தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 கொரிந்தியர்
1. ஆகவே எங்களைக் கிறிஸ்துவின் பணியாளர், கடவுளுடைய மறைபொருள்களின் கண்காணிப்பாளர் என்றே எவரும் கருதவேண்டும்.
2. இனி, கண்காணிப்பாளர் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம் அன்றோ?
3. என்னைப் பொருத்த மட்டில் எனக்கு நீங்களோ, மனிதரின் நீதிமன்றமோ தீர்ப்புக் கூறுவதுபற்றி நான் கவலைப்படவில்லை. நானும் எனக்குத் தீர்ப்பிட்டுக் கொள்ளமாட்டேன்.
4. என் மனச்சாட்சி என்னை எதிலும் குற்றம் சாட்டவில்லை. ஆயினும் இதனால் நான் குற்றமற்றவன் என்று சொல்ல முடியாது. எனக்குத் தீர்ப்புக் கூறுகிறவர் ஆண்டவர் தாம்.
5. ஆகையால் குறித்த காலம் வருமுன் தீர்ப்பிடாதீர்கள். ஆண்டவர் வரும்வரை காத்திருங்கள். இருளில் மறைந்திருப்பதை அவர் வெட்ட வெளிச்சமாக்குவார். உள்ளங்களின் உட்கருத்துகளை வெளியாக்குவார். அப்பொழுதான் ஒவ்வொருவனும் கடவுளிடமிருந்து புகழ்பெறுவான்.
6. சகோதரர்களே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் உவமைப்படுத்திப் பேசினேன். "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே" என்பதன் பொருளை எங்களைப் பார்த்து நீங்கள் கற்றுக்கொள்ள இவையெல்லாம் எடுத்துரைத்தேன். உங்களுள் யாரும் ஒருவனைச் சார்ந்து கொண்டு வேறொருவனுக்கு எதிராக நின்று இறுமாப்பு அடையவேண்டாம்.
7. ஏனெனில், நீ உயர்ந்தவன் என்று சொன்னது யார்? பெற்றுக்கொள்ளாதது உன்னிடத்தில் என்ன உண்டு? நீ பெற்றுக் கொள்ளாதவனைப் போல் ஏன் பெருமை பாராட்டிக் கொள்கிறாய்?
8. உங்களுக்கு வேண்டியதெல்லாம் இதற்குள் கிடைத்துவிட்டதோ! இதற்குள் நீங்கள் செல்வர்களாகி விட்டீர்களோ! எங்களை விட்டு நீங்கள் மட்டும் அரசாளத் தொடங்கிவிட்டீர்களோ! அப்படி நீங்கள் அரசாளத் தொடங்கிவிட்டால் நல்லதுதான்! நாங்களும் உங்களோடு சேர்ந்து அரசாள்வோமே!
9. உள்ளபடியே அப்போஸ்தலர்களாகிய எங்களைக் கடவுள் அனைவரிலும் கடையராக்கினார் என நினைக்கிறேன். எல்லாரும் காணக் கொலைகளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் போல் ஆனோம். ஏனெனில் மனிதருக்கும் வானதூதருக்கும் உலகம் அனைத்திற்கும் நாங்கள் வேடிக்கையானோம்.
10. கிறிஸ்துவுக்காக நாங்கள் மடையர்கள், நீங்களோ கிறிஸ்தவ விவேகம் கொண்டவர்கள். நாங்கள் வலுவற்றவர்கள், நீங்களோ வலுமிக்கவர்கள் நீங்கள் மாண்புள்ளவர்கள்,. 'நாங்களோ மதிப்பற்றவர்கள்.
11. இந்நாள் வரை நாங்கள் பசியாயிருக்கிறோம், தாகமாயிருக்கிறோம், ஆடையின்றி இருக்கிறோம், அடிபடுகிறோம். தங்க இடமின்றி இருக்கிறோம். எங்கள் கையால் பாடுபட்டு உழைக்கிறோம்.
12. பிறர் எங்களைப் பழித்துரைக்கும்போது நாங்கள் ஆசி கூறுகிறோம்; எங்களைத் துன்புறுத்தும் போது நாங்கள் பொறுத்துக்கொள்கிறோம்.
