1. அந்தியோகியாவிலிருந்த சபையிலே இறைவாக்கினர்களும் போதகர்களும் இருந்தனர். அவர்கள், பர்னபா, நீகர் என்னும் சிமெயோன், சிரேனே ஊரான் லூகியு சிற்றரசன், ஏரோதுடன் வளர்ந்த மனாயீன், சவுல் என்பவராவர்.
|
2. ஒரு நாள் அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடுகையில் பரிசுத்த ஆவி, "சவுலையும் பர்னபாவையும் நான் தெரிந்தெடுத்த வேலைக்காக எனக்கென ஒதுக்கிவையுங்கள்" என்று அவர்களுக்குச் சென்னார்.
|
4. இப்படிப் பரிசுத்த ஆவியால் அனுப்பப்பட்ட இவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றனர். அங்கிருந்து சைப்ரஸ் தீவுக்குக் கப்பல் ஏறினர்.
|
5. சாலமி துறையைச் சேர்ந்து யூதர்களின் செபக்கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்து வந்தனர். அருளப்பரைத் தங்களுக்குத் துணையாக அழைத்துச் சென்றனர்.
|
6. தீவு நெடுகப் பயணம் செய்து பாப்போ ஊர்வரை வந்தனர். அங்கே மந்திரவாதியும் போலித் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டனர். அவன் பெயர் பர்யேசு.
|
7. அவன் செர்குயுபவுலு என்ற ஆளுநனின் பரிவாரத்தில் ஒருவன். நல்லறிவுபடைத்த அவ்வாளுநன் பர்னபாவையும் சவுலையும் வரவழைத்து, கடவுளின் வார்த்தையைக் கேட்க ஆவலாயிருந்தான்.
|
8. ஆனால், எலிமா என்னும் அந்த மந்திரவாதி அவர்களை எதிர்த்து, ஆளுநன் விசுவசிப்பதைத் தடுக்க முயற்சி செய்தான். ( எலிமா என்பதற்கு மந்திரவாதி என்பதுதான் பொருள். )
|
10. "சூழ்ச்சியும் வஞ்சகமுமே உருவானவனே! அலகையின் வழிவந்தவனே! நன்மையானதற்கெல்லாம் பகைவனே! ஆண்டவரின் நேர்மையான வழியைப் புரட்டுவதை விட்டுவிடமாட்டாயா
|
11. இதோ! ஆண்டவரின் கை உன்மேல் ஓங்கியிருக்கிறது. நீ ஒளியைக் காணாது கொஞ்சகாலம் குருடனாயிருப்பாய்" என்றார். என்றதும் அவனுக்குப் பார்வை மங்கிற்று. இருள் அவனைச் சூழ்ந்தது. அவன் அங்குமிங்கும் தடவி, தனக்கு வழிகாட்ட ஓர் ஆள் தேடலானான்.
|
13. சின்னப்பரும் அவருடன் இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பல் ஏறி பம்பிலியாவிலுள்ள பெர்கே துறையை அடைந்தனர். அருளப்பர் அவர்களை விட்டுப் பிரிந்து யெருசலேமிற்குத் திரும்பினார்.
|
15. ஓய்வுநாளில் செபக்கூடத்திற்குப் போய் அமர்ந்தனர். திருச்சட்டமும் இறைவாக்குகளும் வாசித்து முடிந்தபின், செபக்கூடத் தலைவர்கள் அவர்களைப் பார்த்து, "சகோதரரே, மக்களுக்கு அறிவுரை கூற ஏதாவது இருந்தால் பேசலாம்" என்றனர்.
|
17. இஸ்ராயேலராகிய இம்மக்களின் கடவுள் நம் முன்னோரைத் தெரிந்தெடுத்தார். நம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறியபோது அவர்களை மேன்மைப்படுத்தினார். ஓங்கிய தம் கை வன்மையால் அவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றி,
|
20. இவையெல்லாம் நடைபெற ஏறக்குறைய நானூற்று ஐம்பது ஆண்டுகளாயின. அதன்பின், இறைவாக்கினரான சாமுவேல் வரை அவர்களுக்கு நடுவர்களை அனுப்பினார்.
|
21. பின்னர் அவர்கள் ஓர் அரசனை ஏற்படுத்துமாறு வேண்டவே, கீஸ் என்பவனின் மகன் சவுலைக் கடவுள் அரசனாக ஏற்படுத்தினார். அவன் பென்யமீன் குலத்தினன்; நாற்பது ஆண்டுகள் ஆண்டான்.
|
22. பிறகு கடவுள் அவனை நீக்கிவிட்டு, தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார். அவரைப்பற்றிக் கடவுள், ' யீசாயின் மகன் தாவீது என் மனத்துக்கு உகந்தவனாய் இருக்கக் கண்டேன். நான் விரும்பியதெல்லாம் அவன் செய்வான் ' என்று நற்சான்று கூறினார்.
|
24. இயேசுவின் வருகைக்குமுன், அருளப்பர் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும், மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று அறிவித்து வந்தார்.
|
25. தம் பணி முடிவுறும் காலத்தில் அருளப்பர், ' நீங்கள் என்னை யாரென நினைக்கிறீர்களோ, அவரல்ல நான். இதோ! ஒருவர் எனக்குப்பின் வருகின்றார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்க நான் தகுதியற்றவன் ' என்றார்.
