தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 இராஜாக்கள்
1. இஸ்ராயேல் அரசன் யோவக்காசின் மகன் யோவாசின் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு அரியணை ஏறினான்.
2. அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். யெருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவன் தாயின் பெயர் யோவாதான்.
3. அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையானதையே செய்து வந்தான். ஆயினும், தன் தந்தை தாவீது போல் அல்லன்; தன் தந்தை யோவாசு செய்தபடியெல்லாம் தானும் செய்தான்.
4. (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப் பெற்றிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை; மக்கள் இன்னும் அங்கே பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர்.
5. ஆட்சி தன் கைக்கு வந்தவுடன் அரசனாய் இருந்த தன் தந்தையைக் கொலை செய்த ஊழியர்களைக் கொன்று போட்டான்.
6. பிள்ளைகள் செய்த பாவத்துக்காகத் தந்தையர் சாக வேண்டாம்; தந்தையர் செய்த பாவத்துக்காகப் பிள்ளைகள் உயிரிழக்க வேண்டாம். அவனவன் செய்த பாவத்திற்காக அவனவன் சாகக்கடவான்" என ஆண்டவர் கட்டளையிட்டபடி மோயீசனின் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ளது. அதன்படி அமாசியாசு தன் தந்தையைக் கொன்றவர்களுடைய பிள்ளைகளைக் கொன்று போடவில்லை.
7. அவன் உப்புப் பள்ளத்தாக்கில் பதினாயிரம் இதுமேயரை முறியடித்து, கற்கோட்டையைப் போரிட்டுப் பிடித்து, அதற்கு இது வரை வழங்கி வருகிற எக்தேயெல் என்ற பெயரை இட்டான்.
8. அப்போது அமாசியாசு இஸ்ராயேலின் அரசன் ஏகுவின் மகன் யோவக்காசுக்குப் பிறந்தவனாகிய யோவாசிடம் ஆள் அனுப்பி, "வாரும், போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம்" என்று சொல்லச் சொன்னான்.
9. அதற்கு இஸ்ராயேல் அரசன் யோவாசு, யூதாவின் அரசன் அமாசியாசிடம் தூதரை அனுப்பி, "லீபானிலுள்ள நெருஞ்சிச் செடி லீபானிலிருக்கும் கேதுரு மரத்திடம் தூதனுப்பி, ' என் மகனுக்கு உன் மகளை மனைவியாகத் தரவேண்டும் ' என்றதாம்! ஆனால் அந்த லீபான் காட்டு விலங்குகள் அந்த வழியே போகையில், நெருஞ்சிச் செடியைக் காலால் மிதித்துப் போட்டனவாம்!
10. நீர் இதுமேயரை முறியடித்ததினால் செருக்குற்றுள்ளீர் போலும். நீர் பெற்ற புகழுடன் உம் வீட்டிலேயே இரும். நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி தீமையைத் தேடிக்கொள்வானேன்?" எனச் சொல்லச் சொன்னான்.
11. அதற்கு அமாசியாசு செவிகொடுக்கவில்லை. எனவே இஸ்ராயேலின் அரசன் யோவாசு போருக்குப் புறப்பட்டு வந்தான். இவனும் யூதா அரசன் அமாசியாசும் யூதாவின் நகர் பெத்சாமேசின் அருகே ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.
12. யூதாவின் மக்கள் இஸ்ராயேலருக்கு முன் தோற்றுத் தத்தம் கூடாரங்களுக்கு ஓடிப்போயினர்.
13. இஸ்ராயேல் அரசன் யோவாசு, பெத்சாமேசில் ஒக்கோசியாசுக்குப் பிறந்த யோவாசின் மகனும் யூதாவின் அரசனுமான அமாசியாசைச் சிறைப்பிடித்து, யெருசலேமுக்குக் கொண்டு சென்றான். யெருசலேமின் மதிற்சுவரில் எபிராயீம் வாயில் முதல் மூலை வாயில் வரை நானூறு முழ நீளம் இடித்துத் தள்ளிவிட்டு,
14. ஆண்டவருடைய ஆலயத்திலும் அரசனுடைய கருவூலத்திலும் அகப்பட்ட பொன்னையும் வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையுமே எடுத்துக் கொண்டு, சிலரைப் பிணையாளராகவும் பிடித்துக் கொண்டு சமாரியவுக்குத் திரும்பிச் சென்றான்.
