தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
1. செசரியாவில் கொர்னேலியு என்பவன் ஒருவன் இருந்தான். இவன் இத்தாலிக்கா என்ற பட்டாளத்தில் நூற்றுவர் தலைவன்.
2. அவனும், அவன் வீட்டாரனைவரும் பக்தியுள்ளவர்கள். கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்கள். அவன் யூதர்களுக்கு அறங்கள் பல செய்பவன். கடவுளை இடைவிடாமல் இறைஞ்சுபவன்.
3. ஒருநாள் ஏறக்குறைய பிற்பகல் மூன்று மணியளவில் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில், கடவுளின் தூதர் ஒருவர் தன்னிடம் வந்து, "கொர்னேலியு" எனக் கூப்பிடுவது தெளிவாகத் தெரிந்தது.
4. அத்தூதரை அவன் உற்று நோக்க, அச்சம் மேலிட்டவனாய், "ஆண்டவரே, என்ன?" என்று கேட்டான். அவர் அவனுக்கு, "நீர் செய்த மன்றாட்டுக்களும் அறங்களும் கடவுள் திருவடியைச் சேர்ந்துள்ளன. அவற்றை அவர் நினைவு கூர்ந்தார்.
5. இப்பொழுது யோப்பாவிற்கு ஆள் அனுப்பி இராயப்பர் என்னும் சீமோனை வரச்சொல்லும்.
6. தோல் பதனிடும் சீமோன் என்பவனின் வீட்டில் அவர் தங்கியிருக்கிறார். அவனது வீடு கடலோரத்தில் உள்ளது" என்றார்.
7. தன்னுடன் பேசிய தேவ தூதர் மறைந்ததும், தன் வேலையாட்களில் இருவரையும் தன் ஏவலாளருள் பக்தியுள்ள படை வீரன் ஒருவனையும் அழைத்து,
8. நிகழ்ந்ததெல்லாம் அவர்களிடம் விவரமாய்ச் சொல்லி, யோப்பாவிற்கு அனுப்பினான்.
9. அவர்கள் புறப்பட்டு வழிநடந்து மறுநாள் நகரை நெருங்கி வந்துகொண்டிருக்கும்போது, உச்சி வேளையில் இராயப்பர் செபிப்பதற்காக வீட்டின் மேல்தளத்திற்குச் சென்றார்.
10. அப்போது அவருக்குப் பசித்தது. சாப்பிட விரும்பினார். உணவுக்கு ஏற்பாடு செய்கையில் அவர் பரவசமாகி, ஒரு காட்சி கண்டார்.
11. வானம் திறந்திருப்பதையும், கப்பற்பாயைப் போன்றதொரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டி, தரை நோக்கி இறக்கப்படுவதையும் கண்டார்.
12. தரையில் ஊர்வன, நடப்பன, வானில் பறப்பன யாவும் அதில் இருந்தன.
13. அப்பொழுது, "இராயப்பா, எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு" என்று ஒரு குரல் கேட்டது.
14. அதைக் கேட்ட இராயப்பர், "வேண்டாம், ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமான எதையும் ஒருபோதும் நான் சாப்பிட்டதே இல்லை" என்றார்.
15. "சுத்தம் என்று கடவுள் சொன்னதை, தீட்டு என்று நீ சொல்லாதே" என்று அக்குரல் திரும்பப் பேசிற்று.
16. இப்படி மும்முறை நடந்தது. பின்பு, அந்த விரிப்பு வானத்திற்கு எடுக்கப்பட்டது.
17. தான் கண்ட காட்சியின் பொருள் விளங்காது, இராயப்பர் தத்தளித்துக்கொண்டிருக்கையில் கொர்னேலியு அனுப்பிய ஆட்கள் சீமோனின் வீட்டைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, கதவண்டை வந்து கூப்பிட்டு,
18. "இராயப்பர் என்னும் சீமோன் இங்குத் தங்கியிருக்கிறாரா ?" என்று கேட்டனர்.
19. இராயப்பர் தாம் கண்ட காட்சியைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், ஆவியானவர், "இதோ, மூவர் உன்னைத் தேடி வந்துள்ளனர்.
20. கீழே இறங்கி, தயக்கமின்றி அவர்களோடு போ. ஏனெனில், அவர்களை நானே அனுப்பியுள்ளேன்" என்றார்.
21. இராயப்பர் கீழே வந்து அவர்களைப் பார்த்து, "நீங்கள் தேடுபவன் நான்தான். வந்த காரணம் யாது ?" என்று கேட்டார்.
