3. சிசாவின் புதல்வர்கள் எலியோரேபும், அகியாவும் எழுத்தர்களாய் இருந்தனர். அகிலுதின் மகன் யோசபாத் பதிவு செய்பவனாய் இருந்தான்.
|
4. யோயியாதாவின் மகன் பனாயாசு படைத்தலைவனாய் இருந்தான். சாதோக்கும் அபியாத்தாரும் குருக்களாய் இருந்தனர்.
|
5. குரு நாத்தானின் மகன் அசாரியாசு அரச அலுவலர்களுக்குத் தலைவனாய் இருந்தான். நாத்தானின் மகன் சாபுத் அரசரின் நண்பனாய் இருந்தான்.
|
7. அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுக்க இஸ்ராயேல் நாடெங்கும் பன்னிரு கண்காணிப்பாளர்கள் சாலமோனுக்கு இருந்தனர். அவர்கள் ஆண்டு முழுவதற்கும் மாதத்திற்கும் வேண்டியவற்றை எல்லாம் அனுப்பி வைத்தனர்.
|
10. பெனேசேத்- இவன் அருபோத்தில் இருந்தான்; சொக்கோவும் எபேர் நாடு முழுவதும் இவனது கண்காணிப்பில் இருந்தன.
|
11. பேனாபினாதாப்- இவனுக்கு நெப்பாத்தோர் நாடு முழுவதும் சொந்தமாய் இருந்தது; சாலமோனின் மகள் தாபேத் இவன் மனைவி.
|
12. அகிலுதின் மகன் பானா- இவன் தானாக், மகேத்தோ, சர்தானுக்கு அருகிலுள்ள பெத்சான் நாடெல்லாவற்றிற்கும், பெத்சான் முதல் ஜெஸ்ராயேல் நாட்டுக்குக் கீழ் உள்ள எக்மானுக்கு எதிரில் இருக்கும் அபேல்மேயுலா வரையிலுள்ள நாடுகளுக்கும் ஆளுநனாய் இருந்தான்.
|
13. பென்கபேர்- இவன் ராமோத் காலாதில் இருந்தான்; காலாதிலுள்ள மனாசேயின் மகன் யாயீரின் ஊர்களுக்கும், சுற்றுமதில்களும் வெண்கலக் கதவுகளுமுள்ள பாசான் நாட்டின் அறுபது மாநகர்களுள்ள ஆர்கோப் நாட்டுக்கும் தலைவனாய் இருந்தான்.
|
19. ஊரியின் மகன் காபேர்- இவன் அமோறையரின் அரசன் சேகோனுக்கும், பாசானின் அரசன் ஓகூக்கும் இருந்த நாடாகிய காலாதில் உள்ள எல்லா நாடுகளுக்கும் தலைவனாய் இருந்தான்.
|
21. நதி தொடங்கிப் பிலிஸ்தியர் நாடு வரை உள்ள எல்லா நாடுகளையும் சாலமோன் ஆண்டு வந்தார். அவர்கள் சாலமோனுக்குப் பரிசுகள் கொடுத்து, அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு அடிபணிந்து வந்தனர்.
|
22. நாள்தோறும் சாலமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு: முப்பது மரக்கால் மிருதுவான மாவும், அறுபது மரகால் சாதாரண மாவும்,
|
23. கலைமான்கள், சிறுமான்கள், கவரிமான்கள், கொழுத்த பறவைகள் முதலியவற்றைத் தவிர கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும், நூறு ஆடுகளுமாகும்.
|
24. ஏனெனில், நதிக்கு அப்புறத்திலுள்ள தாப்சா முதல் காசா வரை உள்ள எல்லா நாட்டையும் அவர் ஆண்டு வந்தார். இந்நாட்டரசர் அனைவரும் அவருக்கு அடிபணிந்து வந்தனர். சுற்றுப்புறம் எங்கனும் சமாதானம் நிலவிற்று.
|
25. சாலமோனின் வாழ்நாளெல்லாம், தான் முதல் பெர்சாபே வரையிலும், யூதாவிலும் இஸ்ராயேலிலும் இருந்த மக்கள் அச்சமின்றித் தத்தம் திராட்சைத் தோட்டத்திலும் அத்திமரச் சோலைகளிலும் நலமே வாழ்ந்து வந்தனர்.
|
26. தேர்க் குதிரைகளுக்கென நாற்பதினாயிரம் தொழுவங்களும், சேணங்களை வைப்பதற்கெனப் பன்னீராயிரம் கூடங்களும் சாலமோனுக்கு இருந்தன.
|
27. மேற்சொன்ன அரச கண்காணிப்பாளர்கள் குதிரைகளுக்குத் தீனி போட்டு வந்தனர்; அத்தோடு சாலமோன் அரசரின் பந்திக்குத் தேவையானவற்றையும் மிகுந்த கவனத்துடன் குறித்த காலத்தில் கொடுத்து வந்தனர்.
|
28. மேலும், இவர்கள் தத்தமக்குக் குறிக்கப்பட்டிருந்தபடி அரசர் செல்லுமிடமெல்லாம் குதிரைகளுக்கும் மற்றக் கால்நடைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமை, வைக்கோல் முதலியவற்றைக் கொண்டு வருவது வழக்கம்.
|
29. கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும், மேலான அறிவையும், கடற்கரை மணலைப் போல் பரந்த உள்ளத்தையும் கொடுத்திருந்தார்.
|
31. ஏசுராயித்தனாகிய எத்தானிலும், ஏமான், ஷல்கோல், தொர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட அவர் அறிவில் சிறந்து விளங்கினார். அண்டை நாடுகள் அனைத்திலும் அவர் புகழ் பரவிற்று.
|
33. லீபானிலிருக்கும் கேதுரு மரமுதல் சுவர் மேல் முளைக்கிற ஈசோப்புப் புல் வரை உள்ள மரவகைகளைக் குறித்தும், மிருகங்கள், பறவைகள், ஊர்வன, மீன்கள் முதலியவற்றைக் குறித்தும் பேசினார்.
|
34. சாலமோனின் ஞானத்தைக் கேட்க எல்லா நாடுகளிலுமிருந்து மக்கள் வருவார்கள். அவருடைய ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற அரசர்கள் அனைவரும் அவரிடம் வருவார்கள்.
|