1. கடவுளின் வார்த்தையைப் புறவினத்தார் கூட ஏற்றுக்கொண்டதை யூதேயாவிலுள்ள சகோதரரும் அப்போஸ்தலரும் கேள்விப்பட்டனர்.
|
3. "நீர் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள் வீட்டிற்குப் போய் அவர்களோடு சாப்பிட்டீரே!" என்று அவருடன் வாதாடினர்.
|
5. "நான் யோப்பா நகரில் செபித்துக்கொண்டிருந்தபொழுது பரவசமாகிக் காட்சி கண்டேன். கப்பல் பாயைப்போன்ற ஒரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டி வானத்தினின்று இறக்கப்பட்டு என்னிடம் வந்தது.
|
6. அதை நான் உற்று நோக்குகையில் காட்டு விலங்குகள், தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன யாவும் கண்டேன்.
|
8. அதற்கு நான், 'வேண்டாம், ஆண்டவரே. தீட்டும் அசுத்தமுமான எதையும் ஒருபோதும் நான் என் வாயில் வைத்ததேயில்லை' என்றேன்.
|
9. அதற்கு, 'சுத்தமெனக் கடவுள் சொன்னதை, தீட்டு என்று நீ சொல்லாதே' என மீளவும் அக்குரல் பேசிற்று. இப்படி மும்முறை நடந்தது.
|
11. அதே நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கி இருந்த வீட்டுக்கு முன்னே வந்து நின்றனர்.
|
12. தயக்கமின்றி அவர்களுடன் செல்லும்படி ஆவியானவர் எனக்குச் சொன்னார். எனவே, நானும் இந்த ஆறு சகோதரர்களும் புறப்பட்டு அவருடைய வீட்டை அடைந்தோம்.
|
13. அவர் தம் வீட்டில் வானதூதர் தோன்றியதாகவும், அந்தத் தூதர் யோப்பாவுக்கு ஆள் அனுப்பி இராயப்பர் என்னும் சீமோனை வரச்சொல்லும்;
|
14. நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உமக்குக் கூறுவார்" என்று தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்குச் சொன்னார்.
|
16. அப்போது 'அருளப்பர் நீரால் ஞானஸ்நானம் கொடுத்தார். நீங்களோ பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்' என்று ஆண்டவர் கூறிய வார்த்தையை நினைவு கூர்ந்தேன்.
|
17. ஆகவே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்ட நமக்கு அருளிய அதே திருக்கொடையைக் கடவுள் அவர்களுக்கும் அருளினார் என்றால், கடவுளுக்குத் தடைசெய்ய என்னால் எப்படி முடியும்?"
|
18. இதைக் கேட்டு அமைதி அடைந்தனர். அப்படியானால் வாழ்வுக்கு வழியாகும் மனமாற்றத்தைக் கடவுள் புறவினத்தாருக்குக் கூட அருளினார் என்று கடவுளை மகிமைப்படுத்தினர்.
|
19. முடியப்பர் பற்றிய கலாபனையால் விசுவாசிகள் பெனிக்கியா, சைப்ரஸ், அந்தியோகியா வரைக்கும் சிதறுண்டு போயினர். அவர்கள் யூதர்களுக்கு மட்டுமே அன்றி வேறு யாருக்கும் தேவ வார்த்தையை அறிவிக்கவில்லை.
|
20. ஆனால், இப்படிப் போனவர்களுள் சைப்ரஸ்தீவினர், சீரேனே ஊரார் சிலர் அந்தியோகியாவிற்கு வந்து கிரேக்கர்களை அணுகி, அவர்களுக்கும் ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்தனர்.
|
21. ஆண்டவரின் கைவன்மை அவர்களுக்குத் துணை நின்றது. ஆதலின், பலர் ஆண்டவர்மேல் விசுவாசம் கொண்டு மனந்திரும்பினர்.
|
24. அங்குப்போய் கடவுளின் அருளைக்கண்டு மனமகிழ்ந்தார். மன உறுதியுடன் ஆண்டவரில் நிலைத்து நிற்க அனைவரையும் ஊக்குவித்தார். திரளான மக்கள் ஆண்டவர் பக்கம் சேர்ந்தனர்.
|
25. சவுலை நாடி பர்னபா தர்சு நகருக்குச் சென்றார். அங்கு அவரைக் கண்டு அந்தியோகியாவிற்கு அழைத்து வந்தார்.
|
26. இருவரும் அச்சபையோடு ஓராண்டு முழுவதும் உறவாடினர்; அங்கே பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் தான் முதன்முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.
|
28. அவர்களுள் ஒருவர் அகபு என்பவர். அவர் ஆவியினால் ஏவப்பட்டு, உலகெங்கும் பெரும் பஞ்சம் உண்டாகுமென முன்னுரைத்தார். அது கிளாதியுஸ் பேரரசன் காலத்தில் உண்டாயிற்று.
|
29. ஆகவே, சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களாலான பொருளுதவியை யூதேயாவிலுள்ள சகோதரர்களுக்கு அனுப்பத் தீர்மானித்தனர்.
|
30. அதன்படியே அவர்கள் அத்தொகையைப் பர்னபா, சவுல் இவர்களின் வழியாக மூப்பர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
|