15. யோவாசின் மற்றச் செயல்களும், யூதா அரசன் அமாசியாசுடன் இட்ட போரில் அவன் காட்டின பேராற்றலும் இஸ்ராயேல் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
16. யோவாசு தன் முன்னோரோடு துயில் கொண்ட பின், சமாரியாவில் இஸ்ராயேல் அரசருடைய கல்லறையில் புதைக்கப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் எரோபோவாம் அரசன் ஆனான்.
17. இஸ்ராயேல் அரசன் யோவக்காசின் மகன் யோவாசு மாண்டபின், யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு பதினைந்து ஆண்டுகள் உயிரோடு இருந்தான்.
18. அமாசியாசின் மற்றச் செயல்கள் யூதா அரசரது நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
19. யெருசலேமில் சிலர் அவனுக்கு எதிராகச் சதி செய்தனர். எனவே அவன் லாக்கீசு நகருக்கு ஓடிப்போனான். சதி செய்தவர்கள் அவனைப் பிடிக்க லாக்கீசுக்கு ஆள் அனுப்பி அவனை அங்குக் கொலை செய்தனர்.
20. பின் அவனது சடலத்தைக் குதிரைகளின் மேல் ஏற்றிக் கொணர்ந்து தாவீதின் நகரில் அவனுடைய முன்னோரின் கல்லறையில் அவனைப் புதைத்தனர்.
21. யூதா மக்கள் எல்லாரும் அப்பொழுது பதினாறு வயதினனாய் இருந்த அசாரியாசைத் தேர்ந்தெடுத்து, அவனை அவன் தந்தை அமாசியாசுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
22. அரசன் தன் முன்னோரோடு துயில் கொண்டபின், இவன் எலாத் நகரைக் கட்டி, அதைத் திரும்ப யூதா அரசுடன் இணைத்துக் கொண்டான்.
23. யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு அரியணை ஏறிய பதினைந்தாம் ஆண்டில், இஸ்ராயேல் அரசன் யோவாசின் மகன் எரோபோவாம் சமாரியாவில் அரசுகட்டில் ஏறி, நாற்பத்தொன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
24. இவன் ஆண்டவர் திருமுன் பாவம் செய்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவங்களில் ஒன்றையும் அவன் விட்டுவைக்கவில்லை.
25. இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் ஒபேரில் அமைந்திருந்த கேத் ஊரானாகிய தம் அடியானும் அமாத்தியின் புதல்வனுமாகிய யோனாசு என்ற இறைவாக்கினர் மூலம் கூறியபடி, எரோபோவாம் ஏமாத் முதல் பாலைவனக் கடல் வரை இஸ்ராயேலின் எல்லைகளை மீண்டும் இணைத்துக் கொண்டான்.
26. ஆண்டவர் இஸ்ராயேலர் பட்ட மிதமிஞ்சிய துன்பத்தையும், சிறையில் அடைப்பட்டவர்களும், மக்களில் கடைப்பட்டவர்களும் முதலாய் எல்லோருமே துன்புறுவதையும், அவர்களுக்கு உதவி செய்பவர் ஒருவரும் இல்லாதிருந்ததையும் கண்ணுற்றார்.
27. இஸ்ராயேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவோம்" என்று ஆண்டவர் சொல்லவில்லை; ஆனால் யோவாசின் மகன் எரோபோவாமின் மூலம் அவர்களை மீட்டார்.
28. எரோபோவாமின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், போரில் அவன் காட்டிய வீரமும், யூதா நாட்டுடன் இருந்த தமாஸ்து, ஏமாத் நகர்களையும் இஸ்ராயேல் நாட்டுடன் மீண்டும் இணைத்துக் கொண்ட விதமும் இஸ்ராயேல் அரசர்களது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
29. எரோபோவாம் தன் முன்னோரான இஸ்ராயேல் அரசர்களோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் சக்கரியாசு அரசாண்டான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 25 Chapters, Current Chapter 14 of Total Chapters 25
2 இராஜாக்கள் 14:27
1. இஸ்ராயேல் அரசன் யோவக்காசின் மகன் யோவாசின் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு அரியணை ஏறினான்.
2. அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். யெருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவன் தாயின் பெயர் யோவாதான்.
3. அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையானதையே செய்து வந்தான். ஆயினும், தன் தந்தை தாவீது போல் அல்லன்; தன் தந்தை யோவாசு செய்தபடியெல்லாம் தானும் செய்தான்.
4. (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப் பெற்றிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை; மக்கள் இன்னும் அங்கே பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர்.
5. ஆட்சி தன் கைக்கு வந்தவுடன் அரசனாய் இருந்த தன் தந்தையைக் கொலை செய்த ஊழியர்களைக் கொன்று போட்டான்.
6. பிள்ளைகள் செய்த பாவத்துக்காகத் தந்தையர் சாக வேண்டாம்; தந்தையர் செய்த பாவத்துக்காகப் பிள்ளைகள் உயிரிழக்க வேண்டாம். அவனவன் செய்த பாவத்திற்காக அவனவன் சாகக்கடவான்" என ஆண்டவர் கட்டளையிட்டபடி மோயீசனின் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ளது. அதன்படி அமாசியாசு தன் தந்தையைக் கொன்றவர்களுடைய பிள்ளைகளைக் கொன்று போடவில்லை.
7. அவன் உப்புப் பள்ளத்தாக்கில் பதினாயிரம் இதுமேயரை முறியடித்து, கற்கோட்டையைப் போரிட்டுப் பிடித்து, அதற்கு இது வரை வழங்கி வருகிற எக்தேயெல் என்ற பெயரை இட்டான்.
8. அப்போது அமாசியாசு இஸ்ராயேலின் அரசன் ஏகுவின் மகன் யோவக்காசுக்குப் பிறந்தவனாகிய யோவாசிடம் ஆள் அனுப்பி, "வாரும், போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம்" என்று சொல்லச் சொன்னான்.
9. அதற்கு இஸ்ராயேல் அரசன் யோவாசு, யூதாவின் அரசன் அமாசியாசிடம் தூதரை அனுப்பி, "லீபானிலுள்ள நெருஞ்சிச் செடி லீபானிலிருக்கும் கேதுரு மரத்திடம் தூதனுப்பி, ' என் மகனுக்கு உன் மகளை மனைவியாகத் தரவேண்டும் ' என்றதாம்! ஆனால் அந்த லீபான் காட்டு விலங்குகள் அந்த வழியே போகையில், நெருஞ்சிச் செடியைக் காலால் மிதித்துப் போட்டனவாம்!
10. நீர் இதுமேயரை முறியடித்ததினால் செருக்குற்றுள்ளீர் போலும். நீர் பெற்ற புகழுடன் உம் வீட்டிலேயே இரும். நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி தீமையைத் தேடிக்கொள்வானேன்?" எனச் சொல்லச் சொன்னான்.
11. அதற்கு அமாசியாசு செவிகொடுக்கவில்லை. எனவே இஸ்ராயேலின் அரசன் யோவாசு போருக்குப் புறப்பட்டு வந்தான். இவனும் யூதா அரசன் அமாசியாசும் யூதாவின் நகர் பெத்சாமேசின் அருகே ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.
12. யூதாவின் மக்கள் இஸ்ராயேலருக்கு முன் தோற்றுத் தத்தம் கூடாரங்களுக்கு ஓடிப்போயினர்.
13. இஸ்ராயேல் அரசன் யோவாசு, பெத்சாமேசில் ஒக்கோசியாசுக்குப் பிறந்த யோவாசின் மகனும் யூதாவின் அரசனுமான அமாசியாசைச் சிறைப்பிடித்து, யெருசலேமுக்குக் கொண்டு சென்றான். யெருசலேமின் மதிற்சுவரில் எபிராயீம் வாயில் முதல் மூலை வாயில் வரை நானூறு முழ நீளம் இடித்துத் தள்ளிவிட்டு,
14. ஆண்டவருடைய ஆலயத்திலும் அரசனுடைய கருவூலத்திலும் அகப்பட்ட பொன்னையும் வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையுமே எடுத்துக் கொண்டு, சிலரைப் பிணையாளராகவும் பிடித்துக் கொண்டு சமாரியவுக்குத் திரும்பிச் சென்றான்.