22. அதற்கு அவர்கள் "எங்களை அனுப்பியவர் நூற்றுவர் தலைவர் கொர்னேலியு. அவர் ஒரு நீதிமான், கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர். யூதகுல மக்கள் அனைவரின் நன் மதிப்பையும் பெற்றவர். உம்மைத் தம் வீட்டிற்கு வரவழைத்து, நீர் கூறும் போதனைக்குச் செவிமடுக்க வேண்டுமெனத் தேவதூதர் அவருக்குக் கற்பித்தார்" என்றனர்.
23. எனவே, அவர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்று உபசரித்தார். மறுநாள் அவர்களுடன் புறப்பட்டார். யோப்பாவிலிருந்த சகோதரர் சிலர் அவரோடு சென்றனர்.
24. அடுத்த நாள் இராயப்பர் செசரியா நகரை அடைந்தார். அப்பொழுது கொர்னேலியு தம் சுற்றத்தாரையும் நெருங்கிய நண்பர்களையும் ஒன்றாக வரவழைத்துக் காத்துக்கொண்டிருந்தார்.
25. இராயப்பர் உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார்.
26. இராயப்பர், "எழுந்திரும், நானும் மனிதன்தான்" என்று அவரை எழுப்பினார்.
27. அவருடன் பேசிக்கொண்டே உள்ளே போனார். அங்குப் பலர் கூடியிருக்கக் கண்டு,
28. அவர்களை நோக்கி, "அன்னிய குலத்தாருடன் உறவாடுவதோ, அவர்களுடைய வீட்டிற்குச் செல்வதோ ஒரு யூதனுக்குத் தகாது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் யாரையும் தீட்டு உள்ளவனென்றோ, அசுத்தமானவனென்றோ சொல்லலாகாது எனக் கடவுள் எனக்குக் காண்பித்தார்.
29. இதனால்தான் உமது அழைப்பிற்கு இணங்கி தடை சொல்லாமல் இங்கு வந்தேன். எதற்காக என்னை அழைத்தீர்? சொல்லும்" என்று கேட்டார்.
30. அதற்குக் கொர்னேலியு, "மூன்று நாட்களுக்குமுன் இதே நேரத்தில் என் வீட்டில் பிற்பகல் செபம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, இதோ! ஒளிமிக்க ஆடை அணிந்த ஒருவர் என்முன் நின்று,
31. "கொர்னேலியு, உம் மன்றாட்டை இறைவன் கேட்டருளினார். நீர் புரிந்த அறங்களைக் கடவுள் நினைவுகூர்ந்தார்.
32. ஆகவே, யோப்பாவுக்கு ஆள் அனுப்பி இராயப்பர் என்னும் சீமோனை வரச்சொல்லும்: கடலோரத்தில், தோல் பதனிடும் சீமோனின் வீட்டில் அவர் தங்கி இருக்கிறார்" என்றார்.
33. உடனே உமக்கு ஆள் அனுப்பினேன். நீர் தயவுகூர்ந்து வந்தமைக்கு நன்றி. இப்பொழுது ஆண்டவர் உமக்குக் கட்டளையிட்டதெல்லாம் கேட்பதற்கு நாங்கள் அனைவரும் கடவுள் திருமுன் இங்குக் கூடியுள்ளோம்" என்றார்.
34. அப்பொழுது இராயப்பர் பேசத்தொடங்கிச் சொன்னதாவது: "கடவுள் மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதை இப்போது மெய்யாகவே உணர்கிறேன்.
35. எக்குலத்தவனாயினும், இறைவனுக்கு அஞ்சி அவருக்கு ஏற்புடையதைச் செய்பவனே அவருக்கு உகந்தவன்.
36. நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உமக்குக் கூறுவார்" என்று தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்குச் சொன்னார்.
37. அருளப்பர் அறிவித்த ஞானஸ்நானத்திற்குப் பின் கலிலேயா தொடங்கி யூதேயா நாடெங்கும் நிகழ்ந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியும். நாசரேத்தூர் இயேசுவைத்தான் குறிப்பிடுகிறேன்.
38. கடவுள் அவருக்குப் பரிசுத்த ஆவியையும் வல்லமையையும் அளித்து அபிஷுகம் செய்தார். கடவுள் அவரோடு இருந்ததால், அலகை துன்புறுத்திய அனைவரையும் குணமாக்கி, எங்கும் அவர் நன்மை செய்துகொண்டே சென்றார். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே.
39. அவர் யூதேயா நாட்டிலும் யெருசலேமிலும் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். அவரைக் கழுமரத்தில் ஏற்றிக் கொன்றுபோட்டனர்.
