தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
1. ஐந்து நாளைக்குப்பின், தலைமைக் குரு அனனியா மூப்பர் சிலரோடும், தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞனோடும் செசரியாவுக்கு வந்தார். அவர்கள் ஆளுநனிடம் சின்னப்பருக்கு எதிராக முறையிட்டார்கள்.
2. சின்னப்பரை அங்குக் கொண்டுவந்து நிறுத்தியதும், தெர்த்துல்லு அவர்மேல் இவ்வாறு குற்றம் சாட்டத் தொடங்கினான்: "மாட்சிமை மிக்க பெலிக்ஸ் அவர்களே, நாடெங்கும் பேரமைதி நிலவுவது உம்மாலே, எங்கும் எத்துறையிலும் இந்நாடு சீரடைந்து ஓங்குவது உமது பராமரிப்பினாலே, இதைமிகுந்த நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோம்.
3. இனியும், தங்கள் நேரத்தைப் போக்காமல்,
4. நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை உமக்கே உரித்தான கருணையோடு கேட்கக் கோருகின்றோம்..
5. இவன் ஒரு பெரும் தொல்லை. யூதர்களிடையே உலகெங்கும் கலகம் மூட்டுகிறவன்.
6. நசரேயருடைய கட்சியில் ஒரு தலைவன் எனக் கண்டோம்.
7. கோயிலைக்கூட இவன் மாசுபடுத்த முயன்றான்.
8. ஆகவே, நாங்கள் இவனைப் பிடித்தோம். இவனை விசாரித்தால் நாங்கள் சாட்டுகிற எல்லாக் குற்றங்களையும் நீரே திட்டமாய் அறியக்கூடும்" என்றான்.
9. யூதர்களும் அவனோடு சேர்ந்துகொண்டு, ' இவை யாவும் உண்மைதான் ' என்றார்கள்.
10. அப்போது, சின்னப்பர் பேசும்படி ஆளுநன் சைகை காட்டவே, அவர் கூறியது: "நீர் பல்லாண்டுகளாக இந்நாட்டில் நடுவராயிருக்கின்றீரென அறிவேன். ஆதலால், துணிவோடு என் வழக்கைக் கூறுகிறேன்.
11. நான் இறைவனை வழிபடுவதற்கு யெருசலேம்சென்று இன்னும் பன்னிரண்டு நாட்களுக்கு மேல் ஆகவில்லை. நீர் இதை விசாரித்து அறிந்து கொள்ளலாம்.
12. கோயிலிலாவது செபக்கூடங்களிலாவது, நகரத்தின் எந்த மூலையிலாவது நான் யாரோடாவது வாதாடியதையோ, மக்களிடையே கலகமூட்டியதையோ, யாருமே கண்டதில்லை.
13. இப்போது என்மேல் இவர்கள் சாட்டுகிற குற்றங்களை எண்பிக்க முடியாது.
14. "ஆயினும், ஒன்றை மட்டும் ஏற்றுக்கொள்கிறேன். இவர்கள் மதக் கட்சி என்று அழைக்கும் புது நெறியைப் பின்பற்றி, நான் எங்கள் முன்னோர்களின் கடவுளை வழிபட்டு வருகிறேன். திருச்சட்டத்திலும் இறைவாக்கு நூல்களிலும் உள்ள யாவற்றையும் விசுவசிக்கிறேன்.
15. நீதிமான்களும் அநீதரும் உயிர்த்தெழுவர் என்று இவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பது போலவே, நானும் கடவுளின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
16. இங்ஙனம், நான் கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியோடு நடக்க முயன்று வருகிறேன்.
17. "பல ஆண்டுகளுக்குப்பின், நான் என் இனத்தாருக்குப் பணஉதவி செய்யவும், கோயிலில் காணிக்கை செலுத்தவும் வந்தேன்.
18. காணிக்கை செலுத்தும் போதுதான் என்னைக் கோயிலில் கண்டார்கள். அப்போது நான் தூய்மையாக்கப்பட்ட நிலையில் இருந்தேன். எந்தக் கூட்டத்திலும் எந்தக் கலகத்திலும் நான் சேரவில்லை.
19. ஆனால் ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள் சிலர் அங்கு இருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்களல்லவா உம்மிடம் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.
20. அல்லது இங்கு இருப்பவர்களாவது, நான் தலைமைச் சங்கத்தார் முன் நின்றபோது என்னிடம் கண்ட குற்றத்தைக் கூறட்டும்.
21. அவர்கள் நடுவில் நின்று ' இறந்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து உங்கள்முன் நான் இன்று தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன் ' என்று வெளிப்படையாகச் சொன்னது தவிர, வேறு என்ன குற்றம் கண்டார்கள்?"
