தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 சாமுவேல்
1. அரசர் தம் மகனைக் குறித்து அழுகிறார்" என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2. அரசர் தம் மகனுக்காகப் புலம்புகிறார் என்ற செய்தியை அன்று மக்கள் கேள்விப்பட்டதின் பொருட்டு மக்கள் அனைவர்க்கும் அன்றைய வெற்றி துக்கமானதாக மாறிப்போறிற்று.
3. போரில் புறமுதுகு காட்டி ஓடும் வீரர்கள் போன்று மக்களும் அன்று நகருக்குத் திரும்பினார்கள்.
4. அரசர் தம் தலையை மூடிக்கொண்டு உரத்த சத்தமாய், "என் மகனே! அப்சலோம், என் மகனே, மகனே!" என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
5. அப்பொழுது யோவாப் வீட்டினுள் சென்று, அரசரை நோக்கி, "இன்று உமது உயிரையும், உம் புதல்வர் புதல்வியரின் உயிரையும், உம் மனைவியர் வைப்பாட்டிகளின் உயிரையும் காப்பாற்றிய உம் ஊழியர்கள் எல்லாரையும் வெட்கப்படுத்தி முகம் நாணச் செய்தீரே.
6. நீர் உம்மைப் பகைக்கிறவர்களுக்கு அன்பு செய்து, உமக்கு அன்பு செய்கிறவர்களைப் பகைக்கிறீரே; உம் படைத்தலைவர்களையும் ஏவலர்களையும் நீர் பொருட்படுத்துவதில்லை என்று இன்று காட்டிவிட்டீரே! இன்று அப்சலோம் வாழ நாங்கள் அனைவரும் மடிந்திருந்தாலும் அதுவே உம் மனத்திற்குப் பிடித்திருந்திருக்கும் என்று நான் இப்போது அறிந்து கொண்டேன்.
7. ஆதலால் நீர் எழுந்து வெளியே வந்து உம் ஊழியர்களோடு பேசி அவர்களுக்கு மனநிறைவு அளிக்க வேண்டும். இன்றேல் இன்றிரவே ஒருவன் கூட உம்மோடு இராது எல்லாரும் உம்மை விட்டுப் போவார்கள் என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். அப்பொது உம் இளமை முதல் இதுவரை உமக்கு நேரிட்ட எல்லாத் தீமைகளையும் விட இது உமக்கு அதிகத் தீமை பயப்பதாய் இருக்குமே" என்றான்.
8. அதைக் கேட்ட அரசர் எழுந்து வாயிலில் அமர்ந்தார். "அரசர் வாயிலில் அமர்ந்திருக்கிறார்" என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படவே, மக்கள் திரள் திரளாய் அரசர் முன்னிலையில் வந்து கூடினார்கள். இஸ்ராயேல் மனிதர்களோ தத்தம் கூடாரங்களுக்கு ஓடினார்கள்.
9. இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்து, "எங்கள் எதிரிகளிடமிருந்தும் பிலிஸ்தியரின் கையிலிருந்தும் எங்களை மீட்ட அரசரே இப்பொழுது அப்சலோமைக் குறித்து நாட்டை விட்டு ஓடி விட்டாரே!
10. நாங்கள் எங்கள் அரசராய் இருக்கும்படி அபிஷுகம் செய்து ஏற்படுத்தின அப்சலோம் போர்க்களத்தில் உயிர் இழந்தாரே. அப்போது அரசரைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் வாளாயிருப்பதேன்?" என்று கூறி வந்தார்கள்.
11. இஸ்ராயேலர் அனைவரும் பேசின பேச்சு தம் வீட்டில் இருந்த அரசரின் காதுகளுக்கு எட்டவே, அரசர் குருக்களான சாதோக், அபியாத்தாரிடம் ஆள் அனுப்பி, "நீங்கள் போய் யூதாவின் மூப்பரோடு பேசிச் சொல்ல வேண்டியதாவது: 'அரசரைத் தம் வீட்டுக்குத் திரும்ப அழைத்து வருவதில் நீங்கள் கடையராய் இருக்கிறது ஏன்?
