளிக்கிறேன்.
47. அவை உங்களுக்குக் கற்பிக்கப்பட்டது வீணாய் அன்று; உங்களுக்கு அவை வாழ்வாய் இருக்கும்படியாகவும், நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டுப் புகவிருக்கிற நாட்டில் நீடூழி வாழும்படியாகவுமே (அந்தச் சட்டத்தின் கட்டளைகள் விதிக்கப்பட்டன) என்று சொல்லிப் பேச்சை முடித்தார்.
48. அந்த நாளிலே ஆண்டவர் மோயீசனை நோக்கி:
49. நீ எரிக்கோ (நகரத்திற்கு) எதிரான மோவாப் நாட்டிலுள்ள இந்த அபரிம் -- அதாவது: கடத்தல் -- என்னப்பட்ட மலைகளில் நெபோ மலையின்மேல் ஏறி, நாம் இஸ்ராயேல் மக்களுக்கு உடைமையாகக் கொடுக்கவிருக்கும் கானான் நாட்டைப் பார்த்துவிட்டு, அவ்விடத்தில்தானே உயிரை விடுவாய்.
50. உள்ளபடி நீயும் ஆரோனும் - நீங்கள் இருவருமே -சீன்பாலைவனத்லுள்ள காதேஸில் வாக்குவாதத் தண்ணீர் என்னும் இடத்திலே நமக்கு விரோதமாய் நடந்து, இஸ்ராயேல் மக்களுக்குள்ளே நம்மைப் பரிசுத்தம் செய்யாமல் நமது கட்டளையை மீறினீர்கள்.
51. எனவே, உன் சகோதரனாகிய ஆரோன் ஓர்ப் என்னும் மலையிலே இறந்து தன் முன்னோரிடம் சேர்க்கப்பட்டதுபோல, நீ ஏறப்போகிற இந்த மலையில் ஏறிப்போய் இறந்து உன் முன்னோருடன் சேர்க்கப்படுவாய்.
52. நான் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற நாட்டை நீ பார்ப்பாய்; பார்த்தாலும், அதற்குள் நீ புகுவதில்லை என்று திருவுளம்பற்றினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 34 Chapters, Current Chapter 32 of Total Chapters 34
உபாகமம் 32:34
1. நான் பேசபோகிறேன்; வானங்களே, செவி கொடுங்கள். பூவுலகே, என் வாய்மொழியை உற்றுக்கேட்பாயாக.
2. (வானத்து) மழை ஏராளமாய்ப் பொழிவதுபோல் என் அறிவுரை மேன்மேலும் பொழிவதாக. பனித்துளிகள் புல்லின் மேலும், மழைத்துளிகள் சமவெளிகளின் மேலும் இறங்குவதுபோல என் வாக்கியங்கள் இறங்குவனவாக.
3. நான் ஆண்டவருடைய திருப்பெயரைப் போற்றிப் புகழ்ந்து வருவதனால் நம்முடைய கடவுளை மேன்மைப்படுத்திப் பாராட்டக்கடவீர்கள்.
4. அவர் செய்யும் செயல்கள் உத்தமமானவை. அவருடைய வழிகளெல்லாம் நேர்மையானவை. கடவுள் பிரமாணிக்கமுள்ளவர். அவர்பால் யாதொரு பழுதுமில்லை. அவர் நீதி நிதானமுள்ள கடவுள்.
5. அவர்களோ அவருக்கு விரோதமாய்ப் பாவத்தைக் கட்டிக்கொண்டார்கள். அவர்கள் தீட்டுள்ளவர்களாயிருக்கையிலே அவருடைய பிள்ளைகளாயிராமல் கொடிய தீய மக்களாய் இருந்ததார்கள். மதிகெட்ட மூடமக்களே,
6. ஆண்டவருக்கு இப்படியா நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் ? உன்னை ஆட்கொண்ட தந்தை அவர் அல்லரோ ? உன்னைப் படைத்து, உருவாக்கித் தமதாக்கினவர் அவர் அல்லரோ ?
7. ஆரம்ப நாட்களை நினைத்துப்பார்; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற ஆண்டுகளைக் கவனித்துப்பார். உன் தந்தையைக் கேள்; அவன் உனக்கு அறிவிப்பான். உன் பெரியோர்களைக் கேள்; அவர்கள் உனக்கு மறுமொழி சொல்வார்கள்.
8. மிகவும் உன்னதமானவர் வெவ்வேறு இனத்தவருக்கு வெவ்வேறு உரிமைகளைப் பங்கிட்டு ஆதாமின் புதல்வரை வெவ்வேறாகப் பிரித்தபொழுது, இஸ்ராயேலின் புதல்வருடைய கோத்திரத் தொகைக்குத் தக்கதாகவே எல்லா இனத்தாரின் எல்லைகளையும் திட்டம் செய்தார்.