22. ஆனால், கிறிஸ்துவ நெறியைப்பற்றி நன்கறிந்திருந்த பெலிக்ஸ், "படைத்தலைவர் லீசியா வந்தபின் உங்கள் வழக்கை விசாரித்து முடிவு செய்வேன்" என விசாரணையை ஒத்திவைத்தான்.
23. சின்னப்பரைக் காவலில் வைக்க நுற்றுவர் தலைவனுக்குக் கட்டளையிட்டான். ஆனால், கடுங்காவல் வேண்டாமென்றும், அவரைச் சார்ந்தவர்கள் பணிவிடை புரிவதைத் தடுக்க வேண்டாமென்றும் கூறினான்.
24. சில நாட்களுக்குப்பின் பெலிக்ஸ், யூதப் பெண்ணான தன் மனைவி துருசில்லாளோடு சிறைக்கு வந்து சின்னப்பரை அழைப்பித்தான். கிறிஸ்து இயேசுவின்மேல் கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள விசுவாசத்தைக் குறித்து அவர் பேச, அவன் கேட்கலானான்.
25. ஆனால் நீதி, கற்பு, வரவிருக்கும் தீர்வை முதலியவை பற்றி அவர் எடுத்துரைத்தபோது பெலிக்ஸ் அச்சமுற்று, "இன்றைக்குப் பேசியதுபோதும், நீ போகலாம், சமயம் வாய்க்கும்போது மீண்டும் உன்னை அழைப்பேன்" என்றான்.
26. ஆனால் சின்னப்பர் தனக்குப் பணம் கொடுப்பார் என பெலிக்ஸ் எதிர்பார்த்ததால், அவரை அடிக்கடி அழைப்பித்து அவரோடு உரையாடி வந்தான்.
27. ஈராண்டுகள் கழித்து, பெலிக்சுக்குப் பின் பொர்க்கியு பெஸ்து ஆளுநன் பதவியேற்றான். பெலிக்ஸ் யூதர்களுக்குத் தயவு காட்ட விரும்பி, சின்னப்பரைச் சிறையிலேயே விட்டுச் சென்றான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 24 of Total Chapters 28
அப்போஸ்தலர்கள் 24:27
1. ஐந்து நாளைக்குப்பின், தலைமைக் குரு அனனியா மூப்பர் சிலரோடும், தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞனோடும் செசரியாவுக்கு வந்தார். அவர்கள் ஆளுநனிடம் சின்னப்பருக்கு எதிராக முறையிட்டார்கள்.
2. சின்னப்பரை அங்குக் கொண்டுவந்து நிறுத்தியதும், தெர்த்துல்லு அவர்மேல் இவ்வாறு குற்றம் சாட்டத் தொடங்கினான்: "மாட்சிமை மிக்க பெலிக்ஸ் அவர்களே, நாடெங்கும் பேரமைதி நிலவுவது உம்மாலே, எங்கும் எத்துறையிலும் இந்நாடு சீரடைந்து ஓங்குவது உமது பராமரிப்பினாலே, இதைமிகுந்த நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோம்.
3. இனியும், தங்கள் நேரத்தைப் போக்காமல்,
4. நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை உமக்கே உரித்தான கருணையோடு கேட்கக் கோருகின்றோம்..
5. இவன் ஒரு பெரும் தொல்லை. யூதர்களிடையே உலகெங்கும் கலகம் மூட்டுகிறவன்.
6. நசரேயருடைய கட்சியில் ஒரு தலைவன் எனக் கண்டோம்.
7. கோயிலைக்கூட இவன் மாசுபடுத்த முயன்றான்.
8. ஆகவே, நாங்கள் இவனைப் பிடித்தோம். இவனை விசாரித்தால் நாங்கள் சாட்டுகிற எல்லாக் குற்றங்களையும் நீரே திட்டமாய் அறியக்கூடும்" என்றான்.
9. யூதர்களும் அவனோடு சேர்ந்துகொண்டு, ' இவை யாவும் உண்மைதான் ' என்றார்கள்.
10. அப்போது, சின்னப்பர் பேசும்படி ஆளுநன் சைகை காட்டவே, அவர் கூறியது: "நீர் பல்லாண்டுகளாக இந்நாட்டில் நடுவராயிருக்கின்றீரென அறிவேன். ஆதலால், துணிவோடு என் வழக்கைக் கூறுகிறேன்.
11. நான் இறைவனை வழிபடுவதற்கு யெருசலேம்சென்று இன்னும் பன்னிரண்டு நாட்களுக்கு மேல் ஆகவில்லை. நீர் இதை விசாரித்து அறிந்து கொள்ளலாம்.