12. நீங்களல்லோ என் சகோதரரும் என் எலும்பும் என் தசையுமாய் இருக்கிறீர்கள்? அரசரை அழைத்து வர மற்ற எல்லாரையும் விடப் பிந்தி வரலாமா?' என்று சொல்லுங்கள்.
13. பிறகு நீங்கள் அமாசாவையும் பார்த்து: 'நீ என் எலும்பும் என் தசையுமாய் இருக்கவில்லையா? நீ யோவாபுக்குப் பதிலாக என் முன்னிலையில் எந்நாளும் படைத்தலைவனாய் இராவிட்டால் கடவுள் அதற்குத் தகுந்த பிரதிபலன் அளிப்பார்' என்று சொல்லுங்கள்" என்றார்.
14. இப்படி அவர் யூதா மனிதர் அனைவரின் மனத்தையும், ஒரே மனிதனுடைய மனத்தைப்போல் இணங்கச் செய்ததனால், அவர்கள், "நீர் உம் எல்லா ஊழியர்களோடும் வாரும்" என்று அரசருக்குச் சொல்லி அனுப்பினார்கள்.
15. அரசர் திரும்பி யோர்தான் வரை நடந்து வந்தார். யூதா மக்கள் அனைவரும் கல்கலா வரை வந்து அரசரைச் சந்தித்த பின் அவர் யோர்தானைக் கடக்கச் செய்தனர்.
16. பாகூரின் ஊரானான ஜெமினி மகன் கோரவின் புதல்வனான செமேயி என்பவனும் விரைந்து யூதா மனிதரோடு தாவீது அரசரைச் சந்திக்கச் சென்றான்.
17. அவனோடு பெஞ்சமின் கோத்திரத்தாரில் ஆயிரம் மனிதரும், சவுலின் வீட்டு வேலைக்காரன் சீபாவும், அவன் புதல்வர் பதினைவரும், இருபது ஊழியர்களும் இருந்தனர். அவர்கள் அரசர் வருமுன்பே யோர்தானை வந்தடைந்து, துறைவழியாக ஆற்றைக் கடந்து சென்று,
18. அரச குடும்பத்தினரை அக்கரைக்குக் கொண்டு சேர்த்ததோடு அவர் கட்டளையிட்டவற்றையும் செய்தார். அரசர் யோர்தானுக்கு இக்கரையில் வந்து சேர்ந்த பின்பு, கேராவின் மகன் செமேயி அரசர் முன் நெடுங்கிடையாய் விழுந்து,
19. அவரை நோக்கி, "என் தலைவரே, நான் செய்த கொடுமையை என் மேல் சுமத்த வேண்டாம். நீர் யெருசலேமிலிருந்து புறப்பட்டு வந்த போது, என் தலைவராகிய அரசருக்கு அடியேன் செய்த துரோகத்தை ஒரு பொருட்டாக எண்ணவும் உமது மனத்தில் வைக்கவும் வேண்டாம், அரசே.
20. அடியேன் செய்த குற்றத்தை அறிந்திருக்கிறேன். எனவே அரசராகிய என் தலைவரை எதிர் கொண்டுவர சூசை வீட்டார் அனைவருக்குள்ளே, நான் முதல்வனாக இன்று வந்தேன்" என்றான்.
21. சார்வியாவின் மகன் அபிசாயி அதற்கு மறுமொழியாக, "ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரைச் செமேயி பழித்தான். இப்போது தான் சொன்ன வார்த்தைகளின் பொருட்டு அவன் கொல்லப்படுவது நீதியன்றோ?" என்றான்.
22. அதற்கு தாவீது, "சார்வியாவின் புதல்வரே, அதைப் பற்றி உங்களுக்கும் எனக்கும் என்ன? இன்று நீங்கள் எனக்குச் சாத்தானாய் இருக்க வேண்டியது என்ன? இன்று இஸ்ராயேலில் யாரையாவது கொல்லலாமா? நான் இஸ்ராயேலின் அரசர் என்று இன்று எனக்குத் தெரியாதா?" என்றார்.
