1. ஆனால் சிறுவன் சாமுவேல் ஏலிக்கு முன்பாக ஆண்டவருக்குப் பணிவிடை செய்து வந்தான். அந்நாட்களில் ஆண்டவரின் வாக்கு மிகவும் அருமையாய் இருந்தது. வெளிப்படையான காட்சியும் இல்லை.
|
2. ஒரு நாள் ஏலி தமக்கு உரிய இடத்தில் படுத்திருக்க, இதோ, அவரது பார்வை மங்கிப் போயிற்று. அவரால் பார்க்க முடியவில்லை.
|
3. கடவுளின் விளக்கு அணைக்கப்படுமுன்பே, கடவுளின் பேழை இருந்த ஆலயத்தில் சாமுவேல் தூங்கிக் கொண்டிருந்தான்.
|
5. உடனே ஏலியின் அருகில் ஓடி, "என்னைக் கூப்பிட்டீரே: இதோ, நிற்கிறேன்" என்றான். அவர் "நான் கூப்பிடவில்லை; திரும்பிப் போய் தூங்கு" என்றார். அப்படியே சாமுவேல் திரும்பிப் போய்த் தூங்கினான்.
|
6. ஆண்டவர் மறுமுறையும் சாமுவேலைக் கூப்பிட்டார். சாமுவேல் எழுந்து ஏலியின் அருகே போய், "என்னைக் கூப்பிட்டீரே: இதோ, நிற்கிறேன்" என்றான். ஏலி, "மகனே, நான் உன்னை அழைக்கவில்லை; திரும்பிப்போய்த் தூங்கு" என்று பதிலுரைத்தார்.
|
9. என்னை அழைத்தீரே; இதோ, நிற்கிறேன் என்றான். அப்போது ஆண்டவர் சிறுவனை அழைக்கிறதை ஏலி கண்டறிந்து சாமுவேலை நோக்கி, "நீ போய்த் தூங்கு. திரும்பவும் நீ அழைக்கப்பட்டால், 'ஆண்டவரே பேசும்; உம் அடியான் கேட்கிறான்' என்று சொல்வாயாக" என்றார். சாமுவேல் திரும்பிப்போய்த் தனது இடத்தில் தூங்கினான்.
|
10. ஆண்டவர் வந்து சாமுவேல் அருகே நின்று, "சாமுவேல், சாமுவேல்!" என்று முன் போலவே கூப்பிட்டார். சாமுவேல், "ஆண்டவரே, பேசும்; உம் அடியான் கேட்கிறான்' என்றான்.
|
11. ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "நாம் இஸ்ராயேலரிடையே ஒரு காரியம் செய்யவிருக்கிறோம். அது எத்தன்மைத்து என்றால் அதைக் கேட்போர் அனைவரும் அதிர்ச்சி அடைவர்.
|
12. அந்நாளில் ஏலியைப் பற்றியும் அவன் வீட்டைப்பற்றியும் நாம் கூறினவற்றை எல்லாம் நிகழச் செய்வோம்; துவக்கி முடிப்போம்.
|
13. ஏனெனில், தன் புதல்வர்கள் மதிகெட்டு நடந்ததை அறிந்திருந்தும், அவன் அவர்களைக் கண்டிக்காததால், அக் கொடுமைக்காக அவனையும் அவன் வீட்டையும் என்றென்றும் தீர்ப்பிட்டுத் தண்டிப்போம் என்று முன்பே அவனுக்குத் தெரிவித்திருந்தோம்.
|
14. ஆகவே, ஏலியின் பாவத்திற்குப் பலிகளாலும் காணிக்கைகளாலும் ஒருபோதும் பரிகாரம் செய்ய முடியாது என்று நாம் அவனுடைய வீட்டுக்கு ஆணையிட்டோம்" என்றார்.
|
15. சாமுவேல் காலை வரை தூங்கிய பின் ஆண்டவருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான். சாமுவேல் ஏலிக்குத் தான் கண்ட காட்சியைக் கூற அஞ்சினான்.
|
17. ஏலி அவனைப் பார்த்து, "ஆண்டவர் உன்னிடம் பேசியது என்ன? ஒன்றையும் மறைக்காதபடி சொல்ல உன்னை வேண்டுகிறேன். உனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளில் எதையாவது நீ என்னிடம் மறைத்தால், கடவுள் உன்னைத் தண்டிப்பாராக" என்றார்.
|
18. அவருக்குச் சாமுவேல் எல்லாக் காரியங்களையும் ஒளிக்காது வெளிப்படுத்தினான். அப்பொழுது ஏலி, "அவர் ஆண்டவர்; அவர் தமக்கு நன்மை எனத் தோன்றுவதைச் செய்வாராக" என்று பதிலுரைத்தார்.
|
20. சாமுவேல் ஆண்டவரின் பிரமாணிக்கமான இறைவாக்கினர் என்று தான் துவக்கிப் பெத்சாபே வரை இஸ்ராயேலர் எல்லாரும் அறிந்து கொண்டனர்.
|
21. சாமுவேலுக்கு ஆண்டவர் முதலில் சீலோவில் தோன்றியதால் அவர் சொற்படி மறுமுறையும் சீலோவிலேயே அவனுக்குத் தோன்றலானார். சாமுவேல் இஸ்ராயேலர் அனைவருக்கும் கூறியவை நிறைவேறின.
|