40. ஆனால், கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிர்ப்பித்தார்.
41. உயிர்த்தவரைக் கடவுள் அனைவருக்கும் வெளிப்படுத்தாமல், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட சாட்சிகளுக்கே வெளிப்படுத்தினார். இறந்தோரிடமிருந்து அவர் உயிர்த்தபின் அவரோடு உண்டும் குடித்தும் வந்த நாங்களே சாட்சிகள்.
42. வாழ்வோரையும் இறந்தோரையும் நடுத்தீர்க்கக் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவர் அவரே என்பதை மக்களுக்கு அறிவிக்கவும், சாட்சியம் கூறவும் கடவுள் எங்களுக்குப் பணித்தார்.
43. அவரைக் குறித்தே இறைவாக்கினர் அனைவரும் சாட்சியம் பகர்கின்றனர். 'அவரை விசுவசிக்கும் அனைவரும் அவருடைய பெயரால் பாவ மன்னிப்புப் பெறுவர் ' என்று அவர்கள் கூறுகின்றனர்.
44. இவ்வாறு இராயப்பர் பேசிக்கொண்டிருக்கையில் அவருடைய வார்த்தைகளைக் கேட்ட அனைவர்மேலும் பரிசுத்த ஆவி இறங்கினார்.
45. பரிசுத்த ஆவியாம் திருக்கொடை புறவினத்தார்மேலும் பொழியப்படுவதைக் கண்டு, இராயப்பருடன் வந்திருந்த யூதகுல விசுவாசிகள் அனைவரும் திகைத்து நின்றனர்.
46. ஏனெனில், அவர்கள் பல மொழிகளில் பேசிக் கடவுளைப் போற்றுவதைக் கேட்டனர்.
47. அப்பொழுது இராயப்பர், "நம்மைப் போல் இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றபின் இவர்கள் நீரால் ஞானஸ்நானம் பெறுவதற்கு யார் தடைசெய்ய முடியும்?" என்று,
48. இயேசுகிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக் கட்டளையிட்டார். பின்னர் சிலநாள் தங்களோடு தங்கும்படி அவர்கள் அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 10 of Total Chapters 28
அப்போஸ்தலர்கள் 10:39
1. செசரியாவில் கொர்னேலியு என்பவன் ஒருவன் இருந்தான். இவன் இத்தாலிக்கா என்ற பட்டாளத்தில் நூற்றுவர் தலைவன்.
2. அவனும், அவன் வீட்டாரனைவரும் பக்தியுள்ளவர்கள். கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்கள். அவன் யூதர்களுக்கு அறங்கள் பல செய்பவன். கடவுளை இடைவிடாமல் இறைஞ்சுபவன்.
3. ஒருநாள் ஏறக்குறைய பிற்பகல் மூன்று மணியளவில் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில், கடவுளின் தூதர் ஒருவர் தன்னிடம் வந்து, "கொர்னேலியு" எனக் கூப்பிடுவது தெளிவாகத் தெரிந்தது.
4. அத்தூதரை அவன் உற்று நோக்க, அச்சம் மேலிட்டவனாய், "ஆண்டவரே, என்ன?" என்று கேட்டான். அவர் அவனுக்கு, "நீர் செய்த மன்றாட்டுக்களும் அறங்களும் கடவுள் திருவடியைச் சேர்ந்துள்ளன. அவற்றை அவர் நினைவு கூர்ந்தார்.
5. இப்பொழுது யோப்பாவிற்கு ஆள் அனுப்பி இராயப்பர் என்னும் சீமோனை வரச்சொல்லும்.
6. தோல் பதனிடும் சீமோன் என்பவனின் வீட்டில் அவர் தங்கியிருக்கிறார். அவனது வீடு கடலோரத்தில் உள்ளது" என்றார்.
7. தன்னுடன் பேசிய தேவ தூதர் மறைந்ததும், தன் வேலையாட்களில் இருவரையும் தன் ஏவலாளருள் பக்தியுள்ள படை வீரன் ஒருவனையும் அழைத்து,
8. நிகழ்ந்ததெல்லாம் அவர்களிடம் விவரமாய்ச் சொல்லி, யோப்பாவிற்கு அனுப்பினான்.
9. அவர்கள் புறப்பட்டு வழிநடந்து மறுநாள் நகரை நெருங்கி வந்துகொண்டிருக்கும்போது, உச்சி வேளையில் இராயப்பர் செபிப்பதற்காக வீட்டின் மேல்தளத்திற்குச் சென்றார்.