23. பிறகு அரசர் செமேயியை நோக்கி, "நீ சாகப் போவதில்லை" என்று அவனுக்கு உறுதி அளித்தார்.
24. சவுலின் மகன் மிபிபோசேத்தும் கழுவாத காலும் சிரையாத தாடியுமாய் அரசரை எதிர் கொண்டு வந்தான். ஏனெனில் அரசர் வெளியேறின நாள் முதல் அவர் சமாதானத்தோடு திரும்பி வந்த நாள் வரை அவன் தன் ஆடைகளை வெளுத்ததே இல்லை.
25. அவன் யெருசலேமில் அரசரைச் சந்தித்த போது, அரசர் அவனைப் பார்த்து, "மிபிபோசேத் நீ ஏன் என்னோடு வரவில்லை?" என்றார்.
26. அதற்கு அவன், "என் தலைவராகிய அரசே! என் வேலைக்காரன் என்னை இழிவாகப் பேசினான். உம் அடியானாகிய நான் முடவனானபடியால், 'ஒரு கழுதை மேல் சேணம் போட்டு, நான் அதன் மேல் ஏறி அரசருடன் போகிறேன்' என்று சொல்லியும் அவன் கேட்கவில்லை.
27. அதுவுமின்றி, அவன் என் தலைவரும் அரசருமாகிய உம்மிடம் உம் அடியானைப் பற்றிப் பழி சொன்னான். என் தலைவராகிய அரசே, நீர் கடவுளின் தூதனைப் போல் இருக்கிறீரே. உமக்குப் பிடித்ததைச் செய்யும்.
28. ஏனெனில் அரசராகிய என் தலைவருக்கு முன்பாக என் வீட்டார் அனைவரும் சாவுக்குத் தகுதியானவரேயன்றி வேறில்லை. இருந்த போதிலும் உமது பந்தியில் விருந்து உண்பாரோடு உம் அடியானையும் அமரச் செய்தீர். ஆதலால் குறை சொல்லவும், அரசரிடம் முறையிட்டுக் கெஞ்சவும் இனி எனக்கு நியாயம் உண்டோ?" என்றான்.
29. அதைக் கேட்டு அரசர், "நீர் வீணில் பேச வேண்டாம். நான் முன் சொன்ன தீர்ப்பே உறுதி. நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" என்றார்.
30. மிபிபோசேத் அரசருக்கு மறுமொழியாக, "என் தலைவராகிய அரசர் சமாதானமாய்த் தம் வீட்டிற்குத் திரும்பி வந்திருக்கும் போது, அவன் எல்லாவற்றையுமே எடுத்துக் கொள்ளட்டும்" என்றான்.
31. கலாத்தியனான பெர்செல்லாயியும் உரோகேலிமிலிருந்து யோர்தானின் இக்கரை வரை அரசரை வழிப்படுத்தின பின்னும், அரசரைப் பின் தொடரத் தயாராய் இருந்தான்.
32. இந்தக் கலாத்திய பெர்செல்லாயி மிகவும் வயது முதிர்ந்தவன்; அவனுக்கு வயது எண்பது. அரசர் பாளையத்தில் தங்கியிருக்கும்வரை, அவன் அவருக்கு உணவு முதலியன கொண்டு வந்து கொடுப்பான். ஏனெனில் அவன் பெருஞ் செல்வம் படைத்தவன்.
33. அரசர் பெர்செல்லாயியை நோக்கி, "நீ என்னோடு வா, யெருசலேமில் என்னுடன் கவலையின்றி வாழலாம்" என்று சொன்னார்.
34. பெர்செல்லாயி அரசரை நோக்கி, "நான் அரசரோடு யெருசலேமுக்குச் செல்லும்படி இன்னும் எத்தனை நாட்கள் நான் உயிரோடு இருப்பேன்?
