தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உபாகமம்
1. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டில் கொலை செய்யப்பட்ட ஒரு மனிதனுடைய பிணம் வெளியிலே கிடக்கக் கண்டு, கொலை செய்தவன் இன்னனென்று தெரியாத விடத்து,
2. பெரியோர்களும் நீதிபதிகளும் வந்து, பிணம் கிடக்கிற இடத்துக்கும், சுற்றிலுமுள்ள அந்தந்த நகரங்களுக்கும் எவ்வளவு தூரமென்று அளப்பார்களாக.
3. இப்படி அளந்து, எந்த நகரம் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மிக அண்மை என்று நிச்சயித்துக் கொண்டார்களோ அந்த நகரத்துப் பெரியோர்கள், நுகத்தடியில் இன்னும் பிணைக்கப்படாததும் கலப்பையால் நிலத்தை உழாததுமான ஒரு கிடாரியை மந்தையிலிருந்து தேர்ந்து கொண்டு,
4. உழுது விதையாத கல்லும் கரடுமான ஒரு பள்ளத்தாக்கில் அதைக் கொண்டுபோய் அதன் தலையை அங்கே வெட்டக்கடவார்கள்.
5. அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் தமக்குப் பணி புரியவும், தமது பெயரால் ஆசிமொழி சொல்லவும், எல்லா வழக்கையும் சுத்தம் அசுத்தம் முதலிய யாவையும் தங்கள் வாக்கினாலே தீர்ப்பிடவும் தாமே தேர்ந்துகொண்ட அந்த லேவி புதல்வராகிய குருக்கள் அவ்விடம் வருவார்கள்.
6. (அவர்களோடு கூட) அந்நகரத்துப் பெரியார்களும் கொல்லப்பட்டவன் அருகில் வந்து, பள்ளத்தாக்கிலே கழுத்து அறுக்கப்பட்ட கிடாரியின் மீது தங்கள் கைளைக் கழுவி:
7. எங்கள் கைகள் இவ்விரத்தத்தைச் சிந்தினதுமில்லை; எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை.
8. ஆண்டவரே, நீர் மீட்டுக் காப்பாற்றிய இஸ்ராயேலர் ஆகிய உம் மக்கள்மீது இரக்கமாயிரும். இஸ்ராயேலர் ஆகிய உம்மக்கள் நடுவில் குற்றமில்லா இரத்தப் பழியைச் சுமத்தாதேயும் என்று வேண்டக்கடவார்கள். அப்பொழுது இரத்தப் பழி அவர்கள் மீது இராமல் நீங்கிவிடும்.
9. நீயோ ஆண்டவருடைய கட்டளைப்படி செய்த பின்பு, குற்றமற்றவனுடைய இரத்தப்பழிக்கு உட்படாதவனாய் இருப்பாய்.
10. நீ உன் பகைவர்களோடு போர் செய்யப் போயிருக்க, உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கைவயப்படுத்தியதனால் அவர்களை நீ சிறைப்பிடித்து வந்து,
11. சிறைப்பட்டவர்களில் வடிவழகியான ஒரு பெண்ணைக் கண்டு அவள்மீது காதல் கொண்டு அவளை மணந்துகொள்ள விரும்புவாயாயின்,
12. அவளை உன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகலாம். அவளோ தன் தலைமயிரைக் கத்தரித்துத் தன் நகரங்களையும் களைந்து,
13. தான் பிடிபட்டபோது அணிந்திருந்த ஆடையை நீக்கி, உன் வீட்டில் உட்கார்ந்தவளாய் ஒருமாதம் வரையிலும் தன் தாய் தந்தையரை நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். பிறகு நீ அவளோடு படுத்துக்கொண்டபின் அவளை உனக்கு மனைவி ஆக்கிக் கொள்வாய்.
14. அதன் பின்பு நீ அவள்மேல் வைத்திருந்த அன்பு அற்றுப்போகுமாயின், அவளைத் தன்னுரிமையோடு போகவிடு. நீ அவளைத் தாழ்வுபடுத்தினபடியால், அவளை விலைக்கு விற்கவும் வேண்டாம்; உன் அதிகாரத்தால் அவளைத் துன்புறத்துதலும் ஆகாது.
15. இரண்டு மனைவிகளையுடையவன் ஒருத்தியின் மேல் விருப்பமாகவும் மற்றொருத்தியின்மேல் வெறுப்பாகவும் இருக்கிறான். இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்கள். வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் மூத்த மகனாய் இருப்பானாயின்,
16. அவன் தனக்குண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிட வேண்டிய நாளில், வெறுக்கப்பட்டவளுடைய புதல்வனுக்கு மூத்த மகனுக்குள்ள உரிமையைக் கொடுக்க வேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்ட மனைவியின் புதல்வனுக்கு அதைக் கண்டிப்பாய்க் கொடுக்கலாகாது.