|
26. "சகோதரரே, ஆபிரகாம் வழி வந்தவர்களே, மற்றும் கடவுளுக்கு அஞ்சுபவர்களே, நமக்கன்றோ இந்த மீட்பைப் பற்றிய செய்தி அனுப்பப்பட்டது.
|
27. யெருசலேம் வாசிகளும், அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறிந்துகொள்ளவில்லை. ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளவில்லை. ஆயினும் அவருக்குத் தீர்ப்பளித்தபோது அவ்வாக்கியங்களை நிறைவேற்றினர்.
|
29. அவரைக் குறித்து எழுதப்பட்டவை அனைத்தும் நிறைவேறிய பின்னர் அவரைக் கழுமரத்திலிருந்து இறக்கி, கல்லறையில் வைத்தனர்.
|
31. அவரும் கலிலேயாவிலிருந்து தம்முடன் யெருசலேம் வந்திருந்தவர்களுக்குப் பல நாட்கள் தோன்றினார். அவர்கள் இப்போது மக்கள்முன் அவருக்குச் சாட்சியாக நிற்கின்றனர்.
|
33. இயேசுவைக் கடவுள் உயிர்ப்பித்து, நம் முன்னோருக்கு அளித்த வாக்குறுதியை அவர்களுடைய மக்களாகிய நமக்கென நிறைவேற்றினார். அதைப்பற்றியே இரண்டாம் சங்கீதத்தில், ' நீர் எம் புதல்வர், இன்று உம்மை யாம் ஈன்றெடுத்தோம் ' என்று எழுதியுள்ளது.
|
34. மேலும், அவர் என்றுமே அழிவுக்கு ஆளாகாதபடி, இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார் என்பதைப் பற்றித்தான், ' தாவீதுக்குக் கூறிய தவறாத வாக்குறுதிகளை உங்களுக்கென நிறைவேற்றுவேன் ' என்று உரைத்தபோது கூறினார்.
|
37. தம் முன்னோர்களுடன் புதைக்கப்பட்டு அழிவுற்றார். ஆனால் யாரைக் கடவுள் எழுப்பினாரோ, அவர் அழிவுறவில்லை. "எனவே, சகோதரரே, இவர் வழியாகவே பாவமன்னிப்பு உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
|
38. இதைத் தெரிந்துகொள்ளுங்கள். மோயீசன் சட்டத்தின் வழியாக உங்கள் குற்றங்கள் எவற்றினின்றும் நீங்கள் விடுபடமுடியவில்லை.
|
41. உங்கள் வாழ்நாளில் நான் ஒன்று செய்வேன். யார் சொன்னாலும் அதை நம்பமாட்டீர்கள் ' என்று இறைவாக்குகளின் நூலில் கூறியுள்ளது உங்களுக்கு நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
|
42. அவர்கள் வெளியே செல்லுகையில் அடுத்த ஓய்வுநாளில் அதைப்பற்றியே பேசும்படி மக்கள் அவர்களைக் கேட்டுக் கொண்டனர்.
|
43. கூட்டம் கலைந்த பின்னர் யூதர் பலரும், யூதமறையைத் தழுவிய புறவினத்தவர் பலரும் சின்னப்பரையும் பர்னபாவையும் பின் தொடர்ந்தனர். இவ்விருவரும் அவர்களுடன் உரையாடி, கடவுளுடைய அருளில் நிலையாயிருக்கும்படி ஊக்குவித்தனர்.
|
45. இக்கூட்டத்தைக் கண்டு, யூதர்கள் பொறாமை நிறைந்தவர்களாய்ச் சின்னப்பரைத் தூற்றி, அவர் சொன்னதை மறுத்துப் பேசினர்.
|
46. சின்னப்பரும் பர்னபாவும் துணிவோடு, "முதலில் உங்களுக்குத்தான் கடவுளின் வார்த்தையைப் போதிக்கவேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் அதைப் புறக்கணித்து, முடிவில்லா வாழ்விற்குத் தகுதியற்றவர்கள் என நீங்களே உங்களுக்குத் தீர்ப்பிட்டுக் கொண்டீர்கள். ஆதலால், இதோ, நாங்கள் உங்களைவிட்டு, 'புறவினத்தார்பால் செல்கிறோம்.
|
47. ஏனெனில், ' உலகின் இறுதி எல்லைவரைக்கும் மீட்பைக் கொண்டு செல்ல புறவினத்தாருக்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினேன் ' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்" என்றனர்.
|
48. புறவினத்தார் இதைக் கேட்டு மகிழ்ந்து ஆண்டவரின் வார்த்தையை மகிமைப்படுத்தினர். முடிவில்லா வாழ்வுக்குக் குறிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசுவாசிகள் ஆயினர்.
|
50. யூதர்களோ யூதமறையைத் தழுவிய பெருங்குடிப் பெண்டிரையும் நகரப் பெரியோர்களையும் தூண்டினர். சின்னப்பருக்கும் பர்னபாவுக்கும் எதிராகக் கலகம் உண்டாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து வெளியேற்றினர்.
|