1. விருப்பம்போல் செய்ய எனக்கு உரிமை இல்லையா? நான் அப்போஸ்தலன் அல்லனோ? நம் ஆண்டவராகிய இயேசுவை நான் காண வில்லையா? ஆண்டவருக்குள் நீங்கள் வாழும் முறை என் உழைப்பின் பயனன்றோ?
|
2. மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாய் இராவிடினும், உங்களுக்காகவது நான் அப்போஸ்தலனே. ஏனெனில், என் அப்போஸ்தலப் பணிக்கு நீங்களே ஆண்டவருக்குள் அத்தாட்சியாய் இருக்கிறீர்கள்.
|
5. மற்ற அப்போஸ்தலர்களும், ஆண்டவரின், சகோதரர்களும், கேபாவும் செய்வதுபோல ஒரு கிறிஸ்தவ மனைவியை எங்களோடு அழைத்துக்கொண்டு போக எங்களுக்கு உரிமை இல்லையா?
|
7. எவனாவது தன் சொந்த செலவில் போர் வீரனாய் உழைப்பானா? திராட்சைத் தோட்டம் வைப்பவன் எவனாவது அதன் கனியை உண்ணாதிருப்பானா? ஆடு மாடு மேய்ப்பவன் எவனாவது அவற்றின் பாலைப் பருகாதிருப்பானா?
|
9. மோயீசனது சட்டத்தில், 'போரடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே' என எழுதியிருக்கிறது. மாடுகளைப் பற்றிக் கடவுளுக்குக் கவலையா? எங்களுக்காகவே இதைச் சொல்லுகிறார் என்பதில் ஐயமென்ன? எங்களுக்காகவே இது எழுதியுள்ளது
|
10. அதாவது உழுகிறவன் நம்பிக்கையோடு உழவேண்டும், போரடிக்கிறவன் பலனில் பங்கு கிடைக்கும் என்னும் நம்பிக்கையோடு வேலை செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.
|
11. உங்களுக்கென ஆவிக்குரிய நன்மைகளை விதைத்தபின் உடலுக்கு வேண்டியதை உங்களிடமிருந்து அறுவடையாகப் பெற்றுக்கொண்டால், அது மிகையாகுமோ?
|
12. மற்றவர்களுக்கு உங்கள்மேல் இந்த உரிமையிருந்தால், அவர்களைவிட எங்களுக்கு அதிக உரிமையில்லையா? ஆயினும் இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை; மாறாக, கிறிஸ்துவின் நற்செய்திக்கு எங்களால் எந்தத் தடையும் ஏற்படாதபடி எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளுகிறோம்.
|
13. கோயிலில் பணியாற்றுவோர் கோயில் காணிக்கையிலிருந்தே உணவு பெறுவர்; பீடத்தில் ஊழியஞ் செய்வோர் பீடத்துப் பலிப்பொருளில் பங்குகொள்வர்.
|
14. இது உங்களுக்குத் தெரியாதா? அவ்வாறே, நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியாலேயே பிழைப்பு கிடைக்க வேண்டுமென்று ஆண்டவர் கட்டளையிட்டார்.
|
15. நானோ இவ்வுரிமைகளில் ஒன்றையேனும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவ்வுரிமைகள் எனக்கு வேண்டும் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. இப்படி உரிமை பாராட்டுவதை விடச் சாவதே எனக்கு நலம்,.
|
16. நான் பாராட்டக்கூடிய பெருமையை யாரும் வெறுமையாக்க விடமாட்டேன். நற்செய்தியை அறிவிப்பதுகூட நான் பெருமைப் படுவதற்குரியதன்று, அது என்மேல் சுமத்தப்பட்ட கடமையே. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ! எனக்குக் கேடு;
|
17. நானாகவே இந்த வேலையை மேற்கொண்டிருந்தால், அதற்குத் தக்க ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால் அது என்மேல் சுமத்தப்பட்டதாயிருப்பதால், கண்காணிப்பாளன் என என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவலையே செய்கிறேன்.
|
18. ஆகவே,. எனக்குரிய ஊதியம் எது? நற்செய்தியை நான் அறிவிக்கும்போது அந்த நற்செய்தி எனக்குத் தரும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளாமல், உங்களுக்கு எச்செலவுமின்றி, அந்நற்செய்தியை வழங்குவதே எனக்குரிய ஊதியம்.
|
19. இவ்வாறாக, நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும், மிகுதியான மக்களை வசமாக்க என்னையே எல்லார்க்கும் அடிமையாக்கினேன்.
|
20. யூதர்களை வசமாக்க, யூதருக்கு யூதனைப்போல் ஆனேன். யூத சட்டத்திற்குட்பட்டவர்களை வசமாக்க, நான் அதற்கு உட்படாதவனாயிருந்தும், அச்சட்டத்திற்குட்பட்டவர்களுக்கு அவர்களைப்போல் ஆனேன்.
|
21. திருச்சட்டத்தை அறியாதவர்களை வசமாக்க, அவர்களுக்காகச் சட்டம் அறியாதவனைப் போல் ஆனேன். நானோ கடவுளின் சட்டத்தை அறியாதவன் அல்லேன். 'கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவனே.
|
22. வலிமையற்றவர்களை வசமாக்க, வலிமையற்றவர்களுக்கு வலிமையற்றவன் ஆனேன். எப்படியேனும் ஒரு சிலரையாவது மீட்க, எல்லார்க்கும் எல்லாம் ஆனேன்.
|
24. பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் எல்லாரும் ஓடினாலும், பரிசு பெறுபவன் ஒருவனே என்பது உங்களுக்குத் தெரியாதா? பரிசு பெறுவதற்காக நீங்களும் அவர்களைப் போல் ஓடுங்கள்.
|
25. பந்தயத்தில் போட்டியிடுகிறவர்கள் எல்லாரும் தங்களை எல்லாவகையிலும் ஒடுக்குகிறார்கள்; அவர்கள் அழிவுறும் வெற்றிவாகை பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்கள். நாமோ அழியாத வெற்றிவாகை அடைவதற்காக இப்படிச் செய்கிறோம்.
|
26. ஆகையால் நான் ஓடுவது குறிக்கோள் இல்லாமல், அன்று நான் மற்போர் புரிவது காற்றில் குத்துபவன்போல் அன்று.
|
27. பிறருக்கு நற்செய்தி அறிவித்தபின், நானே தகுதியற்றவன் என நீக்கப்படாதவாறு என் உடலை ஒறுத்து அடிமைப்படுத்துகிறேன்.
|