35. இன்று எனக்கு வயதோ எண்பது, இனிப்பையும் கசப்பையும் வேறுபடுத்த என் புலன்கள் செயலற்று விட்டன. உண்பதும் குடிப்பதும் உம் அடியானுக்குச் சுவைக்குமா? பாடகர் பாடகிகளின் குரல் இனி எனக்குக் கேட்குமா? அடிமையாகிய நான் அரசராகிய என் தலைவருக்கு பாரமாய் இருக்க வேண்டியது ஏன்?
36. அடியேன் யோர்தானிலிருந்து இன்னும் சிறிது தூரம் உம்மோடு நடந்து வருவேன். ஆனால் அரசர் எனக்கு இத்தகு கைம்மாறு செய்வதற்கு நான் தகுதியற்றவன்.
37. உம் ஊழியனாகிய நான் திரும்பிப் போகவிடும். நான் என் ஊரிலேயே இறந்து என் தாய் தந்தையர் கல்லறைக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்படும்படி, தாங்கள் விடை தர வேண்டும், இதோ, காமாம் என்ற உம் அடியான். அவன் என் தலைவரும் அரசருமாகிய உம்மோடு போகட்டும். உமக்கு நல்லதென்று தோன்றுகிறதை அவனுக்குச் செய்யும்" என்றான்.
38. அப்பொழுது அரசர், "காமாம் என்னோடு வரட்டும். உன் விருப்பப்படியே நான் அவனுக்குச் செய்வேன். நீயும் என்னிடம் என்ன கேட்டாலும் நான் அதன்படி உனக்கு செய்வேன்" என்றார்.
39. அரசரும் எல்லா மக்களும் யோர்தானைக் கடந்தபிறகு அரசர் பெர்செல்லாயியை முத்தமிட்டு அவனுக்கு ஆசீர் அளித்தார். பிறகு பெர்செல்லாயி தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.
40. அரசர் கல்கலாவை அடைத்தார். காமாம் அவரோடு இருந்தான். யூதா மக்கள் அனைவரும் அரசரை அக்கரைக்குக் கூட்டிச் சென்றிருந்தார்கள். ஆனால் இஸ்ராயேல் மனிதருள் பாதிப்பேர் மட்டுமே அங்கு இருந்தனர்.
41. எனவே இஸ்ராயேல் மனிதர் எல்லாரும் அரசரிடம் வந்து கூடி அவரை நோக்கி, "எங்கள் சகோதரராகிய யூதா மனிதர் திருட்டுத்தனமாய் உம்மை அழைத்து வந்து அரசரையும் அவர் வீட்டாரையும் அவரோடு தாவீதின் மனிதர்கள் அனைவரையும் யோர்தானைக் கடக்கச் செய்தது ஏன்?" என்றனர்.
42. யூதா மனிதர் இஸ்ராயேல் மனிதர்களுக்கு மறுமொழியாக, "அரசர் எங்களைச் சேர்ந்தவர். அதனால் தான் நாங்கள் அவ்வாறு செய்தோம். இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் அரசரின் கையில் ஏதாவது வாங்கித் தின்றோமா? அல்லது நாங்கள் அவர் கையில் பரிசுகள் பெற்றுக் கொண்டோமா?" என்று கேட்டனர்.
43. அதற்கு இஸ்ராயேல் மனிதர் யூதா மனிதர்களை நோக்கி, "அரசரிடம் உங்களை விடப் பத்து மடங்கு அதிகமாக நாங்கள் இருக்கின்றோம். ஆகவே, உங்களைவிட எங்களுக்குத் தாவீதிடம் அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களுக்குத் தீங்கு இழைத்தீர்கள்? அரசரைத் திரும்ப அழைத்து வருவதற்கு முதலில் ஏன் எம்மிடம் கூறவில்லை?" என்றனர். யூதா மனிதர் இஸ்ராயேல் மனிதரைவிடக் கடுமையான முறையில் மறுமொழி பகன்றனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 24 Chapters, Current Chapter 19 of Total Chapters 24
2 சாமுவேல் 19:4
1. அரசர் தம் மகனைக் குறித்து அழுகிறார்" என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2. அரசர் தம் மகனுக்காகப் புலம்புகிறார் என்ற செய்தியை அன்று மக்கள் கேள்விப்பட்டதின் பொருட்டு மக்கள் அனைவர்க்கும் அன்றைய வெற்றி துக்கமானதாக மாறிப்போறிற்று.