9. ஆண்டவருடைய மக்களோ அவருடைய உரிமை; யாக்கோபோ அவருடைய உடைமையின் சங்கிலியாம்.
10. அவர் பாழான நாட்டிலும் பயங்கரத்துக்குரிய ஆளற்ற பரந்த இடத்திலும் அவர்களைக் கண்டுபிடித்தார். அவர் சுற்று வழியாய் அவர்களை நடத்தி, உணர்த்தி, தமது கண்மணியைப்போல் காத்தருளினார்.
11. கழுகு தன் குஞ்சுகளின்மேல் பறந்து அவைகளைப் பறக்கும்படி தூண்டுவது போலவும், தன் இறக்கைகளை விரித்துக் குஞ்சுகளை அவற்றின்மேல் வைத்துச் சுமப்பது போலவும்,
12. ஆண்டவர் ஒருவரே அவர்களை நடத்தினார். அந்நிய கடவுள் அவர்களோடு இருந்ததேயில்லை.
13. அவர் உயர்ந்த இடத்தன்மேல் அவர்களை வைத்து, வயலில் விளையும் பலன்களை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார். கல்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவர்கள் உண்ணும்படி செய்தார்.
14. பசுவின் வெண்ணெயையும் ஆடுகளின் பாலையும், பாசானின் புதல்வர்களுடைய ஆட்டுக்குட்டி, ஆட்டுக்கிடாய்களுடைய கொழுப்பையும், கொழுத்த வெள்ளாடுகளையும், சிறந்த கோதுமையையும் உண்ணவும், இரத்தம் போன்ற தன்னியல்பான கொடிமுந்திரிப் பழச்சாற்றைக் குடிக்கவும் அவர்களுக்குத் தந்தருளினார்.
15. அன்பு செய்யப்பட்ட ( மகன் ) கொழுத்துப் போய் உதைக்கத் தொடங்கினான். அவன் கொழுத்துப் பருத்தபோது, தன்னைக் காக்கும் கடவுளுக்கு முதுகைக் காட்டி விலகினான்.
16. அந்நிய தேவர்களை வணங்கியதனாலே அவர்கள் அவருக்கு எரிச்சலை மூட்டி, அருவருப்பானவைகளால் அவரது கோபத்தைத் தூண்டி விட்டார்கள்.
17. அவர்கள் கடவுளுக்குப் பலியிடுவதை விட்டு, தாங்கள் அறியாத தேவார்களாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். புதிதாய்த் தோன்றிய, தங்கள் மூதாதையர் கும்பிடாத, புதுத் தெய்வங்களுக்கே (வழிபாடு செய்தார்கள்).
18. உன்னைப் பெற்ற கடவுளை விட்டு, உன்னை உருவாக்கிய ஆண்டவரை மறந்து விட்டாயே!
19. ஆண்டவர் அதனைக் கண்டார். தம்முடைய புதல்வரும் புதல்வியரும் தமது கோபத்தை மூட்டியதினால் அவர் குரோதமுள்ளவராகிக் கூறினார்:
20. ஆ! இவர்கள் கெட்டார்கள்; வஞ்சனையுள்ள புதல்வரானார்கள்; ஆதலால், நம் முகத்தை அவர்களுக்கு மறைத்து, அவர்களுடைய முடிவு எப்படிப்பட்டதாய் இருக்குமோவென்று பார்போம்.
21. அவர்கள் தெய்வமல்லாதவைகளாலும் நமக்கு எரிச்சல் வருவித்து, தங்கள் வீணான தீச் செயல்களாலும் நமக்கு முடிவு உண்டாகச் செய்தார்களே; இதோ நம் மக்களென்று மதிக்கப்படாதவர்கள் மூலமாய் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட இனத்தவர்களாலேயே அவர்களுக்குக் கோபம் உண்டாகச் செய்வோம்.
22. நம்முடைய கோபத்தின் நெருப்பு மூண்டது. அது நாகத்தின் அடிவரையிலும் எரியும். அது நிலத்தையும் அதன் விளைச்சலையும் எரித்து விடுவதுமன்றி, மலைகளின் அடித்தளங்களையும் வேகச் செய்யும்.
23. நாம் பற்பல தீங்குகளை அவர்கள்மீது குவியச் செய்து, நம்முடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் எய்து தீர்போம்.
