1. ரொபோவாம் சிக்கேமுக்குப் போனான். ஏனெனில் இஸ்ராயேலர் எல்லாரும் அவனை அரசனாக்கும்படி அங்குக் கூடியிருந்தனர்.
|
2. சாலமோனுக்கு அஞ்சி எகிப்திற்குத் தப்பியோடியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாம் அதைக் கேள்வியுற்று எகிப்திலிருந்து திரும்பி வந்தான்.
|
3. இஸ்ராயேலர் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார்கள். அவனும் இஸ்ராயேலர் அனைவரோடும் வந்தான். அவர்கள் ரொபோவாமை நோக்கி,
|
4. உம் தந்தை மிகப் பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தியுள்ளார். நீர் அப்பளுவான சுமையை இலகுவாக்கி எங்கள் சுமையின் பளுவைக் குறைக்க ஒத்துக் கொண்டால், நாங்கள் உமக்கு அடிபணிவோம்" என்றனர்.
|
5. அதற்கு ரொபோவாம், "நீங்கள் மூன்று நாள் பொறுத்து என்னிடம் திரும்பி வாருங்கள்" என்றான். மக்களும் அவ்வாறே மூன்று நாளுக்குப்பின் அவனிடம் சென்றனர்.
|
6. ரொபோவாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருந்த காலத்தில் அவருக்குப் பணி புரிந்து வந்த மூப்பரைக் கலந்துபேசி, நான் இம்மக்களுக்கு மறுமொழி கொடுக்க வேண்டுமே; நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள்?" என்று வினவினான்.
|
7. அவர்கள், "நீர் இம்மக்களிடம் அன்பாகப் பேசி நயமான வார்த்தைகளைச் சொல்லுவீரானால், என்றும் அவர்கள் உமக்கு அடிபணிவார்கள்" என்று மறுமொழி கூறினர்.
|
8. ரொபோவாம் மூப்பர் சொன்ன ஆலோசனையைத் தள்ளி விட்டுத் தன்னோடு எப்போதும் இருந்து தன் பந்தியில் அமர்ந்து உணவருந்தி வந்த இளைஞரிடம் ஆலோசனை கேட்டான்.
|
9. மக்கள் என்னிடம் வந்து: 'உம் தந்தை எம்மேல் வைத்த நுகத்தை நீர் இலகுவாக்க வேண்டும்' என்று விண்ணப்பம் செய்து கொண்டனர். அதற்கு நான் என்ன பதில் கூறவேண்டும்? உங்கள் ஆலோசனை என்ன?" என்று கேட்டான்.
|
10. அதற்கு அவனோடு இன்ப சுகமாக வளர்ந்து வந்திருந்த அந்த இளைஞர் அவனை நோக்கி, "உம்மைப் பார்த்து, 'உம் தந்தை என் நுகத்தை அதிகப் பளுவாக்கியுள்ளார்; நீர் அதை இலகுவாக்க வேண்டும்' என்று கேட்கும் மக்களுக்கு நீர் கூறவேண்டிய மறுமொழியாவது: 'என் தந்தையின் இருப்பை விட என் சுண்டு விரலே பெரிது.
|
11. ஆகையால், என் தந்தை பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார்; நானோ அதை இன்னும் பாரமாக்குவேன். என் தந்தை உங்களைத் மிலாறுகளால் அடித்தார்; நானோ உங்களைத் தேள்களைக் கொண்டு தண்டிப்பேன்' என்று சொல்லுவீராக" என்றனர்.
|
14. இளைஞர்களின் ஆலோசனைப்படி அவர்களை நோக்கி, "என் தந்தை உங்கள் மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நானோ அதை அதிகப் பாரமாக்குவேன். என் தந்தை மிலாறுகளால் உங்களை அடித்தார். நானோ உங்களைத் தேள்களைக் கொண்டு தண்டிப்பேன்" என்றான்.
|
15. இவ்வாறு அரசன் மக்களின் விண்ணப்பத்திற்குச் செவி கொடுக்கவில்லை. இது கடவுளின் திருவுளப்படியே நடந்தது. அதனால் அவர் சிலோனித்தரான அகியாவின் மூலம் நாபாத்தின் மகன் எரொபோவாமுக்குச் சொல்லியிருந்த தமது வாக்கை நிறைவேற்றினார்.
|
16. அரசனின் முரட்டுத்தனமான பதிலைக் கேட்ட மக்கள் ரொபோவாமைப் பார்த்து, "தாவீதோடு எங்களுக்குப் பங்கு இல்லை; இசாயியின் மகனிடம் எங்களுக்கு உரிமைச் சொத்தும் இல்லை. இஸ்ராயேலே, உன் கூடாரங்களுக்குப் போ; தாவீதே, நீயே உன் சொந்தவீட்டுக் காரியங்களைப் பார்த்துக் கொள்" என்று சொல்லி, இஸ்ராயேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றனர்.
|
18. பின் அரசன் ரொபோவாம் வரி வசூல் செய்ய அதுராமை அனுப்பி வைத்தான். இஸ்ராயேல் மக்களோ அவனைக் கல்லால் எறிந்து கொன்று போட்டனர். அதைக் கேள்வியுற்ற ரொபோவாம் விரைவாய்த் தன் தேரின் மேல் ஏறி யெருசலேமுக்கு ஓடிப் போனான்.
|