3. போரில் புறமுதுகு காட்டி ஓடும் வீரர்கள் போன்று மக்களும் அன்று நகருக்குத் திரும்பினார்கள்.
4. அரசர் தம் தலையை மூடிக்கொண்டு உரத்த சத்தமாய், "என் மகனே! அப்சலோம், என் மகனே, மகனே!" என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
5. அப்பொழுது யோவாப் வீட்டினுள் சென்று, அரசரை நோக்கி, "இன்று உமது உயிரையும், உம் புதல்வர் புதல்வியரின் உயிரையும், உம் மனைவியர் வைப்பாட்டிகளின் உயிரையும் காப்பாற்றிய உம் ஊழியர்கள் எல்லாரையும் வெட்கப்படுத்தி முகம் நாணச் செய்தீரே.
6. நீர் உம்மைப் பகைக்கிறவர்களுக்கு அன்பு செய்து, உமக்கு அன்பு செய்கிறவர்களைப் பகைக்கிறீரே; உம் படைத்தலைவர்களையும் ஏவலர்களையும் நீர் பொருட்படுத்துவதில்லை என்று இன்று காட்டிவிட்டீரே! இன்று அப்சலோம் வாழ நாங்கள் அனைவரும் மடிந்திருந்தாலும் அதுவே உம் மனத்திற்குப் பிடித்திருந்திருக்கும் என்று நான் இப்போது அறிந்து கொண்டேன்.
7. ஆதலால் நீர் எழுந்து வெளியே வந்து உம் ஊழியர்களோடு பேசி அவர்களுக்கு மனநிறைவு அளிக்க வேண்டும். இன்றேல் இன்றிரவே ஒருவன் கூட உம்மோடு இராது எல்லாரும் உம்மை விட்டுப் போவார்கள் என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். அப்பொது உம் இளமை முதல் இதுவரை உமக்கு நேரிட்ட எல்லாத் தீமைகளையும் விட இது உமக்கு அதிகத் தீமை பயப்பதாய் இருக்குமே" என்றான்.
8. அதைக் கேட்ட அரசர் எழுந்து வாயிலில் அமர்ந்தார். "அரசர் வாயிலில் அமர்ந்திருக்கிறார்" என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படவே, மக்கள் திரள் திரளாய் அரசர் முன்னிலையில் வந்து கூடினார்கள். இஸ்ராயேல் மனிதர்களோ தத்தம் கூடாரங்களுக்கு ஓடினார்கள்.
9. இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்து, "எங்கள் எதிரிகளிடமிருந்தும் பிலிஸ்தியரின் கையிலிருந்தும் எங்களை மீட்ட அரசரே இப்பொழுது அப்சலோமைக் குறித்து நாட்டை விட்டு ஓடி விட்டாரே!
10. நாங்கள் எங்கள் அரசராய் இருக்கும்படி அபிஷுகம் செய்து ஏற்படுத்தின அப்சலோம் போர்க்களத்தில் உயிர் இழந்தாரே. அப்போது அரசரைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் வாளாயிருப்பதேன்?" என்று கூறி வந்தார்கள்.
11. இஸ்ராயேலர் அனைவரும் பேசின பேச்சு தம் வீட்டில் இருந்த அரசரின் காதுகளுக்கு எட்டவே, அரசர் குருக்களான சாதோக், அபியாத்தாரிடம் ஆள் அனுப்பி, "நீங்கள் போய் யூதாவின் மூப்பரோடு பேசிச் சொல்ல வேண்டியதாவது: 'அரசரைத் தம் வீட்டுக்குத் திரும்ப அழைத்து வருவதில் நீங்கள் கடையராய் இருக்கிறது ஏன்?