24. அவர்கள் பசி மிகுதியால் வாடி மடிந்து போவார்கள். பறவைகள் தங்கள் கொடிய அலகினால் அவர்களைக் கொத்தித் தின்னும். அவர்களை வதைக்கக் கூரிய பற்களையுடைய கொடிய உயிரினங்களையும், பாம்புகளையும் அவர்கள்பால் ஏவுவோம்.
25. வெளியே வாளும் உள்ளே மிக்க அச்சமும், இளைஞளையும் கன்னியையும் பாலுண்ணும் குழந்தையையும் கிழவனையும் அழிக்கும்.
26. நாம்: அவர்கள் எங்கே என்றோம். மனிதருக்குள் அவர்கள் பெயர் முதலாய் மறைந்து போகும்படி செய்வோம்.
27. ஆனால், அவர்களுடைய பகைவர்களின் குரோதத்தைப் பற்றி நாம் பொறுத்துக் கொண்டோம். ஒரு வேளை அவர்கள் அகங்காரம் கொண்டு: நாங்கள் இந்தக் காரியங்களை எல்லாம் எங்கள் வலுவுள்ள சொந்தக் கையினால் செய்தோமேயன்றி ஆண்டவர் அவற்றைச் செய்தாரல்லர் என்று வீம்பு பேசக்கூடும்.
28. அவர்கள் மதிகெட்ட விவேகமற்ற மக்களல்லரோ ?
29. ஆ! அவர்கள் ஞானத்தை அடைவது எப்போது ? அவர்களுக்கு எப்போதுதான் அறிவு உண்டாகும் ? தங்களுக்கு என்னகதி வரப் போகிறதென்று அவர்கள் யோசிக்காதிருக்கிற தென்ன ?
30. ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவது இயலுமோ ? இரண்டுபேர் பதினாயிரம் வீரரைத் தோற்கடிப்பது கூடுமானதோ ? தங்கள் கடவுள் அவர்களை ஒப்புக்கொடுப்பதினாலும் ஆண்டவர் அவர்களை அடைப்பதினாலும் தானே அது நிகழக்கூடும் ?
31. அவர்களுடைய கடவுளைப் போலன்று நம்முடைய கடவுள், இது உண்மையென நம் பகைவர்களே சாட்சியாயிருக்கின்றனர்.
32. அவர்களுடைய கொடிமுந்திரி சோதோமிலும் கொமோரா வயல்வெளிகளிலும் பயிராகிவிட்டது. அவர்களுடைய கொடிமுந்திரிப் பழம் பிஞ்சுப்பழமே; அவர்களுடைய கொடிமுந்திரிக் குலைகள் கைப்பும் கசப்பும் உள்ளவைகளே.
33. அவர்களுடைய கொடிமுந்திரிப் பழச்சாறு வேதாளங்களின் பித்தமும் நச்சுப் பாம்புகளின் கொடிய நஞ்சும் போன்றது.
34. இது நம்மிடத்தில் சேமிக்கப்பட்டு நம் கருவூலங்களில் வைத்து முத்திரை போடப்பட்டிருக்கிறதன்றோ ?
35. பழிக்குப் பழி வாங்குவதும், ஏற்ற காலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடச் செய்து, பதிலுக்குப் பதில் அளிப்பதும் நம்முடைய தொழிலே. அவர்களுடைய அழிவு நாள் இதோ நெருங்கியிருக்கிறது, குறிக்கப்பட்ட காலங்கள் ஓடி வருகின்றன.
36. ஆண்டவர் தம் மக்களை நியாயந் தீர்த்து, தமக்கு அன்பு செய்து பணி புரிவோர்மேல் மனம் இறங்குவார்; அவர்களுக்குக் கை தளர்ந்ததென்றும், அடைக்கப்பட்டவர்கள் முதலாய்ச் சோர்ந்து போனார்களென்றும், மீதியானவர்கள் சோகமுற்றுச் சிதைந்தார்களென்றும் காண்பார்.
37. அப்பொழுது அவர்: அவர்கள் நம்பியிருந்த தேவர்கள் எங்கே ?
38. இவர்களுக்கு தாங்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பை அவர்கள் தின்றார்களே; பானப் பலிகளின் கொடிமுந்திரிப்பழச் சாற்றைக் குடித்தார்களே. இப்போது (அந்தத் தேவர்கள்) வந்து துன்பத்தில் அகப்பட்ட அவர்களுக்கு உதவி செய்யட்டும் (பார்ப்போம்) சிந்தித்துப் பாருங்கள். நாம் மட்டுமே இருக்கிறவர்.
39. நம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. நாம் மட்டுமே கொல்லுகிறோம். உயிர்ப்பிக்கிறோம். நாம் மட்டுமே காயப்படுத்தி, காயப்பட்டவனைக் குணமாக்குகிறோம். நம் கையில் அகப்பட்டோரைத் தப்புவிப்பார் இல்லை.