10. அப்போது அவருக்குப் பசித்தது. சாப்பிட விரும்பினார். உணவுக்கு ஏற்பாடு செய்கையில் அவர் பரவசமாகி, ஒரு காட்சி கண்டார்.
11. வானம் திறந்திருப்பதையும், கப்பற்பாயைப் போன்றதொரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டி, தரை நோக்கி இறக்கப்படுவதையும் கண்டார்.
12. தரையில் ஊர்வன, நடப்பன, வானில் பறப்பன யாவும் அதில் இருந்தன.
13. அப்பொழுது, "இராயப்பா, எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு" என்று ஒரு குரல் கேட்டது.
14. அதைக் கேட்ட இராயப்பர், "வேண்டாம், ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமான எதையும் ஒருபோதும் நான் சாப்பிட்டதே இல்லை" என்றார்.
15. "சுத்தம் என்று கடவுள் சொன்னதை, தீட்டு என்று நீ சொல்லாதே" என்று அக்குரல் திரும்பப் பேசிற்று.
16. இப்படி மும்முறை நடந்தது. பின்பு, அந்த விரிப்பு வானத்திற்கு எடுக்கப்பட்டது.
17. தான் கண்ட காட்சியின் பொருள் விளங்காது, இராயப்பர் தத்தளித்துக்கொண்டிருக்கையில் கொர்னேலியு அனுப்பிய ஆட்கள் சீமோனின் வீட்டைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, கதவண்டை வந்து கூப்பிட்டு,
18. "இராயப்பர் என்னும் சீமோன் இங்குத் தங்கியிருக்கிறாரா ?" என்று கேட்டனர்.
19. இராயப்பர் தாம் கண்ட காட்சியைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், ஆவியானவர், "இதோ, மூவர் உன்னைத் தேடி வந்துள்ளனர்.
20. கீழே இறங்கி, தயக்கமின்றி அவர்களோடு போ. ஏனெனில், அவர்களை நானே அனுப்பியுள்ளேன்" என்றார்.
21. இராயப்பர் கீழே வந்து அவர்களைப் பார்த்து, "நீங்கள் தேடுபவன் நான்தான். வந்த காரணம் யாது ?" என்று கேட்டார்.
22. அதற்கு அவர்கள் "எங்களை அனுப்பியவர் நூற்றுவர் தலைவர் கொர்னேலியு. அவர் ஒரு நீதிமான், கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர். யூதகுல மக்கள் அனைவரின் நன் மதிப்பையும் பெற்றவர். உம்மைத் தம் வீட்டிற்கு வரவழைத்து, நீர் கூறும் போதனைக்குச் செவிமடுக்க வேண்டுமெனத் தேவதூதர் அவருக்குக் கற்பித்தார்" என்றனர்.
23. எனவே, அவர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்று உபசரித்தார். மறுநாள் அவர்களுடன் புறப்பட்டார். யோப்பாவிலிருந்த சகோதரர் சிலர் அவரோடு சென்றனர்.
24. அடுத்த நாள் இராயப்பர் செசரியா நகரை அடைந்தார். அப்பொழுது கொர்னேலியு தம் சுற்றத்தாரையும் நெருங்கிய நண்பர்களையும் ஒன்றாக வரவழைத்துக் காத்துக்கொண்டிருந்தார்.
25. இராயப்பர் உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார்.
26. இராயப்பர், "எழுந்திரும், நானும் மனிதன்தான்" என்று அவரை எழுப்பினார்.
27. அவருடன் பேசிக்கொண்டே உள்ளே போனார். அங்குப் பலர் கூடியிருக்கக் கண்டு,
28. அவர்களை நோக்கி, "அன்னிய குலத்தாருடன் உறவாடுவதோ, அவர்களுடைய வீட்டிற்குச் செல்வதோ ஒரு யூதனுக்குத் தகாது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் யாரையும் தீட்டு உள்ளவனென்றோ, அசுத்தமானவனென்றோ சொல்லலாகாது எனக் கடவுள் எனக்குக் காண்பித்தார்.
29. இதனால்தான் உமது அழைப்பிற்கு இணங்கி தடை சொல்லாமல் இங்கு வந்தேன். எதற்காக என்னை அழைத்தீர்? சொல்லும்" என்று கேட்டார்.
30. அதற்குக் கொர்னேலியு, "மூன்று நாட்களுக்குமுன் இதே நேரத்தில் என் வீட்டில் பிற்பகல் செபம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, இதோ! ஒளிமிக்க ஆடை அணிந்த ஒருவர் என்முன் நின்று,
31. "கொர்னேலியு, உம் மன்றாட்டை இறைவன் கேட்டருளினார். நீர் புரிந்த அறங்களைக் கடவுள் நினைவுகூர்ந்தார்.