12. நீங்களல்லோ என் சகோதரரும் என் எலும்பும் என் தசையுமாய் இருக்கிறீர்கள்? அரசரை அழைத்து வர மற்ற எல்லாரையும் விடப் பிந்தி வரலாமா?' என்று சொல்லுங்கள்.
13. பிறகு நீங்கள் அமாசாவையும் பார்த்து: 'நீ என் எலும்பும் என் தசையுமாய் இருக்கவில்லையா? நீ யோவாபுக்குப் பதிலாக என் முன்னிலையில் எந்நாளும் படைத்தலைவனாய் இராவிட்டால் கடவுள் அதற்குத் தகுந்த பிரதிபலன் அளிப்பார்' என்று சொல்லுங்கள்" என்றார்.
14. இப்படி அவர் யூதா மனிதர் அனைவரின் மனத்தையும், ஒரே மனிதனுடைய மனத்தைப்போல் இணங்கச் செய்ததனால், அவர்கள், "நீர் உம் எல்லா ஊழியர்களோடும் வாரும்" என்று அரசருக்குச் சொல்லி அனுப்பினார்கள்.
15. அரசர் திரும்பி யோர்தான் வரை நடந்து வந்தார். யூதா மக்கள் அனைவரும் கல்கலா வரை வந்து அரசரைச் சந்தித்த பின் அவர் யோர்தானைக் கடக்கச் செய்தனர்.
16. பாகூரின் ஊரானான ஜெமினி மகன் கோரவின் புதல்வனான செமேயி என்பவனும் விரைந்து யூதா மனிதரோடு தாவீது அரசரைச் சந்திக்கச் சென்றான்.
17. அவனோடு பெஞ்சமின் கோத்திரத்தாரில் ஆயிரம் மனிதரும், சவுலின் வீட்டு வேலைக்காரன் சீபாவும், அவன் புதல்வர் பதினைவரும், இருபது ஊழியர்களும் இருந்தனர். அவர்கள் அரசர் வருமுன்பே யோர்தானை வந்தடைந்து, துறைவழியாக ஆற்றைக் கடந்து சென்று,
18. அரச குடும்பத்தினரை அக்கரைக்குக் கொண்டு சேர்த்ததோடு அவர் கட்டளையிட்டவற்றையும் செய்தார். அரசர் யோர்தானுக்கு இக்கரையில் வந்து சேர்ந்த பின்பு, கேராவின் மகன் செமேயி அரசர் முன் நெடுங்கிடையாய் விழுந்து,
19. அவரை நோக்கி, "என் தலைவரே, நான் செய்த கொடுமையை என் மேல் சுமத்த வேண்டாம். நீர் யெருசலேமிலிருந்து புறப்பட்டு வந்த போது, என் தலைவராகிய அரசருக்கு அடியேன் செய்த துரோகத்தை ஒரு பொருட்டாக எண்ணவும் உமது மனத்தில் வைக்கவும் வேண்டாம், அரசே.
20. அடியேன் செய்த குற்றத்தை அறிந்திருக்கிறேன். எனவே அரசராகிய என் தலைவரை எதிர் கொண்டுவர சூசை வீட்டார் அனைவருக்குள்ளே, நான் முதல்வனாக இன்று வந்தேன்" என்றான்.
21. சார்வியாவின் மகன் அபிசாயி அதற்கு மறுமொழியாக, "ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரைச் செமேயி பழித்தான். இப்போது தான் சொன்ன வார்த்தைகளின் பொருட்டு அவன் கொல்லப்படுவது நீதியன்றோ?" என்றான்.
22. அதற்கு தாவீது, "சார்வியாவின் புதல்வரே, அதைப் பற்றி உங்களுக்கும் எனக்கும் என்ன? இன்று நீங்கள் எனக்குச் சாத்தானாய் இருக்க வேண்டியது என்ன? இன்று இஸ்ராயேலில் யாரையாவது கொல்லலாமா? நான் இஸ்ராயேலின் அரசர் என்று இன்று எனக்குத் தெரியாதா?" என்றார்.