13. எங்களைத் தூற்றும்போது நாங்கள் உறவாடுகிறோம். நாங்கள் இவ்வுலகத்தின் குப்பைபோல் ஆனோம். இன்றுவரை அனைவரினும் கழிவடையானோம்.
14. நான் இவற்றை எழுதுவது உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படியன்று, என் அன்புக்குழந்தைகளென உங்களுக்கு அறிவு புகட்டவே.
15. ஏனெனில், கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு ஆசிரியர் பல்லாயிரம்பேர் இருக்கலாம் ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தியின் வழியாய் நான் தான் உங்களைக் கிறிஸ்து இயேசுவுக்குள் ஈன்றெடுத்தேன்.
16. ஆகவே என்னைப்போல் நடக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
17. இதற்காகவே, தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன். அவர் ஆண்டவருக்குள் நம்பிக்கைக்குரிய என் அன்புக் குழந்தை. கிறிஸ்துவுக்குள் வாழ்வதைப் பற்றிய என் வழி வகைகளை அவர் உங்களுக்கு நினைவுறுத்துவார். அவற்றையே நான் எங்கும் ஒவ்வொரு சபையிலும் போதித்து வருகிறேன்.
18. நான் உங்களிடம் வரமாட்டேனென்று எண்ணிச் சிலர் இறுமாந்து இருக்கின்றனர்.
19. ஆண்டவர் அருள் கூர்ந்தால் விரைவில் உங்களிடம் வருவேன். வந்து, இறுமாப்புக்கொண்டவர்கள் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதையன்று அவர்களிடம் எவ்வளவு வல்லமையுண்டு என்பதைப் பார்க்கப் போகிறேன்.
20. கடவுளின் அரசு பேச்சில் அன்று, வல்லமையில்தான் இருக்கிறது.
21. நான் பிரம்போடு வரவேண்டுமா? அன்போடும் சாந்த உள்ளத்தோடும் வரவேண்டுமா? என்ன வேண்டும்?

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 4 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
1 கொரிந்தியர் 4:9
1. ஆகவே எங்களைக் கிறிஸ்துவின் பணியாளர், கடவுளுடைய மறைபொருள்களின் கண்காணிப்பாளர் என்றே எவரும் கருதவேண்டும்.
2. இனி, கண்காணிப்பாளர் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம் அன்றோ?
3. என்னைப் பொருத்த மட்டில் எனக்கு நீங்களோ, மனிதரின் நீதிமன்றமோ தீர்ப்புக் கூறுவதுபற்றி நான் கவலைப்படவில்லை. நானும் எனக்குத் தீர்ப்பிட்டுக் கொள்ளமாட்டேன்.
4. என் மனச்சாட்சி என்னை எதிலும் குற்றம் சாட்டவில்லை. ஆயினும் இதனால் நான் குற்றமற்றவன் என்று சொல்ல முடியாது. எனக்குத் தீர்ப்புக் கூறுகிறவர் ஆண்டவர் தாம்.
5. ஆகையால் குறித்த காலம் வருமுன் தீர்ப்பிடாதீர்கள். ஆண்டவர் வரும்வரை காத்திருங்கள். இருளில் மறைந்திருப்பதை அவர் வெட்ட வெளிச்சமாக்குவார். உள்ளங்களின் உட்கருத்துகளை வெளியாக்குவார். அப்பொழுதான் ஒவ்வொருவனும் கடவுளிடமிருந்து புகழ்பெறுவான்.
6. சகோதரர்களே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் உவமைப்படுத்திப் பேசினேன். "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே" என்பதன் பொருளை எங்களைப் பார்த்து நீங்கள் கற்றுக்கொள்ள இவையெல்லாம் எடுத்துரைத்தேன். உங்களுள் யாரும் ஒருவனைச் சார்ந்து கொண்டு வேறொருவனுக்கு எதிராக நின்று இறுமாப்பு அடையவேண்டாம்.
7. ஏனெனில், நீ உயர்ந்தவன் என்று சொன்னது யார்? பெற்றுக்கொள்ளாதது உன்னிடத்தில் என்ன உண்டு? நீ பெற்றுக் கொள்ளாதவனைப் போல் ஏன் பெருமை பாராட்டிக் கொள்கிறாய்?