12. கோயிலிலாவது செபக்கூடங்களிலாவது, நகரத்தின் எந்த மூலையிலாவது நான் யாரோடாவது வாதாடியதையோ, மக்களிடையே கலகமூட்டியதையோ, யாருமே கண்டதில்லை.
13. இப்போது என்மேல் இவர்கள் சாட்டுகிற குற்றங்களை எண்பிக்க முடியாது.
14. "ஆயினும், ஒன்றை மட்டும் ஏற்றுக்கொள்கிறேன். இவர்கள் மதக் கட்சி என்று அழைக்கும் புது நெறியைப் பின்பற்றி, நான் எங்கள் முன்னோர்களின் கடவுளை வழிபட்டு வருகிறேன். திருச்சட்டத்திலும் இறைவாக்கு நூல்களிலும் உள்ள யாவற்றையும் விசுவசிக்கிறேன்.
15. நீதிமான்களும் அநீதரும் உயிர்த்தெழுவர் என்று இவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பது போலவே, நானும் கடவுளின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
16. இங்ஙனம், நான் கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியோடு நடக்க முயன்று வருகிறேன்.
17. "பல ஆண்டுகளுக்குப்பின், நான் என் இனத்தாருக்குப் பணஉதவி செய்யவும், கோயிலில் காணிக்கை செலுத்தவும் வந்தேன்.
18. காணிக்கை செலுத்தும் போதுதான் என்னைக் கோயிலில் கண்டார்கள். அப்போது நான் தூய்மையாக்கப்பட்ட நிலையில் இருந்தேன். எந்தக் கூட்டத்திலும் எந்தக் கலகத்திலும் நான் சேரவில்லை.
19. ஆனால் ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள் சிலர் அங்கு இருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்களல்லவா உம்மிடம் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.
20. அல்லது இங்கு இருப்பவர்களாவது, நான் தலைமைச் சங்கத்தார் முன் நின்றபோது என்னிடம் கண்ட குற்றத்தைக் கூறட்டும்.
21. அவர்கள் நடுவில் நின்று ' இறந்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து உங்கள்முன் நான் இன்று தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன் ' என்று வெளிப்படையாகச் சொன்னது தவிர, வேறு என்ன குற்றம் கண்டார்கள்?"
22. ஆனால், கிறிஸ்துவ நெறியைப்பற்றி நன்கறிந்திருந்த பெலிக்ஸ், "படைத்தலைவர் லீசியா வந்தபின் உங்கள் வழக்கை விசாரித்து முடிவு செய்வேன்" என விசாரணையை ஒத்திவைத்தான்.
23. சின்னப்பரைக் காவலில் வைக்க நுற்றுவர் தலைவனுக்குக் கட்டளையிட்டான். ஆனால், கடுங்காவல் வேண்டாமென்றும், அவரைச் சார்ந்தவர்கள் பணிவிடை புரிவதைத் தடுக்க வேண்டாமென்றும் கூறினான்.
24. சில நாட்களுக்குப்பின் பெலிக்ஸ், யூதப் பெண்ணான தன் மனைவி துருசில்லாளோடு சிறைக்கு வந்து சின்னப்பரை அழைப்பித்தான். கிறிஸ்து இயேசுவின்மேல் கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள விசுவாசத்தைக் குறித்து அவர் பேச, அவன் கேட்கலானான்.
25. ஆனால் நீதி, கற்பு, வரவிருக்கும் தீர்வை முதலியவை பற்றி அவர் எடுத்துரைத்தபோது பெலிக்ஸ் அச்சமுற்று, "இன்றைக்குப் பேசியதுபோதும், நீ போகலாம், சமயம் வாய்க்கும்போது மீண்டும் உன்னை அழைப்பேன்" என்றான்.
26. ஆனால் சின்னப்பர் தனக்குப் பணம் கொடுப்பார் என பெலிக்ஸ் எதிர்பார்த்ததால், அவரை அடிக்கடி அழைப்பித்து அவரோடு உரையாடி வந்தான்.
27. ஈராண்டுகள் கழித்து, பெலிக்சுக்குப் பின் பொர்க்கியு பெஸ்து ஆளுநன் பதவியேற்றான். பெலிக்ஸ் யூதர்களுக்குத் தயவு காட்ட விரும்பி, சின்னப்பரைச் சிறையிலேயே விட்டுச் சென்றான்.
Total 28 Chapters, Current Chapter 24 of Total Chapters 28
×

Alert

×

tamil Letters Keypad References