40. நம் கையை மேலே உயர்த்தி: இதோ நாம் நித்திய காலமாய் வாழ்கிறவர் என்போம்.
41. நாம் மின்னலைப்போல் நமது வாளைக் கூராக்கி நம் கையில் நியாயத்தைப் பிடித்துக்கொண்டு வருவோமாயின், நம் பகைவரிடம் பழிவாங்கி, நம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்போமன்றோ ?
42. கொலையுண்டவர்களின் இரத்தத்திற்காகவும் சிறைப்பட்ட தலையில் கவசமில்லாப் பகைவரின் இரத்தத்திற்காகவும் நம் அம்புகளை இரத்தவெறி கொள்ளச் செய்து, நம் வாள் இறைச்சியை உண்ணச் செய்வோம் என்பார்.
43. மக்களே, அவருடைய குடிகளைப் போற்றிப் புகழுங்கள். எனென்றால், அவர் தம் ஊழியர்களின் இரத்தத்திற்குப் பழி வாங்கி, அவர்களுடைய பகைவர்களுக்குப் பதிலளித்து, தம் குடிகளுடைய நாட்டின்மேல் இரக்கம் உள்ளவராவார் என்றார்.
44. மோயீசனும் நூனின் புதல்வன் யோசுவாவும் வந்து, இந்தச் சங்கீதத்தின் வாக்கியங்களையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொல்லத்தொடங்கினார்கள்.
45. பேசி முடித்த பின் மோயீசன் இஸ்ராயேல் சபையார் எல்லாரையும் நோக்கி:
46. இந்தத் திருச்சட்டத்தின் வார்த்தைகளையெல்லாம் கவனமாய்க் கற்றுக்கொள்ளக்கடவீர்கள். உங்கள் பிள்ளைகளும் அவைகளைக் கைக்கொண்டு அனுசரிக்கும்படி கவனமாயிருக்கச் சொல்லுங்கள். இந்தத் திருச்சட்டத்தின் எழுதப்பட்ட எல்லா வார்த்தைகளின்படியும் நடந்துகொள்ள வேண்டுமென்று அவர்களுக்குக் கற்பிக்கக்கடவீர்கள். அவை உண்மையானவை என்று நானே உறுதியளிக்கிறேன்.
47. அவை உங்களுக்குக் கற்பிக்கப்பட்டது வீணாய் அன்று; உங்களுக்கு அவை வாழ்வாய் இருக்கும்படியாகவும், நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டுப் புகவிருக்கிற நாட்டில் நீடூழி வாழும்படியாகவுமே (அந்தச் சட்டத்தின் கட்டளைகள் விதிக்கப்பட்டன) என்று சொல்லிப் பேச்சை முடித்தார்.
48. அந்த நாளிலே ஆண்டவர் மோயீசனை நோக்கி:
49. நீ எரிக்கோ (நகரத்திற்கு) எதிரான மோவாப் நாட்டிலுள்ள இந்த அபரிம் -- அதாவது: கடத்தல் -- என்னப்பட்ட மலைகளில் நெபோ மலையின்மேல் ஏறி, நாம் இஸ்ராயேல் மக்களுக்கு உடைமையாகக் கொடுக்கவிருக்கும் கானான் நாட்டைப் பார்த்துவிட்டு, அவ்விடத்தில்தானே உயிரை விடுவாய்.
50. உள்ளபடி நீயும் ஆரோனும் - நீங்கள் இருவருமே -சீன்பாலைவனத்லுள்ள காதேஸில் வாக்குவாதத் தண்ணீர் என்னும் இடத்திலே நமக்கு விரோதமாய் நடந்து, இஸ்ராயேல் மக்களுக்குள்ளே நம்மைப் பரிசுத்தம் செய்யாமல் நமது கட்டளையை மீறினீர்கள்.
51. எனவே, உன் சகோதரனாகிய ஆரோன் ஓர்ப் என்னும் மலையிலே இறந்து தன் முன்னோரிடம் சேர்க்கப்பட்டதுபோல, நீ ஏறப்போகிற இந்த மலையில் ஏறிப்போய் இறந்து உன் முன்னோருடன் சேர்க்கப்படுவாய்.
52. நான் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற நாட்டை நீ பார்ப்பாய்; பார்த்தாலும், அதற்குள் நீ புகுவதில்லை என்று திருவுளம்பற்றினார்.
Total 34 Chapters, Current Chapter 32 of Total Chapters 34
×

Alert

×

tamil Letters Keypad References