15. யோவாசின் மற்றச் செயல்களும், யூதா அரசன் அமாசியாசுடன் இட்ட போரில் அவன் காட்டின பேராற்றலும் இஸ்ராயேல் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
16. யோவாசு தன் முன்னோரோடு துயில் கொண்ட பின், சமாரியாவில் இஸ்ராயேல் அரசருடைய கல்லறையில் புதைக்கப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் எரோபோவாம் அரசன் ஆனான்.
17. இஸ்ராயேல் அரசன் யோவக்காசின் மகன் யோவாசு மாண்டபின், யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு பதினைந்து ஆண்டுகள் உயிரோடு இருந்தான்.
18. அமாசியாசின் மற்றச் செயல்கள் யூதா அரசரது நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
19. யெருசலேமில் சிலர் அவனுக்கு எதிராகச் சதி செய்தனர். எனவே அவன் லாக்கீசு நகருக்கு ஓடிப்போனான். சதி செய்தவர்கள் அவனைப் பிடிக்க லாக்கீசுக்கு ஆள் அனுப்பி அவனை அங்குக் கொலை செய்தனர்.
20. பின் அவனது சடலத்தைக் குதிரைகளின் மேல் ஏற்றிக் கொணர்ந்து தாவீதின் நகரில் அவனுடைய முன்னோரின் கல்லறையில் அவனைப் புதைத்தனர்.
21. யூதா மக்கள் எல்லாரும் அப்பொழுது பதினாறு வயதினனாய் இருந்த அசாரியாசைத் தேர்ந்தெடுத்து, அவனை அவன் தந்தை அமாசியாசுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
22. அரசன் தன் முன்னோரோடு துயில் கொண்டபின், இவன் எலாத் நகரைக் கட்டி, அதைத் திரும்ப யூதா அரசுடன் இணைத்துக் கொண்டான்.
23. யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு அரியணை ஏறிய பதினைந்தாம் ஆண்டில், இஸ்ராயேல் அரசன் யோவாசின் மகன் எரோபோவாம் சமாரியாவில் அரசுகட்டில் ஏறி, நாற்பத்தொன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
24. இவன் ஆண்டவர் திருமுன் பாவம் செய்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவங்களில் ஒன்றையும் அவன் விட்டுவைக்கவில்லை.
25. இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் ஒபேரில் அமைந்திருந்த கேத் ஊரானாகிய தம் அடியானும் அமாத்தியின் புதல்வனுமாகிய யோனாசு என்ற இறைவாக்கினர் மூலம் கூறியபடி, எரோபோவாம் ஏமாத் முதல் பாலைவனக் கடல் வரை இஸ்ராயேலின் எல்லைகளை மீண்டும் இணைத்துக் கொண்டான்.
26. ஆண்டவர் இஸ்ராயேலர் பட்ட மிதமிஞ்சிய துன்பத்தையும், சிறையில் அடைப்பட்டவர்களும், மக்களில் கடைப்பட்டவர்களும் முதலாய் எல்லோருமே துன்புறுவதையும், அவர்களுக்கு உதவி செய்பவர் ஒருவரும் இல்லாதிருந்ததையும் கண்ணுற்றார்.
27. இஸ்ராயேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவோம்" என்று ஆண்டவர் சொல்லவில்லை; ஆனால் யோவாசின் மகன் எரோபோவாமின் மூலம் அவர்களை மீட்டார்.
28. எரோபோவாமின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், போரில் அவன் காட்டிய வீரமும், யூதா நாட்டுடன் இருந்த தமாஸ்து, ஏமாத் நகர்களையும் இஸ்ராயேல் நாட்டுடன் மீண்டும் இணைத்துக் கொண்ட விதமும் இஸ்ராயேல் அரசர்களது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
29. எரோபோவாம் தன் முன்னோரான இஸ்ராயேல் அரசர்களோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் சக்கரியாசு அரசாண்டான்.
Total 25 Chapters, Current Chapter 14 of Total Chapters 25
×

Alert

×

tamil Letters Keypad References