32. ஆகவே, யோப்பாவுக்கு ஆள் அனுப்பி இராயப்பர் என்னும் சீமோனை வரச்சொல்லும்: கடலோரத்தில், தோல் பதனிடும் சீமோனின் வீட்டில் அவர் தங்கி இருக்கிறார்" என்றார்.
33. உடனே உமக்கு ஆள் அனுப்பினேன். நீர் தயவுகூர்ந்து வந்தமைக்கு நன்றி. இப்பொழுது ஆண்டவர் உமக்குக் கட்டளையிட்டதெல்லாம் கேட்பதற்கு நாங்கள் அனைவரும் கடவுள் திருமுன் இங்குக் கூடியுள்ளோம்" என்றார்.
34. அப்பொழுது இராயப்பர் பேசத்தொடங்கிச் சொன்னதாவது: "கடவுள் மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதை இப்போது மெய்யாகவே உணர்கிறேன்.
35. எக்குலத்தவனாயினும், இறைவனுக்கு அஞ்சி அவருக்கு ஏற்புடையதைச் செய்பவனே அவருக்கு உகந்தவன்.
36. நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உமக்குக் கூறுவார்" என்று தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்குச் சொன்னார்.
37. அருளப்பர் அறிவித்த ஞானஸ்நானத்திற்குப் பின் கலிலேயா தொடங்கி யூதேயா நாடெங்கும் நிகழ்ந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியும். நாசரேத்தூர் இயேசுவைத்தான் குறிப்பிடுகிறேன்.
38. கடவுள் அவருக்குப் பரிசுத்த ஆவியையும் வல்லமையையும் அளித்து அபிஷுகம் செய்தார். கடவுள் அவரோடு இருந்ததால், அலகை துன்புறுத்திய அனைவரையும் குணமாக்கி, எங்கும் அவர் நன்மை செய்துகொண்டே சென்றார். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே.
39. அவர் யூதேயா நாட்டிலும் யெருசலேமிலும் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். அவரைக் கழுமரத்தில் ஏற்றிக் கொன்றுபோட்டனர்.
40. ஆனால், கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிர்ப்பித்தார்.
41. உயிர்த்தவரைக் கடவுள் அனைவருக்கும் வெளிப்படுத்தாமல், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட சாட்சிகளுக்கே வெளிப்படுத்தினார். இறந்தோரிடமிருந்து அவர் உயிர்த்தபின் அவரோடு உண்டும் குடித்தும் வந்த நாங்களே சாட்சிகள்.
42. வாழ்வோரையும் இறந்தோரையும் நடுத்தீர்க்கக் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவர் அவரே என்பதை மக்களுக்கு அறிவிக்கவும், சாட்சியம் கூறவும் கடவுள் எங்களுக்குப் பணித்தார்.
43. அவரைக் குறித்தே இறைவாக்கினர் அனைவரும் சாட்சியம் பகர்கின்றனர். 'அவரை விசுவசிக்கும் அனைவரும் அவருடைய பெயரால் பாவ மன்னிப்புப் பெறுவர் ' என்று அவர்கள் கூறுகின்றனர்.
44. இவ்வாறு இராயப்பர் பேசிக்கொண்டிருக்கையில் அவருடைய வார்த்தைகளைக் கேட்ட அனைவர்மேலும் பரிசுத்த ஆவி இறங்கினார்.
45. பரிசுத்த ஆவியாம் திருக்கொடை புறவினத்தார்மேலும் பொழியப்படுவதைக் கண்டு, இராயப்பருடன் வந்திருந்த யூதகுல விசுவாசிகள் அனைவரும் திகைத்து நின்றனர்.
46. ஏனெனில், அவர்கள் பல மொழிகளில் பேசிக் கடவுளைப் போற்றுவதைக் கேட்டனர்.
47. அப்பொழுது இராயப்பர், "நம்மைப் போல் இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றபின் இவர்கள் நீரால் ஞானஸ்நானம் பெறுவதற்கு யார் தடைசெய்ய முடியும்?" என்று,
48. இயேசுகிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக் கட்டளையிட்டார். பின்னர் சிலநாள் தங்களோடு தங்கும்படி அவர்கள் அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
Total 28 Chapters, Current Chapter 10 of Total Chapters 28
×

Alert

×

tamil Letters Keypad References