8. உங்களுக்கு வேண்டியதெல்லாம் இதற்குள் கிடைத்துவிட்டதோ! இதற்குள் நீங்கள் செல்வர்களாகி விட்டீர்களோ! எங்களை விட்டு நீங்கள் மட்டும் அரசாளத் தொடங்கிவிட்டீர்களோ! அப்படி நீங்கள் அரசாளத் தொடங்கிவிட்டால் நல்லதுதான்! நாங்களும் உங்களோடு சேர்ந்து அரசாள்வோமே!
9. உள்ளபடியே அப்போஸ்தலர்களாகிய எங்களைக் கடவுள் அனைவரிலும் கடையராக்கினார் என நினைக்கிறேன். எல்லாரும் காணக் கொலைகளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் போல் ஆனோம். ஏனெனில் மனிதருக்கும் வானதூதருக்கும் உலகம் அனைத்திற்கும் நாங்கள் வேடிக்கையானோம்.
10. கிறிஸ்துவுக்காக நாங்கள் மடையர்கள், நீங்களோ கிறிஸ்தவ விவேகம் கொண்டவர்கள். நாங்கள் வலுவற்றவர்கள், நீங்களோ வலுமிக்கவர்கள் நீங்கள் மாண்புள்ளவர்கள்,. 'நாங்களோ மதிப்பற்றவர்கள்.
11. இந்நாள் வரை நாங்கள் பசியாயிருக்கிறோம், தாகமாயிருக்கிறோம், ஆடையின்றி இருக்கிறோம், அடிபடுகிறோம். தங்க இடமின்றி இருக்கிறோம். எங்கள் கையால் பாடுபட்டு உழைக்கிறோம்.
12. பிறர் எங்களைப் பழித்துரைக்கும்போது நாங்கள் ஆசி கூறுகிறோம்; எங்களைத் துன்புறுத்தும் போது நாங்கள் பொறுத்துக்கொள்கிறோம்.
13. எங்களைத் தூற்றும்போது நாங்கள் உறவாடுகிறோம். நாங்கள் இவ்வுலகத்தின் குப்பைபோல் ஆனோம். இன்றுவரை அனைவரினும் கழிவடையானோம்.
14. நான் இவற்றை எழுதுவது உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படியன்று, என் அன்புக்குழந்தைகளென உங்களுக்கு அறிவு புகட்டவே.
15. ஏனெனில், கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு ஆசிரியர் பல்லாயிரம்பேர் இருக்கலாம் ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தியின் வழியாய் நான் தான் உங்களைக் கிறிஸ்து இயேசுவுக்குள் ஈன்றெடுத்தேன்.
16. ஆகவே என்னைப்போல் நடக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
17. இதற்காகவே, தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன். அவர் ஆண்டவருக்குள் நம்பிக்கைக்குரிய என் அன்புக் குழந்தை. கிறிஸ்துவுக்குள் வாழ்வதைப் பற்றிய என் வழி வகைகளை அவர் உங்களுக்கு நினைவுறுத்துவார். அவற்றையே நான் எங்கும் ஒவ்வொரு சபையிலும் போதித்து வருகிறேன்.
18. நான் உங்களிடம் வரமாட்டேனென்று எண்ணிச் சிலர் இறுமாந்து இருக்கின்றனர்.
19. ஆண்டவர் அருள் கூர்ந்தால் விரைவில் உங்களிடம் வருவேன். வந்து, இறுமாப்புக்கொண்டவர்கள் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதையன்று அவர்களிடம் எவ்வளவு வல்லமையுண்டு என்பதைப் பார்க்கப் போகிறேன்.
20. கடவுளின் அரசு பேச்சில் அன்று, வல்லமையில்தான் இருக்கிறது.
21. நான் பிரம்போடு வரவேண்டுமா? அன்போடும் சாந்த உள்ளத்தோடும் வரவேண்டுமா? என்ன வேண்டும்?
Total 16 Chapters, Current Chapter 4 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
×

Alert

×

tamil Letters Keypad References