1. இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்றெண்பதாம் ஆண்டிலும், சாலமோன் இஸ்ராயேலின் அரசரான நான்காம் ஆண்டு சியோ மாதமாகிய இரண்டாவது மாதத்திலும் ஆண்டவருடைய ஆலய வேலை ஆரம்பமானது.
|
3. ஆலய முன்மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபது முழ நீளமும், பத்து முழ அகலமும் கொண்டிருந்தது.
|
5. கோயிலைச் சுற்றிலும் கோயிலுக்கும் கடவுள் சந்நிதிக்கும் அருகில் அடைப்பு மதிலின் மேல் அறைகளையும், கோயிலைச் சுற்றித் தாழ்வாரங்களையும் கட்டினார்.
|
6. முதலடுக்கு அறைகள் ஐந்து முழ அகலமும், இரண்டாமடுக்கு அறைகள் ஆறு முழ அகலமும், மூன்றாமடுக்கு அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அவை கோயிலின் சுவர்களிலே தாங்காத படி அவர் சுற்றிலும் வெளிப்புறமாக உத்திரங்களை அமைத்தார்.
|
7. செதுக்கிச் சீர்படுத்தப்பெற்ற கற்களால் கோயில் கட்டப்பட்டது. ஆகையால், அது கட்டப்பட்ட போது, சுத்தியல்கள், கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அங்கே கேட்கப்படவில்லை.
|
8. இரண்டாம் மாடிக்கு போகிற வாயில் கோயிலின் வலப்புறம் இருந்தது. சுழற்படிகளால் இரண்டாம் மாடிக்கும், இரண்டாம் மாடியிலிருந்து மூன்றாம் மாடிக்கும் ஏற வசதி அமைக்கப் பெற்றிருந்தது.
|
10. அவர் ஐந்து முழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின் மேல் எங்கும் கட்டுவித்தார். அவை கேதுரு மரங்களால் மூடப்பட்டிருந்தன.
|
12. நீ நம் கட்டளைகளின்படி ஒழுகி, நம் தீர்ப்புக்களை நிறைவேற்றி, நம் கற்பனைகளின்படி அணுப்பிசகாது நடந்து வருவாயாகில், நீ கட்டுகிற இக் கோயிலைக் குறித்து நாம் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன நமது வார்த்தையை உன்னில் நிறைவேற்றுவோம்.
|
15. ஆலயச் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் தொடங்கி மேல் மச்சு வரை கேதுருப் பலகைகளால் மூடினார். மேலும் கோயிலின் கீழ்த்தளத்தைச் சப்பீன் பலகைகளால் பாவினார்.
|
16. ஆனால் ஆலயத்தின் பின்புறத்தில், கீழ்த்தளம் முதல் மேல் தளம் வரை இருபது முழ உயரத்துக்குக் கேதுரு மரப் பலகைகளால் மூடப்பட்ட ஓர் இடத்தை அமைத்துத் திருத்தலத்தின் உட்புறத்தை அதிபரிசுத்த தலமாக ஏற்படுத்தினார்.
|
18. இப்படி ஆலயத்தின் உட்புறமெங்கும் கேதுரு மரப்பலகைகளால் மூடியிருந்ததும் தவிர, பலகைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் இடங்கள் சிற்ப சித்திரக் கலைகளால் அழகு செய்யப் பட்டிருந்தன. இப்படியே பார்வைக்கு ஒரு கல்லாவது காணப்படாமல் கோயில் முழுவதும் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது.
|
20. திருத்தலம் மட்டும் இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது; அதைப் பசும் பொன்னால் மூடினார்; பலி பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார்.
|
21. திருத்தலத்திற்கு முன் இருந்த ஆலயத்தையும் பசும் பொன்னால் மூடி, பொன் அணிகள் தொடுக்கப்பட்ட தகடுகளைத் தொங்க விட்டார்.
|
22. இப்படி ஆலயம் முழுவதும் பொன்னால் மூடப்படாத இடம் ஒன்றும் இல்லை. திருத்தலத்திற்கு முன் இருந்த பலிபீடம் முழுவதையும் பொன்னால் மூடினார்.
|
24. கெருபீம்களின் இறக்கைகளுடைய நீளம் ஐந்து முழம்; இறக்கைகளின் முனைகளுக்கு இடையே இருந்த தூரம் பத்து முழம். மற்றக் கெருபீமும் பத்து முழம்.
|
27. அவர் அக்கெருபீம்களை உள் ஆலயத்தின் நடுவே வைத்தார். அவற்றின் இறக்கைகள் விரிந்திருந்ததினால், ஒரு கெருபீமின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரிலும், மற்றக் கெருபீமின் இறக்கை மறுபக்கத்துச் சுவரிலும் தொடும்படியாயிருந்தன. ஆலயத்தின் நடுவில் அவற்றின் இறக்கைகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன.
|
29. ஆலயத்தின் சுவர்கள் முழுவதும், சுற்றிலும் தொங்கிக்கொண்டிருந்த கெருபீம்களும், ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைகளால் அழகு செய்யப்பட்டிருந்தன.
|
31. திருத்தலத்தின் வாயிலுக்கு ஒலிவ மரங்களால் கதவுகளையும், ஐந்து கோணமுள்ள தூண்களையும் செய்துவைத்தார்.
|
32. ஒலிவ மரத்தாலான அந்த இரட்டைக் கதவுகளைக் கெருபீம்களும், ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைகளாலும் அழகு செய்து இவை அனைத்தையும் பொன்னால் அலங்கரித்தார்.
|
34. மேலும் அதன் பக்கத்தில் சப்பீன் மரத்தால் இரு கதவுகளைச் செய்து வைத்தார். ஒவ்வொரு கதவும் இரண்டு மடிப்பாய்ச் செய்யப்பட்டிருந்தது; எனவே, கதவுகளைத் திறக்கும் போது இரு மடிப்புப் பலகைகள் ஒன்றோடொன்று சேர்ந்தே திறக்கப்படும்.
|
35. அவற்றைக் கெருபீம்களும் ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைப்பாடுகளால் அழகு செய்து, அவற்றின் அளவுப்படி அவற்றைப் பொன்னால் அலங்கரித்தார்.
|
38. பதினோராம் ஆண்டு பூல் என்ற எட்டாம் மாதத்தில் ஆலயத்தின் எல்லா வேலைகளும் முற்றுப் பெற்றன. அதற்குத் தேவையான எல்லாத் தட்டுமுட்டுச் சாமான்களும் தயாராகின. அவர் அதைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின.
|