4. இது நிகழ்ந்தது புளியாத அப்பத் திருவிழா நாட்களில். கைது செய்தபின், அவரைச் சிறையில் வைத்துக் காவல்காக்க நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் ஒப்படைத்தான். பாஸ்கா முடிந்ததும் மக்கள் முன்னிலையில் அவரை விசாரணைக்காக நிறுத்தலாம் என நினைத்தான்.
|
5. இராயப்பர் இவ்வாறு சிறையில் இருக்கையில் திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் இடையறாது மன்றாடிக்கொண்டிருந்தது.
|
6. ஏரோது அவரை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு முந்தினநாள் இரவில், இராயப்பர் இரு விலங்குகள் மாட்டப்பட்டு, இரு படை வீரர்களுக்கிடையே தூங்கிக் கொண்டிருந்தார். காவலர் வாயிலுக்கு எதிரே நின்று சிறையைக் காவல் செய்தனர்.
|
7. அப்போது இதோ! ஆண்டவருடைய தூதர் அங்கே தோன்ற, அறை முழுவதும் ஒளிமயமாயிற்று. தூதர் இராயப்பரைத் தட்டியெழுப்பி, "சீக்கிரம் எழுந்திரும்" என்றார். உடனே விலங்குகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.
|
8. பின் வான தூதர், "உமது இடைக்கச்சையைக் கட்டி, மிதியடிகளைத் தொடுத்துக்கொள்ளும்" என்றார். அவரும் அவ்வாறே செய்தார். பிறகு வானதூதர், "உமது மேலாடையை அணிந்து கொண்டு என்னோடு வாரும்" என்றார்.
|
9. இராயப்பர் தூதரோடு வெளியே போனார். வான தூதரின் வாயிலாக நிகழ்ந்ததெல்லாம் உண்மை என்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக நினைத்துக்கொண்டார்.
|
10. முதற் காவலையும் இரண்டாங் காவலையும் கடந்து, நகருக்குச் செல்லும் வாயிலின் இருப்புக் கதவருகில் வந்தனர். அது தானாகவே திறந்தது. 'அவர்கள் வெளியே சென்று ஒரு தெருநெடுக நடந்துபோனதும், வான தூதர் அவரை விட்டகன்றார்
|
11. பின் இராயப்பர் தன்னுணர்வு பெற்று, "உண்மையாகவே, ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் பிடியிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்தவாறு நிகழாமல் என்னைக் காத்தார் என்று இப்பொழுது தெரிகிறது" என்றார்.
|
13. அங்கே பலர் கூடி செபித்துக்கொண்டிருந்தனர் அவர் தெருக் கதவைத் தட்டியபொழுது ரோதே என்னும் பணிப் பெண் யாரெனப் பார்க்க வந்தாள்.
|
14. அது இராயப்பரின் குரல் என்று தெரிந்துகொண்டு, மகிழ்ச்சி மிகுதியால் கதவைத் திறக்காமலே உள்ளே ஓடி, இராயப்பர் கதவருகில் நிற்பதாக அறிவித்தாள்.
|
15. அதற்கு அவர்கள், "உனக்குப் பைத்தியமா?" என்றனர். ஆனால் அவள் தான் சொல்வது உண்மையெனச் சாதித்தாள். அவர்களோ அது அவருடைய காவல் தூதராக இருக்குமோ என்றனர்.
|
16. இராயப்பர் விடாமல் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார். கதவைத் திறந்தபோது, அவரைப் பார்த்துத் திகைத்துப்போயினர்
|
17. பேசாதிருக்கும்படி சைகை காட்டி, ஆண்டவர் தம்மைச் சிறையிலிருந்து வெளிவரச் செய்தது பற்றி எடுத்துச் சொல்லி, "இதை யாகப்பருக்கும் சகோதரர்களுக்கும் அறிவியுங்கள்" என்றார். பிறகு புறப்பட்டு வேறொரு இடத்திற்குப் போய்விட்டார்.
|
18. பொழுது புலர்ந்ததும், இராயப்பருக்கு என்ன ஆயிற்று என்பதுபற்றி படைவீரர்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டது.
|
19. ஏரோது அவரைத் தேடிப் பார்க்கச் சொன்னான். எங்கும் காணாமையால் காவலர்களை விசாரித்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்தான். பின் அவன் யூதேயாவை விட்டு செசரியாவுக்குச் சென்று அங்குத் தங்கினான்.
|
20. அந்நாளில் ஏரோது, தீர், சீதோன் நகரத்தார் மீது வெஞ்சினம்கொண்டிருந்தான். அந்நிலையில் தங்கள் நாடு அரசனுக்குட்பட்ட நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை எதிர்பார்க்க வேண்டியிருந்ததால், அவர்கள் ஒருமனப்பட்டு அவனைக் காண வந்தனர். அரண்மனை மேற்பார்வையாளனான பிலாத்துவைத் தம் வயப்படுத்திக்கொண்டு அரசனது நட்புறவை நாடி நின்றனர்.
|
23. அவன் கடவுளுக்கு மகிமை செலுத்தாததினால், ஆண்டவரின் தூதர் அவனை உடனே தண்டிக்கவே, அவன் புழுத்துச் செத்தான்.
|
25. பர்னபாவும் சவுலும் தம் ஊழியத்தை முடித்துவிட்டு மாற்கு என்னும் அருளப்பரை அழைத்துக்கொண்டு யெருசலேமிலிருந்து திரும்பினர்.
|