23. பிறகு அரசர் செமேயியை நோக்கி, "நீ சாகப் போவதில்லை" என்று அவனுக்கு உறுதி அளித்தார்.
24. சவுலின் மகன் மிபிபோசேத்தும் கழுவாத காலும் சிரையாத தாடியுமாய் அரசரை எதிர் கொண்டு வந்தான். ஏனெனில் அரசர் வெளியேறின நாள் முதல் அவர் சமாதானத்தோடு திரும்பி வந்த நாள் வரை அவன் தன் ஆடைகளை வெளுத்ததே இல்லை.
25. அவன் யெருசலேமில் அரசரைச் சந்தித்த போது, அரசர் அவனைப் பார்த்து, "மிபிபோசேத் நீ ஏன் என்னோடு வரவில்லை?" என்றார்.
26. அதற்கு அவன், "என் தலைவராகிய அரசே! என் வேலைக்காரன் என்னை இழிவாகப் பேசினான். உம் அடியானாகிய நான் முடவனானபடியால், 'ஒரு கழுதை மேல் சேணம் போட்டு, நான் அதன் மேல் ஏறி அரசருடன் போகிறேன்' என்று சொல்லியும் அவன் கேட்கவில்லை.
27. அதுவுமின்றி, அவன் என் தலைவரும் அரசருமாகிய உம்மிடம் உம் அடியானைப் பற்றிப் பழி சொன்னான். என் தலைவராகிய அரசே, நீர் கடவுளின் தூதனைப் போல் இருக்கிறீரே. உமக்குப் பிடித்ததைச் செய்யும்.
28. ஏனெனில் அரசராகிய என் தலைவருக்கு முன்பாக என் வீட்டார் அனைவரும் சாவுக்குத் தகுதியானவரேயன்றி வேறில்லை. இருந்த போதிலும் உமது பந்தியில் விருந்து உண்பாரோடு உம் அடியானையும் அமரச் செய்தீர். ஆதலால் குறை சொல்லவும், அரசரிடம் முறையிட்டுக் கெஞ்சவும் இனி எனக்கு நியாயம் உண்டோ?" என்றான்.
29. அதைக் கேட்டு அரசர், "நீர் வீணில் பேச வேண்டாம். நான் முன் சொன்ன தீர்ப்பே உறுதி. நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" என்றார்.
30. மிபிபோசேத் அரசருக்கு மறுமொழியாக, "என் தலைவராகிய அரசர் சமாதானமாய்த் தம் வீட்டிற்குத் திரும்பி வந்திருக்கும் போது, அவன் எல்லாவற்றையுமே எடுத்துக் கொள்ளட்டும்" என்றான்.
31. கலாத்தியனான பெர்செல்லாயியும் உரோகேலிமிலிருந்து யோர்தானின் இக்கரை வரை அரசரை வழிப்படுத்தின பின்னும், அரசரைப் பின் தொடரத் தயாராய் இருந்தான்.
32. இந்தக் கலாத்திய பெர்செல்லாயி மிகவும் வயது முதிர்ந்தவன்; அவனுக்கு வயது எண்பது. அரசர் பாளையத்தில் தங்கியிருக்கும்வரை, அவன் அவருக்கு உணவு முதலியன கொண்டு வந்து கொடுப்பான். ஏனெனில் அவன் பெருஞ் செல்வம் படைத்தவன்.
33. அரசர் பெர்செல்லாயியை நோக்கி, "நீ என்னோடு வா, யெருசலேமில் என்னுடன் கவலையின்றி வாழலாம்" என்று சொன்னார்.
34. பெர்செல்லாயி அரசரை நோக்கி, "நான் அரசரோடு யெருசலேமுக்குச் செல்லும்படி இன்னும் எத்தனை நாட்கள் நான் உயிரோடு இருப்பேன்?