17. அவன் வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த புதல்வனையே தன் மூத்த மகனாகக்கொண்டு, தன் சொத்துகளிலெல்லாம் இரட்டையான பாகம் அவனுக்குக் கொடுக்கவேண்டு. உள்ளபடி அவன் தந்தைக்கு முதற்புதல்வனாயிருக்கிறதனால் மூத்த மகனுக்குள்ள உரிமை அவனுக்கே உரியதாம்.
18. தாய் தந்தையர் சொல்லைக் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும் அவர்களுக்கு அடங்காமலும் போகிற முரடனும் அகந்தையுள்ளவனுமான ஒரு பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
19. தாயும் தந்தையும் அவனைப் பிடித்து, அந்த நகரத்தின் பெரியோரிடத்தில் நீதி மன்றத்திற்குக் கூட்டிக்கொண்டு போய்:
20. எங்கள் மகனாகிய இவன் குறும்பும் அகந்தையுமுள்ளவனாய் எங்கள் அறிவுரைகளைக் கேளாமல் தள்ளிக் கெட்ட நடத்தையுள்ளவனாயிருக்கிறான்; பேருண்டிக்காரனும் குடியனுமாய் இருக்கிறான் என்று சொல்வார்கள்.
21. அப்பொழுது அவன் சாகும்படி அந்நகரத்தில் வாழ்வோர் எல்லாரும் அவன்மேல் கல்லெறிவார்கள். இப்படியே தீமையை உங்கள் நடுவிலே நின்று விலக்கிவிடவே, இஸ்ராயேலர் எல்லாரும் அதைக் கேள்வியுற்று அஞ்சுவார்கள்.
22. ஒரு மனிதன் சாவுக்கு உரிய பாவத்தைக் கட்டிக் கொண்டான்: அவன் கொலை செய்யப்படவேண்டுமென்று தீர்ப்பு உண்டாகித் தூக்குமரத்திலே தூக்கப்பட்ட பிற்பாடு,
23. இரவிலே அவன் பிணம் மரத்திலே தொங்கி நிற்கக் கூடாது. அதே நாளில் அவனை அடக்கம் செய்யவேண்டும். ஏனென்றால், மரத்திலே தொங்குகிறவன் கடவுளாலே சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய் அளிக்கும் நாட்டைத் தீட்டுப்படுத்துதல் கண்டிப்பாய் ஆகாது.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 34 Chapters, Current Chapter 21 of Total Chapters 34
உபாகமம் 21:15
1. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டில் கொலை செய்யப்பட்ட ஒரு மனிதனுடைய பிணம் வெளியிலே கிடக்கக் கண்டு, கொலை செய்தவன் இன்னனென்று தெரியாத விடத்து,
2. பெரியோர்களும் நீதிபதிகளும் வந்து, பிணம் கிடக்கிற இடத்துக்கும், சுற்றிலுமுள்ள அந்தந்த நகரங்களுக்கும் எவ்வளவு தூரமென்று அளப்பார்களாக.
3. இப்படி அளந்து, எந்த நகரம் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மிக அண்மை என்று நிச்சயித்துக் கொண்டார்களோ அந்த நகரத்துப் பெரியோர்கள், நுகத்தடியில் இன்னும் பிணைக்கப்படாததும் கலப்பையால் நிலத்தை உழாததுமான ஒரு கிடாரியை மந்தையிலிருந்து தேர்ந்து கொண்டு,
4. உழுது விதையாத கல்லும் கரடுமான ஒரு பள்ளத்தாக்கில் அதைக் கொண்டுபோய் அதன் தலையை அங்கே வெட்டக்கடவார்கள்.
5. அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் தமக்குப் பணி புரியவும், தமது பெயரால் ஆசிமொழி சொல்லவும், எல்லா வழக்கையும் சுத்தம் அசுத்தம் முதலிய யாவையும் தங்கள் வாக்கினாலே தீர்ப்பிடவும் தாமே தேர்ந்துகொண்ட அந்த லேவி புதல்வராகிய குருக்கள் அவ்விடம் வருவார்கள்.
6. (அவர்களோடு கூட) அந்நகரத்துப் பெரியார்களும் கொல்லப்பட்டவன் அருகில் வந்து, பள்ளத்தாக்கிலே கழுத்து அறுக்கப்பட்ட கிடாரியின் மீது தங்கள் கைளைக் கழுவி:
7. எங்கள் கைகள் இவ்விரத்தத்தைச் சிந்தினதுமில்லை; எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை.
8. ஆண்டவரே, நீர் மீட்டுக் காப்பாற்றிய இஸ்ராயேலர் ஆகிய உம் மக்கள்மீது இரக்கமாயிரும். இஸ்ராயேலர் ஆகிய உம்மக்கள் நடுவில் குற்றமில்லா இரத்தப் பழியைச் சுமத்தாதேயும் என்று வேண்டக்கடவார்கள். அப்பொழுது இரத்தப் பழி அவர்கள் மீது இராமல் நீங்கிவிடும்.