35. இன்று எனக்கு வயதோ எண்பது, இனிப்பையும் கசப்பையும் வேறுபடுத்த என் புலன்கள் செயலற்று விட்டன. உண்பதும் குடிப்பதும் உம் அடியானுக்குச் சுவைக்குமா? பாடகர் பாடகிகளின் குரல் இனி எனக்குக் கேட்குமா? அடிமையாகிய நான் அரசராகிய என் தலைவருக்கு பாரமாய் இருக்க வேண்டியது ஏன்?
36. அடியேன் யோர்தானிலிருந்து இன்னும் சிறிது தூரம் உம்மோடு நடந்து வருவேன். ஆனால் அரசர் எனக்கு இத்தகு கைம்மாறு செய்வதற்கு நான் தகுதியற்றவன்.
37. உம் ஊழியனாகிய நான் திரும்பிப் போகவிடும். நான் என் ஊரிலேயே இறந்து என் தாய் தந்தையர் கல்லறைக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்படும்படி, தாங்கள் விடை தர வேண்டும், இதோ, காமாம் என்ற உம் அடியான். அவன் என் தலைவரும் அரசருமாகிய உம்மோடு போகட்டும். உமக்கு நல்லதென்று தோன்றுகிறதை அவனுக்குச் செய்யும்" என்றான்.
38. அப்பொழுது அரசர், "காமாம் என்னோடு வரட்டும். உன் விருப்பப்படியே நான் அவனுக்குச் செய்வேன். நீயும் என்னிடம் என்ன கேட்டாலும் நான் அதன்படி உனக்கு செய்வேன்" என்றார்.
39. அரசரும் எல்லா மக்களும் யோர்தானைக் கடந்தபிறகு அரசர் பெர்செல்லாயியை முத்தமிட்டு அவனுக்கு ஆசீர் அளித்தார். பிறகு பெர்செல்லாயி தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.
40. அரசர் கல்கலாவை அடைத்தார். காமாம் அவரோடு இருந்தான். யூதா மக்கள் அனைவரும் அரசரை அக்கரைக்குக் கூட்டிச் சென்றிருந்தார்கள். ஆனால் இஸ்ராயேல் மனிதருள் பாதிப்பேர் மட்டுமே அங்கு இருந்தனர்.
41. எனவே இஸ்ராயேல் மனிதர் எல்லாரும் அரசரிடம் வந்து கூடி அவரை நோக்கி, "எங்கள் சகோதரராகிய யூதா மனிதர் திருட்டுத்தனமாய் உம்மை அழைத்து வந்து அரசரையும் அவர் வீட்டாரையும் அவரோடு தாவீதின் மனிதர்கள் அனைவரையும் யோர்தானைக் கடக்கச் செய்தது ஏன்?" என்றனர்.
42. யூதா மனிதர் இஸ்ராயேல் மனிதர்களுக்கு மறுமொழியாக, "அரசர் எங்களைச் சேர்ந்தவர். அதனால் தான் நாங்கள் அவ்வாறு செய்தோம். இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் அரசரின் கையில் ஏதாவது வாங்கித் தின்றோமா? அல்லது நாங்கள் அவர் கையில் பரிசுகள் பெற்றுக் கொண்டோமா?" என்று கேட்டனர்.
43. அதற்கு இஸ்ராயேல் மனிதர் யூதா மனிதர்களை நோக்கி, "அரசரிடம் உங்களை விடப் பத்து மடங்கு அதிகமாக நாங்கள் இருக்கின்றோம். ஆகவே, உங்களைவிட எங்களுக்குத் தாவீதிடம் அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களுக்குத் தீங்கு இழைத்தீர்கள்? அரசரைத் திரும்ப அழைத்து வருவதற்கு முதலில் ஏன் எம்மிடம் கூறவில்லை?" என்றனர். யூதா மனிதர் இஸ்ராயேல் மனிதரைவிடக் கடுமையான முறையில் மறுமொழி பகன்றனர்.
Total 24 Chapters, Current Chapter 19 of Total Chapters 24
×

Alert

×

tamil Letters Keypad References