9. நீயோ ஆண்டவருடைய கட்டளைப்படி செய்த பின்பு, குற்றமற்றவனுடைய இரத்தப்பழிக்கு உட்படாதவனாய் இருப்பாய்.
10. நீ உன் பகைவர்களோடு போர் செய்யப் போயிருக்க, உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கைவயப்படுத்தியதனால் அவர்களை நீ சிறைப்பிடித்து வந்து,
11. சிறைப்பட்டவர்களில் வடிவழகியான ஒரு பெண்ணைக் கண்டு அவள்மீது காதல் கொண்டு அவளை மணந்துகொள்ள விரும்புவாயாயின்,
12. அவளை உன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகலாம். அவளோ தன் தலைமயிரைக் கத்தரித்துத் தன் நகரங்களையும் களைந்து,
13. தான் பிடிபட்டபோது அணிந்திருந்த ஆடையை நீக்கி, உன் வீட்டில் உட்கார்ந்தவளாய் ஒருமாதம் வரையிலும் தன் தாய் தந்தையரை நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். பிறகு நீ அவளோடு படுத்துக்கொண்டபின் அவளை உனக்கு மனைவி ஆக்கிக் கொள்வாய்.
14. அதன் பின்பு நீ அவள்மேல் வைத்திருந்த அன்பு அற்றுப்போகுமாயின், அவளைத் தன்னுரிமையோடு போகவிடு. நீ அவளைத் தாழ்வுபடுத்தினபடியால், அவளை விலைக்கு விற்கவும் வேண்டாம்; உன் அதிகாரத்தால் அவளைத் துன்புறத்துதலும் ஆகாது.
15. இரண்டு மனைவிகளையுடையவன் ஒருத்தியின் மேல் விருப்பமாகவும் மற்றொருத்தியின்மேல் வெறுப்பாகவும் இருக்கிறான். இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்கள். வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் மூத்த மகனாய் இருப்பானாயின்,
16. அவன் தனக்குண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிட வேண்டிய நாளில், வெறுக்கப்பட்டவளுடைய புதல்வனுக்கு மூத்த மகனுக்குள்ள உரிமையைக் கொடுக்க வேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்ட மனைவியின் புதல்வனுக்கு அதைக் கண்டிப்பாய்க் கொடுக்கலாகாது.
17. அவன் வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த புதல்வனையே தன் மூத்த மகனாகக்கொண்டு, தன் சொத்துகளிலெல்லாம் இரட்டையான பாகம் அவனுக்குக் கொடுக்கவேண்டு. உள்ளபடி அவன் தந்தைக்கு முதற்புதல்வனாயிருக்கிறதனால் மூத்த மகனுக்குள்ள உரிமை அவனுக்கே உரியதாம்.
18. தாய் தந்தையர் சொல்லைக் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும் அவர்களுக்கு அடங்காமலும் போகிற முரடனும் அகந்தையுள்ளவனுமான ஒரு பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
19. தாயும் தந்தையும் அவனைப் பிடித்து, அந்த நகரத்தின் பெரியோரிடத்தில் நீதி மன்றத்திற்குக் கூட்டிக்கொண்டு போய்:
20. எங்கள் மகனாகிய இவன் குறும்பும் அகந்தையுமுள்ளவனாய் எங்கள் அறிவுரைகளைக் கேளாமல் தள்ளிக் கெட்ட நடத்தையுள்ளவனாயிருக்கிறான்; பேருண்டிக்காரனும் குடியனுமாய் இருக்கிறான் என்று சொல்வார்கள்.
21. அப்பொழுது அவன் சாகும்படி அந்நகரத்தில் வாழ்வோர் எல்லாரும் அவன்மேல் கல்லெறிவார்கள். இப்படியே தீமையை உங்கள் நடுவிலே நின்று விலக்கிவிடவே, இஸ்ராயேலர் எல்லாரும் அதைக் கேள்வியுற்று அஞ்சுவார்கள்.
22. ஒரு மனிதன் சாவுக்கு உரிய பாவத்தைக் கட்டிக் கொண்டான்: அவன் கொலை செய்யப்படவேண்டுமென்று தீர்ப்பு உண்டாகித் தூக்குமரத்திலே தூக்கப்பட்ட பிற்பாடு,
23. இரவிலே அவன் பிணம் மரத்திலே தொங்கி நிற்கக் கூடாது. அதே நாளில் அவனை அடக்கம் செய்யவேண்டும். ஏனென்றால், மரத்திலே தொங்குகிறவன் கடவுளாலே சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய் அளிக்கும் நாட்டைத் தீட்டுப்படுத்துதல் கண்டிப்பாய் ஆகாது.
Total 34 Chapters, Current Chapter 21 of Total Chapters 34
×

Alert

×

tamil Letters Keypad References